என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். மழைக் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.
    உடலை வருத்தி எடுக்கும் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை மழைக்காலம் வழங்கினாலும் ஆரோக்கியத்திற்கு சில அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தும். கன மழை, அதனால் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் நீர் தேங்குவதன் காரணமாக பல்வேறு சரும தொற்றுகளுக்கு ஆளாகக்கூடும். பொதுவாக கைகள், முதுகின் மேல் பகுதி, உச்சந்தலை, தொடைப்பகுதிகளில் வலி மற்றும் வீக்கம், சிறு கொப்பளங்கள் ஏற்படலாம். மழைக் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    முகப்பரு: முகப்பரு, சொறி போன்றவை பெரும்பாலானோர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். சருமத்தின் வகையை பொறுத்து அவற்றின் வீரியம் அமைந்திருக்கும். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் பாதிப்பு அதிகமாகும். சருமத்தில் அதிகப்படியாக எண்ணெய் சுரப்பு இருந்தால் பருக்கள் உண்டாகும். எண்ணெய் தன்மை இல்லாத இயற்கை சோப் மற்றும் முகம் கழுவும் கிரீமை உபயோகிக்கலாம்.

    வியர்வை: மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வியர்வை குறைவாக வெளிப்படும். அதனால் மாய்ஸ்ச ரைசர்கள் மற்றும் லோஷனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண் டும். சாப்பிடும் உணவும் சருமத்திலும், உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    சரும அழற்சி: மழைக்காலத்தில் சருமம் தொடர்பான நோய்கள் அதிகம் ஏற்படும். சருமத்தில் அரிப்பு, அழற்சி, சிவத்தல், தடிப்புகள் போன்ற தொற்றுக்கள் தோன் றும். சருமத்தில் எரிச்சலும் உண்டாகும். ‘சென்சிடிட்டிவ் ஸ்கின்’ கொண்டவர்களுக்கு இந்தவகை தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    வறண்ட சருமம்: பொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்கள் சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகள் தோன்றுதல், சரும செல்கள் உதிர்தல், அரிப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சினையை எதிர்கொள்வார்கள். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்கு நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்த வேண்டும். ரசாயனங்களை கொண்ட லோஷன்கள் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால் சரும பராமரிப்பு பொருட்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பூஞ்சை தொற்றுகள்: தொடைகள், அக்குள், மூட்டுகள் போன்ற மடிப்பு கொண்ட பகுதிகளில் தொற்றுகள் உருவாகும். உச்சந்தலை, நகங்களில் பூஞ்சை தொற்றுகள் உண்டாகும்.

    மயிர்க்கால்கள்: இவை உடலை பாதுகாப்பதற்காகவே உள்ளன. தலையில் மட்டுமின்றி உடலில் பல பகுதிகளிலும் மயிர்க்கால்கள் உண்டு. வியர்வை, பூஞ்சை, பாக்டீரியா போன்றவை காரணமாக மயிர்க்கால்கள் பாதிப்புக்குள்ளாகும்.

    ரிங்வோர்ம்: இது பொதுவாக சருமத்தில் வட்ட வடிவத்தில் காணப்படும். சிவப்பு நிறத்தில் தடிப்புகளாகவோ, கொப்பளங் களாகவோ இருக்கும். இது பூஞ்சை காரணமாக ஏற்படும். சில சமயங்களில் உச்சந்தலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    நகங்கள்: தேங்கி நிற்கும் மழைநீர் மட்டு மின்றி ஷூ சாக்ஸும் தொற்றுக்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கின்றன. அதனால் காலணிகள் அணிந்து வீடு திரும்பிய பின்பு கால் விரல்கள், நகங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
    எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது. அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.
    சூரியனிடம் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்திற்கும், உடல் பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க சருமத்திற்கு போதுமான பாதுகாப்பை வழங்குவது அவசியம். ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக சருமத்தை தாக்குவது முன்கூட்டியே வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சரும புற்றுநோய் ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய ஆபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு சன்ஸ்கிரீன் உபயோகமாக இருக்கும். ஆனால் எல்லோருடைய சருமத்திற்கும் சன்ஸ்கிரீன் ஒத்துக்கொள்ளாது. அது சிலருக்கு சருமத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    சன்ஸ்கிரீனில் சேர்க்கப்படும் ரசாயனக்கலவைதான் பக்கவிளைவுகளுக்கு காரணமாக அமையும். புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தோல் பகுதியை சுற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்குவதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மிருதுதன்மை வாய்ந்த சருமம் கொண்டவர்களை பாதிக்கும். ஆனால் சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆபத்துக்களை குறைக்கலாம்.

    * எல்லா நேரமும் சன்ஸ்கிரீனை குறைவான அளவில்தான் உபயோகிக்க வேண்டும். குறைந்த அளவைக்கொண்டே வெயில் படும் அனைத்து பாகங்களிலும் தடவிவிட வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பூசிக்கொண்ட உடனே வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும்.

    * உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியாகிக்கொண்டிருந்தால் ஐந்து மணி நேரம் கழித்து மீண்டும் சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும்.

    * முகப்பரு பாதிப்புக்கு ஆளானவர்கள் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். ஏனெனில் அது முகப்பருவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். அவர்கள் எண்ணெய் பசை இல்லாத அழகு சாதன பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதுபோல் உடலில் காயம், தடிப்பு உள்ளிட்ட சரும பிரச்சினைகள் இருந்தாலும் சன்ஸ்கிரீன் உபயோகிக்கக்கூடாது.

    * சன்ஸ்கிரீனில் இருக்கும் ரசாயனங்கள் சிலருடைய சருமத்தை கடுமையாக பாதிக்கும். சருமம் சிவத்தல், வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வாசனை திரவியங்களை உள்ளடக்கிய சன்ஸ்கிரீன்கள் சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு தோல் மருத்து வரிடம் ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

    * கண்களுக்கு அருகே சன்ஸ்கிரீனை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் எரிச்சல், அரிப்பு, வெளிச்சத்தை பார்த்தால் கண் கூச்சம் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். சன்ஸ்கிரீனில் ரசாயனத்தன்மை அதிகம் இருந்தால் கண் பார்வைத்திறன் பாதிப்புக்குள்ளாகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * சன்ஸ்கிரீனில் உள்ள சில பொருட்கள் மார்பக செல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * குழந்தைகளின் சருமம் மிருதுவானது என்பதால் சன்ஸ்கிரீன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதனால் குழந்தைகளுக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

    * சன்ஸ்கிரீனை பயன்படுத்தியதும் சருமத்தில் கொப்பளங்கள், வலி, தடிப்புகள் போன்ற அறிகுறிகள் சிலருக்கு தோன்றும். அவர்கள் சன்ஸ்கீரினை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
    அதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை உண்பது சருமத்தில் வீக்கம், பருக்கள், சோரியாசிஸ் தோல் நோய் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
    உணவில் நாம் சேர்த்துக்கொள்கிற அதிகப் படியான சர்க்கரை, ரத்தத்தில் கலந்து, நம் சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸில் உள்ள எலாஸ்டின் மற்றும் கொலாஜென் செல்களுடன் சேரும். அப்போது கிளைகேஷன் என்ற ரசாயன மாற்றம் நிகழும். அப்போது ஏஜிஈ (AGE- Advanced Glycation End Products) எனப்படும் தேவையற்ற மூலக்கூறுகள் வெளியேற்றப்படும். இவை மெள்ள மெள்ள டெர்மிஸ் லேயரில் படியத் தொடங்கும். எலாஸ்டின் மற்றும் கொலாஜென் திசுக்களின் வேலையே சருமத்தை மீள்தன்மையோடு இறுக்கமாக வைத்திருப்பதுதான்.

    ஏஜிஈ படிவது அதிகரிப்பதால் எலாஸ்டினும் கொலாஜெனும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையைத் தக்கவைக்கும் திறனை இழக்கின்றன. சருமம் தொய்வடைந்து, களைப் புடனும் முதிர்ச்சியுடனும் மாறும். இதைத் தவிர்க்க லோ கிளைசெமிக் இண் டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

    ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அதிக கிளெசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை. பழுப்பு அரிசி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள உணவுகள் போன்றவை குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை.

    அதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை உண்பது சருமத்தில் வீக்கம், பருக்கள், எக்ஸீமா எனும் பிரச்னை, சோரியாசிஸ் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சீக்கிரமே ஏற்படும் முதுமைத்தோற்றம், இனிப்பு உணவுகளின் மீதான தொடர் ஈர்ப்பு, காரணமற்ற உடல் உப்புசம் போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் அதிக இனிப்பு உணவுகளை உண்பதாக அர்த்தம். மேலும், உடலின் நோய் எதிர்ப்புத்திறன் குறையும். தூக்கமின்மை பிரச்னை வரும். தொடர்ச்சியாக பருமனும் அதிகரிக்கும். இவை எல்லாம் நீங்கள் அதிக சர்க்கரைச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் அறிகுறிகள்.
    மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
    முகத்தை தண்ணீரில் அடிக்கடி கழுவுவது சரும பராமரிப்பின் ஒரு அங்கமாகும். அது அசுத்தங்கள், அழுக்குகளில் இருந்து சருமத்தை காக்க உதவும். நிறைய பேர் காலையில் எழுந்ததும் முகத்தை கழுவுவார்கள். அதன்பிறகு எப்போதாவதுதான் கழுவுவார்கள். பல்வேறு சரும பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு முகத்தை அவ்வப்போது கழுவுவது அவசியமானது. மற்ற வேளைகளில் முகத்தை கழுவாவிட்டாலும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கழுவ வேண்டும். அதற்கான காரணங்கள்:

    வீட்டை விட்டு வெளியே சென்று வரும்போது சருமத்தில் அழுக்குகள், மாசுக்கள் படிவது தவிர்க்கமுடியாதது. அது சருமத்தை எதிர்மறையாக பாதிக்கும். முகத்தை கழுவும்போது அழுக்குகள் நீங்கும். சருமத்தில் இருக்கும் மாசுக்களின் வீரியம் குறைந்துபோகும்.

    முகத்தில் படியும் அழுக்குகள் சரும துளைகளை அடைத்துவிடும். அதனால் பல்வேறு சரும பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருடைய முகத்தில் கருப்பு நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ ஆங்காங்கே புள்ளி கள் தென்படும். அவை சரும துளைகள் அடைபடுவதால் ஏற்படுபவை. முகத்தை கழுவும்போது சரும துளைகள் சுவாசிக்கவும் வழிபிறக்கும்.

    முகப்பரு ஏற்படுவதற்கு மோசமான சரும பராமரிப்பும் ஒரு காரணமாகும். சரும துளைகள் அடைப்பு, அழுக்குகள், தூசுக்கள் படிவது, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை போன்றவை இதர காரணங்களாகும். சருமத்தை தூய்மையாக பராமரிக்கும்போது முகப்பரு பிரச்சினை எட்டிப்பார்க்காது.

    இரவில் தூங்க செல்லும் முன்பு சருமத்தை கழுவும்போது அதில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் சுவாசிப்பதற்கு வழிவகை ஏற்படும். குறிப்பாக மேக்கப்பை நீக்கி விடுவது அவசியமானது. இரவில் முகம் கழுவுவது முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதற்கும் உதவும். புதிய செல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்படுவதோடு சருமம் பிரகாசமாக ஜொலிப்பதற்கும் வழிவகை ஏற்படும்.
    இரும்புசத்து , மெக்னீசியம், தாதுக்கள், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெப்பர்மின்ட் எண்ணெய் உங்கள் அழுகு பொருட்களில் இருக்க வேண்டிய ஒன்று.
    உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் புதினா பல ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. புதினா எண்ணெயால் அதிக நலன்கள் உள்ளது. இரும்புசத்து , மெக்னீசியம், தாதுக்கள், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பெப்பர்மின்ட் எண்ணெய் உங்கள் அழுகு பொருட்களில் இருக்க வேண்டிய ஒன்று.
     
    முடி வளர்வதை அதிகரிக்கும் முடி கொட்டும் பிரச்சனை உங்களுக்கு அதிகமாக இருந்தால் நிச்சயம் இந்த எண்ணெய் உங்களுக்கு தேவை படும். அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதால் உங்கள் முடி துளைக்குள் சென்று முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். மேலும் எண்ணெய் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

    இரவில் தூங்க விடாமல் தலையில் அரிப்பு எடுக்கிறதா? பெப்பர்மின்ட் உங்களுக்கு நிச்சயம் உதவும். இதில் ஈரப்பதமூட்டும் பண்பு இருப்பதால் உங்கள் தலையின் ஈரப்பசையை காத்து அரிப்பை நீக்கும். நீங்கள் தினமும் பயன்படுத்தும் எண்ணெய்யில் கொஞ்சமாக பெப்பர்மின்ட் எண்ணெய்யை சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து கழுவவும். இது உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.

    இந்த எண்ணெயில் பொல்கோன் மற்றும் மெண்டோன் இருப்பதால் முடியின் வேரை வலுப்படுத்தி முடி உதிர்தலை குறைக்கும். உச்சந்தலையில் அடிக்கடி தேய்த்து வந்தாலே போதும்.

    மென்தால் இருப்பதால் நல்ல வாசனையையும் புத்துணர்வையும் பெப்பர்மின்ட் எண்ணெய் கொடுக்கும். இந்த வாசனை பேன்களை ஒன்று கூந்தலுக்கு விடுதலை தருகிறது. இரவு தூங்கும்முன் எண்ணெய் தேய்த்து காலையில் அலசினால் போதும். உங்கள் பிரச்னை தீரும். 
    பாதங்களில் பருவநிலை மாற்றத்தினால் வெடிப்புகள், சொரசொரப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் இந்த சிம்பிளான பேக்கை போட்டு பாதத்தை புதுப்பொலிவடை செய்யலாம்.
    பாதங்களில் பருவநிலை மாற்றத்தினால் வெடிப்புகள், சொரசொரப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால் இந்த சிம்பிளான பேக்கை போட்டு பாதத்தை புதுப்பொலிவடை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரோஜா- 3
    சந்தனப் பொடி- 1 ஸ்பூன்
    ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
    பால்- 1கப்

    செய்முறை:

    1.ரோஜாவை தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    2.அடுத்து, சந்தனப் பொடி, ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.

    இந்த பேக்கினை பாத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்த பின்னர் நன்றாக தொய்க்க வேண்டும். கொள்ளவும். அதன்பின்னர்,குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை செய்தால், பாதம் நன்கு பொலிவு பெறும்.
    முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை போக்க இந்த பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன. இப்போது வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு பேசியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
    முகத்திற்கு தகுந்த பராமரிப்புகளை கொடுத்து வர வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும். முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை போக்க இந்த பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன. நாம் இன்றைக்கு இருக்கும் மாசடைந்த சூழ்நிலையில், முகம் சீக்கிரமாக கருமையடைய ஆரம்பித்துவிடுகிறது. முகத்தில் இறந்த செல்கள் எளிதாக உருவாகிவிடுகின்றது. இதனால் முகம் அதன் இயற்கை அழகினை இழந்து கருமையாக தோற்றமளிக்கிறது. எனவே மாதம் ஒருமுறை கண்டிப்பாக பேசியல் செய்ய வேண்டியது அவசியமாகும்.

    அதிமதுரம் உங்களது சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. சூரியனால் உண்டான கதிரால் உண்டான கருமையை போக்க உதவுகிறது. அதிமதுரம், முல்தானிமெட்டி மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.

    உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, அதனை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிதளவு கடலைமாவு மற்றும் தேன் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு பாருங்கள். முகம் பேசியல் செய்தது போன்ற ஒரு அழகை பெறும்.

    உருளைக்கிழங்கை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். பின் இந்த துறுவலை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பால் கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள். இதனால் முகம் பளிச்சிடும் வெண்மை பெறுவது உறுதி.

    பாலில் சிறிதளவு கோதுமை மாவை கலந்து முகத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ்ஜை 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டியது அவசியம். அழுத்தமாக மசாஜ் செய்ய கூடாது. இதனால் உங்களது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.

    சிறிதளவு தயிரை எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பீட்ரூட் ஜூஸை கலக்க வேண்டும். இந்த க்ரீமை நன்றாக முகத்திற்கு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உங்களது முகம் மிருதுவாகி நல்ல நிறத்தை பெறும்.

    கடலை மாவு, கோதுமை மாவு, பீட்ரூட் ஜூஸ், சிறிதளவு மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட வேண்டும். பின்னர் இதனை 20 நிமிடங்கள் உலர வைத்து கழுவி விட வேண்டும். இதனால் உங்களுக்கு பேஸியல் செய்தது போன்ற தோன்றம் கிடைக்கும்.
    பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை.
    மாதத்திற்கு ஒருமுறையாவது இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்ற வாறு இறந்த செல்களை நீக்குவதுதான் சரியான முறை.

    இறந்த செல்களை செயற்கையாக பணம் கொடுத்து ரசாயனக் கலப்புகளுடன் இருக்கும் அவற்றை பயன்படுத்துவது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடிக்கடி உங்கள் சருமத்திற்கு இவ்வாறான செயற்கை ரசாயனம் ஊட்டப்பட்ட கலவையை தருவது உங்கள் சருமத்தின் இயல்பை மாற்றி வறண்டு சுருக்கங்கள் வர வைத்து விடும்.

    க்ளென்சிங் முறைக்கு காய்ச்சாத பால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்கள், எலுமிச்சை சாறு இரண்டு சொட்டுக்கள், கிளிசரின் 10 சொட்டுக்கள் இதனை ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனை பஞ்சின் மூலம் தொட்டுக்கொண்டு அழுத்தமாக முகத்தை துடைக்கவும். இதுவே எளிமையான க்ளென்சிங் முறை.

    ஸ்க்ரப்பிற்கு பழுத்த பப்பாளி பழம், அன்னாசி பழம், ஸ்டராபெரி பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்

    எண்ணெய்பசைக்காரர்களுக்கு ஸ்டராபெரி நல்லது. இதனை மிக்சியில் போட்டுக் கூழாக்கவும். தண்ணீர் விட வேண்டாம். அதனுடன் இரண்டு சிட்டிகை பட்டைத்தூள் மற்றும் 1/4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வட்ட வடிவில் தேய்க்கவும். இதனால் இறந்த செல்கள் எளிதாக நீங்கும். முகம் பளபளக்கும். இதனை கைகள் கால்கள் என எல்லா இடத்திலும் தேய்க்கலாம்.

    மேலே குறிப்பிட்ட மூன்று பழங்களான பப்பாளி, அன்னாசி மற்றும் ஸ்டராபெரி பழங்கள் இறந்த செல்களை நீக்கும் என்சைம்களை மூலமாகக் கொண்டவை. வாரம் இருமுறை இப்படி ஸ்கரப் செய்வதால் முகப்பொலிவு மேம்படும். கரும்புள்ளிகளும் மறையும். 
    தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம்.
    தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியான ஹேர்பேக் ட்ரை பண்ணுவதைவிட, இப்போது சொல்லப்போகும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம். இன்று இந்த ஹேர் பேன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையானவை:

    செம்பருத்திப்பூ இலைகள் - 10

    கறிவேப்பிலை - கைப்பிடியளவு,

    மருதாணி இலை - கைப்பிடியளவு

    செய்முறை:

    செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்க்கவும்.

    அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளித்தால் முடியானது கட்டுக்கடங்காமல் வளரும். மேலும் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகளையும் போக்கச் செய்யும்.
    முகத்தின் அழகை கூட்ட நாம் பலவகையான ஃபேஸ்பேக்குகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் தற்போது சிவப்பழகைத் தரக்கூடிய ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
    முகத்தின் அழகை கூட்ட நாம் பலவகையான ஃபேஸ்பேக்குகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் தற்போது சிவப்பழகைத் தரக்கூடிய ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

    சிவப்பழகு பெற கற்றாழை ஃபேஸ்பேக்!!

    தேவையானவை:

    கற்றாழை ஜெல்- 1 கப்
    காட்டேஜ் சீஸ்- சிறிதளவு,
    பேரிச்சம் பழம்- 1
    வெள்ளரிக்காய்- 1

    செய்முறை:

    கற்றாழை ஜெல்லுடன் காட்டேஜ் சீஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து அதனுடன் பேரிச்சம்பழத்தினை நசுக்கிக் கலக்கவும்.

    இறுதியாக வெள்ளரிக்காயினை துண்டுகளாக்கி தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    இந்த பேஸ்ட்டினை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவந்தால் முகமானது சிவப்பழகு பெறும்.
    புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் உங்களை இளமையாக காண்பிக்கும்! சரி, உங்கள் புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    அழகான புருவங்கள் ஒருவரது முகத்தை உயர்த்திக் காட்டும். புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் உங்களை இளமையாக காண்பிக்கும்! சரி, உங்கள் புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

    கற்றாழை : சருமத்திற்கும், கூந்தலுக்கும் என்ன பயன்படுத்துவது என்றால் முதலில் வரும் பொருள் கற்றாழைதான். எல்லோருக்கும் தெரிந்த பொருள்தான். ஆனால், எளிதில் கிடைப்பதால் பயன்படுத்த மாட்டீர்கள். இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோளை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு இந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது.

    வெந்தயம் : வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது புருவ முடிக்கு நல்ல பொலிவைத் தரும்.இதில் நிகோடினிக் அமிலம், புரதச் சத்து, லெசிதின் ஆகியவை இயற்கையான நிறத்தை தக்கவைத்து, புருவம் வளர மிகவும் உதவும்.

    விளக்கெண்ணெய் : இது ஒரு பழங்காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் மிகவும் பயனுள்ள பொருள். விரல் நுனிகளால் தடவி, மசாஜ் செய்து ஒரு மணிநேரம் வைத்திருந்து துடைத்துவிடலாம். தினமும் பயன்படுத்தினால், அடர்த்தியான, கருமையான புருவங்கள் வளரும். விளக்கெண்ணெயில், புரதச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் புருவத்தின் வேருக்கு நல்ல ஊட்டச்சத்து அளிக்கிறது.

    ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய்யில் வைட்டமின் ஈ சத்து நிறைந்து இருப்பதால், உங்கள் புருவங்கள் நன்றாக வளர உதவும். வெது வெதுப்பான ஆலிவ் எண்ணெய்யை புருவங்களுக்கு தினமும் தடவி வாருங்கள்.

    முட்டை மஞ்சள் கரு : முட்டையின் மஞ்சள் கருவில் புரதச்சத்து மற்றும் பயோடின் என்னும் சத்து அதிகம் இருப்பதால், புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தூரிகையின் உதவியுடன் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும் . இது உங்கள் புருவங்களை அடர்த்தியாகவும், கூந்தல் உதிர்வதற்கான வாய்ப்புகளையும் குறைகிறது.

    ஜோஜோபா எண்ணெய் : ஜோஜோபா எண்ணெய் புருவம் வளருவதற்கு ஏதாவது அடைப்பு இருந்தால் அதை நீக்கிவிடும். அதனால் முடி வேகமாக வளரும். இந்த எண்ணெய்யையும் தூங்கும்போது பயன்படுத்தலாம்.

    வெங்காயச்சாறு : வெங்காயத்தில், சல்பர், செலினியம், மினெரல்ஸ், வைட்டமின் பி, சி ஆகியவை உள்ளதால் புருவம் நன்றாக வளரும். மயிர்கால்களை நன்றாக உறுதியாக்குகிறது. வெங்காயத்தை தோள் உரித்து, ஜூஸ் செய்து, அதை தடவினால் போதும். வெங்காயம் ஒரு வாசனை கொடுக்கும் என்பதால், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

    தேங்காய் எண்ணெய் : மேல் கூறிய (டிப்ஸ்) எதுவும் இல்லையென்றால் வெறும் தேங்காய் எண்ணையே போதுமானது! இது தண்ணீரைப்போல இருப்பதால், பெரும்பாலும் உதாசீனப் படுத்துகிறோம். ஆனால் தேங்காய் எண்ணெய் கண்டிஷனர் போல வேலை செய்யும். இயற்கையான புரதச்சத்து முடி உடைவதை தவிர்க்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடிக்காலில் இன்பெக்ஷன் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். வாரத்தின் சில நாட்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டு தூங்கலாம்.
    நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
    நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான பல்வேறு க்ரீம்கள், ஆயின்மென்ட், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்கரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்திற்கு கிடைக்கும் பயன்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

    1 நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் குறைவதோடு, தழும்புகளும் குறையும்.

    2. பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சரும பிரச்சனை தான் சரும வறட்சி. இந்த சரும வறட்சியைத் தடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று நல்லெண்ணெய். இந்த நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால், சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்பட்டு, சருமம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.அதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

    3. நல்லெண்ணெய் உதடுகளுக்கு ஒரு நல்ல நிறத்தை வழங்கும். ஒருவர் தினமும் நல்லெண்ணெயை உதடுகளுக்கு பயன்படுத்தி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். அதற்கு நல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.

    4. கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெயைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.

    5. நல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் எடுத்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில் காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.

    6. கோடையில் ஒவ்வொருவரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் சருமம் கருமையாவது. இதைத் தடுப்பதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, கருமையான பகுதிகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

    7. உங்கள் தலைமுடி வறட்சியுடனும், பாதிக்கப்பட்டும் காணப்படுகிறதா? அப்படியானால் உங்கள் தலைமுடியை நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். அதுவும் உங்கள் தலைமுடிக்கு தேவையான அளவு நல்லெண்ணெயை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்

    8. உங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும். 
    ×