search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம்
    X

    ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர் ஸ்லோகம்

    நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான். இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.
    அவசர உலகில் பரபரப்பான வாழ்க்கையில் மனிதர்கள் கடவுளை நினைப்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது. சந்தோஷத்திலோ மகிழ்ச்சியிலோ கடவுளை நினைக்காமல், தனக்கு துயரம், சோகம், ஆபத்து வந்தால் மட்டும், தெய்வங்களிடம் முறையிடுவது மனிதர்களின் வழக்கம் தானே!

    துயரத்திலும் ஆபத்து வேளைகளிலும் மட்டுமே தன்னைக் காப்பது ஒரே சக்தி அது கடவுள் சக்தியே என்பதில் எந்த ஒரு மனிதனும் முரண்படுவதில்லை. ஆபத்து வேளையில் தான் கண்கண்ட தெய்வத்தை நம்புகிறான். கடவுளே காப்பாத்து! ஆண்டவா அபயம் கொடு! இறைவா நீயே கதி! என்று புலம்புகிறான்.

    இந்தக் கலிகாலத்தில் கஷ்டகாலம் வரும் போதாவது கடவுளை நினைக்கிறானே! அது போதாதா? சரி! ஆபத்துக் காலத்தில் நம்மைக் காக்கும் கடவுள் யார்? திருவோண விழாவின் நாயகனும், பிரகலாதனின் பக்திக்குள் கட்டுண்டவனும், இரணியனை வதம் செய்தவனுமாகிய ஸ்ரீ நரசிம்மரே மனிதர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுள் பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு. பரமகாருணிகனான சர்வேச்வரன் அவதரிக்கும் போதே, பக்தனுக்குத் தீங்கு விளைவிக்கத் தொடங்கிய கொடியவகை சம்கரித்து இந்த ஒரு அவதாரத்திலே தான்.

    ஆகையால் பக்தர்களின் இன்னல் இடையூறுகளைக் களைத்தெறிந்து காக்க வேண்டிய நிலையில் தனக்குள்ள பாரிப்பையும் பரபரப்பையும் உலகுக்கு நன்கு வெளிப்படுத்திய அவதாரம் நரசிங்க அவதாரம். எனவே ஆபத்தும் அவசரத் தேவையுமான வேளைகளில் இரணியனை வணங்கினால் அவன் நம்மைக் காப்பது நிச்சயம்!

    நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான். இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை இங்கிதமாய் போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்.

    எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
    ஏழ்படி கால் தொடங்கி,
    வந்து வழிவழி ஆட் செய்கின்றோம். திரு
    வோணத் திரு விழாவில்
    அந்தியம் போதிலரியுரு வாகி
    அரியை யழித்தவனை,
    பந்தனை தீருப்பல் லாண்டு பல்லாயிரத்
    தாண்டென்று பாடுதுமே
    திருப்பல்லாண்டு 6.

    பூதமைத் தொடு வேள் வியைந்து
    புலன்களைந்து பொறிகளால்,
    ஏதமொன்று மிலாத வண்மையி
    னார்கள் வாழ் திருக் கோட்டியூர்,
    நாதனை நரசிங்கனை நவின்
    றேத்துவார் களுழக்கிய,
    பாத தூளி படுதலாலிவ்
    வுலகம் பாக்கியம் செய்ததே.
    பெரியாழ்வார் திருமொழி 4.4.6.

    பள்ளியி லோதி வந்த தன் சிறுவன்
    வாயிலோ ராயிர நாமம்.
    ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக்
    கொன்று மோர் பொறுப்பிலனாகி,
    பிள்ளையாச் சீறி வெகுண்டு தூண்புடைப்பப்
    பிளையெயிற் றனல் விழிப் பேழ்வாய்,
    தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
    திருவல்லிக் கேணிக் கண்டேனே.
    பெரிய திருமொழி 2.3.8.

    துயர வேளையில், ஆபத்துக் காலங்களில், சங்கடமான சந்தர்ப்பங்களில் உடனடியாக தாமதமின்றி நம்பெருமானின் சகாயத்தைப் பெற, ஸ்ரீ நரசிம்ம விசயமாக ஆழ்வார்கள். அருளிச் செய்த திவ்யமான பாசுரங்களை, மேல் சொன்னவைகளை பலமுறை உள்ளமுருக வாய்விட்டுப் பாடினால் நிச்சயம் ஆபத்பாந்தவனான சர்வேஸ்ச்வரன் பரிவு கொண்டு உடனடியாக, துரிதமாக நமக்கு அபயமளிப்பான் இது சத்தியம்!
    Next Story
    ×