search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kollur mookambika"

    மூகனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள் அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள். அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.
    மூகன் எனும் கம்ஹாசூரன் கொல்லூர் மலைப்பகுதியில் தவம் இருந்து சக்திகளை பெற முயன்றான். இதை அறிந்த தேவர்கள் பயந்தனர். பிரம்மனிடம் வேண்டுகோள் விடுத்து சரஸ்வதி மூலம் அவனை ஊமையாக்கினார்கள். ஊமையன் என்பதை மூகன் என்றும் சொல்வார்கள். மூகன் தனக்கு கிடைத்த சக்தியால் அட்டூழியம் செய்து வந்தான். தேவர்களும் முனிவர்களும் அந்த அசுரனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர்.

    மூகனை அழிக்க விஷ்ணு, சிவன், பிரம்மன், இந்திரன், முருகன், பூவராகன் ஆகிய 6 பேரும் உதவி செய்தனர். அதனால் அம்பிகை மூகனை அழித்தாள். அப்போது தன் ஆணவத்திற்கு வருந்தி மன்னிப்பு கோரினான். மேலும் அம்பாள் பெயருடன் தன் பெயரும் இணைந்து வழங்க அருள் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். அவனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள் அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள். அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.

    அதன்பின் அன்னையானவள் தனது அனைத்து சக்திகளையும் அங்கே கோலமகரிஷி கண்டெடுத்து வணங்கி வந்த அந்த அற்புத ஜோதிர்லிங்கத்தை மகா வரப்பிரசாத பீடமாக்கிக் கொண்டு அருள்புரிந்து வருகிறாள். அகிலாண்டீஸ்வரியுடன் கலந்து விட்ட ஜோதிர் லிங்கம்தான் யுகங்களைக் கடந்து இன்றும் வீரிய தீட்சண்யத்துடன் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையாக சன்னதியில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது.

    இது ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம்

    இந்த ஒரு சக்கரத்தில் ஒன்பது சக்ரம் அடங்கியுள்ளது. இதில் 64 கோடி தேவதைகள் அரூபா ரூபமாக ஆரோகணித்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள்.

    கிரகணத்துக்கு நடைமூட மாட்டார்கள்


    கிரகண நேரங்களில் மற்ற இடங்களில் கோவில்கள் மூடிக் கிடக்கும். ஆனால் இந்த கோவிலில் அவ்வாறு இருப்பதில்லை. கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோவில் திறந்தவாறு இருந்து அர்ச்சனை, ஆராதனை ஆகியவை நடந்து கொண்டே இருக்கும். இந்த கோவிலின் மற்றொரு விசேஷம் என்னவென்றால் இங்கு பிரம்மசாரிகளுக்கு பூஜை செய்வதற்கும் சன்னதிக்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி இல்லை என்பதாகும். தேவி பவனி வரும்போதும் அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை.

    எதிரிகளை வெல்ல சண்டி ஹோமம்


    அம்பாளைத் தரிசித்த பின் சன்னதிக்கு எதிராக உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் உட்கார்ந்து ஸ்தோத்திரம் சொல்லித் துதிக்க வேண்டும். அந்தப் பிரார்த்தனை மண்டபத்தில் இருந்து பூஜித்தால் விசேஷ பலன் உண்டு என்பது அத்தலத்தின் ஐதீகம்.

    எதிரிகளால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு சண்டி ஹோமம் செய்பவர்கள் ஏராளம். வேறெந்த கோவிலிலும்இல்லாத அளவு சண்டி ஹோமம் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இங்கு நடைபெறுகின்றன. ஆனாலும் நாம் நினைத்தவுடன் இங்கு சண்டிஹோமம் செய்து விட முடியாது. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு அதற்கான முன்பதிவு முடிந்து விட்டது.
    கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள்.
    கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள்.

    மூகன்னும் அசுரனை அழிக்க இவள் 6 கடவுள்களின் சக்தியை பெற்றாள்.
    பிரம்மதேவர் தம் சக்தியை பிராம்ஹி தேவியாகவும்-
    மகாவிஷ்ணு தம் சக்தியை வைஷ்ணவி தேவியாகவும்-
    பரமேஸ்வரர் தம் சக்தியை சாம்பவி தேவியாகவும்-
    இந்திரன் தம் சக்தியை இந்திராசி தேவியாகவும்-
    கந்தன் தம் சக்தியை குமாரி தேவியாகவும்-

    பூவராகர் தம் சக்தியை வராஹி தேவியாகவும் மாற்றி அம்பிகைக்கு அளித்தனர். அவர்களுடன் வீரபத்திரமும், கனகநாதரும் இணைந்து கொண்டனர்.
    மூகாசுர வதத்திற்கு பிறகு கோல மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கத்தில் மூகாம்பிகை அந்தர்த்தனமானாள்.

    எனவே மூகாம்பிகை வழிபாடு எல்லா தெய்வங்களையும் ஒன்றிணைத்த ஒரு சமரச வழிபாடாகும். இதற்கு முன் மஹிஷாசுரனை கொல்ல மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவமாக தோன்றிய அதே தேவி மூகாசுரனின் வதத்திற்கு ஆறு சக்திகள் ஒன்றிணைந்த தேவியாக தோன்றினாள்.

    அவள் மறைந்த சுயம்பு லிங்கம் இன்று வரை சக்தி பாகம் - சிவபாகம் என்று பிரிக்கப்பட்டு சக்தி பாகத்தில் மகாகாளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி இருப்பதாகவும் சிவ பாகத்தில் பிரம்மா, மகாவிஷ்ணு, மகேஸ்வரர் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.எனவே, கொல்லூர் மூகாம்பிகையை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன்கள் கிடைக்கும்.

    ஆகவே, கொல்லூரில் மூகாம்பிகை பூஜைக்கு முன்னர் அதே தலத்தில் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அசுரனை சம்ஹரிக்கும் பொருட்டு மகாஷாசுரமர்த்தினியாகத் தோற்றம் அளித்த அன்னை துர்க்கா தேவியை வணங்குதல் வேண்டும். அதன்பிறகு பிராம்ஹி, வைஷ்ணவி, இந்தராசி, வராஹி, சாம்பவி, குமாரி ஆகியவர்களை வழிபட்டு, சிவ புத்ரியான புத்ரா தேவியைத் தியானித்து, வீர பத்திரரையும், கனக நாதரையும் நினைவு கூரல் வேண்டும்.
    அன்னையின் ஸ்ரீசக்ரவழிபாடு அம்பிகை யின் பூஜையில் கவனித்து பூஜிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
    காலம் காலமாய் சோட்டாணிக் கரையில் பகவதி வெண்பட்டு உடுத்தி அதிகாலையில் சாந்த சொரூபிணி - சரஸ்வதி தேவியாகக் காட்சி தருகிறாள்.
    கேரளாவில் சோட்டாணிக்கரையில் உள்ள பகவதி அம்மன் ரௌத்திர தேவதை அல்ல, காளியும் அல்ல. சாந்த சொரூபிணி என்று கருதப்படுகிறாள். ஆதிசங்கரர் காலத்திலேயே நடந்த அற்புத நிகழ்ச்சி ஒன்றை இதற்கான காரணமாக சொல்கிறார்கள்.

    அது என்ன கதை? பாரததேசம் முழுவதும் பாதயாத்திரை சென்ற ஆதி சங்கரர் கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் உள்ள சாமுண் டீஸ்வரி ஆலயத்திற்குப் போனார். அம்பாளின் அந்த ரூபத்தில் மனம் ஒன்றினார்.

    ‘தாயே உன் சக்தி எங்கும் உள்ளது. எனினும் இந்த ரூபத்தில் நீ கேரளா பூமிக்கு வர வேண்டும்” என்று வேண்டினார். ஆதிசங்கரரின் பிரார்த் தனைக்கு மனமிரங்கிய சாமுண்டீஸ்வரி அவரது அழைப்பை ஏற்றாள். ‘மகனே ... நீ முன்னால் நட... நான் உன்னைத் தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீ எக்காரணம் கொண்டும் பின்புறம் திரும்பிப்பார்க்ககூடாது. தவறினால் நீ திரும்பிப்பார்த்த இடத்திலேயே நான் நின்று விடுவேன். அதுவே என் குடியிருப்பு” என்றாள். சங்கரர் மனம் மகிழ்ந்து அம்பிகையின் நிபந்தனையை ஏற்று நடந்தார். ஈஸ்வரி தொடர்ந்தாள்.

    அம்பாள் நடக்கையில் அவளுடைய கை வளையல்கள் குலுங்கின. கால்களில் அணிந்திருந்த சலங்கையின் ஒலி&மெட்டியில் இருந்த முத்துக்களின் ஒலிகள் எழுந்தன. அமைதியான காட்டு வழியில் அந்த ஒலிகள் இனிமையாக ஒலித்தன. அந்த ஒலிகள் சமஸ்கிருத சொற்களை நினைவுபடுத்தின. ஒலிகள் தானே சொற்களின் மொழியின் தாய்.

    ஓரிடத்தில் ஒலிகள் நின்றுவிட்டன. நிசப்தம்& அமைதி. ஆதி பராசக்தியின் ஆபரண ஒலிகள் கேட்க வில்லையே? அச்சத்துடன் ஆதிசங்கரர் மெல்ல திரும்பிப் பார்த்தார். “மகனே! நிபந்தனையை மீறி விட்டாய் இனி நான் இங்கேயே இருக்கிறேன். இதுவும் பரசுராமனின் பூமியே!” என்று அம்பாள் அங்கேயே நின்று விட்டாள். அந்த இடம் எது தெரியுமா? கோலமகரிஷி தவம் செய்த கொல்லூர்.

    அங்கே அம்பாள் மூகாம்பிகையாக எழுந்தருளினாள்.ஆதி சங்கரரும் சில காலம் கொல்லூரில் மூகாம்பிகை கோயில் வளரும் வரை தங்கியிருந்தார். அப்போது அம்பாள் ஆதி சங்கரருக்கு ஒரு வாக்களித்தார். “சங்கரா.. நான் மேலும் உன்னைத் தொடர வில்லை. என்று வருந்தாதே நான் தினமும் உஷத் காலத்தில் சோட்டாணிக் கரையில் வித்யா ரூபிணியாக காட்சி தருகிறேன்” என்றார்.

    அவ்விதமே காலம் காலமாய் சோட்டாணிக் கரையில் பகவதி வெண்பட்டு உடுத்தி அதிகாலையில் சாந்த சொரூபிணி-சரஸ்வதி தேவியாகக் காட்சி தருகிறாள். இந்த நம்பிகையுடன் பூஜிக்கிறார்கள். ஆண்டு தோறும் சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு அட்சரப்பி யாசம்(எழுத்து தொடக்கம்) விழா போல் நடக்கும்.

    மூகாம்பிகை கோயிலில் தினசரி இரவு 9 மணிக்கு கஷாயதீர்த்தம் வினியோகித்த பிறகு நடைஅடைத்து விடுவார்கள். மறுநாள் அதிகாலை கோயில் 5 மணிக்குத் திறந்தாலும் பூஜை 5&30க்கு தான் ஆரம்பம். ஆனால் சோட்டாணிக்கரையில் அதிகாலை 3 மணிக்கு கோயில் திறந்து 4 மணிக்கு நடை திறந்து விடுவார்கள். அப்போது மூகாம்பிகை சோட்டாணிக்கரையில் சரஸ்வதி யாக எழுந்தருள்வதாக நம்பிக்கை.அதற்கேற்ப சோட்டாணிக்கரையில் பூஜைகள் நடைபெறுகிறது. 
    மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    1. மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.

    2. கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்ஜலி செய்கிறார்கள்.

    3. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.

    4. கலைஞர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் கலைப்பயணத்தில் முழுமையான வெற்றி அடைய தங்கள் கலைப்பணியை அன்னை மூகாம்பிகைக்கு அர்ப்பணித்து தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாகும்.

    5. அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.

    6. அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.

    7. மூகாம்பிகை அம்மனின் விக்கிரகத்திற்கு பக்தர்கள் புடவை சார்த்துதல் உண்டு. ஆனால், இந்த புடவை சாத்தும் போது தூய பட்டினாலான புடவையை மட்டுமே அம்பாளுக்கு கட்டுவார்கள். ஏனைய புடவையை அம்பாளின் மீது போர்த்தி விடுவார்கள்.

    8. அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையையும் அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.

    9. அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. மேலும் தங்க ரேகையை அனைவரும் எல்லா நேரங்களிலும் பார்க்காதபடி தங்க கவசம் கொண்டும் மூடப்பட்டுள்ளது.

    10. மகாபூஜை செய்பவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்க ரேகைக்குரிய பூஜைகள் செய்பவர்களுக்கு உச்சி நேரத்தில் லிங்கத்தின் தங்கக்கோட்டை சூரிய ஒளியை கண்ணாடி மூலம் கர்ப்பக்கிரகத்தில் பிரதிபலித்து தங்க ரேகையை காட்டுவது வழக்கமாகும்.

    11. கொல்லூர் கோவில் பூசாரிகளை புரோகிதர்கள் என்றே அழைக்கின்றனர். கோவிலின் அனைத்து தேவைகளும், சேவைகளும் இவர்களாலேயே நடைபெறுகிறது.

    12. இந்த ஆலயத்தின் பூஜை முறைகள் சிருங்கேரி மடத்தை அனுசரித்துள்ளது.

    13. சுயம்புலிங்கத்தின் ரேகையின் விசேஷம் என்னவென்றால் இது நெற்றிக்கு இடுகின்ற கீற்று சந்தனம் போன்று இருப்பதும் லிங்கத்தின் உச்சியை வலப்புறம் பெரிதாகவும் இடப்புறம் சிறிதாகவும் பிரிக்கின்ற அழகே ஆகும்.

    14. சிறிய உட்பிரகாரத்தைக் கொண்ட ஆலயமான தேவியின் திருச்சன்னத்தியில் அடுத்து வருகின்ற பக்தர்களும் தரிசிக்க ‘வேகமாக போங்கள்’என்று சொல்லும் போது சில பக்தர்களுக்கு தாங்கள் தொலைத்தூரத்தில் இருந்து வந்து மிக சொற்பமான நேரம் அம்மனை தரிசிக்கின்றோமே என்ற மனவருத்தம் அடைகின்றனர்.

    15. அம்மனைத்தரிசிக்க வரு பவர்கள் இயன்ற வரை ஒரு நாளாவது முழுதாக தங்கி ஆலயத்திலேயே அதிக நேரம் இருந்து வரிசையில் பலமுறை நின்று நித்திய பூஜைகள் அனைத்தையும் கண்குளிரக் கண்டு மூகாம்பிகையின் அருளைப் பெறுதல் வேண்டும்.

    16. பக்தர்கள் தங்கள் கோத்திரம், குடும்பத்தில் உள்ள அனைவருடைய நட்சத்திரம், பெயர்கள் ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து கொள்வது மற்ற ஆலயங்களில் இல்லாத ஒன்றாகும்.

    17. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன.

    18. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது.

    19. மூகாம்பிகையை பூஜிக்க பிரம்மச்சாரிகள் அனுமதிக் கப்படுவதில்லை

    20. அக்னி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.

    21. இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான்.

    22. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள்.

    23. மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியை பாடுகிறார்கள்.

    24. மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள்.

    25. அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. திப்பு சுல்தான் இங்கு வந்தபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களாரத்தி இத்தலத்தில் பிரசித்தம்.

    26. மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது.

    27. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள 1008 தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும்.

    28. மூகாம்பிகை தேவியின் மந்திரத்தில் வாக்பவ பீஜமான ‘ஜம்’. நான்கு முறை இடம் பெற்றுள்ளது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்கு தரும் என்பதை குறிக்கிறது.

    29. மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம்.

    30. பூர்வ புண்ணியம் மேலோங் கப் பெற்றவர்கள் மற்றும் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கிய வர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பிகையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.



    31. மூகாம்பிகை கருவறைக்குள் நுழையும் ஆண்கள் மேல் சட்டை அணிந்திருக்கக்கூடாது என்ற கேரள வழக்கம் இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    32. அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம், அன்று ஆதி சங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்றும் கூட சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

    33. அன்னைக்குப் போரில் உதவிபுரியப் படைக்கப்பட்ட வீரபத்திரர், இந்த சேத்திரத்திற்கு ரட்சாதிகாரியாக வழிபடப்படுகிறார்.

    34. மூகாம்பிகா ஆலயத்தில் தினசரி மதியம் மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் அன்னதானம் உண்டு.

    35. சத்ருவை அழித்த அன்னையின் சக்தி இங்கு மிகுந்திருப்பதால், சத்ருக்களால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு ஏராளமானவர்கள் சண்டிஹோமம் செய்கிறார்கள்.

    36. மூகாம்பிகை ஆலயத்தில் 2 விதமான பூஜைகள் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று பலிபீட பூஜை. மற்றொன்று விஜய் யக்ஞ சாஸ்திர பூஜையாகும்.

    37. திருப்பதி, திருவண்ணாமலை தலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ள விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கொல்லூர் மூகாம்பிகைக்கும் நிறைய சேவை செய்துள்ளார். மூகாம்பிகைக்கு தங்கத்தால் முகக்கவசம் செய்து கொடுத்தது அவர்தான்.

    38. கொல்லூரில் புனித தீர்த்தமாக உள்ள சவுபர்ணிகா நதியில் 62 வகை மூலிகைகள் கலந்து வருவதாக சொல்கிறார்கள். எனவே அந்த நதியில் நீராடினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப்பெறும்.

    39. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பக்தர்கள் 64 விதமான, வித்தியாசமான பூஜைகள், சேவைகளில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

    40. தினமும் இத்தலத்தில் சண்டிஹோமம் நடத்தப் படுகிறது. கட்டணம் ரூ.8 ஆயிரம்.

    41. கர்நாடகா மாநிலத்தில் உள்ள 7 முக்தி தலங்களில் கொல்லூர் மூகாம் பிகை ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.

    42) மூகாம்பிகை ஆலயத்துக்கு, “அறிவுக்கோவில்” என்ற பெயரும் உண்டு.

    43. ஆண்கள் கால்சட்டை, பெர்முடாஸ், தொப்பி, லுங்கி போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்லூர் ஆலயத்துக்கு வரும் ஆண்களில் 90 சதவீதம் பேர் வேட்டி அணிந்தே வருகிறார்கள்.

    44. கர்ப்பமான பெண்கள் 7 மாதம் கடந்த பிறகு ஆலயத்துக்குள் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    45. குழந்தை பெற்ற பெண்கள் 11 நாட்கள் கழித்தே ஆலயத்துக்கு வரவேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.

    46. சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் மூகாம்பிகை ஆலயம் திறந்து இருக்கும். லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    47. கர்நாடகா முன்னாள் முதல்&மந்திரி குண்டுராவ் கொடுத்த வெள்ளி வாளும் இங்கு உள்ளது.

    48. ஆடி, அஷ்டமி திதியில் வரும் ரோகிணி நட்சத்திரத்தன்று உற்சவத்திருமேனியை சுக்கில தீர்த்தத்திற்கு எடுத்துச் சென்று நீராடுவார்கள்.

    49. முதன் முறையாக திருக் கோவிலுக்கு வருபவர்கள் தாம் தங்கிய இல்லத்தின் அர்ச்சகருடன் சவுபர்னிகா ஆற்றுக்குச் சென்று அவர் கூறும் மந்திரங்களை கூறி ஆற்றில் நீராட வேண்டும். இதற்கு “சங்கல்பஸ்நானம்” என்று பெயர்.

    50. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட பெரிய பாம்பு உருவம் சுவரில் பதிக்கப்பட்டு இருப்பதை காணலாம். அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கிறார்கள். இந்த வழிபாடு ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.

    51. கொல்லூரில் கடைகள் மிகமிக குறைவாகவே உள்ளன. இதனால் எல்லாக் கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது. மதிய நேரங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பரிசு பொருட்களை அந்த நேரத்தில் சென்று வாங்கலாம்.

    52. கொல்லூர் ஆலயத்துக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலை நேரத்தில் வருவதால் காலை நேர வழிபாட்டுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகும். ஆனால் மதியம் 3 மணிக்கு நடை திறந்த பிறகு பக்தர்கள் வருகை மிகமிக குறைவாகவே இருக்கும். அப்போது 10 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்துவிடலாம்.

    53. கொல்லூரில் தினமும் பக்தர்கள் எடைக்கு எடை பல்வேறு பொருட்களை தூலாபாரம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் வாழைத்தார்கள் தான் தூலாபாரம் கொடுக்கப்படுகிறது.

    54. கொல்லூரில் பக்தர்கள் அம்மனை வழிபட 3 வித வரிசைகள் உள்ளன. 1. இலவச தரிசன வரிசை, 2. ரூ. 100 கட்டண வரிசை, 3. ரூ. 500 கட்டண வரிசை. ரூ. 500 கட்டண வரிசையில் ஒரு டிக்கெட்டுக்கு 2 பேர் செல்லலாம். இரண்டே நிமிடத்தில் அம்மனை பார்த்துவிடலாம்.

    55. பிரதான நுழைவு வாயிலில் இரண்டு பெரிய மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. மூகாம்பிகைக்கு பூஜைகள் நடக்கும் போது அந்த மணியை ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த சத்தம் பிரமாண்டமாக இருக்கிறது.

    56. கொல்லூர் தலத்தில் பக்தர்களுக்கு மதியமும், இரவும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

    57. கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் சார்பில் 9 கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு ஏழைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

    58. உறவினர்கள் யாராவது மரணம் அடைந்து இருந்தால் பக்தர்கள் 11 நாட்களுக்கு இந்த ஆலயத்துக்குள் நுழையக்கூடாது.

    59. போட்டோ எடுக்க ஆலயத்துக்குள் தடை விதித்துள்ளனர். ஆனால் செல்போனில் பலரும் படம் மற்றும் செல்பி எடுத்தபடி தான் உள்ளனர்.

    60. கொல்லூர் ஆலயம் சார்பில் மிகப்பெரிய கோசாலை உள்ளது. அங்கு சுமார் 150 பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

    அம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.
    அம்பிகை பிரதானமாக அமர்ந்து அருள்பாலிக்கும் எத்தனையோ அம்மன் சக்தித் தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அருள் அலை வீசுவதாக இருந்திருக்கும்.

    சில தலங்களில் துர்க்கை அம்மனின் ஆக்ரோஷத்தை காண முடியும். சில தலங்களில் லட்சுமியின் கருணை இருப்பதை உணரலாம். சில ஆலயங்களில் சரஸ்வதியின் அருளை பெற முடியும்.

    இந்த மூன்று சக்திகளும் ஒருங்கிணைந்து தரும் அருளை ஒரே இடத்தில் பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கல்வியா, செல்வமா, வீரமா... அனைத்தும் ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கிறது என்றால்... அதற்கு எவ்வளவு அதிர்ஷ்டமும், பாக்கியமும் செய்திருக்க வேண்டும்.

    இந்த சிறப்புக்குரிய இடம் - கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். இந்த ஆலயம் கர்நாடகா மாநிலத்தில் மேற்கு கடலோர மாவட்டங்களில் ஒன்றான உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அவளை நம்பி நீங்கள் கொல்லூர் சென்று வந்தால் நிச்சயமாக அவள் உங்களை மாமன்னராக வாழ வைப்பாள். அதற்கேற்ப உங்களுக்கு வெற்றி மீது வெற்றிகள் வரும்.

    இத்தகைய சிறப்புமிக்க இந்த தலம் கொல்லூர் குடசாத்திரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது. இதன் அருகே சவுபர்ணிகை என்ற நதி ஓடுகிறது. சென்னை மற்றும் வட நாட்டிலிருந்து இத்தலம் செல்ல விரும்புபவர்கள் ரயில் மூலம் மங்களூரை அடைய வேண்டும். அங்கிருந்து கொல்லூருக்குச் செல்ல பஸ் வசதி மற்றும் கார் உண்டு. நான்கு மணிநேரப் பயணம். இத்தலம் மங்களூரிலிருந்து சுமார் 100 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

    மங்களூர்&குந்தாபூர் வழியாகவும் எளிதில் கொல்லூரை சென்று அடையலாம். இத்தலத்தில் குடி கொண்டிருப்பவள் அன்னை ஸ்ரீமூகாம்பிகை ஆவாள். இக்கோவில் மிகவும் புராதனமான கோவிலாகும். பெருமையும், புகழும் மிக்கது. நம் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் அன்னையைக் காண தினமும் வந்து கொண்டே இருக்கிறார்கள். இது மேற்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஏழு புண்ணியத் தலங்களில் ஒன்றாகும்.

    கோலமகரிஷி என்பவர் இங்கு பல ஆண்டுகளாக தவம் இயற்றி வந்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி அவரிடம் கூறியதாவது, ''முனிவரே உன் தவத்தால் நாம் பெரிதும் மகிழ்ந்தோம். தானாகத் தோன்றிய ஜோதி லிங்கத்தை நீ வழிபடுவாயாக. உனக்கு ஆதிபராசக்தி அந்த இடத்தில் காட்சி தந்தருள்வாள்'' என்றார்.

    அந்த மகரிஷி தவ வலிமையால் அந்தப் பகுதி புனிதம் அடைந்தது. அந்த மகானின் பெயரால் அத்தலம் கோலாபுரம் என்றழைக்கப்பட்டு வந்தது. பிறகு அது கொல்லூர் என மருவிற்று. இந்தக் கொல்லூர் ஓங்கி வளர்ந்த மலைச் சிகரங்களாலும், பச்சை பசேல் ஆன மரம், செடி, கொடிகளாலும் சூழப்பட்டது. மிகவும் வனப்புமிக்க பிரதேசமாகும். ஸ்ரீசக்கர வடிவத்தில் இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

    இத்தலத்தின் அமைதியும், அழகும் நிறைந்த சூழ்நிலையானது அங்கு அன்னையை நாடி வரும் பக்தர்களுக்கு மன சாந்தியையும், பக்தி நெறியையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. திருப்பிச்செல்ல மனமே வராது.

    இக்கோவிலின் பக்கத்தில் விருந்தினர் தங்கும் விடுதி, பணித்துறையினர் தங்கும் வசதி, அர்ச்சகர்களின் இல்லங்கள், ராம கிருஷ்ண யோகாசிரமம், ஸ்ரீசங்கர மடம் முதலியவை இருக்கின்றன. தற்போது சுமார் 1500 குடும்பங்கள் கொல்லூரில் வசித்து வருகின்றனர்.

    இக்கோவிலின் மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் சவுபர்ணிகை ஆறு ஓடுகிறது. அதன் கரையில் மகிழ மரங்கள் மலரை சொரிந்து நறுமணம் பரப்பிக் கொண்டு இருக்கின்றன. அங்கே ஒரு விநாயகர் கோவில் உள்ளது. சவுபர்ணிகையில் நீராடி, விநாயகரை வணங்கிய பின்தான் அன்னையை தரிசிக்க செல்ல வேண்டும்.
    யார் ஒருவர் மனதார கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் குங்கும அர்ச்சனை செய்கிறாரோ, அவர்களது குடும்பத்து குறைகள் எல்லாம் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும்.
    கொல்லூர் மூகாம்பிகை அருளைப் பெற 64 விதமான வழிபாடுகள், சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சில வழிபாடுகளை பக்தர்கள் மிகவும் விரும்பி ஆத்மார்த்த உணர்வுடன் செய்வதுண்டு.

    அந்த வகையில் மூன்று வழிபாடுகள் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் திகழ்கிறது. அவை 1. சண்டி ஹோமம். 2. தீபம் ஏற்றுதல், 3. குங்கும அர்ச்சனை.

    இந்த மூன்றில் சண்டி ஹோமத்துக்கு ரூ. 8 ஆயிரமும், தீப கம்பத்தில் விளக்கு ஏற்ற ரூ.3 ஆயிரமும் செலவிட வேண்டும். ஆனால் முப்பதே ரூபாயில் குங்கும அர்ச்சனையை நடத்தி விடலாம்.

    சிறிய தொகை வசூலிக்கப்படுவதால் குங்கும அர்ச்சனையை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உங்கள் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரும் அற்புத ஆற்றல் இந்த குங்கும அர்ச்சனைக்கு உண்டு. யார் ஒருவர் மனதார கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் குங்கும அர்ச்சனை செய்கிறாரோ, அவர்களது குடும்பத்து குறைகள் எல்லாம் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும்.

    மகத்துவம் நிறைந்த இந்த குங்கும அர்ச்சனையை செய்வது எப்படி தெரியுமா?

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்குள் நுழைந்ததும் வடக்குப் பகுதியில் உள்ள நுழைவுச் சீட்டு கவுண்டர்களுக்கு சென்றால் பல்வேறு விதமான சேவைகளுக்கு அனுமதி சீட்டு தருவார்கள். அங்கு கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் செல்ல வேண்டும்.

    கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னை மூகாம் பிகையை கண் குளிர பார்த்து விட்டு இடது புறமாக உள்பிரகாரத்துக்கு வருவீர்கள். அந்த உள்பிரகாரத்தில் பக்தர்கள் அமரும் வகையில் மண்டபம் உள்ளது.



    அந்த மண்டபத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஆலய புரோகிதர் ஒருவர் குங்கும அர்ச்சனை செய்ய தயாராக இருப்பார். அவரிடம் அனுமதி சீட்டை காட்டினால் அவர் அருகில் அமர சொல்வார்.

    அவர் அருகில் அமர்ந்து “சங்கல்பம்” செய்து கொள்ள வேண்டும். முன்னதாக அந்த புரோகிதரிடம் உங்களது கோத்திரம், குலம், குடும்ப உறுப்பினர்களின் நட்சத்திர விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு நீங்கள் சிவ கோத்திரத்தை சேர்ந்தவர் என்றால் சிவ கோத்திரம் என்று சொல்லி, பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், ஜென்ம நட்சத்திரத்தை சொல்ல வேண்டும். அதை அந்த புரோகிதர் திருப்பிச் சொல்லி அம்மனுக்கு குங்கும அர்ச்சனையை நடத்துவார். சில புரோகிதர்கள், சில குறிப்பிட்ட மந்திரங்களை நம்மையும் சொல்ல சொல்வார்கள். இது நாமே அன்னை மூகாம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வதாக அர்த்தம்.

    குங்கும அர்ச்சனை பூஜை முடிந்ததும் புரோகிதர் நம் மீது அட்சதையைத் தூவி வாழ்த்துத் தெரிவிப்பார். அவருக்கு நாம் உரிய தட்சணை தொகை வழங்க வேண்டும்.

    பிறகு நாம் அந்த உள் பிரகாரத்தில் இருந்து வெளியில் வர வேண்டும். நீங்கள் குங்கும அர்ச்சனைக்காக எந்த இடத்தில் அனுமதி சீட்டு வாங்கினீர்களோ.... அதன் அருகிலேயே மற்றொரு கவுண்டரில் அனுமதி சீட்டை கொடுத்தால் குங்கும பிரசாதம் கொடுப்பார்கள்.

    அந்த குங்குமம் தினமும் அன்னை மூகாம்பிகையின் காலடியில் அர்ச்சனை செய்யப்படும் குங்குமமாகும். அந்த குங்குமத்தைத்தான் நமக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். எனவே அன்னை மூகாம்பிகையை மனதில் நினைத்தப்படி அந்த குங்குமத்தை வாங்குங்கள்.

    சில பக்தர்களுக்கு நிறைய குங்குமம் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் தோன்றும். அதற்கு எளிய வழி ஒன்று உள்ளது. கூடுதலாக 4, 5 அனுமதி சீட்டுகளை வாங்கி இருந்தால் அதிக அளவு குங்குமத்துடன் வீடு திரும்ப முடியும்.

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்கு செல்லும் போது, நீங்கள் எந்த வழிபாடு செய்கிறீர்களோ, இல்லையோ, மறக்காமல் குங்கும அர்ச்சனை செய்து விடுங்கள். அது நிச்சயமாக உங்கள் குறைகளை விரட்டி விடும்.
    ஆதிசங்கரர் தான் தியானத்தில் கண்டு களித்த தாய் மூகாம்பிகையின் திருக்காட்சியை மற்றவர்களிடம் கூறினார். அம்பிகையின் தோற்றத்தை அப்படியே சிலையாக வடிக்க முடிவு செய்தார்.
    ஆதிசங்கரர் தான் தியானத்தில் கண்டு களித்த தாய் மூகாம்பிகையின் திருக்காட்சியை மற்றவர்களிடம் கூறினார். அம்பிகையின் தோற்றத்தை அப்படியே சிலையாக வடிக்க முடிவு செய்தார். சிலை வடித்து எடுக்கும் பரம்பரையில் மிகத் தேர்ச்சிப் பெற்ற ஸ்தபதி ஒருவரை அழைத்து திருவுருவச்சிலையை செய்ய ஏற்பாடு செய்தார்.

    அதன்படி மூகாம்பிகை சிலை பஞ்சலோகத்தில் வடிக்கப் பெற்றது. திருவுருவச்சிலை மத்தியில் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும் மற்றும் இதன் இருபுறமும் நின்ற நிலையில் இரு அம்மன் திருவுருவத்தையும் (லட்சுமி மற்றும் சரஸ்வதி) தன்னுடைய தியானத்தில் கண்டபடி தத்ரூபமாக வடிக்கப்பட்டு இருப்பதைக் கண்ட ஆதிசங்கரர் மெய் சிலிர்த்து பக்திப் பரவசமானார். இதுவும் தாய் மூகாம்பிகையின் அதி அற்புத லீலை என்று மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
    லிங்கப்பெருமை

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்ள கருவறை லிங்கம் சுயம்புலிங்கமாகும். இச்சுயம்பு லிங்கம் தரைக்கு மேலே சற்று நீட்டிக்கொண்டு சம அளவில் கோள அமைப்பில் சக்தி நிறையப்பெற்றதாக புனிதத் தன்மையுடன் சிறந்து விளங்குகிறது.

    இச்சுயம்பு லிங்கத்தின் உச்சி மத்தியில் ஒரு தங்க ரேகையால் இரு சமமற்ற பாகங்களாக, வலது பாகம் சிறியதாகவும். இடது பாகம் பெரியதாகவும் உள்ளவாறு பிரிக்கப்பட்டுள்ளது. வலது பாகம் ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைப் புரிகின்ற மும்மூர்த்திகளான சிவ, விஷ்ணு, பிரம்மா இவர்களைக் குறிப்பதாகும். அதேபோல இடதுபாகம் ஆதி சக்தியின் மூன்று வித ரூபங்களாக திகழும் மஹாகாளி, மஹாசரஸ்வதி, மஹாலட்சுமி ஆகிய இவர்களைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

    பொதுவாக வேதங்களில் இடதுபாகம் பெண்களின் இடத்தைக் குறிப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இச்சுயம்பு லிங்கத்தின் இடப்பகுதி பெரியதாக இருப்பதால் கருணையே வடிவான ஸ்ரீ மூகாம்பிகை இத்தலத்தில் கொலுவிருந்து பேரருள் புரிவதாக எல்லோராலும் போற்றி வணங்கப்படுகிறாள்.

    முப்பெரும் தேவர்களும் முப்பெரும் தேவியரும் நிறைந்த புனிதமிக்க ''சிவசக்தி'' சொரூபமாக இச்சுயம்புலிங்கம் திகழ்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சுயம்புலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும் போது கருவறை சோமுகம் வழியாக வெளியேறும் புனித நீரை பிடித்து குடிக்கவும், தலையில் தெளித்துக் கொள்ளவும் பக்தர்கள் போட்டி போடுவதை எப்போதும் பார்க்க முடிகிறது.

    கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகைத்தலம் 51 சக்தி பீடங்களில் இடம் பெறவில்லையாயினும் இந்தப்பீடமே முதன் முதல் ஆதிசங்கரரால் புனிதப்படுத்தப்பட்டு நிறுவப்பட்ட பீடம். எனவே இதனை அர்த்தநாரி பீடம் என அழைக்கிறார்கள்.

    உலகிலேயே தொன்மையான மலை மேற்குத் தொடர்ச்சி மலை. அதன் உட்பிரிவுதான் குடசாத்ரி என்ற புனிதமான மலை. ரிஷிகளும் சித்தர்களும் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கும் புண்ணியத் தலம் இது.

    இங்கு உற்பத்தியாகும் நதியே சௌபர்ணிகா நதி. இதன் கரையில் கருடபகவான் தவம் செய்து தனது குலத்தில் நிலவியிருந்த பலவிதமான சாபங்களையும் தோஷங்களையும் நீக்கிக்கொண்டான். கருடனின் பெயர் சுபர்ணன் என்பதினால், இந்த ஆறு சுபர்ணிகா என்று பெயர்பெற்றது. ஒரு குடும்பத்தில் தீராத பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வந்தால் இந்த சுபர்ணிகா நதிதீர்த்தத்தில் நீராடி தூய மனதுடன் மூகாம்பிகையை வழிபாடு செய்தால் பேரானந்தம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.
    கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள். அவளுக்கு உகந்த மூல மந்திரத்தை பார்க்கலாம்.
    ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் கௌரி
    பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா!

    மூலமந்திரத்தில் ‘ஐம்’ என்ற சொல் 4 முறை வருவதை அர்த்தகாம மோட்சம் எனவும் அறம்பொருள் இன்பம் வீடு - எல்லாப்பேறுகளையும் தருபவள் எனப்பெரியோர் கூறு கின்றனர்.

    ‘ஐம்’ ஆனது பால மந்திரம் சப்தசதீ மந்திரம் ‘மகாஷோடசமந்திரம்’ ஆகிய மந்திரங்களின் பெருமைபெற்றது. இதை ஜபித்தால் மூகாம்பிகையின் அருளால் பெறுதற்கரிய பேறு பெற்று வாழ்வில் சுகமான வாழ்வு பெறலாம்.
    அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.
    கொல்லூர் ஆலயத்தில் ஆதிசங்கரர் தங்கி இருந்த நாட்களில் தினசரி சுயம்புலிங்க சன்னதிக்கு நேர் பின்புறம் ஒரு மேடையில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்.

    ஒருநாள் தியானத்தின் போது அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் மேலிரு கரங்களில் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் கீழிரு கரத்தில் அபயவரத முத்திரையுடன் அமைதி தவழும் முகத்துடன் சாந்த சொரூபணியாக திருக்காட்சி அளித்து தானே இவ்வளவு காலமும் தங்க ரேகை உள்ள சுயம்பு லிங்கத்தில் அரூப ரூபமாய் இருந்த தாய் மூகாம்பிகை என தன்னை காண்பித்தாள்.

    ஆதிசங்கரர் மிகவும் மனம் நெகிழ்ந்து தாயை வணங்கி துதித்துள்ளார். அதன்பிறகே ஆதிசங்கரர் அங்கு அமர்ந்து அன்னையைப் புகழ்ந்து சவுந்தர்ய லகிரியை இயற்றினார்.

    ×