என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
இனிப்பு கோவா - ஒரு கப்,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்
ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
இனிப்பு கோவா - ஒரு கப்,
உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்
ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கேரட் அல்வா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
அல்வா செய்ய :
கேரட் துருவல் - அரை கப்,
வெல்லத்தூள் - அரை கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நெய் - தேவைக்கு,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேக விடவும். மேலே சிறிதளவு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கேரட் அல்வா கொழுக்கட்டை ரெடி.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
அல்வா செய்ய :
கேரட் துருவல் - அரை கப்,
வெல்லத்தூள் - அரை கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
நெய் - தேவைக்கு,
ஏலக்காய்த்துள் - சிட்டிகை.

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
அடிகனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி வேக விடவும். மேலே சிறிதளவு நெய் விட்டு சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
கேரட் அல்வா கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மகாராஷ்டிராவில் மோதகத்தை பொரித்து, விநாயகருக்கு படைப்பார்கள். இந்த வருடம் விநாயகருக்கு எப்போதும் செய்யப்படும் கொழுக்கட்டையை மட்டும் செய்யாமல், சற்று வித்தியாசமாக மோதகம் செய்து படைக்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு

செய்முறை:
கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, நன்றாக மூடி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:
கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, நன்றாக மூடி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான தேங்காய் வெல்ல மோதகம் ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். இன்று இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - இரண்டு கப்
வெல்லம் - ஒன்றை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.
ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.
பச்சரிசி - இரண்டு கப்
வெல்லம் - ஒன்றை கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - நான்கு கப்
துருவிய தேங்காய் - அரை மூடி

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் வெல்லம் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் இறக்கி, வடிகட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து அதில் வடிகட்டிய வெல்லக்கரைசலை ஊற்றி கைவிடாமல் கெட்டியாக கிளறவும்.
ஆறியதும், மாவை கையால் கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவி கட்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சூப்பரான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறுதானியங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசியில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 250 கிராம்
கருப்பட்டி - 100 கிராம்
தண்ணீர் - 1/8 டம்ளர்
உப்பு - மிகவும் சிறிதளவு (ஒரு பிஞ்ச்)
ஏலக்காய் - 4 எண்ணம்
தேங்காய் - ¼ மூடி

செய்முறை :
வரகு அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து கொள்ளவும். அரிசியின் நிறம் மாறி வறுத்த வாசனை வந்ததும் இறக்கி ஆறயதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
அரைத்த வரகு அரிசியுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் தூளாக்கிய கருப்பட்டியைப் போட்டு 1/8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைசல் கொதித்தவுடன் இறக்கி வடிட்டி வரகு அரிசி மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.
இந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.
பிடித்த வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வரகு கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காயை பற்களாகக் கீறிப் போட்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் சுக்குப் பொடி சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.
வரகு அரிசி - 250 கிராம்
கருப்பட்டி - 100 கிராம்
தண்ணீர் - 1/8 டம்ளர்
உப்பு - மிகவும் சிறிதளவு (ஒரு பிஞ்ச்)
ஏலக்காய் - 4 எண்ணம்
தேங்காய் - ¼ மூடி

செய்முறை :
வரகு அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுத்து கொள்ளவும். அரிசியின் நிறம் மாறி வறுத்த வாசனை வந்ததும் இறக்கி ஆறயதும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
அரைத்த வரகு அரிசியுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் தூளாக்கிய கருப்பட்டியைப் போட்டு 1/8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைசல் கொதித்தவுடன் இறக்கி வடிட்டி வரகு அரிசி மாவில் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கிளறவும்.
இந்த மாவை கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.
பிடித்த வைத்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
சுவையான வரகு கருப்பட்டி கொழுக்கட்டை தயார்.
விருப்பமுள்ளவர்கள் தேங்காயை பற்களாகக் கீறிப் போட்டு கொழுக்கட்டை தயார் செய்யலாம். விருப்பமுள்ளவர்கள் சுக்குப் பொடி சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று நட்ஸ் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய :
பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 20,
சர்க்கரை - கால் கப்,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய :
பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 20,
சர்க்கரை - கால் கப்,
ஏலக்காய் - 3.

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.
ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
நட்ஸ் பூரண கொழுக்கட்டை ரெடி.
சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
கடலைப் பருப்பு - அரை கப்,
வெல்லத்தூள் - முக்கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,

செய்முறை:
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து மலர வேக விட்டு எடுக்கவும்.
ஆறியதும் அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய், அரைத்த விழுது சேர்த்து சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்யவும்.
செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை ரெடி.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
கடலைப் பருப்பு - அரை கப்,
வெல்லத்தூள் - முக்கால் கப்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து மலர வேக விட்டு எடுக்கவும்.
ஆறியதும் அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய், அரைத்த விழுது சேர்த்து சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்யவும்.
செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய :
கறுப்பு எள் - 50 கிராம்,
வெல்லம் - 50 கிராம்,

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்.
ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும்.
வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை ரெடி.
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய :
கறுப்பு எள் - 50 கிராம்,
வெல்லம் - 50 கிராம்,
ஏலக்காய் - 2.

செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்.
ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.
எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும்.
வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பலாக்காய் சிப்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த சிப்ஸ் செய்வது மிகவும் சுலபம். இன்று வீட்டிலேயே பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பலாச்சுளை பழுக்காதவை - 10,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

செய்முறை :
பலாச்சுளையில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.
மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பலாக்காய் துண்டுகளை உதிர்த்தாற் போலப் போடுங்கள். நன்றாக வேகவிடுங்கள்.
உப்பு கலந்த நீரில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றுங்கள். சத்தம் அடங்கியதும் பலாச்சுளைகளை எண்ணெய் வடித்து எடுங்கள்.
பலாச்சுளை பழுக்காதவை - 10,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :
பலாச்சுளையில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளுங்கள்.
மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கலந்துகொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பலாக்காய் துண்டுகளை உதிர்த்தாற் போலப் போடுங்கள். நன்றாக வேகவிடுங்கள்.
உப்பு கலந்த நீரில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றுங்கள். சத்தம் அடங்கியதும் பலாச்சுளைகளை எண்ணெய் வடித்து எடுங்கள்.
இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்ப் பொடி தூவிக் கலந்தால் பலாக்காய் சிப்ஸ் தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிலருக்கு காரசாரமாக சாப்பிட பிடிக்கும். இன்று பச்சை மிளகாயில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சை மிளகாய் - 15,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க :
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,

செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி ‘கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி… தனியே எடுத்து வைக்கவும்.
புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும்.
குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு
பச்சை மிளகாய் - 15,
புளி - சிறிய எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க :
பச்சரிசி - 2 டீஸ்பூன்,
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
தனியா - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் - சிறிதளவு.

செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்.
பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி ‘கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி… தனியே எடுத்து வைக்கவும்.
புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும்.
அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும்.
குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு
இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த விநாயகர் சதுர்த்திக்கு அணில் கொழுக்கட்டை மாவை பயன்படுத்தி பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அணில் கொழுக்கட்டை மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
பால் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை :
ஒரு வெறும் வாணலியில்அணில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.
2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை அணில் கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.
பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.
சூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.
இதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.
குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.
அணில் கொழுக்கட்டை மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
பால் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை

ஒரு வெறும் வாணலியில்அணில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.
2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை அணில் கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.
அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.
பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.
சூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.
இதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.
குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓரே மாதிரியான அசைவ உணவை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு புதிதாக ஏதாவது சாப்பிடத் தோன்றும். அப்படிப்பட்டவர்களுக்கான காரமான மிளகு மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
மீன் - 500 கிராம்
மிளகுத்தூள் - 1 கரண்டி
உப்பு - தேவைக்கு
ஏலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி

செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.
மீனில் எலுமிச்சம் சாற்றை ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஓட்டாத கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் போட்டு காய்ந்ததும் தனித்தனியாக மீனை அடுக்கவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
மீன் - 500 கிராம்
மிளகுத்தூள் - 1 கரண்டி
உப்பு - தேவைக்கு
ஏலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.
மீனில் எலுமிச்சம் சாற்றை ஊற்றி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிசறி அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
ஓட்டாத கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் போட்டு காய்ந்ததும் தனித்தனியாக மீனை அடுக்கவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
சுவையான காரமான மிளகு மீன் வறுவல் ரெசிபி தயார்.!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.






