என் மலர்
அழகுக் குறிப்புகள்
- சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
- ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம்.
ஜாலி வேலைப்பாடு என்பது துணிகளில் துளைகளை உருவாக்கி,அந்தத் துளைகளைச் சுற்றி செய்யப்படும் நூல் வேலைக்கு ஒப்பான ஒரு நுட்பமான வேலைப்பாடாகும். துணிகளில் வெறும் துளைகளை மட்டும் உண்டாக்கி செய்யப்படும் வேலைப் பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்று சொல்லலாம்.துணியின் தொடர்ச்சியை சேதப்படுத்தாமல் ஒரு ஊசியால் வார்ப் மற்றும் நெசவு நூல்களை வெளியில் இழுத்து துளைகளை உருவாக்குவதை உள்ளடக்கியதே இந்த வேலைப்பாட்டின் சிறப்பாகும்.இதன் மூலம் எம்பிராய்டரி வேலைப்பாட்டிலிருந்து இது சற்று வேறுபட்டது என்பது புரிந்திருக்கும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிக்கன்காரி வேலைகளில் இந்த சிறப்பு வாய்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி துணிகளில் மிகச்சிறந்த வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. துணிகளில் ஜாலி என்பது ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டி(டிரெலிஸ்) என்றும் அழைக்கப்படுகிறது.
தையல் மற்றும் எம்பிராய்டரி என்பது காலங்காலமாக முதலில் தேவையாகவும் பின்னர் ஒரு விலை போகும் பொருளாகவும் இருந்திருக்கின்றது.துணிகளை கற்கள் மற்றும் நூல்களால் அழகுபடுத்துவது, ஜமிக்கி வேலைப்பாடுகள் என பல்வேறு அலங்காரங்கள் இருந்தாலும் இந்த ஜாலி வேலைப்பாடு என்பது சற்று வித்தியாசமான அதிநவீன வேலைப் பாடாக இருந்ததால் மக்களிடையே பிரபலமானது.
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவியான நூர்ஜஹான், துருக்கிய கட்டிடக்கலையில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.பரந்த திறந்த வடிவமைப்புகளும், ஜாலியின் காட்சி விளைவுகளும், அதாவது கான்கிரீட்டில் உள்ள லேட்டிஸ் திரைகளும் அவரைக் கவர்ந்தன. ஜாலி அல்லது லேட்டிஸ் திரைகளை கான்கிரீட்டில் பிரதி செய்ய வேண்டும் என்ற ஆசைதான் சிக்கன்காரியில் இந்த நுட்பத்தை உருவாக்க தூண்டியது.முகலாய கட்டிடக்கலையில், அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் போன்றவற்றில் இந்த லேட்டீஸ் திரைகள் போன்ற அமைப்புகள் முகலாயர்களுக்கு ஒரு அடையாளமாக மாறியது
வேலைப்பாடு
சுமார் 40 தையல்கள் உள்ள இந்த சிக்கன் காரி வேலைப்பாட்டில் ஒருவகையான தையலில் நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் தங்கள் ஆடைகளில் மட்டுமே வேலைப்பாடுகளை செய்துகொள்வது இதன் சிறப்பம்சமாகும்.. இந்த ஆடைகளில் விடுபட்ட இடங்களை நிரப்பும் கைவினைஞர்களால் துணிகளில் ஜாலிகளை உருவாக்க முடியாது.. ஜாலிகளை உருவாக்குவதற்கென்றே நிபுணத்துவம் பெற்ற கைவினைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மட்டுமே இதுபோன்ற ஜாலிகளை உருவாக்க முடியும்.
'அசெம்பிளி லைன்' எனப்படும் எம்பிராய்டரி வேலைப் பாட்டின் ஆரம்ப வடிவங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வார்ப் மூலம் துணியின் மீது ஜாலியை உருவாக்கும் வேலை செய்யப்படுகிறது..ஒரு ஊசியால் நெசவு நூல்களைப் பிரித்து இறுக்குவதன் மூலம் துணியில் வலை போன்ற தோற்றமானது உருவாகின்றது.இது துணியின் வலிமையை சமரசம் செய்யாமல் வழக்கமான சுற்றளவுடன் துளைகளை உருவாக்குகிறது. துளைகளுடன் உருவாக்கப்பட்ட துணியை நிரப்ப கைவினைஞர்கள் அந்த வலையைச் சுற்றி வேலைபாடுகளைச் செய்கிறார்கள்.
பாணி மற்றும் வகை
நெட்டட் துணிகளை தயாரிக்கும் வேலையைப் போன்றதே இந்த ஜாலியை உருவாக்கும் விளைவு என்று சொல்லலாம். இது ஆடையை மிகவும் நேர்த்தியாகவும் எடை குறைந்ததாகவும் மாற்ற உதவுகிறது. ஜாலி வேலைப்பாடு என்பது சிக்கன்காரியில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாக இருந்தாலும், இதுபோன்ற பல நுட்பத்துடன் கூடிய வேலைப்பாடுகளை அது தன்னகத்தே கொண்டுள்ளது.
ஹத்கதி மற்றும் பேங்க் ஜெயில் என்று அழைக்கப்படும் இரண்டு நேரான ஜாலி தையல்கள் இந்த வேலைப்பாட்டில் பயன்படுத்தப் படுகின்றன.புள்புள் சாஷ்ம், மக்ரா, மந்த்ராஸி, பூல் ஜாலி, சிதாவுல் ஜாலி மற்றும் தாஜ்மஹால் ஆகியவை பொதுவாகக் காணப்படும் பிற ஜாலி தையல்கள் ஆகும்.சிக்கன்காரி ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்ஃப்கள் பூக்கள், கொடிகள், இலைகள் மற்றும் புட்டிஸ். இதற்குள் ஜாலிகள் உருவாக்கப்படுகின்றன.
இன்றைய சூழ்நிலை
உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட எம்பிராய்டரி வடிவங்களில் ஒன்று என்று சிக்கன்காரி ஆடைகளைச் சொல்லலாம்..உலக அளவில் போற்றப்படும் சில சிறந்த இந்திய வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்டஇந்த ஜாலி வேலைப்பாட்டுடன் கூடிய சிக்கன்காரி உடைகளை அணிந்து ஆடவரும், பெண்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு போட்டிகளில் பங்கு பெறுகிறார்கள். இருப்பினும் சிக்கன் காரி கலையை கற்றுக்கொள்ளும் கலைஞர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வருகிறது.
ஜாலிஸை உருவாக்கும் நுட்பம் உலகம் முழுவதும் பலரால் கவனிக்கப்படுகிறது. பாரம்பரிய கலை வடிவங்களைப் பாதுகாப்பதில் நம்பிக்கை கொண்ட பல வடிவமைப்பாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இந்த வகை எம்பிராய்டரியை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய தீவிரமாக முயற்சி செய்கின்றனர்.தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால்,சிக்கன்காரி ஆடைகளின் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.
பராமரிப்பு
ஜாலி உருவாக்கப்படும் விதத்தால் துணியானது எந்தவித சமரசமும் இல்லாமல் முன்பு எப்படி வலிமையாக இருந்ததோ அதேபோன்ற வலிமையுடன் ஜாலி உருவாக்கப்பட்ட பின்பும் இருக்கின்றது.இதனால் இந்த ஆடையை பராமரிப்பது என்பது எளிதாகிறது.வழக்கமான சலவை மற்றும் இஸ்திரி நுட்பங்கள் ஜாலி வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகளுக்கு ஏற்றவையாக இருக்கின்றது.மற்ற சாதாரண துணிகளுக்கு செய்யும் பராமரிப்பு போன்ற பராமரிப்பை இந்த துணிகளுக்கும் வழங்கலாம்.
ஜாலியில் உள்ள துளைகள் கைவினைஞர்கள் விரும்பும் நீளம் மற்றும் அகலத்தில் இருப்பது போன்று உருவாக்கப்படுகின்றது. அது பொதுவாக அவர்களுடைய படைப்புப் பார்வையைப் பொறுத்தது.
ஜாலியை முடிக்க, அது உருவாக்கப்பட்ட பகுதியைச் சுற்றி ஒரு அவுட்டர் லைனிங் இருக்க வேண்டும்.ஒரு ஜாலி எப்போதுமே ஏதாவது ஒரு மையக் கருத்தை கொண்டிருப்பதுபோல் செய்யப்படுகிறது.
சிக்கன்காரி புடவைகள் மற்றும் குர்த்திகள் இந்தியாவில் உள்ள அழகிய ஆடைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
முதலில், சிக்கன்காரி வெள்ளை நிற துணிகள் அல்லது பேஸ்டல் வண்ணங்களில் மட்டுமே செய்யப்பட்டாலும், தற்பொழுது துடிப்பான வண்ணங்களில் செய்யப்படும் சிக்கன்காரி ஆடைகளை இன்றைய தலைமுறையினர் மிகவும் விரும்பி அணிகின்றனர்.
- சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும்.
- கூந்தல் உதிர்வு கட்டுப்படும்.
நமக்குத் தெரியாத பல அழகு ரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர். கிரேக்கம் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் பல நுாற்றாண்டுகளாகப் பெண்கள் தங்கள் சருமப் பொலிவை அதிகரிக்கவும், கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் அரிசி கழுவும் நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
தயாரிக்கும் முறை:
அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம். அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். இதனால் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து 'நொதித்தல்' முறையில் கூடுதல் பலன்களைக் கொடுக்கும். தேவையான அளவு பயன்படுத்திய பின்னர், மீதமுள்ள அரிசி நீரை காற்று புகாத பாட்டிலில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம். இதை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
தலை முடி: தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி குளித்தபின்பு, அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும். பிறகு, 15 நிமிடங்கள் வேர் முதல் நுனி வரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து, சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனால் முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும், நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். முடி உதிர்வு கட்டுப்படும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.
சருமம்: அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும்போது, செல்கள் புத்துணர்ச்சி பெறும். சருமப் பொலிவு அதிகரிக்கும். இதில் உள்ள மாவுச்சத்து, வெடிப்பு, முகப்பரு, தோல் அழற்சி ஆகியவற்றை நீக்கும். தூய்மையான பருத்தித் துணியை அரிசி நீரில் நனைத்து, அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால், சருமத் துளைகள் இறுகி, மேனி செம்மையாகும். அரிசி நீரில் உள்ள துவர்ப்புத் தன்மை, எண்ணெய்ப் பசையைக் குறைத்து முகப்பருவைத் தடுக்கிறது. தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன், சிறிது அரிசி நீரைக் கலந்து தடவும்போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இளமைப் பொலிவு அதிகரிக்கும்.
- சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும்.
- சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும்.
பெரும்பாலும் எல்லா வீடுகளிலுமே அந்தந்த வீட்டிற்குரிய பாரம்பரிய நகைகளானது பல தலைமுறைகளைத் தாண்டி அந்த வீட்டில் உள்ளவர்களிடம் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடியும்.இந்த பாரம்பரிய நகைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் நம்முடைய மூதாதையர்களை நினைவுபடுத்து பவையாகவும் இருக்கும். இதுபோன்ற பழங்கால பாரம்பரிய நகைகள் வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிகரற்றவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
தங்க சோக்கர் நெக்லஸ்
சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும். இது கழுத்தை இறுக்கிப் பிடித்து மார்பிற்கு மேல் இருப்பதுபோல் வடிவமைக்கப்படும் நகையாகும்.இந்தப் பாரம்பரிய நகையானது இன்றளவும் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அணிந்து கொள்ளக்கூடிய நகையாக வலம் வருகின்றது.சோக்கர் நெக்லஸ் விலையுயர்ந்த கற்கள், முத்துகள் மற்றும் போல்கியால் அலங்கரிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடியும்.
ராயல் தங்க மோதிரம்
பழங்கால ராயல் தங்க மோதிரம் என்பது இந்திய தொன்மையை பறைசாற்றும் அழகான மற்றும் நேர்த்தியான மோதிரம் ஆகும். பழங்காலத்தில் பயன்படுத்திய அதேபோன்ற டிசைன் மற்றும் வடிவங்களில் இப்பொழுதும் தங்க மோதிரங்களை வடிவமைத்து விற்பனை செய்கிறார்கள்.பெரும்பாலும் இதுபோன்ற மோதிரங்களில் விலையுயர்ந்த பெரிய ஒற்றை கற்களைப் பதித்து மோதிரங்களை வடிவமைக்கிறார்கள். பெரிய ஒற்றை கல் மோதிரம் அதை அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றது.
ரூபி நெக்லஸ்
பழங்கால நகைகளில் ரூபி கற்களினால் செய்யப்பட்ட அட்டிகைகள் மற்றும் நெக்லஸ்கள் முக்கிய இடத்தை வகிப்பவையாக இருந்திருக்கின்றன.இன்றைய காலகட்டத்திலும் மணமகளுக்கு அணிவிக்கப்படும் உயர்ந்த தங்க நகைகளின் வரிசையில் இதுபோன்ற ரூபி நெக்லஸ்களும் இடம்பெறுவதைப் பார்க்க முடியும்.மாங்காய், அன்னப்பறவை, மயில் போன்ற டிசைன்களில் ரூபி கற்களைப் பதித்து செய்யப்பட்டு வந்த நெக்லஸ்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் புதுமையான டிசைன்களுடன் செய்யப்படுகின்றன.
நாகர் பதக்கம்
இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்புகளில் மிகவும் பிரபலமானது என்று இந்த நாகர் பதக்கங்களை சொல்லலாம். இதில் ஐந்து தலை நாக வடிவானது சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றது.இந்தப் பழங்கால பதக்கமானது இன்றளவும் சில வீடுகளில் தலைமுறைகளைத் தாண்டி அணியப் படுவதைப் பார்க்க முடியும்.இந்து புராணங்களின்படி, ஐந்து தலை பாம்பு சத்தியத்தின் பாதுகாவலர் என்பதாலேயே நகை வடிவில் அணியப்பட்டு வந்திருக்கின்றது.இன்றும் இதுபோன்ற பதக்கங்கள் பெரும்பாலான நகைக் கடைகளில் பழமையான நகை பிரிவுகளில் விற்கப்படுகின்றன.
ஜிமிக்கிகள்
பழங்கால பெண்கள் அனைவராலும் அணியப்பட்ட நகை என்ற பெருமை இந்த ஜிமிக்கிகளுக்கு உண்டு..அதிலும் கற்கள் பதித்த ஜிமிக்கிகளையே பெண்கள் பெரிதும் விரும்பி அணிந்திருக்கிறார்கள். நாகரீக மாற்றத்தினால் தங்கத்தினால் மட்டுமே செய்யப்பட்ட ஜிமிக்கிகள் வந்துவிட்டன. ரூபி, எமரால்டு, முத்து மற்றும் வெள்ளை கற்கள் பதித்த ஜிமிக்கிகளைஇக்காலப் பெண்கள் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.
டெம்பிள் நெக்லஸ்
மாங்காய், அன்னப்பறவை, மயில், நாகம், பூ வேலைப்பாடு இப்படி ஏதாவது ஒரு டிசைனில் நெக்லஸ் அமைந்திருக்க நெக்லஸின் மையத்தில் இருக்கும் பதக்கமானது இந்திய கோவில் சிற்பங்களை தத்ரூபமாக இருப்பதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வடிவமைப்புகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்பட்டிருப்பதை அதன் வேலைப்பாட்டில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இவ்வகை டெம்பிள் நெக்லஸ்கள் பெரும்பாலும் சிவப்புக்கல்,மரகதம், வெள்ளை கற்கள், போல்கி,முத்துக்கள், பல வண்ண கற்கள் பதிக்கப்பட்டு மயில், மலர் மற்றும் அம்மன் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்தப் பழங்கால பாணியுடன் வரும் நகைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இந்த வடிவமைப்புகளில் சில மாற்றங்களுடன் சம காலத்திற்கு ஏற்றார் போல டெம்பிள் நகைகளை உருவாக்குகிறார்கள்.இதுபோன்ற நகைகளை விரும்பி வாங்குவதற்கு என்றே ஒரு சாரார் இருக்கின்றனர்..
மாங்காய் மாலை, காசு மாலை
ஆரம்ப காலகட்டங்களில் கற்கள் மட்டுமே பதித்து செய்யப்பட்ட இந்த மாலைகள் இப்பொழுது கற்கள் பதிக்காமல் தங்கத்தினால் மட்டுமே செய்தும் கிடைக்கின்றன.பழங்காலத்தில் மாங்காய் மாலை என்றாலே அது சிவப்பு கற்கள் பதித்து செய்யப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.. பிறகு காலம் செல்லச் செல்ல இந்த மாங்காய் மாலையில் பல வண்ண கற்கள் பதித்தும்,கற்களே பதிக்காமலும் வரத் துவங்கிவிட்டன. அதேபோல் சிறிய மாங்காய் முதல் பெரிய மாங்காய் வரை பல்வேறு அளவுகளில் மாங்காய் மாலைகள் வரத் துவங்கிவிட்டன.பழங்காலத்தில் ஓரளவு வசதி படைத்தவர் வீடுகளில் கட்டாயம் ஒரு காசுமாலை இருந்திருக்கின்றது.அந்தக் காலத்து காசு மாலைகளில் ஒவ்வொரு காசும் அதிக தங்கத்தில் அழுத்தம் திருத்தமாக செய்யப்பட்டு இருந்திருக்கின்றன..இப்பொழுது வரும் காசு மாலைகள் குறைந்த தங்கத்திலும் பல்வேறு அளவுகளிலும் கிடைக்கின்றன.. காசு மலைகளில் கற்கள் பதித்து வருபவை கவர்ச்சிகரமாக இருக்கின்றன.
முகப்பு
ஒரு காலகட்டம் வரை முகப்பு வைத்து மட்டுமே செயின்கள் இருந்திருக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது.. அதிலும் இரட்டை வடம், மூன்று வடம் என தங்கச் சரங்கள் அதிகமான செயின்களில் கற்கள் பதித்து செய்யப்பட்ட முகப்புகள் கட்டாயம் இருந்திருக்கின்றன. பிறகு ஒரு காலகட்டத்தில் முகப்புகள் இல்லாமல் செயின்கள் வரத் துவங்கின.அதன் பின்னர் மறுபடியும் பல்வேறு அளவுகளில்,கற்கள் பதித்தும் கற்கள் பதிக்காமலும் பல்வேறு டிசைன்களில் முகப்புகள் வரத் துவங்கிவிட்டன.ஒற்றை சரம் கொண்ட செயின்களுக்குக் கூட முகப்புகள் வைத்து அணிவது இப்பொழுது பிரபலமாகிவிட்டது.
- மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன.
- மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை..
பெண்கள் அன்றாடம் உடுத்துவதற்கு மிகவும் வசதியான மிருதுவான சேலைகளின் வரிசையில் மல்மல் சேலைகளுக்கு முதலிடம் என்று சொல்லலாம். பலவித வண்ணங்களில் அருமையான பூ டிசைன்கள், ஜியோ மெட்ரிக் டிசைன்கள்,இக்கத் பிரிண்ட்டுகள் என உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலும் பல்லு மற்றும் பார்டர் வேறு வண்ணத்திலும் இருப்பது போலவும், புடவை முழுவதுமே ஒரே வண்ணத்தில் இருப்பது போலவும், உடல் முழுவதும் ஒரு வண்ணம் மூன்றுவிதமான பார்டர் வண்ணங்கள் என்று வித்தியாசமாகவும் இந்த மிருதுவான மல்மல் சேலைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக உடல் முழுவதும் டிசைன்கள் இருக்க பார்டர் ஒன்றன் கீழ் ஒன்றாக பிளெயின் வண்ணத்தில் இருப்பது போன்று வந்திருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. உடல் முழுவதும் பூ டிசைன்களுடன் இரண்டு சைடு பார்டர்களும் ஜியோ மெட்ரிக் டிசைனில் இருப்பது போன்று காண்ட்ராஸ்ட் வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சேலைகள் கண்களைக் கவரும் விதத்தில் இருக்கின்றன..ஆரஞ்சு வண்ணத்திற்கு அடர் நீல வண்ணம் பார்டராக வருவது போலவும், மஜன்தாவிற்கு வான நீல நிறம் பார்டராக வருவது போலவும், கிரே வண்ண உடலிற்கு மஜன்தா வண்ணம் பார்டராக வருவது போலவும் மிகவும் அருமையாக கண்கவர் வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து வடிவமைத்திருக்கிறார்கள்.
உடல் முழுவதும் அலை வடிவத்தை செங்குத்தாக வடிவமைத்து பார்டர் மற்றும் பல்லு விற்கு வெறும் கோடுகள் வருவது போன்று வடிவமைத்திருப்பது அணிபவருக்கு ஒல்லியான தோற்றத்தை தருவதாக இருக்கும். உடல் முழுவதும் கொடியில் இலைகளும் பூக்களும் இருப்பது போன்றும் பார்டர் மற்றும் பல்லுவிற்கு நெளி கோடுகள் வருவது போன்றும் டிசைன் செய்யப்பட்டிருப்பது அலுவலகம் செல்லும் பெண்கள் உடுத்துவதற்கு நேர்த்தியான ஒன்றாக இருக்கும்.
சில பெண்கள் மிகவும் மிருதுவான வண்ணங்களில் வரும் சேலைகளை அணிவதற்கு விருப்பப்படுவதால் அதுபோன்றும் இந்த மல்மல் சேலைகளில் அதிக கலெக்ஷன்கள் வருகின்றன. உடல் முழுவதும் சந்தன வண்ணத்தில் நீலம், பச்சை, மஞ்சள்,பழுப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய டிசைன்களை பிரிண்ட் செய்து அதே வண்ணங்களை பார்டராகக் கொடுத்திருப்பது பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கின்றது. வயதான பெண்கள் மட்டுமல்லாமல் சிறு வயது பெண்களும் இதுபோன்ற மிருதுவான வண்ணங்களை இப்பொழுது தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.. இந்த மல்மல் சேலைகளுக்கு கஞ்சி போட்டு அணிய வேண்டிய அவசியமில்லை.. இந்த புடவைகளை வீட்டிலேயே சாதாரண ஷாம்பு வாஷ் செய்து அணியலாம்.
உடல் முழுவதும் செங்குத்துக் கோடுகள் இருக்க பல்லு மற்றும் பார்டரில் ஃபிகர் பிரிண்டுகள் வருவது போன்று அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் புடவைகள் அதன் வண்ணம் மற்றும் டிசைனிற்கு அட்டகாசமாக பொருந்தி வருகின்றது என்று சொல்லலாம். அலுவலகம் செல்லும் பெண்கள் அன்றாடம் அணிவதற்கு இந்த புடவைகள் மிகவும் பொருத்தமாக இருக்கும்..புடவை முழுவதும் செல்ஃப் கலரில் இருப்பது ஒரு விதமான அழகு என்றால் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் வரும் புடவைகள் மற்றொரு விதத்தில் கவர்ச்சிகரமாக இருக்கின்றன.
உடல் முழுவதும் கலம்காரி டிசைன்களுடன் பாந்தினி பிரிண்ட் பார்டர் மற்றும் பல்லுவுடன் வரும் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.மிருதுவான வண்ணத்தில் உடல்முழுவதும் கலம்காரி டிசைன்கள் வருவது போன்றும் அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பாந்தினி பிரிண்டுகள் பார்டர் மற்றும் பல்லுவாக வருவது போன்றும் வடிவமைத்து இருப்பது புடவையை விரும்பாதவர்களைக் கூட வாங்கத் தூண்டும் என்று சொல்லும் அளவிற்கு இருக்கின்றது.
பத்திக் பிரிண்ட்களை இந்தப் புடவைகளில் மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்..கையகல பட்டையான செங்குத்து கோடுகளில் பத்திக் பிரிண்ட்டுகளும் அதையடுத்து கையகல பிளெயின் வண்ணப் பட்டைகளும் வருவது போன்று இருக்கும் புடவைகள் அட்டகாசமாக இருக்கின்றன.. அதிலும் பிரிண்டுகள் ஒரு வண்ணத்திலும் பிளெயின் பட்டைகள் மற்றொரு வண்ணத்திலும் வருவது மிகவும் அழகாக இருக்கின்றது.
மல் மல் காட்டன் புடவைகளில் பிளவுஸுடன் வரும் புடவைகளும் இருக்கின்றன..உடல் முழுவதும் பூ டிசைன்கள், பல்லுவிற்கு வித்தியாசமான டிசைன்கள் இருப்பதுபோன்று வரும் புடவைகளுக்கு மிகவும் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பிளவுஸ் துணிகளை இணைத்திருக்கிறார்கள்..
மல்மல் புடவைகளில் ஹாஃப் அண்ட் ஹாஃப் பேட்டர்ன்களும் வருகின்றன.உடல் முழுவதும் பூ டிசைன் இருந்தால் ஃபிரில்லிற்கு கட்டங்கள், கோடுகள் மற்றும் பிளெயின் வண்ணங்கள் வருவது போன்றும் வடிவமைத்திருக்கிறார்கள்.
இந்த புடவைகளில் ஹேண்ட் பிரிண்டுகள் மிகவும் கலக்கலாக இருக்கின்றன என்று சொல்லலாம்.. வெளியில் அணிந்து செல்வதற்கு மிகவும் பொருத்தமாக இந்த சேலைகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
மிருதுவான துணியில் அட்டகாசமான டிசைன்களும் அருமையான வண்ணங்களும் இருப்பது போன்று வடிவமைத்து வருவது மல்மல் சேலைகளின் சிறப்பம்சம் என்று சொல்லலாம்.. இந்தப் புடவைகளை டிரை கிளீன் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் வீட்டிலேயே சாதாரணமாகத் துவைத்துப் பயன்படுத்தலாம்.கோடைக்காலத்திற்கு பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்ற சேலைகள் என்று இவற்றைச் சொல்லலாம்.இவ்வளவு அருமையான இந்தப் புடவைகள் 600 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய்க்குள் கிடைப்பது மல்மல் புடவைகளின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
- கைப்பைகள் பெண்களை அதிகளவில் கவரும்.
- கைப்பை இன்றி வெளியே செல்லும் பெண்களை காண்பது அரிது.
பெண்கள் எங்கே வெளியே சென்றாலும் அவர்கள் கைப்பையுடன் தான் செல்வார்கள். கைப்பை இன்றி வெளியே செல்லும் பெண்களை காண்பது அரிது. அந்த அளவுக்கு பெண்களுக்கு பிடித்த பொருட்களில் ஒன்று கைப்பை. இதில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கைப்பைகளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும், ஒவ்வொரு வடிவத்திலும், கண்களை கவரும் வகையிலும், பல்வேறு வண்ணங்களிலும் வைத்திருப்பார்கள்.
இப்படிப்பட்ட கைப்பை நமது நாட்டு பெண்களிடம் காலம் காலமாக இருந்து வரும் ஒன்று. இவற்றை மொத்தமாக ஆர்டர் செய்து, அதில் சில அலங்காரங்களை செய்து, அதனை பெண்களை கவரும் வகையில் அழகுப்படுத்தி விற்பனை செய்யலாம். இதற்கு கைப்பை, கிளிட்டர் கலர், மார்க்கர் பேனா, குந்தன் கல், பிளாஸ்டிக் போன்ற கவர்ச்சியான பலவகை பூக்கள் போன்ற பொருட்கள் தேவை.
உங்களுக்கு விருப்பமான, உங்களால் வரைய முடிந்த பூக்கள் படத்தை மார்க்கர் பேனாவால் கைப்பையில் வரையுங்கள். அது செடி ஒன்றில் நிறைய சிறிய பூக்களும், பெரிய பூ ஒன்றும் இருப்பது போல வரைந்து கொள்ளவும். அவ்வாறு படம் வரைய தெரியாது என்றாலும் கவலையில்லை. ஒரு டிரேஸ் பேப்பர் மூலம் படம் ஏதாவது வரைந்து கொள்ளவும். பின்னர் படத்தின் மீது கிளிட்டர் கொடுக்கவும். பின்னர் சிறிய பூக்கள் மீது குந்தன் கல் வைத்து நன்கு ஒட்டவும். பிறகு நீங்கள் வரைந்துள்ள பூக்கள் மீது அழகாக ஒட்டவும்.
அதே போல பெரிய மீது ஜிமிக்கி வைத்து நெருக்கமாக ஒட்டவும். இதனையும் நீங்கள் வரைந்து வைத்துள்ள படத்தில் வசதியாக ஒட்டவும். அதில் இலைகள் வரைந்துள்ள பகுதியில் பச்சை நிற வண்ணம் பூசவும். இதே போல பிளாஸ்டிக்கால் ஆன பட்டாம்பூச்சி ஒன்றை பூக்களின் மீது பறக்கிற மாதிரி ஒட்டலாம். இவை பார்ப்பதற்கு அழகாகவும், அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும். இது போன்ற கைப்பைகள் பெண்களை அதிகளவில் கவரும். அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கும்.
- கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
- சருமத்திற்கு பளபளப்பை தரும் பானங்களை பருகுவதன் மூலம் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம்.
காலையில் எழுந்ததும் தண்ணீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். ஆரோக்கியமும், சருமத்திற்கு பளபளப்பும் சேர்க்கும் பானங்களை தயார் செய்து பருகுவதன் மூலம் இரட்டிப்பு நன்மைகளை அடையலாம்.
கீரை ஜூஸ்:
கீரையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு, கரும்புள்ளிகளை கட்டுப்படுத்தும். முதுமையின் ஆரம்பகால அறிகுறிகளை தடுத்து இளமை தோற்றத்தை தக்கவைக்கவும் உதவும்.
தேவையானவை:
நறுக்கிய கீரை - 2 கப்
ஆப்பிள் - 1 (நறுக்கவும்)
எலுமிச்சை - அரை பழம்
தண்ணீர் - முக்கால் கப்
மிளகு தூள் - சிறிதளவு
செய்முறை: கீரையை நன்றாக கழுவி, அதனுடன் ஆப்பிள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொள்ளவும். பின்பு நன்றாக வடிகட்டி அதனுடன் மிளகு தூள் சேர்த்து பருகலாம். இந்த ஜூஸை அதிகாலையில் பருகி வர, சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
வெள்ளரி ஜூஸ்:
வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற துணைபுரியும்.
தேவையானவை:
வெள்ளரி - 1
எலுமிச்சை பழம் - 2
தண்ணீர் - 4 டம்ளர்
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
செய்முறை: வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும். கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும். புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும். சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம். நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
கேரட்-பீட்ரூட் ஜூஸ்:
இந்த இரண்டு வேர் காய்கறிகளிலும் வைட்டமின் சி, ஏ, துத்தநாகம், போலிக் அமிலம், இரும்பு, நார்ச்சத்து, மாங்கனீஸ் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்த சத்துக்கள் ரத்தத்தை சுத்திகரிப்பதோடு குடலை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. அத்துடன் இந்த சிவப்பு பானம், ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தை பெறவும் உதவி புரியும். கரும்புள்ளிகளை குறைக்கும். சுருக்கங்களை தடுக்கும். முகப்பருக்களை கட்டுப்படுத்தும். வறண்ட சருமத்திற்கு நிவாரணமும் தரும்.
தேவையானவை:
பீட்ரூட் - பாதி
கேரட் -4
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - அரை கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை: கேரட் மற்றும் பீட்ரூட்டை துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு, தண்ணீர் கலந்து ஜூஸ் பதத்துக்கு தயார் செய்து கொள்ளவும். பின்பு வடிகட்டி பருகலாம். காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. விரும்பினால் சிறிதளவு மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள்களில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும் செரிமான அமைப்பை சரியான முறையில் பராமரிக்க வழிவகை செய்யும். குடல் சுத்தமாக இருந்தாலே சருமம் பிரகாசமாக மின்னும்.
சருமத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் நோய்க்கிருமிகளை நீக்க ஆப்பிள் உதவும். இந்த பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை புத்துயிர் பெறச்செய்து, சருமத்திற்கு கூடுதல் பொலிவு அளிக்க உதவும். சரும செல்களை புத்துயிர் பெற செய்யவும், ஒளிரும் சருமத்தை பெறவும் சுவையான ஆப்பிள் ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையானவை:
ஆப்பிள் - 4
எலுமிச்சை - அரை பழம்
இஞ்சி - சிறு துண்டு
தண்ணீர் - 1 கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை: ஆப்பிள்களை தோலுரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கிளறிவிடவும். இந்த சாற்றை டம்ளரில் ஊற்றி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் பருகி வருவதன் மூலம் சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.
- தினமும் வெளியே செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.
- சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர் சத்து மிகவும் இன்றியமையாதது.
அழகை கெடுக்கும் வகையில் சரும பிரச்சனைகளான முகப்பரு, வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், பொலிவிழந்த முகம், சரும சுருக்கம் மற்றும் முடி கொட்டுதல், வழுக்கை விழுதல், நக சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண நவீன சிகிச்சை முறைகளை தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
* முகச்சுருக்கம்:
முதலில் கண்கள் மற்றும் வாய்ப்பகுதியை சுற்றி தான் சுருக்கங்கள் விரைவில் வர ஆரம்பிக்கும். இதனை தவிர்க்க தோல் மருத்துவரின் ஆலோசனைபடி தினமும் இரவில் முகத்தில் ரெட்டினால் எனும் கிரீமை மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும்.
* நீர்ச்சத்து:
சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர் சத்து மிகவும் இன்றியமையாதது. சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் முகம் பொலிவோடு இருக்கும். அதற்கு தினமும் போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு சருமத்தின் வெளிப்புறம் வறட்சி அடையாமல் இருக்க மாய்ஸ்ரைசர் லோசன் போன்றவற்றை தினமும் பயன்படுத்த வேண்டும்.
* சன் ஸ்கிரீன்:
தினமும் வெளியே செல்லும் முன் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் கருமை அடைவதை தடுக்கப்படுவதோடு, தோல் வயதாகும் செயல்முறையை மெதுவாக்கும்.
* கண் விளிம்பு:
கண் விளிம்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்க வேண்டும். அதற்கு வெளியே வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து செல்வதோடு, கண்களை கடுமையாக தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். கண்களை அதிகமாக தேய்த்தால் கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகம்.
* உணவை கவனியுங்கள்:
சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால் ஸ்டார்ச் உணவுகள், எண்ணெய் பசை அதிகமுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டு Omega-3 Fattily Acid மற்றும் புரோட்டின் நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும்.
*நகங்கள்
நகத்தை பற்களால் கடிக்க கூடாது வீட்டு வேலையை முடித்ததும் கைகளை கழுவி சிறிது நேரம் கழித்து கிரீம் தடவுங்கள். இதனால் நகங்கள் வறண்டு உடைவதை தடுக்கலாம்.
இரும்பு சத்து குறைவாக இருப்பதால் நகங்கள் எளிதில் உடையும். பட்டை, பட்டையாக பிரியும். எனவே இரும்பு சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
எனவே சரும பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
Dr. TAMILARASI SHANMUGANATHANMBBS., MD (Derm), Aesthetic medicine (AAAM-USA) Consultant Dermatologist, Dr. Tamil's A+SKIN AND HAIR CENTRE Thoothukudi - Cell: 908027729
- பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது.
- வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்லது காய்ந்து போகாது.
நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து விட்டதன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும்.
வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல வேண்டும். இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள உஷ்ணம் குறையும், உதடுகளும் தானாகவே வறண்டு போகாது, அல்லது காய்ந்து போகாது.
உதடு சொரசொரப்பாக வறட்சியாக இருந்தால், தேனுடன் சர்க்கரையை சேர்த்து லேசாக தேய்த்தால் உதடு மிருதுவாகி விடும். குடை மிளகாய் வாங்கும் போது லேசாக ஆட்டிப்பார்த்து வாங்கவும். விதைகள் உள்ளே உருண்டால், அவை புதியது அல்ல.
தயிருடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் தடவி வர வெயிலினால் ஏற்படும் கருமை நீங்குவதுடன் எண்ணெய் பிசுபிசுப்பும் நீங்கும். வெறும் புளித்த தயிரை வீணாக்காமல் மஞ்சள் சேர்த்து தடவினால் முகத்தில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். அழுக்குகளும் நீங்கும்.
- தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம்.
- சீயக்காய், எண்ணெய்ப் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது.
தலை முடியைப் பராமரிப்பதற்கு காலங்காலமாக பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்று சீயக்காய். இன்று நம்மைச் சுற்றி ஏற்பட்டிருக்கும் சுற்றுச் சூழல் மாசு, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவை முடி உதிர்தல் பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றன. இதைத் தடுப்பதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும், இயற்கையான மற்றும் எளிமையான முறையே சீயக்காய்த்தூள் பயன்பாடு ஆகும்.
அசாசியா கோன்சின்னா மரத்தில் இருந்து பெறப்படும் சீயக்காய், வருடம் முழுவதும் எளிதில் கிடைக்கக் கூடியது. விலை மலிவானது. தீமை விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இல்லாதது.
சீயக்காய் பயன்படுத்துவதால் தலைப்பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். இன்றைய சூழல் சீர்கேடுகளால் முடியில் ஏற்படும் அமில, கார சமநிலை மாற்றம் சீராகும். பொடுகு நீங்கும். சொறி, சிரங்கு, படை, கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சினைகள் குணமாகும்.
முடி உதிர்தல் பிரச்சினை இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை சீயக்காய்த்தூள் பயன்படுத்தி, தலைக்குக் குளிக்கலாம். தலையில் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்த பின்பு, சீயக்காயைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கூந்தல் உதிர்வது, இளநரை, அரிப்பு போன்ற பிரச்சினைகள் தீரும்
செம்பருத்தி, வெந்தயம், பூலாங்கிழங்கு, எலுமிச்சை பழத் தோல், பச்சை பயறு, காய்ந்த நெல்லி, ஆவாரம் பூ ஆகியவற்றை சீயக்காயுடன் கலந்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, இந்தப் பொடியை உபயோகப்படுத்தி குளித்தால் கூந்தல் பொலிவுடன் இருக்கும்; வளர்ச்சி அதிகரிக்கும்.
சீயக்காய், எண்ணெய்ப் பசையை நீக்கி கூந்தலை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. அதே நேரம் தேவையான எண்ணெய்ப் பசையை இருத்தி இயற்கையான ஒரு கண்டிஷனராகவும் இது செயல்படும். சீயக்காய் பயன்படுத்திய பின்பு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டிய தேவையே இருக்காது.
சீயக்காயில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலின் வேர்களை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் லைட்டமின் சி மற்றும் டி, சருமத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
- ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஐ மேக்கப்பை இரவில் முழுமையாக நீக்கி விட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.
கண்ணுக்கு மட்டும்தான் உள்ளத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும் குணம் இருக்கு. அதனால கண் எப்பவுமே ஸ்பெஷல்தான். இதை இன்னும் ஸ்பெஷலாக்க, ஒவ்வொரு பாகமாகப் பிரித்துப் பிரித்து வீட்டிலேயே என்னவெல்லாம் செய்யலாம்னு பார்க்கலாம்.
கண், புருவம்: தலையில் பொடுகு இருந்தால், அது உதிரும்போது புருவமுடிகளின் இடையில் சிக்கிக்கொள்ளும். இதேபோல முக பவுடர், தூசு போன்றவையும் புருவங்களில் சிக்கிவிடும். இதைச் சுத்தம் செய்யாதபட்சத்தில், இயற்கையாக அடர்ந்த புருவம் உள்ளவர்களுக்குக்கூட நாளடைவில் முடிகள் உதிர்ந்து, புருவம் மெல்லியதாகிவிடும். இதைத் தவிர்க்க, தினமும் குளிக்கும்போது விரல் நகங்களால் புருவத்தை மென்மையாக சுரண்டிவிட்டு, பின் சோப்பு போட்டு அலசுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
தரமான ஐபுரோ பென்சிலை வாங்கி, ஒரு டப்பாவில் கொஞ்சம் விளக்கெண்ணைய் ஊற்றி, அதற்குள் ஐபுரோ பென்சிலின் நுனி மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். தினமும் இரவு, புருவ முடி வளர்ந்துள்ள திசையிலேயே, இந்த பென்சிலைக் கொண்டு அழுத்தமாக வரைந்து, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். ஐபுரோ பென்சிலில் உள்ள லனொலின் மற்றும் விளக்கெண்ணெய் இவை இரண்டும் இணைந்து, மெல்லிய புருவங்களை அடர்த்தியாக்கவும், உதிர்ந்த புருவ முடியை திரும்ப வளரவைக்கவும் உதவும்.
குறிப்பு: தினமும் புருவத்துக்கு ஐபுரோ பென்சில் போடும்போது, முடிகளில் மட்டும் இல்லாமல், சருமத்திலும் மை பட்டு, சருமத் துவாரங்கள் அடைத்துக்கொள்ளும். இதற்கு காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும் டிரான்ஸ்பரன்ட் மஸ்காராவை ஐபுரோவின் மேல் போட்டால், முடியைத் தவிர சருமத்தில் பட்டுள்ள மையை நீக்கிவிடும்.
இமை முடி: ஐஸ்க்ரீம் செய்யத் தேவைப்படும் ஜெலட்டினை (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) பத்து நிமிடம் சுடு தண்ணீரில் போட்டால், ஜெல் போல் மாறிவிடும். இதில் பத்து கிராம் எடுத்து, இதனுடன் விளக்கெண்ணெய் ஒரு பத்து கிராம் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் இந்தக் கலவையை காட்டனில் தொட்டு கண்களில் ஒற்றி எடுத்து, பத்து நிமிடங்கள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்ய வேண்டும். இதை, தொடர்ந்து செய்தால், இமையில் முடிகள் வளர்வதுடன் கண்களும் பிரகாசமாக ஒளிரும்.
கண் இமைகளின் மேல்தோலில் கருமையும், சுருக்கமும் ஏற்படுவதைத் தடுக்க ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஐ மேக்கப் போட வேண்டிய கட்டாயம் இருந்தால், இரவு அதை முழுமையா அலசிவிட்டுத்தான் தூங்கச் செல்ல வேண்டும்.
கருவளையம்: கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.
- இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை.
- சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.
ஆண்களின் உடைகள், பைகள் இல்லாமல் முழுமை அடைவதில்லை. ஆனால், பெண்களின் உடைகளில் பைகள் வைத்து தைப்பதை பற்றி ஏன் யோசிப்பதில்லை?
பெண்கள் காலம்காலமாக தோள்களிலும் கைகளிலும் பைகளை சுமந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் தோள் பைகள் ஒருபோதும் சட்டை பைகளுக்கு இணையாகாது. இன்றும் நாம் அணிகிற பெரும்பாலான ஆடைகள், மேற்கத்திய பாணிகளை பின்பற்றி தயாரிக்கப்படுபவை. எனவே இந்தக் கேள்விக்கான விடையையும் ஐரோப்பிய வரலாற்றில் இருந்தே கண்டறிய முடியும். முந்தைய காலத்தில் ஆண்களும், பெண்களும் கையில் எடுத்துச் செல்லும் பைகளை மட்டுமே பயன்படுத்தினார்கள்.
கி.பி.476 முதல் 1500-ம் ஆண்டு வரையிலான காலத்தில் எடை குறைவான பொருட்களை வைக்கும் வகையில் சட்டைப்பைகளையும் இடுப்பு பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட சிறு பைகளையும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். திருடர்களிடமிருந்து பணத்தை பாதுகாப்பதற்காக, சட்டையின் உட்புறமாக பைகளை தைக்கும் வழக்கமும் தொடங்கியது. பெண்களும்கூட சில ரக ஆடைகளில் இப்படி உள்பைகளைத் தைத்துக்கொண்டார்கள்.
17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் ஆண்களின் கோட், வெயிஸ்ட் கோட், பேன்ட் என்று எதுவாக இருந்தாலும் அதில் கண்டிப்பாகப் பைகள் இருந்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் பெண்களின் ஆடைகளுக்கு இந்த வாய்ப்பு அமையவில்லை. 18-ம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ஆடை வடிவமைப்பிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. பெண்களின் ஆடைகள் கொஞ்சம் கொஞ்சமாக உடலை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தன. எனவே பெண்கள் தங்களது உடைகளுடன் பைகளை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே போனது.
இந்த காலகட்டத்தில் மிகவும் அழகிய வடிவமைப்புகளோடு கூடிய பெண்களுக்கான பிரத்யேக பர்ஸ் பிரபலமானது. ஆனால், சமீப காலத்தில் பெண்களுக்கான சில ரக ஆடைகளில் பாக்கெட்டுகள் வைத்து தைக்கப்படுகின்றன.
- ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது.
- உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.
தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்தி கொள்ளக்கூடாது. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. 'அனாஜன்' என்பது வளரும் பருவம்.
ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது 'காட்டாஜன்' என்று ஒரு பருவம். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப்பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும்.
மூன்றாவது பருவம் 'டீலாஜன்'. இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். இந்தச்சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சி பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.
வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன், இந்த மூன்றும்தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயது ஆக ஆக செல்கள் தன்னை புதுப்பித்து கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான், என்கிறார்கள் மருத்துவ துறையினர்.






