search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மேக்கப் கலையாமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்தத் தெரியுமா?
    X
    மேக்கப் கலையாமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்தத் தெரியுமா?

    மேக்கப் கலையாமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்தத் தெரியுமா?

    முகத்தில் மேக் அப் போடாதவர்களுக்கு அவ்வப்போது சன்ஸ்கிரீன் தடவுவது சுலபமான ஒரு காரியம் தான். ஆனால் முகத்தில் மேக் அப் போட்டிருப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீன் தடவுவது சற்று கடினம் தான்.
    சூரிய கதிர்களால் நம் சருமத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். முகத்தில் தோன்றும் சருக்கங்கள், மங்கு, கரும்புள்ளிகள், சரும புற்றுநோய் ஆகியவை சூரிய கதிர்களால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகள். சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் போது இதிலிருந்து நாம் தப்பித்து கொள்ளலாம். இது மட்டும் இல்லாமல் சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்கவும் சன்ஸ்கிரீன் உதவுகிறது.

    காலையில் வெளியே கிளம்புவதற்கு முன்பாக சன்ஸ்கிரீன் தடவி கொண்டால் நாள் முழுவதும் போதும் என்பது கிடையாது. எந்த ஒரு சன்ஸ்கிரீனாக இருந்தாலும் அதன் பயன் வெறும் இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் தடவ வேண்டும். முகத்தில் மேக் அப் போடாதவர்களுக்கு அவ்வப்போது சன்ஸ்கிரீன் தடவுவது சுலபமான ஒரு காரியம் தான். ஆனால் முகத்தில் மேக் அப் போட்டிருப்பவர்களுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மேக் அப் கலையாமல் சன்ஸ்கிரீன் தடவுவது சற்று கடினம் தான். நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதற்கு சுலபமான இரண்டு வழிமுறைகள் உண்டு. அதனை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

    நீங்கள் மேக் அப் போடாதவராக இருக்கும் பட்சத்தில் சன்ஸ்கிரீன் தடவுவது உங்கள் கடைசி வேலையாக இருக்கும். இதுவே நீங்கள் மேக் அப் போடுபவராக இருந்தால் சன்ஸ்கிரீனை முதலில் தடவி கொள்ள வேண்டும். முதலில் ஷிறிதி 30 கொண்ட நல்ல ரக சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள். இப்போது மேக் அப் போட்டு முடித்த பிறகு ஷிறிதி கொண்ட ஃபேஸ் மிஸ்டை தடவுங்கள். இப்போது நாம் பார்க்க இருக்கும் முதல் முறை வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு, இரண்டாவது முறை எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு ஆகும்.

    முறை-1:

    இதனை செய்வதற்கு உங்களுக்கு சிறிதளவு சன்ஸ்கிரீன் மற்றும் ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் தேவை. ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் முகத்தில் உள்ள பொருட்களை எடுக்காமல் நமக்கு வேண்டியதை தடவி கொள்ளலாம். சன்ஸ்கிரீன் தடவ வேண்டிய நேரம் வரும்போது ஆங்காங்கே முகத்தில் சன்ஸ்கிரீனை புள்ளி புள்ளியாக பரப்பி கொள்ளுங்கள். இப்போது பொருமையாக ஹார்டு ஃபேஸ் ஸ்பான்ஜ் கொண்டு கிரீமை தடவி கொள்ளலாம். இதனை சுலபமான முறையில் செய்து விடலாம்.

    முறை-2:

    முறை ஒன்றை காட்டிலும் இது சுலபமானது. ஆனால் அதிகப்படியான வறண்ட சருமம் கொண்டவர்கள் இதனை தவிர்க்கவும். இதனை செய்வதற்கு ஷிறிதி 30 கொண்ட பவுடர் காம்பாக்ட் தேவை. ஒவ்வொரு 2 – 3 மணி நேரத்திற்கு ஒரு முறை உங்களை புத்துணர்ச்சி செய்து கொள்ளவும், சன்ஸ்கிரீன் தடவவும் இந்த பவுடர் காம்பாக்டை பயன்படுத்தி கொள்ளுங்கள். மேக் அப் கலையாயல் சன்ஸ்கிரீனை தடவி கொள்ளுங்கள். 
    Next Story
    ×