என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த நரசிம்மர் பாடலை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!
    எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
    ஏழ்படி கால் தொடங்கி,
    வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு
    வோணத் திரு விழாவில்
    அந்தியம் போதிலரியுரு வாகி
    அரியை யழித்தவனை,
    பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத்
    தாண்டென்று பாடுதுமே
    திருப்பல்லாண்டு 6.
    பூதமைத் தொடு வேள் வியைந்து
    புலன்களைந்து பொறிகளால்,
    ஏதமொன்று மிலாத வண்மையி
    னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,
    நாதனை நரசிங்கனை நவின்
    றேத்துவார் களுழக்கிய,
    பாத தூளி படுதலாலிவ்
    வுலகம் பாக்கியம் செய்ததே.
    பெரியாழ்வார் திருமொழி 4.4.6.
    பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்
    வாயிலோ ராயிர நாமம்.
    ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்
    கொன்று மோர் பொறுப்பிலனாகி,
    பிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்
    பிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,
    தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
    திருவல்லிக் கேணிக் கண்டேனே.
    பெரிய திருமொழி 2.3.8.

    துயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!
    நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான். இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.
    அவசர உலகில் பரபரப்பான வாழ்க்கையில் மனிதர்கள் கடவுளை நினைப்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது. சந்தோஷத்திலோ மகிழ்ச்சியிலோ கடவுளை நினைக்காமல், தனக்கு துயரம், சோகம், ஆபத்து வந்தால் மட்டும், தெய்வங்களிடம் முறையிடுவது மனிதர்களின் வழக்கம் தானே!

    துயரத்திலும் ஆபத்து வேளைகளிலும் மட்டுமே தன்னைக் காப்பது ஒரே சக்தி அது கடவுள் சக்தியே என்பதில் எந்த ஒரு மனிதனும் முரண்படுவதில்லை. ஆபத்து வேளையில் தான் கண்கண்ட தெய்வத்தை நம்புகிறான். கடவுளே காப்பாத்து! ஆண்டவா அபயம் கொடு! இறைவா நீயே கதி! என்று புலம்புகிறான்.

    இந்தக் கலிகாலத்தில் கஷ்டகாலம் வரும் போதாவது கடவுளை நினைக்கிறானே! அது போதாதா? சரி! ஆபத்துக் காலத்தில் நம்மைக் காக்கும் கடவுள் யார்? திருவோண விழாவின் நாயகனும், பிரகலாதனின் பக்திக்குள் கட்டுண்டவனும், இரணியனை வதம் செய்தவனுமாகிய ஸ்ரீ நரசிம்மரே மனிதர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுள் பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு. பரமகாருணிகனான சர்வேச்வரன் அவதரிக்கும் போதே, பக்தனுக்குத் தீங்கு விளைவிக்கத் தொடங்கிய கொடியவகை சம்கரித்து இந்த ஒரு அவதாரத்திலே தான்.

    ஆகையால் பக்தர்களின் இன்னல் இடையூறுகளைக் களைத்தெறிந்து காக்க வேண்டிய நிலையில் தனக்குள்ள பாரிப்பையும் பரபரப்பையும் உலகுக்கு நன்கு வெளிப்படுத்திய அவதாரம் நரசிங்க அவதாரம். எனவே ஆபத்தும் அவசரத் தேவையுமான வேளைகளில் இரணியனை வணங்கினால் அவன் நம்மைக் காப்பது நிச்சயம்!

    நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான். இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை இங்கிதமாய் போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.

    எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
    ஏழ்படி கால் தொடங்கி,
    வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு
    வோணத் திரு விழாவில்
    அந்தியம் போதிலரியுரு வாகி
    அரியை யழித்தவனை,
    பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத்
    தாண்டென்று பாடுதுமே
    திருப்பல்லாண்டு 6.

    பூதமைத் தொடு வேள் வியைந்து
    புலன்களைந்து பொறிகளால்,
    ஏதமொன்று மிலாத வண்மையி
    னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,
    நாதனை நரசிங்கனை நவின்
    றேத்துவார் களுழக்கிய,
    பாத தூளி படுதலாலிவ்
    வுலகம் பாக்கியம் செய்ததே.
    பெரியாழ்வார் திருமொழி 4.4.6.

    பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்
    வாயிலோ ராயிர நாமம்.
    ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்
    கொன்று மோர் பொறுப்பிலனாகி,
    பிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்
    பிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,
    தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
    திருவல்லிக் கேணிக் கண்டேனே.
    பெரிய திருமொழி 2.3.8.

    துயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள். அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேஸ்ச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!
    மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது. நரசிம்மருக்கு உகந்த 108 அஸ்டோத்திரத்தை பார்க்கலாம்.
    1. ஓம் நரசிம்காய நம
    2. ஓம் மகாசிம்காய நம
    3. ஓம்  திவ்யசிம்காய  நம
    4. ஓம் மகாபலாய நம
    5. ஓம் உக்ர சிம்காய  நம
    6. ஓம் மகாதேவாய  நம
    7. ஓம் சம்பாஜெய  நம
    8. ஓம் உக்ர லோகன்யாய  நம
    9. ஓம் ரதுராய  நம
    10. ஓம் சர்வ புதியாய  நம
    11. ஓம் ஸ்ரீமான்யாய  நம
    12. ஓம் யோக நந்தய  நம
    13. ஓம் திருவிக்ர மயா நம
    14. ஓம் ஹாரினி நம
    15. ஓம் ஹோலகலயா நம
    16. ஓம்  ஹாக்ரினி  நம
    17. ஓம் விஜயாய  நம
    18. ஓம் ஜெயவர்த நய  நம
    19. ஓம் பஞ்ச நாய  நம
    20. ஓம் பரமகய  நம
    21. ஓம் அகோரய  நம
    22. ஓம் கோர விக்ராய நம
    23. ஓம் ஜிவாலன்முகாய நம
    24. ஓம் ஜிவாலா மலின் நம
    25. ஓம் மகாஜிவாலாய  நம
    26. ஓம் மகா பிரபாஹய நம
    27. ஓம் நித்திய லக்சய  நம
    28. ஓம் சகஸ்சர கசாய  நம
    29. ஓம் துர்றிகாசாய  நம
    30. ஓம் பர்தவானாய  நம
    31. ஓம் மகா தமாஸ்திரேய  நம
    32. ஓம் யத பரஞ்ஜனய  நம
    33. ஓம் சண்ட கோபினே  நம
    34. ஓம் சதாசிவாய நம
    35. ஓம் இரணிய கசிபு தேவ மிசைன் நம
    36. ஓம் திவ்விய தானவ பஜனய  நம
    37. ஓம் கன பகராய  நம
    38. ஓம் மகா பத்ராய  நம
    39. ஓம் பல பத்ராய  நம
    40. ஓம் சூபத்ராய  நம
    41. ஓம் கராலிய  நம
    42. ஓம் விக்ராயை  நம
    43. ஓம் விகர்த்ரே  நம
    44. ஓம் சர்வ கத்துருகாய  நம
    45. ஓம் சிசுமராய  நம
    46. ஓம் திரிலோகதர்த மனே நம
    47. ஓம் ஜய்சிய  நம
    48. ஓம்  சரவேஸ்ராய  நம
    49. ஓம் விபாய  நம
    50. ஓம் பரகம் பனாய  நம
    51. ஓம் திவ்யாய  நம
    52. ஓம் அகம்பாய  நம
    53. ஓம் கவின்  நம
    54. ஓம் மகாதேவியே  நம
    55. ஓம் அகோஜெய  நம
    56. ஓம் அக்சேரயா நம
    57. ஓம் வனமலின் நம
    58. ஓம் வரப ரதேய  நம
    59. ஓம் விஸ்வம்பராய  நம
    60. ஓம் அதோத்யா  நம
    61. ஓம் பராப ராய  நம
    62. ஓம் ஸ்ரீவிஷ்ணவ நம
    63. ஓம் புருசோத்தமயா நம
    64. ஓம் அங்கோஸ்ரா  நம
    65. ஓம் பக்தாதிவத்சலாய நம
    66. ஓம் நாகஸ்ராய  நம
    67. ஓம் சூரிய ஜோதினி நம
    68. ஓம் சூரிஷ்வராய  நம
    69. ஓம் சகஸ்ர பகுய  நம
    70. ஓம் சர்வ நய  நம
    71. ஓம்  சர்வ சித்தி புத்தாய நம
    72. ஓம் வஜ்ர தம்ஸ்திரய  நம
    73. ஓம் வஜ்ர நகய  நம
    74. ஓம் மகாநந்தய நம
    75. ஓம் பரம்தபய  நம
    76. ஓம் சர்வ மந்திரிக நம
    77. ஓம் சர்வ யந்திரவித்ரமய  நம
    78. ஓம் சர்வதந்திர மகாய  நம
    79. ஓம் அக்தாய  நம
    80. ஓம் சர்வ தய  நம
    81. ஓம் பக்த வத்சல  நம
    82. ஓம் வைசாக சுக்ல புத்யாய நம
    83. ஓம் சர நகத  நம
    84. ஓம் உத்ர கீர்த்தினி நம
    85. ஓம் புண்ய மய நம
    86. ஓம் மகாத் மய  நம
    87. ஓம் கந்தர விக்ர மய  நம
    88. ஓம் வித்ரயாய  நம
    89. ஓம் பரபுஜ்யாய  நம
    90. ஓம் பகாவான்ய  நம
    91. ஓம் பரமேஸ்வராய  நம
    92. ஓம் ஸ்ரீவத்சம்ஹய  நம
    93. ஓம் ஜெத்யாமினி நம
    94. ஓம் ஜெகன் மயாய  நம
    95. ஓம் ஜெகத்பலய  நம
    96. ஓம் ஜெகனாதய  நம
    97. ஓம் தேவி ரூபா பார்வதியாய  நம
    98. ஓம் மகா ஹ காய  நம
    99. ஓம் பரமத் மய நம
    100. ஓம் பரம்ஜோதினி நம
    101. ஓம் நிர்கனய  நம
    102. ஓம் நர்கேஷ் ஸ்ரீனி நம
    103. ஓம் பரதத்வய  நம
    104. ஓம் பரம் தமய  நம
    105. ஓம் ஷா சித் ஆனந்த விக்ரகய நம
    106. ஓம் லட்சு-மி நரசிம் கய  நம
    107. ஓம் சர்வ மய  நம
    108. ஓம் த்ரய  நம
    நரசிம்மரை வழிபட்டால் மனதில் நினைத்த காரியங்கள் யாவும் விரைந்து நிறைவேறுகிறது. இந்த நரசிம்மர் பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எண்ணங்கள் ஈடேறும்.
    தேவர்கள் தேவே போற்றி! செஞ்சடை ஈசா போற்றி!
    பூவில்மா சொரூபா போற்றி! புகழ்மறைப் பொருளே போற்றி!
    மாவிரு மாவந் தேத்தும் மலர்கழல் உடையாய் போற்றி!
    சேவிழி மூன்றாய் போற்றி! திகம்பரப் பிரமா போற்றி!
    சரணம என்றடைந்த பேர்க்குச் சாந்தகம் ஆனாய் போற்றி!
    முரனுடை அரக்கர்க்கு எல்லாம் மூரக்கம தானாய் போற்றி!
    கரணங்கள் தொண்ணூற் றாறும் கலந்தினி திருந்தாய் போற்றி!
    நரணனே போற்றி நாரசிங்கனே சரணம் போற்றி!
    தெய்வ பூஜைகளின் போது, வாசமிக்க தூபங்கள் கொளுத்தி இறை வழிபாடு செய்யப்படுகிறது. அப்படி தூபங்கள் காட்டி வழிபடும் சமயம் மேற்கூறிய மந்திரத்தை ஜெபித்து, தெய்வ பூஜை செய்வதால் உறுதியான நன்மைகள் உண்டாகும்.
    பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப்
    பத்தர் ஆகி அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு
    ஆர்வத்தை உள்ளே வைத்து
    விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால்
    இடவல்லார்க்குக் கரும்பினில் கட்டி
    போல்வார் கடவூர் வீரட்டனாரே

    வீட்டில் இறைவனுக்கு பூஜைகள் செய்யும் நேரத்தில் கூற வேண்டிய மந்திரம் இது. குறிப்பாக இம்மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விழா நாட்களில் தெய்வங்களுக்கு பூஜை செய்கின்ற போது, மலர்கள் சாற்றி தீபம் ஏற்றிய பிறகு தூபம் காட்டும் போது இம்மந்திரம் துதித்து வழிபடுவதால், வீட்டில் துர்சக்திகள் நீங்கும். பூஜையின் பலன்கள் முழுமையாக கிடைக்கும். வாழ்வில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.
    திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும்.
    ஓம் பத்மத்வஜாய வித்மஹே
    ஹேம ரூபாய தீமஹி
    தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்


    பொருள் - “தாமரைப்பூ சின்னம் பொறித்த கொடியை உடையவராகவும், பொன்னிற ஒளியை வெளிப்படுத்துபவராகவும் இருக்கும் சந்திர பகவானை வணங்குகிறேன். அத்தகைய சந்திர பகவான் எனது அறிவாற்றலை சிறக்கச் செய்து, என் வாழ்வில் ஒளிவீச அருள்புரியுமாறு வேண்டுகிறேன்” என்பதே இந்த காயத்ரி மந்திரத்தின் சரியான பொருளாகும்

    சந்திர பகவானின் இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை துதிப்பது சிறந்தது. திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் சந்திர பகவானின் காயத்ரி மந்திரத்தை 108 முறைகளுக்கு மேலாக துதிப்பவர்களுக்கு மனோபலம் அதிகரிக்கும். கண்பார்வை குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கும். அழகு மற்றும் இளமைத் தோற்றம் உண்டாகும். செல்வமும் பெருகும். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடப்பவர்கள் இம்மந்திரத்தை 108 முதல் 1008 முறை வரை தினமும் ஒரு துதித்து சந்திரனால் ஏற்படும் பாதகமான பலன்கள் நீங்கும்.
    ஜெபிப்பவர்களுக்கு நிச்சயமான பலன் தரும் சக்தி வாய்ந்த சத்ரு ஜெய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.
    ஸுலபஸ் ஸுவ்ரதஸ் ஸித்தஸ் ஸத்ருஜிச்சத்ருதாபாந
    ந்யக்ரோதோ தும்பரோ ஸவத்தஸ் சாணுராந்த்ர நிஷூதன

    ஜெபிப்பவர்களுக்கு நிச்சயமான பலன் தரும் சக்தி வாய்ந்த சத்ரு ஜெய மந்திரம் இது. தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் கிழக்குத் திசையை பார்த்தவாறு இந்த மந்திரத்தை 27 முதல் 108 முறை வரை ஒரு ஜெபிப்பதால் உங்களுக்கு உருவாகியிருக்கும் எத்தகைய நேரடி மற்றும் மறைமுக எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.

    உங்களுக்கு எதிரான அவர்களின் சதிச் செயல்கள் எடுபடாமல் போகும். மேலும் நமது மனதிற்குள் எழும் பேராசை, அதிக கோபம், மிகுந்த காமம் போன்ற நமக்குள்ளாக இருக்கும் எதிரிகளையும் இந்த மந்திர ஒரு ஜபம் நீக்க, நமக்கு நன்மைகளை உண்டாக்கும்.
    இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை சொல்லி வந்தால் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் பதவிகள் கிட்டும்.
    ஒரு மனிதனுக்கு மிக சிறந்த யோகங்கள், செல்வ சிறப்புகளையும் அளிப்பவராக வியாழ பகவான் இருக்கிறார் அவருக்குரிய இம்மந்திரத்தை தினமும் துதிப்போர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

    குரு பகவான் ஸ்லோகம்

    தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம் தம் நமமி பிருகஸ்பதிம்

    பிரகஸ்பதியான குரு பகவானுக்குரிய ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் 9 முறை அல்லது 27 முறை துதிப்பது நல்லது. வியாழக்கிழமைகள் தோறும் கோவிலில் குரு பகவான் சன்னிதிக்குச் சென்று, குரு கிரக விக்ரகத்திற்கு 27 மஞ்சள் கொண்டைகடலைகள் சமர்ப்பித்து, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.

    திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். வேலை வாய்ப்புகள் மற்றும் அரசியல் வாழ்வில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிட்டும். குடும்பத்தில் வீண் விரயங்கள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். 
    சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது.
    நம்மை அனைத்து வித துன்பங்களிலிருந்தும் காப்பவர்களாக காவல் தெய்வங்கள் பலர் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் சிவபெருமான் கோவிலில் வீற்றிருக்கும் சண்டிகேஸ்வரர். அந்த சண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இதோ.

    சண்டிகேஸ்வரர் காயத்ரி மந்திரம்

    ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
    ஸிவ பக்தாய தீமஹி
    தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

    சிவனின் அன்புக்குரிய பக்தரான ஸ்ரீசண்டிகேஸ்வரருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்திரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை துதிப்பது நல்லது. பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் சிவன் கோயிலில் வழிபடும் போது சண்டிகேஸ்வரருக்கு நெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால் மன உறுதி உண்டாகும். வீட்டில் காணாமல் போன பொருட்கள் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.

    மேலும் வீட்டில் இருக்கும் பொருட்கள் திருடர்களால் களவாடப் படாமல் தடுக்கும். விசாரசருமன் என்கிற தீவிர சிவ பக்தன் முற்காலத்தில் வாழ்ந்து வந்தான். தனது சிவபக்திக்கு இடையூறு ஏற்படுத்திய தன் தந்தையையே தாக்கியதால், அவன் பக்திக்கு மனம் குளிர்ந்து அவன் முன்பு தோன்றிய சிவபெருமான் மற்றும் பார்வதி, சிவகணங்களை நிர்வகிக்கும் சண்டிகேச பதவியை தந்தருளினார். அத்தகைய அதிதீவிரமான சிவதொண்டனாக மாறிய சண்டிகேஸ்வரரை வணங்குவதால் நமக்கு நன்மைகள் ஏற்படும்.
    செவ்வாய் தோஷத்தை விரட்டுவதற்கு 8 வரிகள் கொண்ட எளிமையான மந்திரம் ஒன்று உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் 9 தடவை சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்தை மிக எளிமையாக விரட்டி விடலாம்.
    செவ்வாய் தோஷத்தை விரட்டுவதற்கு 8 வரிகள் கொண்ட எளிமையான மந்திரம் ஒன்று உள்ளது. இந்த மந்திரத்தை தினமும் 9 தடவை சொல்லி வந்தால் செவ்வாய் தோஷத்தை மிக எளிமையாக விரட்டி விடலாம்.

    செவ்வாய் தோஷம் மிக கடுமையாக இருப்பதாக நினைத்தால் இந்த மந்திரத்தை 28 தடவை சொன்னால் பலன்கள் கிடைக்கும். ஸ்ரீவேதாந்த தேசிகரால் இயற்றப்பட்ட அந்த சிறப்பான மந்திரம் வருமாறு:-

    ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம:
    க்ஷணம் பாணிஜை:
    அவ்யாத் த்ரீணி ஜகநீத்யகுண்ட மஹிமா
    வைகுண்ட கண்டீரவ:
    யத்ப்ராதுர்பவநா தவந்த்ய ஜடரா
    யாத்ருச்சிகாத் வேதஸாம்
    யா காசித் ஸஹஸா மஹாஸிர க்ருஹ
    ஸ்த்தூணா பிதாமஹ்யபூத்
     
    செல்வத் திருமகளான மகாலட்சுமியை வழிபட இந்த பிரார்த்தனை ஸ்லோகம் தரப்பட்டுள்ளது... இதனை படித்து பலன் பெறுங்கள்.
    செல்வத் திருமகளான மகாலட்சுமியை வழிபட இந்த பிரார்த்தனை தரப்பட்டுள்ளது...

    மகாலட்சுமி தாயே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! சங்கு, சக்கரம் தாங்கியவளே! பாற்கடல் வாசனின் மனத்தாமரையில் குடியிருப்பவளே! உன்னை வணங்குகிறேன். வேண்டும் வரங்களை அருள்பவளே! மூவுலகத்தையும் பரிபாலனம் செய்பவளே! பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே! அச்சம் தீர்ப்பவளே! நல்லோரைக் கரை சேர்ப்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! திருமகளே! உன்னைப் போற்றுகிறேன். அறிவின் இருப்பிடமே! அன்பர்களுக்கு வழிகாட்டு பவளே! செயல்களில் வெற்றியைத் தருபவளே! மந்திர வடிவமானவளே! பக்திக்கும், முக்திக்கும் வழிகாட்டுப வளே! என்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக் காத்தருள வேண்டும்.

    முதலும் முடிவும் அற்றவளே! மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே! ஆதிலட்சுமித் தாயே! அனைத்திற்கும் ஆதாரமே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே! ராஜயோகம் தந்தருள்பவளே! தாயே! அருள்புரிவாயாக.

    செந்தாமரைப்பூவில் விரும்பி உறைபவளே! பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே! ஜகன்மாதாவே! குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.

    மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே! யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே! மங்கல வடிவானவளே! பசுவின் அம்சமாக திகழ்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! செக்கச் சிவந்தவளே! தூய்மை நிறைந்தவளே! உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

    அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே! சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே!அலங்கார ரூபிணியே!உன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.

    பூங்கொடி போன்றவளே! எங்கும் நிறைந்தவளே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! அலைகடலில் உதித்த அருட் பாவையே! சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன் மாதாவே! அஷ்ட ஐஸ்வர்யங் களையும் தந்தருள் பவளே! அம்மா! உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.
    பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குணவதியே! சவுபாக்கியம் தந்தருள்பவளே! லட்சுமி தாயே! உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக்கட்டும். பயிர்பச்சை செழித்து வளரட்டும்.

    எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும். செல்வ வளம் தருக! செய்யும் தொழில் வளர்க! கருணை பொழியும் கண்களைக் கொண்ட தாயே! அபயமுத்திரை காட்டி அருள்பவளே! அலங்கார மண்டபத்தில் வீற்றிருப்பவளே! நவரத்தின ஆபரணங்களைச் சூடியவளே! மஞ்சள் பட்டு வஸ்திரத்தை விரும்பி ஏற்பவளே! அருள் வடிவானவளே! ஆதிலட்சுமி தாயே! செல்வ வளம் பெறவும், செய்யும் தொழில் வளரவும் உன்னை வணங்குகிறேன்.

    ஜடாமகுடம் தாங்கி நிலையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சந்தானலட்சுமித் தாயே! கங்கணத்தை அணிந்த கையால் வரதமுத்திரை அளிப்பவளே! பூரண கலசம் ஏந்தியிருப்பவளே! மகாராணியைப் போல இருபுறமும் இளங்கன்னியர் சாமரம் வீச காட்சியளிப்பவளே! குழந்தைச் செல்வத்தை இடுப்பில் வைத்திருப்பவளே! சந்தானபாக்கியம் தந்தருள்பவளே! உன் திருவடி தாமரைகளைச் சரணடைந்து பணிகின்றேன்.

    தேவர்களாலும், முனிவர்களாலும் விருப்பத்துடன் வணங்கப்படும் வித்யாலட்சுமியே! கலைகளெல்லாம் அள்ளித்தருபவளே! அலைமகளே! கல்விச்செல்வம் தந்து அறியாமையை அகற்றிக் காப்பவளே! ரத்தினமயமானதும், நவரத்தினத்தால் இழைக்கப்பட்டதுமான ஆபரணங்களை அணிந்தவளே! பாவத்தைப்போக்குபவளே! விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவளே! மதுசூதனனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே! வித்யாலட்சுமியே! எனக்கு அருள்புரிய இதுவே நல்ல தருணம்.
    தங்கம் போல பிரகாசிக்கும் தனலட்சுமித்தாயே! பூரணகும்பம், சங்கு, சக்கரம், வில், அம்பு, தாமரையை கரங்களில் தாங்கியிருப்பவளே! உயிர்களுக்கு அருள்புரிபவளே! சங்கநிதி, பதுமநிதிகளின் அதிதேவதையே! சகல சவுபாக்கியங்களையும் கடைக்கண்ணால் வாரிவழங்குபவளே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரியே! அரவிந்தனின் அன்புத் துணைவியே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

    சர்வ அலங்கார ரூபிணியே! தான்யலட்சுமித்தாயே! மலர்ந்த தாமரை, கரும்பு ஏந்தியிருப்பவளே! கருணை நிறைந்த கடைக் கண்களால் அன்பர் குறை தீர்ப்பவளே! நதிக்கரைகளில் விருப்பமாக வீற்றிருப்பவளே! வற்றாத நீர்வளமும், தானியபெருக்கமும் செய்து உயிர்க்குலத்தைக் காப்பவளே! எப்போதும் என் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிலைத்துஇருக்க அருள்புரிவாயாக. சிவந்த தாமரை மலரில் வீற்றிருந்து அருள்புரியும் கஜலட்சுமித்தாயே! ஆற்றல் மிக்க இரு யானைகள் இருபுறமும் நின்று திருமஞ்சனம் செய்ய மனம் மகிழ்பவளே! அழகுமிக்க அணிகலன்களுடன் கம்பீரமாக இருப்பவளே! உன் அருளால் மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைபெற வேண்டும்.

    எட்டுத்திருக்கரங்களைக் கொண்ட வீரலட்சுமித்தாயே! சங்கு, சக்கரம், சூலம், வில், அம்பு, கபாலம் தாங்கியவளே! வெற்றிமாலையைக் கழுத்தில் அணிந்தவளே! பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவளே! தைரியத்தை நல்கிடும் வீரலட்சுமியே! வெற்றி தேவதையே! நாங்கள் செய்யும் செயல்களில் வெற்றியைத்தந்தருள்வாயாக.

    மின்னல் போல ஒளிவீசும் விஜயலட்சுமி தாயே! வாசனை மிக்க திரவியங்களை விரும்பிஏற்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! சந்திரனின் சகோதரியே! பள்ளி கொண்ட பரந்தாமனின் மார்பில் குடிகொண்டவளே! வளம் நிறைந்த செல்வ வாழ்வு பெற நல்வழிகாட்டுவாயாக.
    அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
    ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

    விஷ்ணுவின் பத்தினியான வைஷ்ணவி தேவிக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முதல் 108 எட்டு முறை வரை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை வடக்குத் திசையைப் பார்த்தவாறு துதித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை மாறி மகிழ்ச்சி, மன அமைதி உண்டாகும். வீட்டில் செல்வச் சேர்க்கை ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படுவது நீங்கும்.

    ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது யோக நித்திரையில் இருந்தவாறு உலகத்தை இயக்குகிறார் நாராயணன் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி தான் வைஷ்ணவி என அழைக்கப்படுகிறார். அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். அந்த தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
    ×