என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்கள் தங்களது உடல் நிறம் மற்றும் உடல் வாகிற்கு ஏற்றாற் போல் சுடிதார்களை கனக்கச்சிதமாக தைத்து அணியும் பொழுது அவை தன்னம்பிக்கையும், ஆளுமையும் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.
    சுரிதாரில் பல பாணிகள் இருந்தாலும் அனார்கலி சுடிதார், ஃபிளேர்டு சுடிதார், ஷார்ட் சுடிதார், லாங் டாப் சுடிதார், பாட்டியாலா சுடிதார், பதானி சுடிதார், ட்ரௌஸர் ஸ்டைல் சுடிதார், பலாஸ்ஸோ சுடிதார் போன்றவற்றை நாம் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம்.

    எளிதான காட்டன் சுடிதார்: பெண்கள் மத்தியில் இவ்வகை காட்டன் சுடிதார்கள் எப்பொழுதுமே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும். பெண்களது சருமப் பொருத்தம் மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்றாற் போல் தைத்து உடுத்தப்படும் எளிதான காட்டன் சுடிதார்கள் அலுவலகம், பண்டிகைகள் மற்றும் தோழிகள் கூட்டத்திற்கு அணிவதற்கு ஏற்ற கண்ணியமான தோற்றத்தைத் தருகின்றது. இவ்வகை காட்டன் சுடிதார்கள் இப்பொழுது மட்டுமல்ல நீண்ட காலமாகவே பெண்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது.

    காட்டன் சில்க் சுடிதார்கள்: காட்டன் சில்க் துணிகளின் பளபளப்பானது திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு அணிய ஏற்றவையாகும். உடலோடு ஒட்டி சிக்கென தைக்கப்படும் சுடிதார்கள் நம்மை மெலிதாகவும், உயரமாகவும் காட்டும் என்பதில் ஐயமில்லை.

    டிசைனர் முழு ஸ்லீவ் சுடிதார்கள்: முழுக்கை ரிப்பன் பார்டர் மற்றும் வட்டக்கழுத்து வடிவமைப்புடன் தைத்து போடப்படும் சுடிதார்கள் அணிபவருக்கு ஒரு பணக்காரத் தோற்றத்தைத் தருவதாக இருக்கும்.

    உயர் கழுத்து காலர் கொண்ட சுடிதார்கள்: உயர் காலர் கழுத்து, நீண்ட கைகளுடன் தைக்கப்படும் சுடிதார்கள் புதுப்பாணியாகி உள்ளன. காட்டன் சில்க் க்ரஷ் மெட்டீரியலில் இவ்வகை சுடிதார் டிசைனைத் தைத்து அணியும்பொழுது அனைவராலும் உற்று நோக்கக்கூடிய நபராக நாம் இருப்போம்.

    ஸ்ட்ரெயிட் கட் சுடிதார்கள்: பட்டு, பனாரஸ், ராசில்க் போன்ற துணிகளில் இதுபோன்ற ஸ்ட்ரெயிட் கட் டிசைனர் சுடிதார்களை அணியும் பொழுது அவை ஆளுமையான தோற்றத்தைத் தரும் என்று உறுதியாக நம்பலாம். திருமணம் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல இவ்வகை டிசைனர் சுடிதார்கள் சரியான தேர்வாக இருக்கும்.

    கருப்பு நிற ஷார்ட் சுடிதார்: கருப்பு பிளெயின் நிறத்தில் சுடிதார் பேன்ட், அதன் மேலே பலவித வேலைப்பாடுகள் செய்யப்பட்ட டிசைனர் ஷார்ட் குர்தாவிற்கு ஃபிஸ்ட்டுகளுடன் கூடிய நீளமான கை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

    ஸ்டைலிஷ் ப்ரோகெட் சுடிதார்: ப்ரோகெட் துணிகளில் ‘வி’ வடிவக் கழுத்து மற்றும் நீளமான நெட்டட் கை வைத்து தைக்கப்படும். டாப்பிற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சுடிதார் பேன்ட். பல்வேறு வண்ணங்களில் அழகான மற்றும் அளவான வேலைப்பாட்டுடன் தைக்கப்படும். இவ்வகை சுடிதார்கள் அணிவதற்கு நேர்த்தியானவையாகும்.

    சிவப்பு நிற நெட்டட் சுடிதார்கள்: லாங் டாப்பில் அழகான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் குறிப்பாக கழுத்திலிருந்து மார்பு வரையிலும், கைகள் முடிவிலும் இருக்க சுடிதார் பேன்ட்டிலும் எம்பிராய்டரி டிசைனானது டாப்பின் பிளவு வழியாக தெரிவது போல் வடிவமைக்கப்படுபவை. அட்டகாசமான தோற்றத்தைத் தருகின்றன. இவ்வகை சிவப்பு நிறச் சுடிதார்கள் பெரும்பாலும் திருமணப் பெண்களால் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சிறிய விழாக்களில் அணியப்படுகின்றன.

    டிசைனர் சல்வார் சுடிதார்: கழுத்திலிருந்து இடுப்பு வரை கைகளும் சேர்த்து ஒரு ரகக்துணியிலிருக்க இடுப்பிலிருந்து முன்பக்கம் குட்டையாகவும், பின் பக்கம் நீண்டும் வரும் துணியானது மற்றொரு ரகமாக வேலைப்பாடுடன் இருக்க பேன்ட் முழுவதும் அழகிய சமக்கி மற்றும் தங்கநிற நூலினால் செய்யப்பட்ட வேலைப்பாடானது வெளியில் தெரியுமாறு மேலாடைத்துணி இருக்கின்றது. இதுபோன்ற டிசைனர் சல்வார் அணிந்தால் பெண்கள் விழாவின் நாயகி என்று உறுதியாகச் சொல்லலாம்.

    நீண்ட அனார்கலி சுடிதார்: நீளமான கௌன் போன்று அதிகமான ஃப்ளேர்களுடன் தரையைத் தொடும் மேலாடை அதற்கும் மேலே எம்பிராய்டரி வேலைப்பாட்டுடன் வரும் நீளமான நெட்டட் அங்கி, முழு நீளக்கை, இதற்குத் தேவைப்பட்டால் அணிந்து கொள்ள நெட்டட் ஷால். இவ்வகை அனார்கலி சுடிதார்கள் பெண்களின் விருப்பத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

    அம்பர்லா கட் அனார்கலி சுடிதார்கள்: கழுத்திலிருந்து மார்பு வரை துணியானது உடலைச் சிக்கெனப் பிடித்திருக்க இடுப்பிலிருந்து கணுக்கால் வரை அதிகமான ஃப்ளேர்களுடன் பார்ப்பதற்கு குடைபோல் விரிந்திருப்பது அம்பர்லா கட் அனார்கலி சுரிதாராகும்.

    இவை மட்டுமல்லாமல் ஃப்ராக் ஸ்டைல் அனார்கலி சுடிதார், காட்டன் அனார்கலி, லேர்யா சுடிதார், ஸ்டைலிஷ் பார்ட்டி வேர் அனார்கலி சுடிதார், கவர்ச்சியான மொகல் தோற்றத்துடன் கூடிய பாந்தனி அனார்கலி சுடிதார், கைகளால் செய்யப்பட்ட பாந்தனி சுடிதார் சல்வார் கமீஸ், புதிய வரவு ப்ரைடல் சுடிதார், க்ளாஸிக் கண்ணாடி வேலைப்பாட்டுடன் கூடிய அனார்கலி சுடிதார், டிசைனர் ஃபேஷன் சுடிதார், ஸ்பிலிட் சுடிதார் என பெண்களுக்கான சுடிதார் மாடல்களில் எத்தனையோ புதிய வகை டிசைன்கள் வந்து விட்டன.

    பெண்கள் தங்களது உடல் நிறம் மற்றும் உடல் வாகிற்கு ஏற்றாற் போல் சுடிதார்களை கனக்கச்சிதமாக தைத்து அணியும் பொழுது அவை தன்னம்பிக்கையும், ஆளுமையும் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.

    நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.
    பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் அதிகமாகவே அறிந்திருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டு புடவைகள் தயாராகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை மற்றும் மூங்கில் நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதைக் கேட்கும்பொழுது கொஞ்சமல்ல அதிகமாகவே ஆச்சரியம் ஏற்படுகிறதல்லவா? நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.

    கற்றாழை நார் புடவைகள்:-

    மருந்து மற்றும் அழகு சாதனைப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கி விட்டன என்று சொல்லலாம். நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏகவரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது என்று சொல்லலாம்.

    பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றுகிறார்கள். அதன் பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

    ஜூட் புடவைகள்:-

    காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே ஜூட் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன.

    எந்தவொரு முறையான மற்றும் குடும்ப விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்கர்டு பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.

    மூங்கில் பட்டுப் புடவைகள்:-

    மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுக்கு தகுதியானவையாகும்.

    இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வரும் மூங்கில் புடவைகள் இயற்கையானவை என்ற நம்பகத்தன்மையை அளிக்கின்றன. பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரம்மாண்டத்தைக் கொடுக்கும்.
    தக தக தங்கத்துடன் பல்வேறு அளவுகளில் உள்ள கருப்பு மணிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் நகைகளின் அழகை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
    கருப்பே அழகுதான். கருப்பு மணி கொண்டு செய்யப்படும் நகைகளின் அழகுத் தோற்றம் பற்றி சொல்லவா வேண்டும்.

    கருப்பு மணி அல்லது கருக மணி கொண்டு அனைத்து வகையான நகைகளும் செய்யப்படுகின்றன. மோதிரம், காதணி, செயின், நெக்லஸ், வளையல் மட்டுமல்லாது வட இந்தியர்கள் அணியும் தாலிச் செயினும் கருப்பு மணிகளைக் கொண்டு செய்யப்பட்டவையாகவே உள்ளன.

    தக தக தங்கத்துடன் பல்வேறு அளவுகளில் உள்ள கருப்பு மணிகளைக் கொண்டு வடிவமைக்கப்படும் நகைகளின் அழகை இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    குறைந்த அளவு தங்கத்தில் கருப்பு மணிகளைக் கோர்த்து செய்யப்படும் செயின்கள் பெண்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. கருகமணியை குறிப்பிட்ட இடைவெளி விட்டு கோர்த்து செய்யப்படும் செயின்கள் பார்வைக்கு அதிக தங்கத்தினால் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருகின்றன.

    சரடு மாடல் செயின்களில் மூன்று கருக மணிகள் கோர்த்து செய்யப்படுபவை பாந்தமான தோற்றத்தைத் தருகின்றன. சில செயின்களில் முகப்பைச் சுற்றிலும் கருக மணிகளைக் கோர்த்து செய்திருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கின்றன. ஒரு கருகமணி ஒரு தங்கக் குண்டு கோர்த்து செய்யப்படும் நீளமான செயின்களில் டாலர்களுடன் இருப்பது பார்வையாக உள்ளது.

    கருகமணி செயின்களுக்கு ஏற்றாற்போல் கருகமணி கம்மல் மற்றும் தொங்கட்டான்களும் தனியாகவும் அல்லது செட்டகாவும் கிடைக்கின்றன. தொங்கட்டான்களில் லோரியல் போல கருகமணி தொங்குவது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக உள்ளது.

    கருகமணி கொண்டு ஃபேன்ஸி மாடல் கம்மல் மற்றும் தொங்கட்டான்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    கருகமணி தோடு மற்றும் தொங்கட்டானுக்கு செட்டாக அணிவது போல் கருகமணி மாட்டல்களும் வந்துவிட்டன.

    மூன்று கிராம் முதலே கருகமணி செயின்கள் வடிவமைக்கப்படுகின்றன. வெள்ளை முத்துக்கள் மற்றும் சிவப்பு வண்ணக் கற்களும் கருகமணி கலந்து செய்யப்படும். ஃபேன்ஸி செயின்களை சிறு வயதுப் பெண்கள் முதல் அனைவருமே விரும்புகிறார்கள்.

    ஃபேன்ஸி நெக்லஸ்களிலும் கருகமணி சேர்த்து செய்யப்படுபவை அதற்கேற்ற கம்மல், வளையல் செட்டுடன் சேர்த்து அணியும் பொழுது மிகவும் நேர்த்தியாக உள்ளது என்று சொல்லலாம்.

    வளையல்கள் மட்டுமல்லாது பிரேஸ்லெட்களிலும் கருகமணிகள் இருப்பதை கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது நடுத்தர வயதுப் பெண்களும் விரும்பி அணிகின்றனர்.

    ஒரு சரம் மட்டுமல்லாது இரண்டு மூன்று சரங்களாகவும் கருகமணி கோர்த்து செய்யப்படும் செயின்கள் நடுத்தர வயதுப் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை அனைவராலும் விரும்பி அணியப்படுகின்றன.

    டாலரில்லாமல் குட்டையாகவும் ஃபேன்ஸியாகவும் வரும் கருகமணிச் செயின்களை புடவைகள் மட்டுமல்லாது அனைத்து ஆயத்த ஆடைகளுடனும் அணிந்து கொள்ளலாம்.

    கொலுசு என்று எடுத்துக் கொண்டால் அதிலும் கருகமணி சேர்த்து செய்யப்படும் கொலுசுகள் பிரசித்தமாக உள்ளன என்றே சொல்லலாம். கண் திருஷ்டி கழிய சிலர் கால்களில் கருப்பு கயிற்றிற்கு பதிலாக கருகமணி கோர்த்து அணிவதும் இப்பொழுது பிரபலமாக உள்ளது.

    வட இந்தியா, ஆந்திரா மற்றும் கர்நாடாக பெண்களால் மட்டுமே அணியப்பட்டு வந்த கருகமணி நகைகள் இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படும் ஆபரணமாக மாறிவிட்டது.

    கடுகை விடச்சிறிய அளவு முதல் மிளகை விடப் பெரிய அளவு வரை கருகமணிகளை வைத்து செய்யப்படும் நகைகளை விரும்பாத பெண்கள் இருப்பார்களா என்ன?

    பெரிய அளவு கருகமணியின் மேல் வலை பின்னல் போல் தங்கத்தினால் மூடப்பட்டு வருவது நவீன வகை நகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.

    அதிக தங்கத்தில் குறைந்த கருகமணி இருந்தாலும் அழகுதான். குறைந்த தங்கத்தில் அதிக கருகமணி சேர்த்து செய்தாலும் அழகுதான்.

    மாடர்ன் வளையல்களில் கருகமணிகள் வைத்து செய்யப்படுபவை நேர்த்தியாக உள்ளன.

    திருஷ்டிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கருகமணி நகைகள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து வயதுப் பெண்களாலும் விரும்பி அணியப் படுகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல் ஒரு காலத்தில் திரு மணம் ஆனவர் களால் மட்டுமே அணியப்பட்டு வந்த கருகமணிச் செயின்கள் இப் பொழுது சிறுவயதுப் பெண் கள்முதல் அனைவ ராலும் விரும்பி அணியப்படும் நகையாக மாறிவிட்டது.
    தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல் பிரச்சினையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் இருக்கிறது.
    இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் தலைகவசம் அணிவது அவசியமானது. உயிர் காக்கும் கவசமாக செயல்படும் அதனை அணிவதை அசவுகரியமாக கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தலை கவசம் அணிந்தால் முடி உதிர்தல் பிரச்சினையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் இருக்கிறது. உண்மையில் தலை கவசத்துக்கும், முடி உதிர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    தலைகவசம் அணியும்போது தலை முடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று (ஆக்சிஜன்) தடைபடும். அப்படி காற்று உட்புகுவதற்கு வழி இல்லாமல் போவதால் முடியில் வியர்வை படிந்துவிடும் என்பது வாகன ஓட்டிகளின் வாதமாக இருக்கிறது. ஆனால் அது தவறானது. ஏனெனில் வெளி காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் முடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஆக்சிஜன் ரத்தத்தில் இருந்து கிடைத்துவிடும்.

    தலைமுடியை இறுக்கமாக வைத்திருக்கும் பட்சத்தில்தான் முடியின் வேர்க்கால்கள் வலிமை இழந்து முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் இறுக்கமாக தலைபின்னியபடி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது, ஆண்கள் குளித்ததும் தலைமுடியை நன்றாக உலரவைக்காமல் ஹெல்மெட் அணிவது போன்ற காரணங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவை.

    தலைகவசம் எப்போதும் சுத்தமான நிலையில் இருக்குமாறு பராமரிக்க வேண்டியதும் அவசியம். அவற்றில் அழுக்கு படிந்திருக்கும் நிலையில் அப்படியே அணிவதுதான் முடியின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமைகிறது. தலை கவசத்தை மென்மையாக கையாள வேண்டும். காட்டன் துணி அல்லது கர்ச்சிப்பை தலையில் அணிந்து விட்டு அதன் மீது தலைகவசம் பயன்படுத்துவது தலை முடிக்கு பாதுகாப்பானது.
    வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.
    தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என எத்தனையோ வகையான நகைகள் இருந்தாலும் முத்துக்களால் செய்யப்பட்ட நகைகளுக்கு எப்பொழுதுமே தனி மவுசு இருக்கத்தான் செய்கின்றது. பொதுவாக முத்துக்கள் வெள்ளை, சந்தன நிறம் மற்றும் சாம்பல் வண்ணத்தில் இருக்கும். ஆனால் முத்துக்களில் ஊதா, கருப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, ஷாம்பெயின், சாக்லேட், நீலம் மற்றும் லாவென்டர் நிறங்களும் உள்ளன.

    நீர்வாழ் உயிரினமான மெல்லுடலி (மொலுஸ்க்)யிலிருந்தே இயற்கை முத்தானது உருவாகின்றது. ஊதா நிற முத்துக்களே அரிய வகையான முத்தாகக் கருதப்படுகின்றது.

    முத்துக்களால் செய்த நகைகள் என்று எடுத்துக் கொண்டால் முத்து மூக்குத்தி, முத்து வளையல், முத்து நெக்லஸ், முத்துமாலை, முத்து ஆரம், முத்து கம்மல், முத்து ஜிமிக்கி என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

    அளவில் பெரியதாக இருக்கும் முத்துக்களை ஒவ்வொன்றாகக் கோர்த்து அதற்கு தங்கத்தினால் செய்த மயில், சந்திரன், லட்சுமி போன்ற டாலர்களில் கற்கள் பதித்து அவற்றின் கீழ்ப்புறத்தில் சிறிய முத்துச்சலங்கைகள் தொங்குவதுபோல் வடிவமைக்கப்பட்டிருப்பது எந்தவித விழாக்களுக்கும் அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும்.

    நடுத்தர அளவிலிருக்கும் முத்துக்கள் அல்லது சிறிய முத்துக்களை இரண்டு மூன்று சரங்களாகக் கோர்த்து அவற்றிற்கு தங்கத்தினால் செய்த பெரிய டாலர்கள் இருப்பதுபோல் இருக்கும் முத்து மாலைகளை அணியும் பொழுது கம்பீரமான தோற்றத்தைத் தருவதாகவே உள்ளன. இந்த முத்துச்சரங்களை இணைத்து இடையில் வரும் தங்க முகப்புகள் சிறிய அளவாக இருந்தால் அதே டிசைனில் டாலரானது பெரிய அளவில் இருப்பது போன்று வருபவை பிளெயின் பட்டுச் சேலைகளுடன் அணியும் பொழுது பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

    முத்துக்கள் தங்கக் கம்பிகளில் கோர்க்கப்பட்டு இரண்டு சரங்களாக வர இவற்றின் இடையில் தங்கக் குண்டுகளைக் கோர்த்த மிளகுச் சரமானது வர அவற்றிற்கு பக்கவாட்டில் யானைகள் தும்பிக்கையை தூக்கி இருக்க தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி டாலரின் கீழே முத்துக்கள் இரண்டு அடுக்குகளாகத் தொங்குவதுபோல் இருக்கும் முத்து ஆரங்களை முத்து ஜிமிக்கிகளுடன் அணிந்தால் அவற்றின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

    மிகச்சிறிய முத்துக்களைக் கொத்துக் கொத்தாகக் கோர்த்து செய்யப்படும் மாலைகளுக்கு இரட்டை டாலர்களுடன், அதற்கு ஏற்ற ஜிமிக்கிகளும் அணியும் பொழுது ஒரு மிரட்டலான, அழகான தோற்றத்தைத் தருகின்றன. இதுபோன்ற சிறிய முத்துக்களை கோர்த்து வருபவற்றை லோரியல்கள் என்றும் அழைக்கிறார்கள்.

    முத்துக்களோடு தங்கம், பவளம், மரகதம், வெள்ளை மற்றும் சிகப்புக் கற்களும் சேர்த்து மிகவும் அருமையான மாடல்களில் மாலைகள், நெக்லஸ்கள், பதக்கங்கள், காதணிகள், வளையல்கள் போன்றவை செய்யப்படுவது பிரமிப்பான தோற்றத்தைத் தருகின்றன.

    முத்துக்களை ஆங்கில எழுத்துக்களில் பதித்து செய்யப்படும் நெக்லஸ்கள் இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முத்துக்களால் செய்யப்படும் ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று அடுக்கு மாடல்களும், முத்தினால் செய்யப்பட்ட சோக்கர் செட்டுகளும், முத்து பிரேஸ்லெட்டுகளும் அப்பப்பா என்று புருவத்தை உயர்த்தும் அளவிற்கு எண்ணற்ற டிசைன்களில் வந்துள்ளன.

    தங்கக் குண்டும், முத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் கோர்க்கப்பட்டு இருக்கும் தங்கச் செயினில் பச்சைக் கல்லை நடுவே பதித்து சுற்றியும் சிறிய வெள்ளைக் கற்கள் பதித்த முகப்பு. அந்த முகப்பில் முதல் சரமும், மூன்றாவது சரமும் தங்கக் குண்டுகளும் முத்துக் குண்டுகளும் கோர்த்து மேலே கூறிய செயினைப் போலவே இருக்க நடுவில் முகப்பிலிருந்து வரும் சரத்தில் முகப்பைப் போன்றே சிறிய அளவிலான கற்கள் பதித்த டிசைன்கள் கோர்க்கப்பட்டு அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதக்கம் முகப்பு டிசைனிலேயே அதே அளவில் இருப்பது புதுமையாகவும், அட்டகாசமாகவும் இருக்கின்றது.

    முத்துக்கள் பதித்த ஸ்டைலிஷான பென்டெண்டுகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை தனியாக விற்கப்படுகின்றன. அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப தங்கச் செயினிலோ அல்லது வெள்ளிச் செயினிலோ அணிந்து கொள்வதும் இன்றைய இளம் பெண்களிடையே பிரபலமாகி வருகின்றது.

    ஒரே ஒரு பெரிய முத்தை மெல்லிய செயினில், கழுத்தை ஒட்டி அணிந்து கொள்வதும், பேஷனாகவே உள்ளது. முத்துக்களை வைத்து செய்யப்படும் ஃபேஷன் நகைகளுக்கு இளம் பெண்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதுப் பெண்களும் அதிக ஆதரவைத் தருவதோடு அணிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    வெள்ளை முத்துக்களை மட்டுமல்லாமல் வண்ண முத்துக்களையும் நகைகளாகச் செய்து அணிந்து கொள்ளும் ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிந்து கொள்வதும் பிரபலமாகி வருகின்றது என்றே சொல்லலாம்.
    சாதாரண பட்டு சேலையை அசல் பட்டு சேலை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. அசல் பட்டு சேலை எவ்வாறு இருக்கும்? அதை அடையாளம் காண்பது எப்படி? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
    பார்போற்றும் பட்டு துணிகள் அதை அணிபவர்களுக்கு தெய்வீக அழகை தரும் என்று புகழ்வார்கள். மங்கையர்கள் அதிகம் விரும்பி வாங்குவது பட்டு சேலை ஆகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக நமது நாட்டில்தான் பட்டு நூல்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இங்கு 4 வகையான பட்டு நூல்கள் இருந்தாலும், பட்டுப்புழுவில் இருந்து எடுக்கப்படும் மல்பெரி பட்டு நூலில் நெய்யும் பட்டு சேலைகளே அதிகம். கையால் நெய்த பட்டு சேலைக்குதான் மவுசு அதிகம். தற்போது பட்டுசேலையை கையால் நெசவு செய்ய போதிய ஆட்கள் இல்லாததால், எந்திரங்கள் மூலம் கையால் நெய்யப்படுவது போன்றே பட்டுசேலை நெய்யப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சாதாரண பட்டு சேலையை அசல் பட்டு சேலை என்று ஏமாற்றி விற்பனை செய்யும் நிலை நீடித்து வருகிறது. அசல் பட்டு சேலை எவ்வாறு இருக்கும்? அதை அடையாளம் காண்பது எப்படி? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

    அசல் பட்டு சேலை

    பொதுவாக பட்டு சேலையை திருமணம் உள்பட முக்கிய விழாக்களுக்கு அணிந்து செல்வார்கள். பட்டு சேலையில் சரிகை புரக்கோடு, கோர்வை, பட்டு செல்ப் என்ற வகைகள் உள்ளன. சரிகை புரக்கோடு வகையில் டிசைன்கள் குறைவாக இருக்கும். கோர்வையில் ஆங்காங்கே டிசைன்கள் இருக்கும். பட்டு செல்ப் வகையில் டிசைன்கள் அதிகமாக இருக்கும்.

    அசல் பட்டு சேலையில் உள்ள பட்டுகள் அனைத்தும் பட்டு நூலை அவித்து செய்யப்பட்டது ஆகும். அதன் தரம் நன்றாக இருப்பதுடன், கண்ணை கவரும் வகையில் இருக்கும்.

    மேலும் பெரிய பணக்காரர்கள் லட்சக்கணக்கான மதிப்பில் பட்டு சேலைகள் அணிந்து செல்கிறார்கள் என்று கூறுவதை நாம் கேட்பது உண்டு. பட்டு சேலையில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரைதான் செய்ய முடியும். அதில் தங்க ஜரிகை இருக்கும். அதற்கு மேல் விலை கொண்ட சேலையில் விலை உயர்ந்த வைரக்கற்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். இதனால்தான் அந்த பட்டு சேலைகளின் விலை அதிகம்.

    பட்டு சேலையை ஏழை-எளிய மக்களும் வாங்கி உடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கோரா பட்டு என்ற வகை சேலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பட்டு சேலையின் நூலை அவிக்காமல் அப்படியே செய்வார்கள். இதனால் இதன் விலை குறைவு. இந்த வகை சேலையும் அசல் பட்டு சேலையை போன்று மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

    பட்டு சேலையின் ஆயுட்காலம்

    தற்போது கைத்தறி மூலம் பட்டு சேலையை செய்ய போதிய ஆட்கள் கிடைக்காததால் விசைத்தறி மூலம் செய்யப்பட்டு வருகிறது. அதுவும் கைத்தறி மூலம் செய்யப்படுவதுபோன்று செய்யப்படுவதால், வித்தியாசம் தெரிவது இல்லை. சிலர் அசல் பட்டு என்று கூறி நைலான் நூல் கலவையில் செய்யப்பட்ட சேலையை, பட்டு சேலை என்று கூறி விற்பனை செய்து விடுகிறார்கள்.

    அசல் பட்டு சேலையை கையில் தூக்கிப்பிடித்துக்கொண்டு அதை விரலால் சிறிது தடவி பார்த்தாலே அதன் தன்மை தெரிந்து விடும். மிகவும் மென்மையாக இருப்பதால் பட்டு சேலையை பற்றி தெரியாதவர்கள்கூட எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். முக்கியமாக சேலையின் ஓரத்தில் போடப்பட்டு இருக்கும் சுங்குமுடிகள் அளவாக ஒரே சீரான முறையில் இருக்கும். அதுபோன்று அசல் பட்டு சேலையை கையால் சுருட்டி மடித்தாலும் அதில் உள்ள பட்டுநூல் உடையாது. சுங்குமுடிகள் சீராக இல்லாமல் இருப்பதை யாராவது பட்டு சேலை என்று கூறி கொடுத்தால் அது அசல்பட்டு கிடையாது. பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது உள்ள நவீன காலத்தில் விசைத்தறி மூலம் செய்யப்படுவதால் அதன் எடை குறைவு. அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருக்கும்.

    பராமரிப்பது எப்படி?

    பட்டு சேலையை மற்றதுணிகள் போல துவைத்துவிடக்கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தலாம். சிலர் தெரியாமல் பட்டு சேலையை டிரைவாஷ் செய்து விடுகிறார்கள். அவ்வாறு செய்தால் அதன் பளபளப்பு குறைந்துவிடும். அவ்வாறு செய்யவே கூடாது. ஒரு வாளி தண்ணீரில் ஒரு லிட்டர் பாலை கலந்து, அதில் பட்டு சேலையை முக்கி வெயிலில் காயப்போட வேண்டும். அவ்வாறு செய்யும்போது, பட்டு சேலையில் மேலும் பளபளப்பு அதிகரிக்கும். அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி மடிக்க வேண்டும். சிலர் பட்டு சேலையை உடுத்திவிட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. நமது உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக பட்டு சேலையை சரியான முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பு, மென்மை போகாது.
    செமிராசில்க் புடவைகள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் அணிவதற்கு இலகுவாகவும், வசதியாகவும் இருப்பதுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றது.
    கடைகளுக்கு சென்று புடவைகளைத் தேர்வு செய்யும் பொழுது அதிகப் பார்வையாகவும் அதே சமயம் நம் பட்ஜெட்டிற்குள் வருவதாகவும் இருக்கின்றதா என்று பெண்கள் யோசிப்பதைப் பார்க்க முடியும். நிச்சயம் அதுபோன்ற புடவைகளில் எத்தனையோ ரகங்களும், டிசைன்களும் நாம் வாங்கக் கூடிய விலையில் இருக்கும் புடவையைப் பற்றித்தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

    மேற்கூறிய அம்சங்களுடன் பெண்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்டும் புடவைகளில் ஒன்றுதான் செமிரா சில்க் சேலைகள். சில்வர் ஜரிகைகள், பைபிங் பார்டர்கள், தங்க ஜரி பாடர்கள் என ஏராளமான ரகம் மற்றும் டிசைன்களில் வந்திருப்பவை செமிராசில்க் சேலைகள் என்றால் அது மிகையாகாது.

    செமிராசில்க் புடவைகள் மிகவும் எடை குறைவாக இருப்பதால் அணிவதற்கு இலகுவாகவும், வசதியாகவும் இருப்பதுடன் மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருபவையாகவும் இருக்கின்றது. இந்தப் புடவைகளை உலர் சலவைக்குத்தான் போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் வீட்டிலேயே மென்மையான ஷாம்ப்பூக்களை உபயோகப்படுத்தித் துவைக்கலாம் என்பது கூடுதல் தகவலாகும்.

    தோற்றப் பொலிவுடன் விளங்கும் இந்த புடவைகள் கோவில்கள் மற்றும் பூஜைகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கின்றன. அடர்ந்த நீலம் பச்சை கருப்பு சிவப்பு, நிலம் மெருன் இளஞ்சிவப்பு, இளம்பச்சை

    ஸ்டீல் கிரீன், காப்பர் சல்ஃபேட் நீலம் என பல வண்ணங்களில் சில்வர் ஜரிகைகளில் உடல் முழுவதும் பெரிய புட்டாக்களும், கையகல பார்டர் மற்றும் அதிக வேலைப்பாட்டுடன் இருக்கும் பல்லுவுடன் மிகவும் அருமையாக வந்திருக்கும் இந்த வகை செமிராசில்க் புடவைகளை திருமண வரவேற்புகளுக்கு அணிந்து செல்லலாம்.

    பாவன்ஜி பாடர்கள் சேலையின் மேற்புறம் மற்றும் கீழ்புறம் என இரண்டு புறமும் தங்க நிற ஜரிகையில் மின்ன உடல் பகுதி முழுவதும் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளில் பெரிய புட்டாக்கள் இடம் பெற்று பல்லுவானது மெல்லிய கோடுகளுடன் பார்ப்பதற்கு வித்தியாசமான அழகுடன் திகழ்கின்றது. காக்கி, பிங்க், மயில் கழுத்து நிறம், வோய்ன் நிறம் என அருமையான வண்ணங்களில் தங்க மற்றும் வெள்ளி ஜரிகைகளின் ஆதிக்கம் அமர்க்களமாக உள்ளது.

    சிலருக்கு பெரிய பார்டர்களைக் கொண்ட புடவைகளை அணிவதற்கு விருப்பம் இருப்பதில்லை. அவர்களுக்காகவே பைபிங் பாடர்கள் வந்திருக்குமோ என எண்ணத் தோன்றுக்கின்றது. பீச்நிறம் உடல்பாகத்திற்கு வாடாமல்லி பைப்பிங் பார்டரும் அதனை யொட்டி எளிமையான ஜரி வேலைப்பாடும், உடல் முழுவதும் புட்டாக்கள், ஜிமிக்கி கம்மல் என ஜரி வேலைப்பாடுகளுடன் வரும் இது போன்ற செமிராசில்க் சேலைகளின் விலையோ ஆயிரம் ரூபாய்க்குள் என்று சொன்னால் நம்ப முடிகின்றதா? இந்த சேலைகளில் ஸ்டீல் கிரீனுக்கு மஜந்தா பைபிங் பார்டர், கிரே நிறத்துடனிருக்கும் நீலத்திற்கு மெரூன் பைபிங் பார்டர், இளம் பச்சை நிறத்திற்கு சிவப்பு பைபிங் பார்டர், மஞ்சள் நிறத்திற்கு நீலநிற பைபிங் பார்டர் என்று வரும் கலர் காம்பினேஷன்கள் எதை எடுப்பது எதை விடுப்பது என்று நம்மை திணற வைக்கின்றன.

    உடல் முழுவதும் பூ டிசைன்களாக இருக்க, இரண்டு பக்க தங்க ஜரி பார்டர்களுக்கு எளிமையான பல்லு மற்றும் புடவையுடனேயே இணைக்கப்பட்டிருக்கும் பிளெயின் நிற ஜாக்கெட், அப்பப்பா இத்தனை அழகா என்று நம்மை வாய் பிளக்கம் விதமாக அடர்ந்த நீலம், மஞ்சள், கிரே, பச்சை, தக்காளி சிவப்பு, பிங்க், மஸ்டர்டு என பல வண்ணங்களைக் கொண்ட பூந்தோட்டம் போல இந்தப் புடவைகள் காட்சி அளிக்க இதில் எந்த வண்ண பூந்தோட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

    சிவப்பு, மெரூன், மஜந்தா, பீச், பிங்க், கிரே, டார்க் பீச், சப்போட்டா நிறம், நேவி ப்ளூ, மென்மையான சிமெண்ட் கிரே, சிவப்பு என வானவில்லை மிஞ்சும் வண்ணங்களில் ஆன்டிக் ஜரி பார்டர்களுடன், உடலில் ஆங்காங்கே நூல் புட்டாக்களுடன் வரும் புடவைகள் மென்மை மற்றும் பளபளப்புடன் மைசூர் பட்டுச் சேலைகளை நினைவு படுத்தும் விதமாக உள்ளன.

    உடல் முழுவதும் மயில், பூக்கள், அன்னம், யானை, மான் என உருவங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு மிகவும் குறைவான எடையுடன் இரண்டு பக்க ஜரி பார்டர்களுடன் பல்வேறு வண்ணங்களில் வரும் புடவைகள் அணிந்து கொள்ள இலகுவாக உள்ளன. இது போன்று பிரிண்ட் செய்யப்பட்டு வரும் செமிராசில்க் புடவைகள் அலுவலகங்களுக்கும் சிறு விழாக்களுக்கும்அணிந்து செல்ல ஏற்றவை என்று சொல்லலாம்.

    சில்வர் ஜரியில் பைபிங் பார்டர், அதனை ஒட்டி பைபிங் கருப்பு பார்டர், உடலானது பீட்ரூட் வண்ணத்தில் இருக்க, உடலில் ஆங்காங்கே கருப்பு நூலினால் நெசவு செய்யப்பட்ட புட்டாக்கள், சற்றே கற்பனை செய்து பாருங்கள். எந்த வண்ணத்திலும் கருப்பை சேர்க்கும் பொழுது அது மிகவும் எடுப்பான தோற்றத்தைத் தரும் என்பதை கண்களை மூடிக்கொண்டே சொல்லலாம். ஹாஃப் வொயிட்டில் கருப்பு, மயில் வண்ணத்தில் கருப்பு, பிங்க்கில் கருப்பு, கிரே வண்ணத்துடன் கருப்பு, வெளிர் மஞ்சள் நிறத்தில் கருப்பு, மஸ்டர்ட் நிறத்தில் கருப்பு, வெளிர் நீலத்தில் கருப்பு, மஜந்தாவில் கருப்பு நூல் புட்டாக்களுடன் வரும் இந்த வகையான செமிராசில்க் சேலைகள் எளிமையாகவும் அதே நேரத்தில் எடுப்பான தோற்றத்துடனும் விளங்குகின்றன. உடல் முழுவதும் ஜீயோமெட்ரிக் பிரிண்ட்டுகளுடன் புடவையின் இருபுறமும் பாவன்ஜி பார்டர்கள் என பல்வேறு வண்ணங்களில் வரும் இந்தப் புடவைகள் பரிசளிக்க ஏற்றவை என்றே சொல்லலாம்.

    புடவையின் இருபுறமும் சில்வர் ஜரியினால் ஆன கோபுர பார்டர்கள் மற்றும் உடலில் பூ டிசைன்கள் சில்வர் ஜரிகைகளால் நெசவு செய்யப்பட்டிருப்பது மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருகின்றது.

    புடவையின் மேற்புறம் சிறிய பார்டரும், கீழ்ப்புறம் பெரிய பார்டரும் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் ஒரே அளவிலான பார்டர்கள் இருப்பது போன்றும், புடவையின் இருபுறமும் பைபிங் பார்டர்கள் இருப்பது போன்றும் வடிவைமக்கப்பட்டு வரும் இவ்வகை செரமிராசில்க் புடவைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.
    பேன்ஸி என்ற சொல் பொதுவாக ஆடம்பரம் என்பதைக் குறிக்கும். ஆம், உண்மையாகவே இந்தப் புடவைகள் ஆடம்பரத் தோற்றத்தையும், அணிந்து கொள்ள இலகுவாகவும், சௌகரியமாகவும் இருக்கின்றன.
    புடவைகளில் ஒவ்வொரு நாளும் புது வரவு வந்து கொண்டுதான் இருக்கின்றது. பேன்ஸி புடவைகளில் இப்பொழுது வந்திருப்பவை மிகவும் ஆளுமையுடையதாகும். கவர்ச்சியாகவும், அழகாகவும் அதே சமயத்தில் வாங்கக் கூடிய விலையிலும் இருப்பது கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம்.

    பேன்ஸி ஜார்கெட் புடவைகள்:-

    பேன்ஸி என்ற சொல் பொதுவாக ஆடம்பரம் என்பதைக் குறிக்கும். ஆம், உண்மையாகவே இந்தப் புடவைகள் ஆடம்பரத் தோற்றத்தையும், அணிந்து கொள்ள இலகுவாகவும், சௌகரியமாகவும் இருக்கின்றன.

    இந்தப் புடவைகளின் இரண்டு புறமும் ஜரிகை பார்டர்களும் உடல் முழுவதும் நம் மேல் ஒட்டாதவாறு நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களை அள்ளித் தெளித்தது போல் சிறிய சமக்கி புட்டாக்களும் உள்ளன. அதே போல் இந்த ஜரிகை பார்டர்கள் இடுப்பில் பிளீட்டுகளை உட்புறம் செருகும் இடத்தில் வராதவாறு வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த புடவைகளுக்கு ஏற்றார் போல் காண்ட்ராஸ்ட் நிறம் மற்றும் டிசைன்களில் பிளவுஸ் துணிகளும், புடவைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.

    ஒரே புடவையில் லைட் மற்றும் பார்க் வண்ணங்களில் சேர்ந்திருப்பது போன்றும் ஒரே பிளெயின் வண்ணத்திலும் இரண்டு வேறு வண்ணங்கள் சேர்ந்திருப்பது போன்றும் வரும் இந்தப் புடவைகளில் இருக்கும் சிறப்பம்சங்களில் முதன்மையானது. இதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பிளவுஸ்கள் கட்டங்கள், பூக்கள், இக்கத் டிசைன் எனப் பலவிதமாக பிளவுஸ்கள் புடவைகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

    செமி ஜார்ஜெட் புடவையில் உடல் முழுவதும் அழகான பூ டிசைன்கள் இருக்க புடவையின் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு அங்குலத்திற்கு பிளெயின் வண்ண பைபிங் பார்டரும் அதனை அடுத்து ஒரு அங்குலத்திற்கு ஜரி பார்டர்களும் கொடுக்கப்பட்டு பிளவுஸ் பிளெயின் நிறத்தில் இருப்பது போல் வந்திருக்கும் புடவைகள் குறைந்த விலையில் கிடைப்பது பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்லலாம்.

    உடல் முழுவதும் சிறிய பூக்கள் இருப்பது ஒரு அழகு என்றால் உடலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பெரிய பூக்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் புடவைகளில் வருவது மற்றொரு அழகு. உடல், பல்லு என அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்க இந்த புடவைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் பார்டரும், பிளெயின் பிளவுஸ்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.

    ஃபேன்ஸி காட்டன் புடவைகள்:-

    தமிழ்நாடு தட்ப வெப்பத்திற்கு மிகவும் ஏற்ற புடவை ரகம் என்றால் அது நிச்சயம் காட்டன் புடவைகளாகத்தான் இருக்க முடியும். காட்டன் புடவைகளே அழகுதான். அதிலும் ஆடம்பரமான காட்டன் புடவைகளைப்பற்றி கேட்கவே வேண்டாம்.

    இந்தப் புடவைகளில் இடம்பெறும் தனித்துவமான டிசைன்களும், புடவைகளுக்கும் கொடுக்கப்படும் வண்ணங்களும் இவற்றை அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தந்தே தீரும் என்று நம்பலாம். அழகிய மஞ்சள் நிறத்தில் புடவையானது இருக்க வெண்மை நிறத்தில் பைபிங் பார்டர் இருபுறமும் இருக்கின்றது. புடவையின் உடலில் ஆங்காங்கே இசைக் குறிப்புக் குறியீடு கருப்பு நிறத்தில் இருக்க எம்பிராய்டரி செய்யப்பட்ட வீணையானது அதிக இடைவெளியில் புடவையின் ஒருபுற பார்டரில் இருப்பது போல் வடிவமைத்திப்பது அட்டகாசமாக இருக்கின்றது. அதே போல் புடவையின் பல்லுவில் டேஸில்கள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன.

    உடல் முழுவதும் பிளெயின் வண்ணம் புடவையின் இரண்டு புறமும் வேறு வேறு வண்ணங்களில் பைபிங் பார்டர் புடவையின் கீழ்ப்புற பார்டருக்கு மேல் ஆங்காங்கே பிரிண்ட் செய்யப்பட்ட டிசைன்கள் அதற்கு மேல் மற்றொரு வண்ணம் கொடுக்கப்பட்டு அதிலும் ஆங்காங்கே பிரிண்ட் செய்யப்பட்ட டிசைன்கள் அதற்கு மேல் கோபுர டிசைன், அப்பப்பா இவற்றை வர்ணிக்க வார்த்தைகளை இல்லை.

    பேன்ஸி காட்டன் புடவைகளின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மிகவும் அற்புதமாக செய்யப்படுகின்றன. அதே போல் பட்டாம்பூச்சி, தேவதை, பூக்கள், இசைக்குறிப்புகள், மயில், மான், யானை மற்றும் ஜீயாமெட்ரிகல் டிசைன்களை பிளாக் பிரிண்டுகளில் இந்தப் புடவைகளில் பார்க்கும் பொழுது அபாரமாக இருக்கின்றது.

    புடவையின் மேல்புற பார்டரானது ஒரு வண்ணத்தில் சிறிய கட்டங்களுடன் இருக்க, கீழ்ப்புற பார்டர் வேறு வண்ணத்தில் பெரியதாக அதே நேரத்தில் பிளாக் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டிருக்க இவை இரண்டு பார்டர்களுக்கும் இடைப்பட்ட பகுதி வேறொரு வண்ணத்தில் இருப்பது போல் வந்திருப்பது வித்தியசமாக உள்ளது.

    கடைகளுக்குச் சென்று பேன்ஸி காட்டன் புடவைகள் என்று கேட்டாலே அவர்கள் காட்டும் புடவைகளின் வண்ணங்களும், டிசைன்களும், நம்மை திக்கு முக்காட வைத்துவிடும். இவ்வளவு அழகான இந்தப் புடவைகளின் விலையானது ஆயிரம் ரூபாயிலிருந்தே தொடங்குகின்றது. இந்தப் புடவைகள் அலுவலகங்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவை என்பதோடு அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தரும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
    பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது. கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
    நகைகள் அணிவதால் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப்புள்ளிகள் தூண்டப்பட்டு, ஒவ்வொரு உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றது என்பது பழங்காலத்தொட்டே நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கையாகும். அதிலும் கழுத்தில் நகைகள் அணிவதால் அவை உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன. பெண்கள், தங்கள் கழுத்தில் நகைகளை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு அதிக, ‘நேர்மறை சக்தி’ கிடைக்கின்றது.

    * கண்டசரம்: வைரக்கற்கள் பதிக்கப்பட்ட கழுத்தை ஒட்டி அணிவிக்கப்படும் ஒரு வகையான கழுத்து அணிகலன்.

    * உட்கத்துச்சரடு: கழுத்தை ஒட்டி அணியும் ஷார்ட் செயின்களே இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவற்றில் மிக மெல்லியதாக இருப்பவை இளவயது ஆண், பெண்களால் மிகவும் விரும்பி அணியப்படும் தங்கச்சங்கிலிகள் ஆகும். அதேபோல், நடுத்தர அளவில் வரும் செயின்களும், பட்டையாக வரும் செயின்களும் கூட ஆண் மற்றும் பெண்களால் விரும்பி அணிப்படுகின்றது.

    * நெக்லஸ்: முழுவதும் தங்கத்தால் ஆனவை. கற்கள் பதித்தவை, முத்து, பவளம் பதித்தவை, வைரம் மற்றும் பிளாட்டின நெக்லஸ்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நெக்லஸ்களில் பலவிதமான டிசைன்கள் உள்ளன. இதிலும் பட்டையாக மட்டுமல்லாமல் நடுத்தர அளவிலும் நெக்லஸ்கள் வருகின்றன. கற்கள் பதித்த நெக்லஸ்களின் அடிப்புறம் கற்களை மூடியவாறு வருபவை ‘க்ளோஸ்டு’ வகையாகும். இவ்வகை நெக்லஸ்களில் தங்கம் அதிக அளவில் உபயோகப் படுத்துவதால் இவற்றின் எடை அதிகமாக இருக்கும்.

    ‘ஓபன்’ வகை நெக்லஸ்களில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களை அடிப்புறம் மூடாமல் வைத்திருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

    நெக்லஸ்களில் குறைந்த தங்கத்தில் அதிக மாடல்களும், டிசைன்களும் இப்பொழுது வந்துவிட்டன. வைர மற்றும் பிளாட்டின நெக்லஸ்கள் பெரும்பாலும் மெல்லிய மற்றும் நடுத்தர அளவிலேயே வருகின்றன. இதில் பெங்காலி மாடல், வார்ப்பு (கேஸ்டிங்) மாடல், கல்கத்தா மாடல், பாம்பே மாடல், டர்கிஷ்மாடல் என பல மாடல்களில் நெக்லஸ்கள் தனிச்சிறப்புகளுடன் வருகின்றன. இதில் மேக்னட் நெக்லஸ் மாடல்கள் பார்ப்பதற்கு பென்டென்ட்டுகளுடன் வரும் குட்டைச் செயின்கள் போல இருந்தாலும் பென்டென்ட்டுகளை விரித்து நெக்லஸ் போல மாற்ற முடியும். இவற்றை கழுத்தை ஒட்டியும் அணிந்து கொள்ளலாம்.

    * பாரம்பரிய அட்டிகைகள்: பெரும்பாலும் பட்டையாக கழுத்தை ஒட்டி வரும் இவ்வகை அட்டிகைகளில் பதக்கங்கள் கற்கள் வைத்தவையாகவே இருக்கும். பிளெயின் பதக்கங்கள் வைத்த அட்டிகைகள் குறைந்த அளவிலேயே அணியப்படுகின்றன. பாரம்பரிய அட்டிகைகள் மட்டுமல்லாது இப்பொழுது ஃபேன்ஸி அட்டிகைகளும் வந்துவிட்டன. குழந்தைகள் அணிவது போல் வரும் அட்டிககைள் மிகவும் அழகான சின்ன டாலர்களுடன் வருகின்றன.

    * சோக்கர்கள்: கழுத்தில் நெருக்கமாக அணியும் கழுத்தணி என்று இதைச் சொல்லலாம். சோக்கர்களின் பூர்வீகம் வெஸ்டர்ன் என்றாலும் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் உருமாற்றப்பட்டுள்ளது. குந்தன், போல்கி மாடல்கள் மட்டுமல்லாது முத்துக்கள் பதித்த சோக்கர்களும் மிகவும் ஆடம்பரமான தோற்றத்தைத் தருகின்றன. கற்கள்பதித்து வரும் சோக்கர்கள் அடுக்கு மாடல்களில் வருகின்றன இவற்றை பாரம்பரிய ஆடைகள் மட்டுமல்லாது வெஸ்டர்ன் ஆடைகளுடனும் அணியலாம். எடை குறைவாகவும் அதே நேரத்தில பார்வையாகவும் சோக்கர்கள் கிடைப்பது கூடுதல் சிறப்பு. கழுத்தில் இந்த ஒரு நகை அணிந்தாலே அவை நிறைவாக இருக்கும்.
    முத்து நகைகள், பவள நகைகள் என்று தனித்தனியாகவும், முத்தும், பவளமும் இணைந்த நகைகளாகவும் மக்களிடம் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.
    ரத்தினங்களில் தங்களுக்கென்று தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவை முத்துக்களும், பவளங்களும் என்று சொல்லலாம். முத்துக்களிலும், பவளங்களிலும் ஏராளமான வகைகளும், எண்ணற்ற வண்ணங்களும் உள்ளன. முத்து நகைகள், பவள நகைகள் என்று தனித்தனியாகவும், முத்தும், பவளமும் இணைந்த நகைகளாகவும் மக்களிடம் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.

    வெள்ளை நிறத்திலிருக்கும் முத்துக்களோடு சிவப்பு நிறத்திலிருக்கும் பவளத்தை சேர்த்து செய்யப்படும் நகைகளின் அழகை என்னவென்று வர்ணிப்பது? பாரம்பரியமான நகைகள் முதல் இன்று நடைமுறையில் அணியக்கூடிய டிரெண்டிங் நகைகள் வரை அனைத்திலும் முத்து, பவள இணைப்பு நகைகள் அருமையாக வந்துள்ளன.

    சிறு சிறு முத்துக்களை ஒரு விரல் நீளத்திற்குக் கொத்தாகக் கோர்த்து வைத்திருக்க அதனைத் தொடர்ந்து ஒரு விரல் நீளத்திற்கு சிறிய பவள மணிகள் கொத்தாகக் கோர்க்கப்பட்டு இருப்பது போல் வந்திருக்கும் கழுத்து நெக்லஸ்களின் மாடலானது மிகவும் நேர்த்தியாக உள்ளது. இதே முத்து, பவள சிறு மணிகளைக் கொண்டு காதுத் தொங்கலும் ஜோடியாக கிடைக்கின்றன. இவற்றை சுடிதார் செட்டுகளுடன் அணியும் பொழுது நாகரீகமான தோற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

    பெரிய முத்துக்களிலிருந்து சிறிய முத்துக்கள் அதனிடையே பெரிய பவளத்திலிருந்து சிறிய பவளம் என இருபுறமும் தங்கப் பூண்களுடன் கோர்க்கப்பட்டு வருபவையும், வட்டக் கழுத்து டாப்புகளுடன் அணியும் பொழுது மிகவும் ஸ்டைலான தோற்றத்தைத் தரும். இத்துடன் ஒரே ஒரு பெரிய முத்தோ அல்லது ஒரே ஒரு பவளமோ வைத்து அதனைச் சுற்றி மெல்லிய தங்கக் கம்பி போல் வரும் காதணிகள் இளம் பெண்களும் அணியக்கூடியவைகளாக உள்ளன.

    தங்க அட்டிகையில் பச்சை, சிவப்பு கற்கள் பதித்திருக்க அதன் கீழே பவள மணி தங்கத்தினால் செய்த மணி மற்றும் முத்து மணி என அடுத்தடுத்து தொங்குவது போல் வரும் அட்டிகையும், புடவை மற்றும் சுடிதார்களுக்கு மட்டுமல்லாமல் லெஹங்காக்களுக்கும் அணியும் விதமாக உள்ளன.

    மூன்று சரங்களில் குறுக்கு வாக்கில் பவளமணி மூன்று அடுத்து குறுக்கு வாக்கில் பவளமணி மூன்று என்று இருக்க அதன் நடுவில் முத்தும் பவளமும் வைத்த பதக்கம், அதற்கு ஏற்ற டிசைனில் முத்து பவளத் தொங்கல் பட்டுச் சேலைகளுடன் அணிய இந்த நகையானது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    பெரிய பவளத்துடன் அதை விடச் சிறிய அளவிலிருக்கும் முத்துகளையும் தங்கத்தினால் செய்யப்படும் டிசைன் குண்டுகளையும் கோர்த்து செய்யப்படும் நீளமான மாலைகளுக்கு வெள்ளை வைரக் கற்கள் பதித்த டாலரின் கீழே முத்துக்கள் தொங்குவது போல் செய்யப்படும் நகைகள் நடுத்தர வயதுப்பெண்கள் மட்டுமல்லாது வயதான பெண்களும் வைரக் கம்மலுடன் அணிய ஏற்றவையாக உள்ளன.

    நடுத்தரமான பவள மணிகள் மற்றும் அதைவிடச் சிறிய முத்து மணிகள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கச்சங்கிலியில் கோர்க்கப்பட்டிருக்க, இரண்டு அன்னங்கள் தங்கத்தினால் செய்யப்பட்டு எதிரெதிரே இருக்க நடுவே பெரிய மரகதக்கல். அதனைச்சுற்றிலும் சிறிய வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் டாலரின் கீழே நீள வடிவிலான பவள மணிகள் தொங்குவது போலிருக்கும் செயினானது பாவாடைத் தாவணி, புடவை மற்றும் சுடிதார்களுடனும் அணியக்கூடியது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டாலர் செயினானது பழமையில் புதுமையை நினைவூட்டுகின்றது.

    ரோஜா மலர் போன்றிருக்கும் பவளத்துடன் முத்துக்கள் பதித்து செய்யப்படும் நெக்லஸ்களும் அருமையோ அருமை என்று சொல்லுமளவுக்கு உள்ளன.

    ரோஜா மொட்டுகள் போன்று குவிந்து வரும் பவளத்துடன் நீளவாக்கிலிருக்கும் முத்துக்களைக் கோர்த்து செய்யப்படும் ஒற்றைச்சார மாலைகள் அனைத்து வயதினரும் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது.

    முத்தும், பவளமும் சேர்த்து செய்யப்படும் காதணிகளும், தொங்கட்டான்களும், ஜிமிக்கிகளும் கல்லூரி செல்லும் பெண்களால் பெரிதும் விரும்பக்கூடிய வகையில் டிரெண்டியாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

    குளிர்ச்சி தன்மையை உடையது முத்து. வெப்ப தன்மையை உடையது சிவப்பு நிறமுடைய பவளம். அதேபோல் சிவப்பு நிறமுடைய பவளம் தைரியத்தையும், வலிமையையும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் முத்து மனதில் சமநிலையை அளிக்கிறது. எனவே, இந்த இரண்டும் சேர்ந்த நகைகளை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் நன்மை பயக்கும்.
    கழுத்தை ஒட்டி அணிபவை, சற்றே இறக்கி அணியக்கூடியது, தளர்வாய் அணியக்கூடியது, மெலிதாகவோ அடர்த்தியாகவோ என்று நெக்லஸில் பல வகைகள் இருக்கிறது.
    பெண்கள் கழுத்தில் விரும்பி அணியும் நெக்லஸ், போடும் ஆடைகளுக்கு பொறுத்தமானதாக இருந்தால்தான் அழகு. நெக்லஸ்களில் பல வகைகள் உண்டு. கழுத்தை ஒட்டி அணிபவை, சற்றே இறக்கி அணியக்கூடியது, தளர்வாய் அணியக்கூடியது, மெலிதாகவோ அடர்த்தியாகவோ என்று இவற்றில் பல வகைகள் இருக்கிறது.

    காலர் நெக்லஸ்

    பொதுவாக தங்கம், கற்கள் பதித்து பெண்கள் பட்டுச் சேலைகளுக்கு அணியக்கூடியது இந்த வகைதான். இது கழுத்தை ஒட்டி சற்று தளர்வாக ஆங்கில எழுத்தான ‘யூ’ வடிவத்தில் இருக்கக்கூடியது. இதை யூ நெக் ப்ளவுஸ், போட் நெக் ப்ளவுஸ் அல்லது இருக்கமான கழுத்துள்ள சுடிதார், கவுன் போன்றவற்றிற்கும் அணியலாம். இந்த நெக்லஸ் 12 -14 அங்குலம் நீளத்தில் இருக்கும்.

    சோக்கர்

    இது கழுத்தை அழுத்தி பிடித்துக் கொண்டிருக்கும், அகலமான ஒரு அணிகலன். இந்த சோக்கர் வகை நகையை புடவை, கவுன், லெஹங்கா, நீளமான ஸ்கர்ட் போன்றவற்றிற்கு அணியலாம். பட்டு ப்ளவுஸ் உடன் அணியும் போது இதை பெரிய விசேஷங்களுக்கு அணியலாம். துண்மையான ஃபிலிகிரி வேலைப்பாடும் பட்டை தீட்டாத கற்களும் பதிக்கப்பட்ட சோக்கர்கள் டிசைனர் புடவைகளுக்கும், அதிக வேலைப்பாடு கொண்ட புடவைகளுக்கும் அட்டகாசமாக இருக்கும்.

    பிப் நெக்லஸ்

    இது குழந்தைகளுக்கு அணிவிக்கும் பிப் போல மெல்லிய இருபக்க சங்கிலியின் முடிவில் அகலமான நெக்லஸ் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது நம் மார்புப் பகுதியின் மேற்பரப்பு அனைத்தையும் மறைக்கும் என்பதால் முன்புறம் அதிக வேலைப்பாடு இல்லாத ஆடைகளுக்கு இது மிக பொருத்தமாக இருக்கும்.

    பல பட்டைகள் கொண்ட ஸ்ட்ரிங் நெக்லஸ்

    இது பல அடுக்கு அல்லது பட்டைகள் கொண்ட அகலமான அதே சமயம் நீளமாக அணியக்கூடிய நெக்லஸ் ஆகும். முத்துக்கள், பட்டை தீட்டாத கற்கள், பவளம், பல நிறங்கள் கொண்ட பொடி மணிகள், கருப்பு மணி போன்றவற்றைகள் கோர்க்கப்பட்ட மெல்லிய இழைள் இணைந்ததாக இந்த நெக்லஸ் இருக்கும். இந்த நெக்லஸ் புடவை, சுடிதார், டாப்ஸ் மற்றும் குர்தியுடன் அணிந்து கொள்ள பாந்தமாக இருக்கும்.

    ஒப்பரா நெக்லஸ்

    இது இளம் பெண்கள் அணியக்கூடிய சுடிதார், ஆழமான கழுத்து கொண்ட கவுன் அல்லது ப்ளவுஸ் போன்றவற்றிற்கு பொருத்தமாக இருக்கும். இது 26 முதல் 36 அங்குல நீளம் கொண்டதாக இருப்பதால் ஒரே அடுக்காகவோ, 2 அல்லது 3 அடுக்குகளாகவோ மடித்தும் அணிந்து கொள்ளலாம். மாலை வேளை பார்ட்டி போன்றவற்றிற்கு அணிந்து கொள்ள கவர்ச்சியான நெக்லஸ் இது.

    பிரின்சஸ் நெக்லஸ்

    இது 17 முதல் 20 அங்குல நீளம் இருக்கக்கூடிய நெக்லஸ் ஆகும். இது மிக லேசாகவோ அடர்த்தியான தொடர் வடிவமைப்பு கொண்டதாக (அதாவது அகல நீளம் அதிகமாக) இருக்கும். இந்த நெக்லஸ் வகை குர்த், சுடிதார் மற்றும் புடவைகளுக்கு தோதாக அணிந்து கொள்ளலாம். இதன் அடர்த்தி மற்றும் அளவிற்கு ஏற்ப எளிமையான மற்றும் ஆடம்பரமான ஆடைகளுக்கு பொருத்திக் கொள்ளலாம். இந்த வகை நெக்லஸ்கள் கழுத்தில் தொடங்கி வயிற்றுப் பகுதி வரை கூட அடர்த்தியாக நீண்டு இருக்கும். அதனால் இதை இளவரசிகள் அணியக்கூடியது என்ற வகையில் பிரின்சஸ் நெக்லஸ் என்று அழைக்கின்றனர்.
    குட்டையான (ஷார்ட்) குர்த்தாக்களானது பேன்ட், ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ஸுடன் அணியப்படுவதால் அவை நவீன எத்னிக் ஆடை என்று சொல்லப்படுகின்றது.
    இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் பாரம்பரியமாக ஆண்கள் அணியும் ஆடைகளில் குர்த்தாக்களும் இடம் பெற்றுள்ளது என்பதை நாம் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் உணரமுடியும். வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பருவங்களில் காட்டன் குர்த்தாக்களும், பண்டிகை மற்றும் விசேஷங்களுக்கு அணிய பட்டு மற்றும் சில்க் காட்டன் போன்ற துணிகளால் வடிவமைக்கப்பட்ட குர்த்தாக்களும் அணிவதை விரும்புகிறார்கள்.

    குட்டையான (ஷார்ட்) குர்த்தாக்களானது பேன்ட், ஜீன்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்ஸுடன் அணியப்படுவதால் அவை நவீன எத்னிக் ஆடை என்று சொல்லப்படுகின்றது. இவை பட்டு வேஷ்டிகளுடன் அணியும் பொழுது பாரம்பரிய நவீனத் தோற்றத்தைத் தருகின்றது.

    ஷார்ட் குர்த்தாக்களானது ஆண்கள் அன்றாடம் அணிந்து கொள்ளவும், முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் குடும்ப விழாக்களுக்கும் அணிந்து கொள்ளும் ஆடையாகி விட்டது. குர்த்தாக்களின் பல வகையான வெட்டுகள் (கட்ஸ்), கை வடிவமைப்பு, கழுத்து வடிவமைப்பு, வண்ணங்கள், மாதிரிகள், அலங்கார வேலைப்பாடுகள் இவற்றை நம்முடைய விருப்பத்திற்கேற்பவும், அணிந்து கொள்ள வசதியாக இருப்பவற்றையும் தேர்ந்தெடுத்து அணியலாம்.

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அணிய பாரம்பரிய குர்த்தா மற்றும் பைஜாமாவானது மிகவும் ஏற்ற ஆடையாக இருக்கும். பிரைட்டான லினென் மற்றும் பாலியஸ்டர் துணிகளில் காலர் வைத்த கழுத்தில் பெரும்பாலும் சிவப்பு மற்றும் கருப்பு நூலில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் வருபவை வெள்ளை பைஜாமா மற்றும் கை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட காலணிகளுடன் அணிய ஏற்றவை. சீனக்கழுத்து (மாண்டரின் நெக்) வடிவமைப்பில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட பிரகாசமான மஞ்சள் நிற முழுக்கை குர்த்தாக்களுடன் க்ரீம் நிறப் பைஜாமாவை சிங்கிள் டோ செருப்புகளுடன் அணியும்பொழுது அவை ஒரு நேர்த்தியான தோற்றத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

    தென்னிந்தியத் திருமணங்களில் ஷார்ட் குர்த்தாக்களை ஆண்கள் பிரதானமான உடையாக அணிகிறார்கள். பளபளப்பான ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், சிவப்பு, க்ரீம் போன்ற வண்ணங்களில் வரும் ஷார்ட் குர்த்தாக்களை வேஷ்டிகளுடன் அணிகிறார்கள். ஒரு கையில் பிரேசிலெட் மற்றொரு கையில் மெட்டல் ஸ்ட்ராப் வாட்ச் மற்றும் கழுத்தில் செயினுடன் இந்த வேஷ்டி குர்த்தாவானது அணியப்படும்பொழுது அவை ஒரு மிடுக்கான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைத் தருகின்றன.

    கல்லூரி நாள் விழா மற்றும் அலுவலக விழாக்களுக்கு அணிய கட்டங்கள் மற்றும் பிரிண்ட்டுகள் செய்யப்பட்ட குர்த்தாக்களானது மிகவும் சரியான தேர்வாகவும் ஒரு கூலான தோற்றத்தை தருபவையாகவும் இருக்கும். லெதர் சாண்டல்கள் மற்றும் ஜீன்ஸ் பேன்ட்டுகளுடன் அணியும் பொழுது ஆணழகன் பட்டத்திற்கு ஏற்றவராக இருப்பீர்கள்.

    குட்டை கைகள், மாண்டரின் கழுத்துடன் வரும் பச்சை நிற ஷார்ட் குர்த்தாக்களை கருப்பு நிற க்ராப் பேன்ட் மற்றும் போட் ஷூக்களுடன் அணியும் பொழுது ஸ்டைலான தோற்றத்தைத் தருவதாக இவை இருக்கும். அதேபோல் வளைந்த கழுத்துகளுடன் வரும் பிரண்டட் குர்த்தாக்களுக்கு சாண்டல் மற்றும் குளிர்கண்ணாடிகள் அணியும் பொழுது அவை அதிகமான ஸ்டைலான தோற்றத்தை தரும்.

    இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றால் கவிஞர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்களால் மட்டுமே குர்த்தாக்கள் அணியப்பட்டு வந்தது. அதேபோல், 1960 மற்றும் 1970களில் தொளதொள குர்த்தாக்களை அன்றைய இளைஞர்கள் அணிவதை பெருமையாக நினைத்தார்கள் என்றே சொல்லலாம். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு வகையான துணிகளில் தைக்கப்பட்ட குர்த்தாக்களை முறையான (ஃபார்மல்) மற்றும் முறைசாரா (இன்ஃபார்மல்) நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்வது, தினந்தோறும் அணிந்து கொள்வது என வகைப்படுத்தி ஆண்கள் அணிந்து கொள்கிறார்கள்.

    அதுவும் அப்பழுக்கற்ற தரமான மற்றும் வரம்பற்ற பாணிகளில் ஆண்கள் அணிவதற்கேற்ற பல்வேறு அம்சங்களுடன் கலக்கலாக குர்த்தாக்கள் வந்திருக்கின்றன. நீளம், வெட்டு, அலங்காரம், கழுத்து வடிவமைப்பு மற்றும் பல்வேறு மாதிரிகளில் வந்திருக்கும் குர்த்தாக்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து வாங்க இணையதளங்களில் தங்கள் விற்பனையை கடைகள் துவங்கியுள்ளன.

    தங்கநிற குர்த்தாக்கள், மணி வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள், சிக்கன்காரி, காந்த்தா மற்றும் சீக்வின்ஸ் போன்ற பல்வேறு வேலைப்பாடுகளுடன் வரும் குர்த்தாக்கள் பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களில் அணிய ஏற்றவையாகும்.

    திருமண வரவேற்புகளுக்கு அணிய கம்பீரமான டிசைனர் குர்த்தா செட்டுகள் ஏற்றவையாக இருக்கும். கருப்பு சுரிதாருடன் ஒரு அழகான ஊதா மற்றும் கருப்பு செல்ஃப் டிசைன் செய்யப்பட்ட மாண்டரின் காலருடன் வரும் குர்த்தாக்களுக்கு ஸ்லிப் ஆன் ஷுக்கள் மற்றும் ஜாக்கெட்டுகளுடன் அணியும் பொழுது அபாரமாக இருக்கின்றது என்று பாராட்டத் தோன்றும்.

    இப்பொழுது பிரபலமாகி வருபவை பதானி குர்த்தாக்களாகும். ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ்களுடன் பிரகாசமான சிவப்பு மற்றும் மஞ்சள் பதானி குர்த்தாக்களை நேரு ஜாக்கெட்டுகளுடன் அணிந்து மிகவும் க்ளாசிக் தோற்றத்தைத் தருவதாக இருக்கும். இவை சங்கீத் நிகழ்ச்சிகளுக்கு அணிய சிறந்த ஆடைகளாகும்.

    குஜராத்தி ஸ்டைல் குர்த்தாக்கள், பிளையிட் குர்த்தா மஃப்ளர் ஸ்டைல் குர்த்தா, பட்டன்டு ஸ்லீவ் குர்த்தா, கௌல் ட்ரேப்டு குர்த்தா, சைடு ஓபன் குர்த்தா, பாரம்பரிய ரா சில்க் குர்த்தா, ப்ரோகேட் குர்த்தா, எம்பிராய்டரி நெக் குர்த்தா, ஸ்ட்ரெயிட் குர்த்தா, காட்டன் குர்த்தா, சைட் பட்டன்களுடன் வரும் ஷேர்வானி குர்த்தா, லினென் ஷார்ட் குர்த்தா, பாகிஸ்தானி குர்த்தா, மாண்டரின் காலர்களுடன் வரும் லாங் குர்த்தா, பிரிண்டட் குர்த்தா, எம்பிராய்டர்டு ஜோத்புரி குர்த்தா என்று குர்த்தாக்களின் வகைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
    ×