என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்.
    வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி பால் அல்லது முடிந்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து வந்தால் அம்பாள் அருள் நிச்சயம் கிட்டும்.

    வேலாதிலங்க்ய கருணே விபு தேந்த்ர வந்த்யே
    லீலா விநிர்மித சராசரஹ்ருந்நிவாஸே |
    மாலா கிரீட மணி குண்டல மண்டி தாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    கஞ்ஜாஸனாதிமணி மஞ்ஜு கிரீட கோடி ப்ரத்யும்த
    ரத்ன ருசி ரஞ்சிதபாத பத்மே |
    மஞ்ஜீர மஞ்சுல விநிர்ஜித ஹம்ஸ நாதே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    ப்ராளேய பானு கவிகா கலிதாதிரம்யே பாதாக்ரஜ
    வளி வினிர்ஜித மௌக்திகாபே |
    ப்ராணேஸ்வரீ ப்ரமத லோகபதே ப்ரஜானம்
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    ஜங்காதிபிர் விஜித சித்தஜ தூணிபாகா
    ரம்பாதி மார்தவ கரீந்த்ர கரோருயுக்மே |
    கம்பாசதாதிக ஸமுஜ்வல சேலீலோ
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    மாணிக்ய மௌக்திக விநிர்ஜித மேகலாட்யே
    மாயா விலக்ன விலஸன் மணி பட்டபந்தே |
    லோலம்பராஜி விலஸந்நவ ரோம ஜாலே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    ந்யக்ரோத பல்லபத லோதர நிம்ன நாபே
    நிர்தூத ஹார விலஸத் குசச் சக்ரவாகே |
    நிஷ்காதி மணிபூஷண பூஷிதாங்கே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    கந்தர்ய சாப மதபங்க கிருதாதிரம்யே
    ப்ரூ வல்லரீ விவிதா சேஷ்டத ரம்யமானே |
    கந்தர்ப ஸோதர ஸமாகிருதி பாலதேசே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    மௌக்தாவனீ விலஸதூர்மித கம்பு கண்டே
    மந்தஸ் பிதாளன விநிர்ஜித சந்த்ர பிம்பே |
    பக்தேஷ்டதான நிரதா மிருத பூர்ணத் ருஷ்டே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    கர்ணா வலம்பி மணிகுண்டல கண்டபாகே
    காணாந்த தீர்கநவ நீரஜபத்ர நேத்ரேஸ்வர் |
    ணாயகாதி குண மௌக்திக சோபிநாஸே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    லோலம் பராஜி லலிதாலக ஜாலசோபே
    மல்லீ நவீன களிகா நவ குந்தஜாலே |
    பாலேந்து மஞ்ஜுல கிரீட விராஜமானே
    பாலாம்பிகே மயிவிதேஹி க்ருபா கடாக்ஷம் ||
    பாலாம்பிகே மஹாராக்ஞி வித்யாநாத ப்ரியேஸ்வரி |
    பாஹிமாமம்ப க்ருபயா த்வத் பாதம் சரணம் கத: ||

    மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் பதினாறு முறை பாராயணம் செய்து வர, தேவியின் அருளால் அவரவர்க்குப் பிடித்தமான துறையில் நல்ல வேலை கிடைக்கும்.
    ஸ்ரீதேவி: அம்ருதோத்பூதா கமலா சந்த்ரசோபனா
    விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹார்ங்க்ஞ்ச சார்ங்கிணீ
    ஹரிப்ரியா தேவ தேவீ மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ.
    மஹாலக்ஷ்மி ஸ்துதிமாலா

    பொதுப் பொருள்:

    செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே, அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உதித்தவளே, தாமரை மலரை விரும்பி ஏற்பவளே, சந்திரனின் சகோதரியே, திருமாலின் பத்தினியே, வைஷ்ணவியாய் அருள்பவளே, பக்தர்களின் நல் வாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே, தேவர்களுக்கெல்லாம் தேவியே, பேரழகுக் கோலத்தில் திகழ்பவளே, மஹாலக்ஷ்மியே, உனக்கு நமஸ்காரம்.

    -இந்தத் துதியை மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் பதினாறு முறை பாராயணம் செய்து வர, தேவியின் அருளால் அவரவர்க்குப் பிடித்தமான துறையில் நல்ல வேலை கிடைக்கும்.
    ஸ்ரீலலிதா அகில உலகங்களுக்கும் தாய். அவளை தூய மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்களெல்லாம் தீரும். அதற்குச் சுலபமான வழி ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்வதாகும்.
    ஸ்ரீலலிதா அகில உலகங்களுக்கும் தாய். அவளை தூய மனதுடன் வழிபட்டால் நம் கஷ்டங்களெல்லாம் தீரும். அதற்குச் சுலபமான வழி ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’’ செய்வதாகும்.

    ஆரோக்கியம், பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலிய உபாதைகளிலிருந்து விடுதலை, விஷ தோஷங்களிலிருந்து நிவாரணம், திருமணம், அன்யோன்ய தாம்பத்ய வாழ்க்கை, தன, தான்ய, ராஜ்ய வசியம் போன்ற பலப்பல காரியங்கள் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணத்தால்’’ கைகூடி வருவது அனுபவ பூர்வமான உண்மையாகும்.

    காலை நித்ய கர்மாக்களைச் செய்து முடித்த பிறகு ஸ்ரீசக்ர பூஜையும் மூல மந்திர நாம ஜபங்களும் பின் ‘‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணமும்’’ செய்தால் விசேஷ பலன்களைப் பெறலாம். இதை எந்நாளும் காலை, மாலை பாராயணம், ஜபம் செய்யலாம். தக்க குரு மூலம் உபதேசம் பெற்றுச் செய்ய வேண்டும். குரு கிடைக்காவிட்டால் ‘ஸ்ரீதட்சிணாமூர்த்தியை’ குருவென பாவித்து பிழையின்றி பாராயணம் செய்ய வேண்டுமென்பது சான்றோர் கருத்து.

    இதன் ஒவ்வொரு நாமாக்களும் அதிசயமான அரிய பல அனுகூல பலன்களை தர வல்ல தாரக மந்திரங்களாகும். எனினும் முழுமையாக ‘ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம்’ செய்ய முடியாதவர்கள் அவரவருக்கு உகந்த நாமாவைத் தேர்ந்தெடுத்து குறைந்தது 108 முறையாவது தினசரி பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூட உதவும்.

    தன் விருப்பத்திற்கேற்ற கணவனை அடைய

    நாமா    : ஓம் சுவாதீன வல்லபாயை நம:
    தாத்பர்யம்    : ஓம் தன் வயப்பட்ட அன்புமிக்க நாயகனையுடையவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேன் கலந்த பால்

    மூவகை சித்திகளைப் பெற (இச்சா, க்ரியா, ஞான)

    நாமா    : ஓம் மகாசக்தியை நம
    தாத்பர்யம்     : ஓம் பெரும் உற்சவமெனக் கொண்டாடும் வழிபாட்டிற் கிசைபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : சர்க்கரை பொங்கல், நெய் கலந்த பலவித பட்சணங்கள்.

    தெய்வீக அன்புடன் சகல சவுபாக்கியங்களும் பெற

    நாமா    : ஓம் பக்த சவுபாக்கிய தாயின்யை நம
    தாத்பர்யம்    : பக்தர்களுக்கு சவுபாக்கியத்தை வழங்கும் தேவிக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேங்காய், திராட்சை, கல்கண்டு.

    செல்வம் பெற

    நாமா    : ஓம் ஸ்ரீகர்யை நம
    தாத்பர்யம்    : ஓம் செல்வத்தை தருபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : குங்குமப்பூ, சர்க்கரை கலந்த பால்.

    விருப்பத்திற்கேற்ற பொருள் கிடைக்க

    நாமா    : ஓம் புருஷார்த்தப்ரதாயை நம
    தாத்பர்யம்    : ஓம் நான்குவித நலன்களை அருள்பவளுக்கு நமஸ்காரம். (அறம், பொருள், வீடு, இன்பம் ஆகிய நான்கு வித புருஷார்த்தங்களை அளிப்பவள், இச்சைகளைப் பூர்த்தி செய்பவள்).
    நைவேத்யம்    : வெல்லம், தேங்காய், தேன், பருப்பு.

    ஏற்ற காரியம் தடங்கலில்லாமல் நிறைவேற

    நாமா    : ஓம் விக்ந நாசின்யை நம
    தாத்பர்யம்    : ஓம் இடையூறுகளை நீக்குபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : வாழைப்பழம், தாம்பூலம்.

    வியாதிகள் விலகவும், வராமல் தடுக்கவும்

    நாமா    : ஓம் சர்வ வியாதிப்ரசமந்யை நம
    தாத்பர்யம்    : ஓம் எல்லா நோய்களையும் அடக்குபவளுக்கு நமஸ்காரம்
    நைவேத்யம்    : இளநீர், பழம், பால்.

    கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாக

    நாமா    : ஓம் தயாமூர்த்தியை நம
    தாத்பர்யம்    : ஓம் தயை வடிவானவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : திராட்சை, முந்திரி, கல்கண்டு.

    நிலம், வீடு, மனை வாங்க கட்ட, தோஷங்கள் விலகி, வீட்டில் சுகமும் ஆரோக்கியமும் நிலவ

    நாமா    : ஓம் சாம்ராஜ்ய தாயின்யை நம
    தாத்பர்யம்    : ஓம் சாம்ராஜ்யத்தை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேங்காய், சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பதார்த்தம், தாம்பூலம்.

    விருப்பங்கள் நிறைவேற

    நாமா    : ஓம் சர்வ லோக வசங்கர்யை நம
    தாத்பர்யம்    : ஓம் உலகமனைத்தையும் தன்னுள் வசப்படுத்தி ஆள்பவளுக்கு நமஸ்காரம். (இந்நாமாவைச் சொல்லி குங்கும அர்ச்சனை செய்து நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளுதல் சிறந்த பலனைத் தரும்.
    நைவேத்யம்    : சர்க்கரை பொங்கல், நெய் கலந்த ஹரவிஸ்சு (வடிக்க)

    வழக்குகள் இல்லாமல் சுமுகமாக இருக்க

    நாமா    : ஓம் சாமரஸ்ய பராயணாயை நம
    தாத்பர்யம்    : ஓம் சமஸத்தை நிலையாகக் கொண்டவளுக்கு நமஸ்காரம்
    நைவேத்யம்    : சித்திரான்னம், தேன் கலந்த பசும்பால்.

    சுக பிரசவம் உண்டாக

    நாமா    : ஓம் பிராண தாத்தர்யை நம
    தாத்பர்யம்    : ஓம் பிராண சக்தியை அளிப்பவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : பஞ்சாமிர்தம்

    அறுவகைச் செல்வங்கள் பெருக

    நாமா    : ஓம் தன தான்ய விவர்த்தின்யை நம
    தாத்பர்யம்    : ஓம் செல்வத்தையும் தான்யத்தையும் பெருக்குபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : ஆறுவகை பட்சணங்கள் (அறுசுவை அடங்கியவை)

    சுவாசம் சம்பந்தமான ரோகங்கள் குணமடைய

    நாமா    : ஓம் நாதரூபிண்யை நம
    தாத்பர்யம்    : ஓம் நாத வடிவானவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : தேன் கலந்த பால், கருணைக் கிழங்கினால் செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தம்.

    தூய்மையான மனப்பக்குவம் பெற

    நாமா    : ஓம் சுத்த மானசாயை நம
    தாத்பர்யம்    : ஓம் தூய மனமுள்ளவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : இளநீர், தேங்காய்.

    தம்பதிகளிடையே உறவு நிலவ, தோஷங்கள் விலக

    நாமா    : ஓம் சிவ சிக்தியைக்ய ரூபிண்யை நம
    தாத்பர்யம்    : ஓம் சிவனும் சக்தியும் ஒன்றெனக் காட்சி தருபவளுக்கு நமஸ்காரம்.
    நைவேத்யம்    : இனிப்பு பதார்த்தங்கள், பழங்கள், தாம்பூலம்.


    உரை எழுதியவர்

    லலிதா சகஸ்ர நாமத்திற்கு முதல் முழு உரை எழுதியவர் சாக்தமகான் ஸ்ரீபாஸ்கர ராயர். இவர் உரையையும், பிரயோகங் களையுமே பெரும்பகுதி இன்று உபாசகர்கள் பின்பற்றி வருகின்றனர்.
    தமிழில் இதற்கு சொல் விளக்கம் செய்தவர், ஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா என்ற வேத புராண விற்பன்னர் ஆவார். இவர்களைத் தவிர ஸ்ரீ சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் ஸ்ரீ ராம கிருஷ்ண மடம் ஸ்ரீமான் அண்ணா போன்றவர் களின் உரைகள் இன்று வழக்கில் உள்ளன.
    இந்த ஸ்லோகத்தை திருவாதிரை நட்சத்திரத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் நடராஜப்பெருமான் திருவருளால் சகல வளங்களும் கிடைக்கும்.
    இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
    ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
    விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
    விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
    ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம்
    ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

    - சிதம்பர பஞ்சாக்ஷர மந்த்ரம்

    பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்த்ரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார்.

    சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும். 
    கீழே கொடுக்கப்பட்டுள்ள துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.
    ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
    ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
    தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
    ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

    பொதுப்பொருள்:

    வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட  சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும்,  ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.  

    - இத்துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.
    தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.
    ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
    த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
    நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
    வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

    பொதுப் பொருள் :

    சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான   நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

    தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.
    அம்மா... தாயே... ஈசுவரி என்பதைத் தவிர அவளை புகழ வேறு எதுவும் தெரியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். உங்களுக்காகவே கீழ்கண்டதை கொடுத்துள்ளோம். அன்னையை வர்ணித்து படியுங்கள். நல்லதே நடக்கும்.
    கொல்லூர் மூகாம்பிகையை நேரில் பார்த்து வழிபடும் அரிய வாய்ப்பு கிடைத்தால், அவளிடம் மனம் விட்டுப் பேசத் தயங்காதீர்கள். அவளிடம் உரிமையாடு உங்கள் உள்ளத்து குமுறல்களை கொட்டுங்கள். அப்படியே திரும்பி வந்து விடாதீர்கள்.

    நாலு வார்த்தை நல்ல விதமாக புகழ்ந்து பேசுங்கள். மூகாம்பிகை மகிழ்ச்சி அடைவாள். அவள் மனம் குளிரும் போது நமக்கு வேண்டியதை எல்லாம், கேட்டதை எல்லாம் தருவாள்.

    அம்மா... தாயே... ஈசுவரி என்பதைத் தவிர அவளை புகழ வேறு எதுவும் தெரியவில்லையே என்று வருத்தப்படாதீர்கள். உங்களுக்காகவே கீழ்கண்டதை கொடுத்துள்ளோம். அன்னையை வர்ணித்து படியுங்கள். நல்லதே நடக்கும்.

    ஜெயந்தி, மங்களா, காளி, பத்ரகாளி, கபாலினி, துர்க்கா, சமா, சிவா, தாத்ரி, ஸ்வாகா, ஸ்வதா என்று பல்வேறு விதமான நாமதே யங்களைப் பெற்றவளே! உனக்கு என் நமஸ்காரம்.

    மது என்னும் அசுரனையும், கைடபன் என்னும் அசுரனையும் நாசம் செய்தவளே! நான்முகனுக்கு அருள்புரிந்தவளே! உனக்கு என்னுடைய நமஸ்காரம். எனக்கு நல்ல வடிவினை அளிப்பாய். வெற்றியை அளிப்பாய், புகழைக் கொடுப்பாய். என் எதிரிகளை அழிப்பாய்! அப்படிப்பட்ட வல்லமை உடைய உனக்கு என் நமஸ்காரம்.

    உலகத்தில் உள்ள அனைவராலும் வணங்கப்படக் கூடிய பாத கமலங்களை உடையவளே! தேவர்களுக்கு அசுரர்களினால் ஏற்படும் பயத்தினை விரட்டியடித்து அவர்களுக்கு வெற்றி என்னும் சவுபாக்கியத்தினை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்.

    மகிசாசூரன் என்னும் அசுரனைக் கொன்று பூமியைக் காப்பாற்றுபவளே! நான்முகனுக்கு நல்ல வரங்கள் பலவற்றை அளிப்பவளே! உனக்கு என் நமஸ்காரம்!
    பக்த பீஜன் என்னும் அசுரனைக் கொன்ற தேவியே! சண்டன் என்னும் அசுரனையம், முண்டன் என்னும் அசுரனையும் வதம் செய்தவளே! எண்ண முடியாத அர்தான வடிவம் பெற்றவளே! எல்லாவிதமான எதிரிகளையும் நாசமாக்குபவளே!

    பரப்ருஹ்ம ஸ்வரூபிணியாக விளங்கும் சண்டிகையே! எப்போதும் எவர் உன்னைப் பக்தியுடன் வணங்குகின்றார்களோ அவர்களுக்கும், உன்னை எப்போதும் வணங்கும் எனக்கும் அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைத் தரவேண்டும். புகழைத் தரவேண்டும் என் எதிரிகளை அழிக்க வேண்டும்.

    சண்டிகை தேவியே! வியாதியினை முற்றிலும் ஒழிப்பவளே! பக்தியின் காரணமாக உன்னை வணங்குவோருக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைக் கொடுக்க வேண்டும்.

    சண்டிகையே! யார் உன்னை எப்போதும் பக்தியுடன் அர்ச்சனை செய்கின்றார்களோ அவர்களுக்கு நல்ல அழகைக் கொடுக்க வேண்டும். வெற்றியைக் கொடுக்க வேண்டும்.

    தேவி, சகல விதமான பாக்கியங்களையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். பேரின்பமாகிய பரம சுகத்தினையும் அளிக்க வேண்டும்.

    எதிரிகளுக்கு நாசத்தைக் தர வேண்டும். பிரமாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.


    தேவி, மங்களமான விஷயங்களை அருள வேண்டும். பிரம்மாண்டமான செல்வ வளத்தைத் தர வேண்டும்.
    கல்வியில் சிறந்தவனாகவும், புகழ் பெற்றவனாகவும், நிறைந்த செல்வம் உடையவனாகவும் என்னை மாற்றி அருள வேண்டும்.

    மிகவும் பிரபலமான அசுரர்களுடைய கர்வத்தினை அழித்தவளே! சண்டிகையே, உன்னை நமஸ்கரிக்கும் எனக்கு நல்ல குணத்தினைத் தருவாய், மகிழ்ச்சியைக் கொடுப்பாய்.

    நான்கு கைகளைப் பெற்றவளே! நான் முகனால் துதி செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

    தேவி, அம்பிகையே! இடைவிடாமல் நீ கிருஷ்ணனால் துதி செய்யப்பட்டவளே!

    பார்வதியின் கணவரான பரமேஸ்வரரால் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

    தேவர்களும், அரக்கர்களும் தங்கள் மணி முடியில் உள்ள ரத்னங்கள் கீழே புரளும் வண்ணம் தொட்டு வணங்கத்தக்க திருப் பாத கமலங்களை உடையவளே! அம்பிகையே!

    இந்திராணியின் கணவனான இந்திரனால் உள்ளன்புடன் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

    தேவி, கொடிய புஜ பல பராக்ரமம் மிகுந்த அசுரர்களுடைய கர்வத்தினை நாசம் செய்தவளே!

    தேவி, எவ்வித உறவுகளும் அற்ற பக்தர்களுக்கு பரமானந்த மூலமான மோட்ச சாம்ராஜ்யத்தை அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தவளே! அம்பிகையே!

    மனத்திற்கு இனிமையைத் தரக் கூடியவளாகவும்

    மனத்தின் போக்கினை அறிந்து நடப்பவளாகவும்

    கடக்க முடியாத சம்சார சாகரத்தினைக் கடப்பதற்கு உதவி புரிபவளாகவும்

    நல்ல குலத்தில் உதித்தவளாயும் உள்ள மனைவியை அளிக்க வேண்டும்.

    மூகாம்பிகையை வழிபடும் போது இதை படித்த பிறகே மகா ஸ்தோத்திரமான தேவி மகாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். இதைப் படிப்பதன் மூலம் மிகச்சிறந்த பலன்கள் உண்டாகும்.

    இந்த ஸ்லோத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர்.
    மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
    பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
    வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
    ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
    ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

    ஸ்ரீதேவி துதி

    பொதுப் பொருள்:


    மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

    இந்தத் துதியை தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வர, குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.
    வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுபவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்.
    கிரீட மகுடோபேதாம் ஸ்வர்ணவர்ண ஸமன்விதாம்
    ஸர்வாபரண ஸம்யுக்தாம் ஸுகாஸன ஸமன்விதாம்
    பரிபூர்ணம்ச கும்பம்ச தக்ஷிணேந கரேணது
    சக்ரம் பாணம்ச தாம்பூலம்த தாவாம கரேணது
    சங்கம் பத்மம்ச சாபஞ்ச கண்டிகாமபி தாரிணீம்
    ஸத்கஞ்சுக ஸ்தனீம் த்யாயேத் தனலக்ஷ்மீம் மனோஹராம்.

    தனலட்சுமி தியானம்

    பொதுப் பொருள்:

    நிறைந்த அழகு கொண்ட பொன்னிற மேனியை உடையவளே. சகல அணிகலன்களும் அணிந்திருப்பவளே. மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒளிமயமான மண்டபத்தில் திகழ்பவளே. நிறைகுடம், சக்கரம், அம்பு, வெற்றிலை, சங்கு, தாமரை, வில், ஏந்தியருளும் அழகே உருவான தனலட்சுமியை வணங்குகிறேன். வணங்குவோர்க்கு தனம் எனும் செல்வச் செழிப்பை அருள்பவளே தங்களை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

    - வியாபாரிகள் வெள்ளிக் கிண்ணத்தில் காசுகளை வைத்து அதையே தனலட்சுமியாக வழிபடலாம். வழிபட்ட காசிலிருந்து சில நாணயங்களை எடுத்துச் சென்று வியாபாரம் தொடங்க மிகுந்த லாபம் கிட்டும்.

    திருமணம் தடை படும் கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    பாலார்க்காயுதஸுப்ரபாம் கரதலே ரோலம்ப மாலாகுலாம்
    மாலாம் ஸந்தததீம் மனோஹரதனும் மந்தமிதீத்யந்முகீம்
    மந்தம் மந்தமுபேயுஷீம் வரயிதும் ச்ம்பும் ஜகன்மோஹினீம்
    வந்தே தேவமுனீந்த்ர வந்திதபதா மிஷ்டார்த்ததாம் பார்வதீம்
    ஸ்வயம்வரா பார்வதி ஸ்துதி

    பொதுப் பொருள் :

    தேவர்களாலும், ரிஷிகளாலும் வணங்கப்படும் திருப்பாதங்களை உடையவளும், உதிக்கும் சூரியனைப்போன்று பிரகாசம் உடையவளும் பூக்களால் தொடுத்த  மாலையை தன் திருக்கரங்களில் ஏந்தியவளும், அழகான பூக்களால் தொடுத்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவளும் தன் புன்னகையால் உலகத்தையே  வென்றவளும் வெட்கத்தால் மெதுவாகவும், அழகாகவும் வந்து சிவனை தன் கணவராக தேர்ந்தெடுத்த ஸ்வயம்வரா பார்வதியை வணங்குகிறேன்.

    - திருமணம் தடை படும் கன்னிகைகள் இத்துதியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்துவர அவர்களுக்கு தேவியின் திருவருளால்  விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள். அவளுக்கு உகந்த மூல மந்திரத்தை பார்க்கலாம்.
    ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் கௌரி
    பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா!

    மூலமந்திரத்தில் ‘ஐம்’ என்ற சொல் 4 முறை வருவதை அர்த்தகாம மோட்சம் எனவும் அறம்பொருள் இன்பம் வீடு - எல்லாப்பேறுகளையும் தருபவள் எனப்பெரியோர் கூறு கின்றனர்.

    ‘ஐம்’ ஆனது பால மந்திரம் சப்தசதீ மந்திரம் ‘மகாஷோடசமந்திரம்’ ஆகிய மந்திரங்களின் பெருமைபெற்றது. இதை ஜபித்தால் மூகாம்பிகையின் அருளால் பெறுதற்கரிய பேறு பெற்று வாழ்வில் சுகமான வாழ்வு பெறலாம்.
    தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் ஒவ்வொரு அம்மனுக்கும் உகந்த காயத்ரி மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பலன் பெறுங்கள்.
    காயத்ரி - சகல காரியங்கள் வெற்றி அடைய

    ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
    வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோ யோனஹ் ப்ரசோதயாத்

    துர்கை:

    (ராகுதோஷ நிவர்த்திக்காக)
    ஓம் காத்யாயனாய வித்மஹே
    கன்யகுமரி தீமஹி
    தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
    ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தன்னோ மாரி ப்ரசோதயாத்
    அன்னபூரணி தேவி
    (நித்தியான்ன பிராப்திக்காக)
    ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
    மஹேஸ்வர்யைஹ் தீமஹி
    தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

    சிவதூதி:


    ஓம் சிவதூத்யை ச வித்மஹே
    சிவங்கர்யைச தீமஹி
    தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

    பாலா:

    ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
    காமேஸ்வரீ ச தீமஹி
    தன்னோ பாலா ப்ரசோதயாத்
    அம்ருதேஸ்வரி தேவி
    (ஆயுள் ஆரோக்கியம் பெற)
    ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
    சக்தீஸ்வரீ ச தீமஹி
    தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

    காளிகா தேவி:

    (கேட்ட வரம் கிடைக்க)
    ஓம் காளிகாயை ச வித்மஹே
    ஸ்மசான வாசின்யை தீமஹி
    தன்னோ கோரா ப்ரசோதயாத்

    கவுமாரி தேவி:

    (சக்தி பெற)
    ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

    சாமுண்டி:


    ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தன்னோ காளி ப்ரசோதயாத்
    ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
    சக்ரதாரிணி தீமஹி
    தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
    ×