என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு பலவகைகளிலும் பெண்கள் உபயோகிக்கலாம்.
    பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம் வயதினர், முதியோர்கள், தொழில் முனைவோர், இல்லத்தரசி என அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக அமைந்திருக்கும். சாதாரணமாக பயணம் மேற்கொண்டாலோ அல்லது தொழில் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலோ சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தயங்காமல் உபயோகப்படுத்தலாம். அது தனித்துவமான முகப்பொலிவை பெற்றுத்தரும். சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு பலவகைகளிலும் பெண்கள் உபயோகிக்கலாம்.

    நிறைய பெண்களுக்கு கண்களின் இமை பகுதியிலும், கண்களின் அடிப்பகுதியிலும் கருமை படிந்திருக்கும். கரும் புள்ளிகள், முகப்பருக்களும் ஆங்காங்கே தென்படும். அவசரமாக வெளியே கிளம்பி செல்லும் பட்சத்தில் லிப்ஸ்டிக்கை, கண்களையொட்டி இருக்கும் கருமையை மறைப்பதற்கு உபயோகிக்கலாம். லிப்ஸ்டிக்கை லேசாக பூசிவிட்டு வழக்கமான ஒப்பனையை மேற்கொள்ளலாம். அப்போது கரும் புள்ளிகள், பருக்கள் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

    லிப்ஸ்டிக்கை லிப் பாமாகவும் மாற்றி உபயோகிக்கலாம். தொடர்ந்து சிவப்பு லிப்ஸ்டிக்கை உபயோகித்து சலிப்படைந்தால் அதனை கொண்டு லிப் பாம் தயார் செய்யலாம். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கோகோ வெண்ணெய் ஊற்றிவிட்டு அதனுடன் சிறிதளவு லிப்ஸ்டிக் சேர்த்து பிசையவும். அதனை மைக்ரோ ஓவனில் ஒரு நிமிடம் வைத்துவிட்டு வெளியே எடுக்கவும். அது ஆறியதும் வேறொரு கிண்ணத்தில் மாற்றிவிடவும். இதுதான் லிப் பாம். இதனை உதட்டில் பூசலாம்.

    சிவப்பு நிற லிப்ஸ்டிக்குடன் மற்ற நிற லிப்ஸ்டிக்கையோ அல்லது பழைய லிப்ஸ்டிக்கையோ கலந்தும் உபயோகிக்கலாம். முதலில் ‘லிப் லைனர்’ பென்சிலை கொண்டு உதட்டின் மேல் பகுதியில் கோடு வரைந்து கொள்ளவும். அதன் பிறகு, தயார் செய்யப்பட்டிருக்கும் லிப்ஸ்டிக்கில் லிப் பிரஷை முக்கி உதட்டில் தடவலாம். அவ்வாறு செய்தால் உதடு பளபளப்பாக மின்னும்.

    லிப்ஸ்டிக் மினுமினுப்பையும் தரக்கூடியது. இது அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்றது. கன்னங்களுக்கு இயற்கையான பிரகாசமான நிறத்தையும் கொடுக்கும். கன்னத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்கவும் உதவும். முதலில் கன்னங்களில் வெளிர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை லேசாக தடவி விரல்களால் மசாஜ் செய்யவும். பின்னர் ஒப்பனை தூரிகையை கொண்டு தேய்க்கவும். அதனுடன் சிறிதளவு ‘பிக்ஸிங் பவுடரும்’ சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

    ‘ஐ ஷேடோ’வாகவும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். சிறிதளவு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை கைவிரலிலோ, ஒப்பனை தூரிகையிலோ தடவி கண்களை சுற்றி தேய்த்துவிடலாம். அதனுடன் ‘ஹைலைட்டரை’யும் பயன்படுத்துவது கூடுதல் பொலிவை தரும்.
    சேலைகளில் தினமும் புதுப்புது டிசைன்கள், ரகங்கள் அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. சமீப காலங்களில் அறிமுகமாகியிருக்கும் சேலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.
    சேலைகளில் தினமும் புதுப்புது டிசைன்கள், ரகங்கள் அறிமுகமாகிக் கொண்டேதான் இருக்கின்றன. சமீப காலங்களில் அறிமுகமாகியிருக்கும் சேலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

    செமி காதிபட்டு:- உடல் முழுவதும் மென்மையான நிறங்களில் அழகான பிரிண்டுகள் இருந்தால் முந்தானையானது கான்ட்ராஸ்ட் அடர் நிறத்தில் அட்டகாசமாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சேலையுடனேயே கான்ட்ராஸ்ட் நிறத்தில் ப்ளவுஸும் இணைக்கப்பட்டிருப்பது அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது. கலம்காரி டிசைன்களில் பிரிண்ட்டுகள், பிளெயின் உடலுக்கு பிரிண்டட் பல்லு அல்லது பிளெயின் உடலுக்கு கோடுகளில் பல்லு, ஷேடோ பிரிண்டுகள் என்று பார்ப்பதற்கே மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருவதாக உள்ள இந்தச் சேலைகள் ரூபாய் 300 முதல் 400 ரூபாய்க்கே கிடைக்கின்றன என்று சொன்னால் நம்பவே முடியாது.

    ஜம்தானி சேலைகள்:- அணிந்தால் ஸ்டைலிஷாகவும், கவுரவமான தோற்றத்தைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் விலை குறைவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்பொழுது நிச்சயமாக உங்கள் தேர்வு ஜம்தானி சேலைகளாகத்தான் இருக்க முடியும். இரண்டு விரல் அகலம் முதல் கை அகலம் வரை ஜரிகை பார்டர்கள் வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகைச் சேலைகள் சிறு விழாக்கள் மற்றும் கோவில்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இருக்கும். நூற்று ஐம்பது ரூபாய் முதல் ஐநூறு ரூபாய்க்குள் இவ்வளவு அழகான சேலைகள் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்றே சொல்லலாம்.

    இக்கத் சில்க் காட்டன்:- தனிப்பட்ட முறையில் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கோரா காட்டன் இக்கத் சேலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். ஆரஞ்சு நிறத்தில் இக்கத் பிரிண்ட் இருந்தால் நீலநிறத்தில் பிரிண்டட் பல்லுவுடன் பிளெயின் நீல நிறத்தில் பிளவுஸ், வெள்ளைநிற உடல் பகுதியில் இக்கத் பிரிண்ட் இருந்தால் மஜந்தா, சிகப்பு, நீல நிறத்தில் பிரிண்டட் பல்லு என்று அருமையான வண்ணச் சேர்க்கையைத் தேர்வு செய்து வடிவமைத்திருக்கும் இவ்வகைச் சேலைகளின் விலை மூன்றாயிரம் முதல் நான்காயிரம் மட்டுமே ஆகும்.

    குறைந்த விலை பட்டுச் சேலைகள்:- பட்டுச் சேலைகளை அணிவதற்கு விருப்பமாக இருக்கும் பலருக்கு இவ்வகைச் சேலைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய்க்குள் மிகவும் அழகான டிசைன்கள், கண்கவர் வண்ணங்களில் அணிவதற்கு இலகுவாக வந்திருக்கும் இந்தச் சேலைகளை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுச் சேலைகளின் அழகும், பொலிவும் குறைந்த விலை பட்டுச் சேலைகளில் கிடைத்தால் அவற்றை வாங்காமல் இருப்போமா என்ன?

    சில்வர் ஜரி மற்றும் இரட்டை பார்டர் சேலைகள்:- சில்வர் ஜரியானது உடலில் கோடுகளாக வர பூக்கள் உடல் முழுவதும் பிரிண்ட் செய்யப்பட்டு, சில்வர் ஜரி பார்டர்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சேலைகளின் வண்ணச் சேர்க்கையை என்னவென்று வர்ணிப்பது? பிளவுஸ்கள் சேலைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அவற்றை தனியாக தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. சேலையின் மேல்பக்கம் சிங்கிள் பார்டருடனும், சேலையின் கீழ்ப்புறம் டபுள் பார்டருடனும் இக்கத் மற்றும் வொர்லி பிரிண்ட்டுடன் வரும் சேலைகளின் வண்ணக்குவியலை என்னவென்று வர்ணிப்பது? பல்லுவும், பார்டரும் ஒரே மாதிரி டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் வருவது மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளது. அறுநூறு ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குள் சேலைகளின் விலையானது அமைந்திருப்பது மற்றுமொரு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

    பகல்புரி புடவைகள்:- உடல் முழுவதும் வொர்லி பிரிண்ட்டுகள், பிரிண்ட் செய்யப்பட்ட வண்ணத்திலேயே முந்தியானது வெறும் கோடுகளாக இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது அட்டகாசமாக இருக்கின்றது. பகல்புரி சேலைகள் மிகவும் மென்மையாக இருப்பதால் அவற்றை துவைத்து உடுத்தினாலே போதுமானது. இஸ்திரி போடவோ, கஞ்சி போட்டு உடுத்த வேண்டிய அவசியமோ இல்லை. தினப்படி அணிய ஏதுவாகவும் அதே சமயம் விலையும் ஐந்நூறு முதல் அறுநூறு ரூபாயாக இருந்தால் நம்முடைய முதல் தேர்வு இந்தச் சேலைகளாகத்தான் இருக்கும்.

    ஷேட்டின் பார்டர்களுடன் வரும் டிஜிட்டல் பிரிண்ட் சேலைகள்:- லினன் பேஸில் அமைந்திருக்கும் இந்தப் புடவைகளில் பூக்கள் கொத்துக் கொத்தாக பிரிண்ட்டு செய்யப்பட்டிருப்பதை தொட்டுப் பார்க்கும் பொழுது மென்மையான பூக்களைத் தொடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தச் சேலைகளில் ஷேட்டின் பார்டர் அமைந்திருப்பது மற்றுமொரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதன் விலையோ ஐந்றூறு முதல் அறுநூறு ரூபாய் இருப்பது கூடுதல் சிறப்பம்சம் என்றே சொல்லலாம். இவ்வகைச் சேலைகள் அணிவதற்கும், பராமரிப்பதற்கும் எளிதாக இருப்பது மற்றொரு கூடுதல் சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.

    இரட்டை பிளவுஸ்களுடன் வரும் மென் பருத்திச் சேலைகள்:- பெரும்பாலும் பிளையின் வெள்ளை நிறத்தில் அழகான சில்வர் ஜரிபார்டர் அத்துடன் அரை இன்ச்சில் கான்ட்ராஸ்ட்டான வண்ண பார்டருடன் இரண்டு விதமான பிளவுஸ்களுடன் வந்திருக்கும் இவ்வகைச் சேலைகளை என்னவென்று சொல்வது? ஒரு பிளவுஸ் சின்தடிக்கிலும், மற்றொரு பிளவுஸ் காட்டனிலும் இருப்பது கூடுதல் சிறப்பாகும். அதிலும் ஒரு பிளவுஸ் கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் பிரிண்ட்டுகள் செய்யப்பட்டும், மற்றொரு பிளவுஸ் மென்மையான வண்ணத்தில் கட்டங்களாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது.
    பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது.
    இந்தியத் திருமணங்களில் மணப்பெண்களுக்கு பாரம்பரிய முறையில் பதினாறு வகையான அலங்காரங்களை செய்கிறார்கள். அதில் முக்கியமானது மருதாணி அலங்காரம். பெண்கள் மருதாணி அலங்காரம் செய்துகொள்ள எப்போதுமே விரும்புவார்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு அழகோடு, ஆரோக்கியத்தையும் சேர்த்து தருகிறது. மருதாணி உடலில் பித்தத் தன்மையை கட்டுப்படுத்தி, குளிர்ச்சியை தருகிறது.

    பாத்திரங்களை பளிச்சிடவைக்கும் சோப்பு முதல், துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் வரை எல்லாமுமே தற்போது ரசாயன கலவைகளாக மாறி வருகின்றன. அவைகளால் பெண்களின் கைகளுக்கு ஏற்படும் அனைத்து பாதிப்புகளையும் போக்கும் சக்தி இயற்கையான மருதாணிக்கு இருக்கிறது. கால், கைகளில் ஏற்படும் பித்த வெடிப்பு, தோலுரிதல் போன்றவைகளும் மருதாணியால் மறையும். இத்தகைய மருத்துவ குணங்கள் கொண்ட மருதாணி சுப நிகழ்ச்சிகளில் மங்கள பொருளாகவும் விளங்குகிறது.

    மருதாணி அரைத்து கைகளை அழகுபடுத்திக் கொண்டு சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால் இன்றைய அவசர யுகத்தில் பெண்கள் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. அதனால் மருதாணி, பெண்களின் பயன்பாட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை உணர்ந்த வியாபாரிகள் அதிலும் ரெடிமேட் வகைகளை கொண்டு வந்துவிட்டார்கள். வைத்ததும் அது காய்ந்துவிடும் என்றாலும், அதில் இயற்கையான மருத்துவ குணம் குறைவு. கிளிட்டர் மருதாணி, நெயில் பாலீஷ் மருதாணி, ஜர்தோசி மருதாணி என்று இப்போது அதற்கு பல பெயர்கள் உண்டு. அவைகளை பயன்படுத்தி கைகளில் அழகிய உருவங்களை வடிவமைக் கிறார்கள். அதன் மூலம் குறுகிய நேரத்திலே அந்த அலங்காரத்தை செய்துமுடித்துவிட முடிகிறது. காய்வதற்காக காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. அழகு நிலையங்களில் விதவிதமான மருதாணிகளை தயார் செய்துவைத்திருக்கிறார்கள். திடீர் விருந்து, விழாக்களுக்கு செல்லும்போது அதனை விருப்பம்போல் பயன் படுத்திக்கொள்ள முடியும்.

    ஜர்தோசி எனப்படும் பாரம்பரிய மருதாணியில் தங்கம், வெள்ளி துகள்கள் கலப்பதால் அது பளபளப்பாக காட்சியளிக்கிறது. கிளிட்டர் மருதாணியை உடைக்கு பொருத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம். பாரம்பரிய மருதாணியால் அழகுபடுத்திக்கொண்டு பின்பு அதற்குமேல் பளபளக்கும் ஜெல், மைக்கா போன்ற பொருட்களை கலந்து பூசி அழகிய வடிவத்தை அலங்காரம் செய்வார்கள். மருதாணியின் புதிய பரிமாணம் கவர்ச்சியாக இருப்பதால், இப்போது பலராலும் இது விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளது. இதன் பெருமை வெளிநாடுகளுக்கும் பரவிக்கொண்டிருக்கிறது.

    ஹாலிவுட் பிரபலங்களான டேமிமூர், மடோனா, நாவோமி போன்றோர் மருதாணி அலங்காரத்தில் மனதை பறிகொடுத்திருப்பவர்கள். தங்கள் கரங்களில் இந்திய முறைப்படி மருதாணி அலங்காரம் செய்து கொண்டு சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு பெருமை சேர்க்கிறார்கள். இந்தி நடிகைகளும் மருதாணி அலங்காரத்தில் பிரியம் கொண்டவர்கள்தான். ‘மை நேம் இஸ் கான்’ என்ற இந்தி சினிமாவில் நடிகை கஜோல் மருதாணி அலங்காரம் செய்திருந்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. பாரம்பரிய மருதாணி உள்ளங்கைகளிலும், கால்களில் மட்டுமே வைக்கப்பட்டது. இப்போது தோள் பட்டையிலிருந்து விரல்கள் வரை அலங்கரிக்கப்படுகிறது.

    மருதாணிக்காக புதிய டிசைன்களை அழகுக்கலை நிபுணர்கள் உருவாக்குகிறார்கள். பூக்கள், இலை, கொடிகள், பறவைகள், விலங்குகள், அழகிய வாசகங்கள், விருப்பமானவர்களின் பெயர், தேள், டிராகன், பாம்பு போன்றவை அதில் பிரபலமாக இருக்கிறது. இந்த டிசைன்களை போடுவதற்கு தேர்ச்சி பெற்ற கலைஞர்களை அழகு நிலையங்கள் வேலைக்கு அமர்த்தியிருக்கின்றன.

    இந்த மருதாணி கலைஞர்களுக்கு வெளிநாடுகளிலும் இப்போது நல்ல மவுசு. வெளிநாடுகளில் நம்ம ஊர் சுத்தமான மருதாணிக்கு தனி செல்வாக்கு உள்ளது. அதன் வாசமும், இயற்கையான வண்ணமும் அவர்களுக்கு நன்றாக பிடித்துப்போய்விட்டது. அதனால் மருதாணியோடு சேர்ந்து மருதாணி கலைஞர்களும் வெளிநாடு செல்கிறார்கள்.

    நெயில் பாலீஷ் கலந்த மருதாணியும் இப்போது கிடைக்கிறது. பல வண்ணங்களில், பல டிசைன்களில் அதை நகங்களில் வைத்துக்கொள்ளலாம். பிறகு ரிமூவர் கலந்து அழித்து விடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள், மேடை நிகழ்ச்சி செய்பவர்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல் வரவேற்பாளர்கள் போன்றவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    பல நட்சத்திர ஓட்டல்கள், தங்கள் வாடிக்கையாளர்களை கவர அவர்களுக்கு மருதாணி அலங்காரம் செய்கிறார்கள். பாரம்பரிய அழகு சாதனப் பொருளான மருதாணி இன்று பலவகையில் மாற்றம் அடைந்து பார் முழுவதும் மணக்கிறது. மருதாணி இந்தியாவின் பாரம்பரிய அழகு சாதனப் பொருள் மட்டுமல்ல. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், துபாய் போன்ற நாடுகளிலும் பிரசித்திப் பெற்றிருக்கிறது.
    பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. மேலும் முடி கொட்டுவதை தடுக்கவும் ஆவாரம்பூ மிகச்சிறந்த பணிபுரிகிறது.
    * ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலிலும் முகத்திலும் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும்.

    * பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. பூலான் கிழங்கு, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ ஆகிய மூன்றையும் பசை போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து உங்கள் முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.

    * முடி கொட்டுவதை தடுக்கவும் ஆவாரம்பூ  மிகச்சிறந்த பணிபுரிகிறது. செம்பருத்தி, தேங்காய்ப் பால் மற்றும் ஆவாரம்பூ ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு மூன்று முறை தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். கூந்தலும் நன்கு வளர்ச்சி அடையும்.

    * வடிகட்டிய ஆவாரம் பூவின் தண்ணீரை வைத்து உங்கள் கூந்தலை அலசலாம். முகத்தையும் கழுவலாம், இதை தொடர்ந்து செய்தால் முடி சுத்தமாவதுமட்டுமில்லாமல், முகமும் பளிச்சென்று இருக்கும். உடலின் நிறம் அதிகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    * ஆவாரம் பூவின் சாற்றை சுண்டக் காய்ச்சி, அதனுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தினமும் முடிக்கு தடவி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி நன்கு வளருவதுடன் முடி கொட்டுவதும் நின்று விடும்.

    முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. மேலும் பொடுகு, முகப்பரு பிரச்சனைகளுக்கும் பூண்டு தீர்வு தருகிறது.
    முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம். பூண்டை இடித்துக்கொள்ளுங்கள். பின் ஆலிவ் எண்ணெயை கடாயில் ஊற்றி காய்ச்சி அதில் இடித்த பூண்டுகளையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். அந்த எண்ணெய்யை வடிகட்டி தலையின் வேர்களில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலசுங்கள்.இப்படி தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.

    பூண்டில் உள்ள சில குறிப்பிட்ட தன்மைகள் காரணமாக, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய மூலப்பொருளாக பூண்டு திகழ்கிறது. அவை,

    1. பூண்டில் ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை எதிர்த்து போராட உதவுகிறது.

    2. பூண்டு , நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், தலை முடி உதிர்விற்கு காரணமான கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது

    3. பூண்டில் உள்ள செலெனியம் என்னும் கூறு, இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.

    4. முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து, அடைப்பைப் போக்குகிறது, இதனால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.

    5. தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் பூண்டு சிறந்த தீர்வைத் தருகிறது.

    கூந்தல் ஆரோக்கியத்திற்கு, தேங்காய் எண்ணெய் பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது. பூண்டுடன் இணைந்து தேங்காய் எண்ணெய், முடி உதிர்வை எதிர்த்து போராடுகிறது. இரண்டு பல் பூண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் பூண்டைச் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக மசாஜ் செய்து தடவவும். அரை மணி நேரம் இந்த எண்ணெய் உங்கள் தலையில் ஊறியவுடன், வழக்கமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசவும்.

    பூண்டுடன் தேன் சேர்த்து முடி உதிர்வுக்கான சிகிச்சையில் பயன்படுத்தலாம். 8 பல் பூண்டை எடுத்து மசித்து, இரண்டு ஸ்பூன் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் உச்சி முதல் நுனி வரை தடவவும்.

    பிறகு 20 நிமிடங்கள் ஊற விடவும். 20 நிமிடம் கழித்து, வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். ஒரு வாரத்தில் இரண்டு முறை இந்த தீர்வைப் பின்பற்றுவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 
    முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும் முகப்பருவிற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. அது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    முகப்பரு அற்ற தெளிவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. இன்றைய சுற்றுச்சூழல், வெப்பம் எனப் பல காரணிகளுடன் போராடி சருமத்தை காப்பாற்ற பல முயற்சிகளும் நாம் எடுக்கிறோம். முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம்.

    பால் பொருட்கள், காரசார உணவுகள், ப்ரெட், பொரித்த உணவுகள் போன்ற பலதரப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல் முகப்பருவுக்கு காரணம். காஃபி கூட உங்கள் முகப்பருவுக்குக் காரணம் எனச் சொன்னால் ஆச்சர்யமாவீர்கள் தானே? ஆம். நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். "அதிகமாக காஃபி உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்களுக்கு முகப்பரு வரும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் ஹார்மோனின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருவின் அடிப்படைக் காரணி. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை ஆகியவற்றை உணவில் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான பழங்கள், காய்கறிகளை உட்கொள்ளுதல் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காஃபியில் உள்ள வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அதுவே தேவையற்ற கலோரிகளை உடலில் சேரவும் வழிவகுத்து முகப்பருவுக்கு காரணமாகிவிடுகிறது.

    தேவையற்ற முகப்பருக்களை தவிர்க்க, நீங்கள் பருகும் காஃபியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

    தோலின் ஆரோக்கியத்திற்கு நிறைய தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம் என நாம் அனைவரும் அறிவோம். உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் போனாலும் சரும பிரச்சனைகள் ஏற்படும். "காஃபி விரைவில் கழிவாகி சிறுநீர் வழியாக வெளியேறும். அதிக காஃபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும் போது இயல்பாகவே நம் உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். இப்படி உடலில் போதுமான அளவு நீர் இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்.

    எனவே, காஃபி தானே என்று அலட்சியம் அதிலும் அளவோடு இருந்தால் தேவையற்ற முகப்பருக்கள் தானாகவே தடுக்கப்படும்.
    புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள்.
    பெண்கள் கூந்தலை பேணிப் பாதுகாத்து, அடர்த்தியாக வளர்ப்பதே விதவிதமாக அலங்காரம் செய்துகொள்வதற்காகத்தான். புதிய கூந்தல் அலங்காரம் என்பது பெண்களுக்கு அழகை மட்டுமல்ல, தன்னம்பிக்கையையும் தருகிறது. அதனால் பெண்கள் வித்தியாசமான கூந்தல் அலங்காரங்களை விரும்புகிறார்கள். அது விரைவாக செய்து முடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

    முடியில் சிறிதளவு ‘சீரம்’ தேய்த்து நன்றாக சீவுங்கள். பின்பு நடுவில் உச்சி எடுத்து, கூந்தலை மூன்று பிரிவாக பிரியுங்கள். பிரித்து முடித்ததும், நெற்றியில் இருந்து நான்கு அங்குல பகுதியில் மீ்ண்டும் வகிடு எடுத்தால் பார்க்க அழகாக இருக்கும். இருபுறமும் கூந்தல் காதுகளை மறைத்தபடி தோளில்புரளும்.

    கூந்தலை மூன்று பாகங்களாக்குங்கள். அதன் பின் பகுதி முடியில் ஒரு ‘பன்’ பயன்படுத்தி, சிறிது உயர்த்தி இறுக்கமாக கட்டுங்கள். மீதி முடியை இருபுறங்களாக சம அளவில் பிரித்துவிடலாம். இது மற்றவர்களை திரும்பிப்பார்க்கவைக்கும். உடைக்கு பொருத்தமாக அமையும்போது கூடுதல் அழகுதரும்.

    முன்பகுதி முடியை சிறுசிறு பகுதிகளாக பிரித்து, பின்னோக்கி இழுத்து ‘பின்’ செருகுங்கள். ஒரு அங்குல கனத்தில் பிரிக்கவேண்டும். மொத்த முடியையும் இப்படி ‘பின்’ செய்த பின்பு ‘பன்’ உபயோகித்து ‘போனிடைல்’ போட்டுக்கொள்ளலாம்.

    இது ஒரு வித்தியாசமான அலங்காரம். படத்தில் இருப்பதுபோல் கூந்தலை சீவி, பிரித்து, பின்னால் கட்டி கொண்டை போடுங்கள். இது அதிக வேலைப்பாடுகொண்டது. மாடர்ன் டிரஸ்க்கு மட்டுமின்றி, பாரம்பரிய உடைகளுக்கும் இது பொருத்தமாக இருக்கும். இந்த கூந்தல் அலங்காஇஇரத்த ின்போது பொருத்தமான காதணிகள் அணிந்தால், அழகில் ஜொலிக்கலாம்.
    வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்.
    தலைமுடி ஆரோக்கியத்திற்கு, வேப்ப இலையில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால், சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேப்பம் பயன்படும்.

    வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது. வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

    மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.

    வேப்ப எண்ணெய் உபயோகித்து, பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும்.

    பெடிகுலோசிஸ் காப்பிடிஸ் என அழைக்கப்படும் பேன், மனித தலைமுடிகளில் எளிதாக ஊடுறுவக் கூடியவை. பேன் தொல்லையில் இருந்து விடுபெற வேப்ப எண்ணெய் பெரிதும் உதவியாய் இருக்கும். வேப்ப எண்ணெயில் இருக்கும் அசாடிராக்டின் எனப்படும் மூலப்பொருள் பூச்சிகளை நீக்கும் குணம் கொண்டவை.

    வேப்ப எண்ணெய்யை தலையில் தேய்த்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இந்தியா மட்டும் இன்றி, உலகில் பல்வேறு நாடுகளில் வேப்ப மரத்தின் பயன்களை தெரிந்து வருகின்றன. எனவே, வேப்பத்தின் ஆரோக்கியத்தை பெற்று பயனடையவும்.
    ‘டீன் ஏஜ்’க்குள் பெண்கள் அடியெடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு முகப்பரு ஏற்படுவதுண்டு. இது ‘டீன் ஏஜின்’ அடையாளமாக கணிக்கப்படுகிறது.
    ‘டீன் ஏஜ்’க்குள் பெண்கள் அடியெடுத்து வைக்கும்போது, அவர்களுக்கு முகப்பரு ஏற்படுவதுண்டு. இது ‘டீன் ஏஜின்’ அடையாளமாக கணிக்கப்படுகிறது. அவர்களது உடலில் உள்ள ‘ஆன்ட்ரோஜன்’ ஹார்மோன்கள் ‘செபேஷியஸ்’ சுரப்பிகளை தூண்டி பெரிதாக்கும். அப்போது அவைகளில் இருந்து ‘செபம்’ என்ற எண்ணெய் தன்மை கொண்ட பொருள் உற்பத்தியாகிறது.

    அதுதான் முகப்பரு தோன்ற காரணம். முகப்பருவை கிள்ளிவிட்டுவிடக்கூடாது. ‘டவல்’ பயன்படுத்தி அழுத்தி துடைக்கவும் கூடாது. வீரியம் அதிகமுள்ள சோப்புகளை பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    ‘பேஸ்வாஷ்’ பயன்படுத்தி இளம் சுடுநீரால் முகத்தை கழுவினாலே போதும். குறிப்பிட்ட பருவத்தை கடந்ததும் முகப்பரு மறைந்துவிடும். அப்படி மறையாமல் இருந்தால் மட்டும் சருமநோய் நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
    கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியாக்கள் படிந்து எளிதில் நோய் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு கால்களை சுத்தம் செய்வது குறித்து பார்ப்போம்.
    முகம் கழுவும்போதோ, குளிக்கும்போதோ நிறைய பேர் கால்களை நன்றாக கழுவமாட்டார்கள். கால்களையும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாக்டீரியாக்கள் படிந்து எளிதில் நோய் தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். கால்களில் படியும் வியர்வையை போக்குவதற்காகவும் நன்றாக கழுவ வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் துர்நாற்றம் வீசும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கால்களை சுத்தம் செய்வது குறித்து பார்ப்போம்.

    * கால்களை சுத்தம் செய்வதற்கு பேக்கிங் சோடாவை உபயோகிக்கலாம். அது பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதோடு வியர்வையின் பி.எச். அளவையும் சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அந்த நீரில் கால்களை கால் மணி நேரம் முக்கிவைக்க வேண்டும். இரவு பொழுதில் ஒருவாரம் தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் கால்கள் பளிச்சிடும்.

    * சூடான நீரில் தேயிலை அல்லது டீ பேக்கை போட்டு ஊறவைக்கவும். சூடு குறைந்ததும் அந்த நீரில் அரை மணி நேரம் கால்களை ஊறவைக்கலாம். கால்கள் சுத்தமாகுவதோடு துர்நாற்றமும் நீங்கிவிடும்.

    * 8 கப் சூடான நீரில் ஒன்றரை டீஸ்பூன் வினிகரை கலக்கவும். சூடு குறைந்ததும் கால்களை அதில் கால் மணி நேரம் நனைத்துவிட்டு கழுவிவிடலாம். வினிகர் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது.

    * வெதுவெதுப்பான நீரில் சில துளி லாவண்டர் எண்ணெய் கலந்து கால்களை சிறிது நேரம் நனைக்கலாம். காலையும், மாலையும் இவ்வாறு செய்து வருவது கால்களுக்கு நன்மை பயக்கும்.

    * கால்களில் படிந்திருக்கும் ஈரப்பதத்தை போக்குவதற்கு முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரையும் உபயோகிக்கலாம். 
    பெயரளவுக்கு ஏதோ ஒரு பொட்டை வைக்கும் நிலையில் இன்றைய பெண்கள் இல்லை. தங்கள் அந்தஸ்து, முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
    பொட்டு, முகத்திற்கு முழு அழகைத் தருகிறது. எவ்வளவு சிறப்பாக ‘மேக்கப்’ போட்டிருந்தாலும், விலை உயர்ந்த புடவையை உடுத்தியிருந்தாலும், ஆபரணங்களை அடுக்கி அணிந்திருந்தாலும் நெற்றியில் ஒரு பொட்டு வைக்காவிட்டால், அனேகமானவர்களுக்கு அழகில் முழு திருப்தி தோன்றுவதில்லை.

    இந்திய பெண்கள் பெரும்பாலும் பொட்டுவைத்த முகத்தோடுதான் காணப்படுகிறார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பொட்டுவைக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதால், அதை பார்க்கும் வெளிநாட்டு பெண்கள் ‘பொட்டின் தத்துவம் என்ன?’ என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்புவார்கள். அதற்கு விளக்கம் சொல்ல தெரிந்துவைத்திருக்கவேண்டியதிருக்கும். தற்போது வெளிநாட்டு பெண்களும் பொட்டின் அழகை போற்றத் தொடங்கிவிட்டதால், இந்தியாவிற்கு வந்தால் அவர்களும் பொட்டு வைத்த முகத்தோடு வலம்வருவது உண்டு.

    முன்பு சாந்துப்பொட்டு, சந்தனப்பொட்டு, சிந்தூரம் போன்ற சில வகைகளே வழக்கத்தில் இருந்தன. தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப பொட்டுகளும் விதவிதமான வடிவங்களில் வெளிவருகின்றன. விலை மதிப்புள்ள ஆபரணங்களுக்கு நிகராக இப்போது ஆபரண பொட்டுகளும் தயாரிக்கிறார்கள். பல வண்ணங்களில், வடிவங்களில் அவை தயார்செய்யப்படுகின்றன. பலவித கற்களையும், முத்துக்களையும் அதில் பதிக்கிறார்கள். சிற்ப வேலைப்பாடு கொண்ட பொட்டுகளும், தங்கமுலாம் பூசப்பட்ட பொட்டுகளும் அவைகளில் குறிப்பிடத்தக்கதாகும்.

    பெயரளவுக்கு ஏதோ ஒரு பொட்டை வைக்கும் நிலையில் இன்றைய பெண்கள் இல்லை. தங்கள் அந்தஸ்து, முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

    பொட்டு தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. முக்கியமாக முகத்தின் அமைப்பை கருத்தில்கொண்டு அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் பொட்டு அமையவேண்டும். புருவத்தை நன்றாக சீவி அழகுபடுத்திவிட்டுதான் பொட்டை ஒட்டவேண்டும். இயல்பான பொட்டுகளே முகத்திற்கு கூடுதல் அழகு தரும்.

    சிலருக்கு பொட்டு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்களும் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஐலைனரும், ஐபென்சிலும் இப்போது பல நிறங்களில் கிடைக்கின்றன. உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப அவைகளை பயன்படுத்தி பொட்டுகளை வரைந்துகொள்கிறார்கள்.

    சதுர வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு அதிக நீளமில்லாத, சற்று அகலமுள்ள பொட்டு கூடுதல் அழகு தரும். நீளமான, அகலம் குறைந்த பொட்டுகள் அவர்களது முகத்திற்கு எடுப்பாக இருக்காது. வட்டமான பொட்டுகளே அவர்களுக்கு பெரும்பாலும் பொருந்தும்.

    உருண்டையான முக அமைப்பு கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் ஏற்றது. உருண்டை முகத்திற்கு இது வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்தும். சுருங்கிய நெற்றி அமைப்பு கொண்ட பெண்கள் புருவங்களுக்கு நடுவில் பொட்டு வைக்கவேண்டும்.

    முட்டை வடிவ முகம் கொண்டவர்களுக்கு எல்லாவிதமான பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும். விசாலமான நெற்றி அமைந்தவர்களுக்கு நீளமான பொட்டுகள் கூடுதல் அழகு தரும். முக்கோண வடிவ பொட்டுகளும் பொருந்தும். விசாலமான நெற்றியை கொண்டவர்கள் புருவங்களில் இருந்து ஒரு செ.மீ. உயரத்திற்கு மேல் பொட்டுவைப்பது நல்லது.

    இதய வடிவ முகம் கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் பொருந்தும். முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டுவைக்கும்போது அது சரும நிறத்திற்கும் பொருந்தும் விதத்தில் இருக்கிறதா என்றும் கவனிக்கவேண்டும். உடுத்தும் உடையின் நிறத்திற்கும், பொட்டின் நிறத்திற்கும் பொருத்தம் இருக்கவேண்டும். கோதுமை நிற பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் நன்றாக இருக்கும். பொட்டு முகத்திற்கு கூடுதல் பொலிவு தருவதால் அதற்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். 
    முகத்தில் மேக் அப் போடாதவர்களுக்கு அவ்வப்போது சன்ஸ்கிரீன் தடவுவது சுலபமான ஒரு காரியம் தான். ஆனால் முகத்தில் மேக் அப் போட்டிருப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீன் தடவுவது சற்று கடினம் தான்.
    சூரிய கதிர்களால் நம் சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். முகத்தில் தோன்றும் சருக்கங்கள், மங்கு, கரும்புள்ளிகள், சரும புற்றுநோய் ஆகியவை சூரிய கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள். சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் போது இதிலிருந்து நாம் தப்பித்து கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல் சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் சன்ஸ்கிரீன் உதவுகிறது.

    காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பாக சன்ஸ்கிரீன் தடவி கொண்டால் நாள் முழுவதும் போதும் என்பது கிடையாது. எந்த ஒரு சன்ஸ்கிரீனாக இருந்தாலும் அதன் பயன் வெறும் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். முகத்தில் மேக் அப் போடாதவர்களுக்கு அவ்வப்போது சன்ஸ்கிரீன் தடவுவது சுலபமான ஒரு காரியம் தான். ஆனால் முகத்தில் மேக் அப் போட்டிருப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீன் தடவுவது சற்று கடினம் தான். நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கு சுலபமான இரண்டு வழிமுறைகள் உண்டு. அதனை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

    நீங்கள் மேக் அப் போடாதவராக இருக்கும் பட்சத்தில் சன்ஸ்கிரீன் தடவுவது உங்கள் கடைசி வேலையாக இருக்கும். இதுவே நீங்கள் மேக் அப் போடுபவராக இருந்தால் சன்ஸ்கிரீனை முதலில் தடவி கொள்ள வேண்டும். முதலில் ஷிறிதி 30 கொண்ட நல்ல ரக சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள். இப்போது மேக் அப் போட்டு முடித்த பிறகு ஷிறிதி கொண்ட ஃபேஸ் மிஸ்டை தடவுங்கள். இப்போது நாம் பார்க்க இருக்கும் முதல் முறை வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, இரண்டாவது முறை எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு ஆகும்.

    முறை-1:

    இதனை செய்வதற்கு உங்களுக்கு சிறிதளவு சன்ஸ்கிரீன் மற்றும் ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் தேவை. ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் முகத்தில் உள்ள பொருட்களை எடுக்காமல் நமக்கு வேண்டியதை தடவி கொள்ளலாம். சன்ஸ்கிரீன் தடவ வேண்டிய நேரம் வரும்போது ஆங்காங்கே முகத்தில் சன்ஸ்கிரீனை புள்ளி புள்ளியாக பரப்பி கொள்ளுங்கள். இப்போது பொருமையாக ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் கொண்டு கிரீமை தடவி கொள்ளலாம். இதனை சுலபமான முறையில் செய்து விடலாம்.

    முறை-2:

    முறை ஒன்றை காட்டிலும் இது சுலபமானது. ஆனால் அதிகப்படியான வறண்ட சருமம் கொண்டவர்கள் இதனை தவிர்க்கவும். இதனை செய்வதற்கு ஷிறிதி 30 கொண்ட பவுடர் காம்பாக்ட் தேவை. ஒவ்வொரு 2 – 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உங்களை புத்துணர்ச்சி செய்து கொள்ளவும், சன்ஸ்கிரீன் தடவவும் இந்த பவுடர் காம்பாக்டை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேக் அப் கலையாயல் சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள். 
    ×