என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த மந்திரத்தை தினமும் 48 நாட்கள் தொடர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் உடல் உபாதைகள் மற்றும் புற்றுநோய் குணமாகும் என்பது நம்பிக்கை.
    ஸ்ரீமன் நாராயணீயம் பட்டத்ரி தன் நோய் தீர்க்க குருவாயூரப்பனை நோக்கிப் பாடியது. நாராயணீயம் பாடி முடித்தவுடன் நோயும் தீரப் பெற்றார் என்பதும் சரித்திரம்.

    இவர் மட்டுமல்லாமல் இன்னும் பலபேரும் இது போல நாராயணீயத்தைப் பாராயணம் செய்து நோய் தீரப் பெற்று இருக்கிறார்கள். பட்டத்ரியின் வாக்கு அந்த அளவிற்கு தெய்வீகம் மிகுந்த சத்திய வாக்காக உள்ளது.

    காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீசந்த்ர சேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு பெண் கண் கலங்கி அழுதிருக்கிறார். தனக்குக் கேன்ஸர் நோய் இருப்பதாகச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியெல்லாம் தன்னிடம் இல்லை எனவும் அழுதிருக்கிறார்.

    அப்பெண்ணை கவலைப் படாதே. நாராயணீயத்திலே எட்டாவது தசகத்திலே அஸ்மின் னு ஆரம்பிக்கிற ஸ்லோகத்தை தினமும் 48 தடவை சொல்லு. இப்படியே 48 நாள் பாராயணம் பண்ணு… என்று அருளியிருக்கிறார்.

    அதை ஏற்றுக் கொண்ட அப்பெண்மணி அதே போல 48 நாள் 48 தடவை பாராயணம் செய்திருக்கிறார். பிறகு அவரை சோதித்த மருத்துவர்கள் அதிசயித்துப் போனார்கள்,

    இவ்வாறு மிகப் பலரின் உடல் உபாதைகளையும் தீர்த்த அந்த ஸ்லோகம்.

    அஸ்மிந்- பராத்மந் நநு பாத்மகல்பே
    த்வமித்த- முத்தாபித- பத்மயோனி:
    அனந்த பூமா மமரோக ராசிம்
    நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
    சீரடி சாய்பாபாவுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வழிபாடுசெய்து வந்தால் விருப்பங்கள் நிறைவேறும்.
    சீலங்கள் தருவாய் போற்றி
    ஞாலத்தின் ஒளியே போற்றி
    நலம்தந்து அருள்வாய் போற்றி
    நான்மறைப் பொருளே போற்றி

    ஞானத்தின் ஒளியே போற்றி
    கற்பக விருட்சம் போற்றி
    கற்பூர ஒளியே போற்றி
    துளசியாய் இருப்பாய் போற்றி
    துயரங்கள் துடைப்பாய் போற்றி

    துதிப்பவர்க்கு அருள்வாய் போற்றி
    துணைநின்று காப்பாய் போற்றி
    பாபங்கள் தீர்ப்பாய் போற்றி
    பலன்களை அருள்வாய் போற்றி
    கிருஷ்ணனும் நீயே போற்றி

    பரமனும் நீயே போற்றி-
    சிவனும் நீயே போற்றி
    தத்தாத்ரேயராய் வந்தாய் போற்றி
    பாற்கடல் நீயே போற்றி
    பசுமையும் நீயே போற்றி

    சலனங்கள் தீர்ப்பாய் போற்றி
    சங்கடம் தீர்ப்பாய் போற்றி
    உலகெல்லாம் நீயே போற்றி
    உன்னதத் தெய்வம் போற்றி
    வீரத்தை தருவாய் போற்றி

    வெற்றிகள் அருள்வாய் போற்றி
    பசிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    பக்குவம் அருள்வாய் போற்றி
    நலம்தந்து காப்பாய் போற்றி
    நன்மையின் உருவே போற்றி

    வழிகாட்டி அருள்வாய் போற்றி
    வழித்துணை ஆவாய் போற்றி
    புகழ்தந்து காப்பாய் போற்றி
    புண்ணிய நேசா போற்றி
    கருணையின் உருவே போற்றி

    கலிகளைத் தீர்ப்பாய் போற்றி
    அதர்மங்கள் அழிப்பாய் போற்றி
    அறங்களை வளர்ப்பாய் போற்றி
    நற்குணத் தெய்வம் போற்றி
    நலம்பல தருவாய் போற்றி

    காண்பதற்கு எளியாய் போற்றி
    கனிவுடன் வருவாய் போற்றி
    எல்லையில்லாப் பரம்பொருள் போற்றி
    இல்லத்திற்கு வந்தருள்வாய் போற்றி
    அரிதினும் அரிதாய் இருப்பாய் போற்றி

    எளிதினும் எளிதாய் வருவாய் போற்றி
    பொன்மலர் மணமே போற்றி
    பொன்மனத் தெய்வம் போற்றி
    வண்ணங்கள் நீயே போற்றி
    வளர்கலை நீயே போற்றி

    எண்ணங்கள் நீயே போற்றி
    இதயமும் நீயே போற்றி
    வானவர்க்கு அரசே போற்றி
    வையத்தின் தெய்வம் போற்றி
    கவிகளும் நீயே போற்றி

    காவியம் ஆவாய் போற்றி
    எளியவர்க்கு தாயே போற்றி
    இனிமையாய் காப்பாய் போற்றி
    தவறுகள் தடுப்பாய் போற்றி
    தகுதிகள் தருவாய் போற்றி

    வேதனை தீர்ப்பாய் போற்றி
    வித்தகத்தேவா போற்றி
    நன்மையின் உருவே போற்றி
    நலம்தந்து அருள்வாய் போற்றி
    சங்கடம் தீர்ப்பாய் போற்றி

    சமரசத் தெய்வம் போற்றி
    அனுதினம் துதிப்போம் போற்றி
    ஆனந்தம் தருவாய் போற்றி
    துன்பங்கள் தீர்ப்பாய் போற்றி
    துணிவைத் தருவாய் போற்றி

    வேண்டுவன தருவாய் போற்றி
    விரைந்து வந்து அருள்வாய் போற்றி
    மோகத்தை அழிப்பாய் போற்றி
    முன்வந்து காப்பாய் போற்றி
    நினைத்ததை தருவாய் போற்றி

    நிம்மதி அருள்வாய் போற்றி
    மகிழ்ந்திட வருவாய் போற்றி
    மங்கலம் தருவாய் போற்றி
    எளியவர்க்கு அருள்வாய் போற்றி
    இனியவரை காப்பாய் போற்றி

    அனுதினம் துதிப்போம் போற்றி
    அருள்நெறி காப்பாய் போற்றி
    மலர்ப்பாதம் உடையாய் போற்றி
    மனங்கனிந்து அருள்வாய் போற்றி
    நற்குண நாதா போற்றி

    நலம் தந்து காப்பாய் போற்றி
    குங்கும நிறத்தாய் போற்றி
    குலம்காக்க வருவாய் போற்றி
    சந்தன மலராய் போற்றி
    சந்ததம் காப்பாய் போற்றி

    பொன்மனத் தெய்வம் போற்றி
    புகழ்தந்து அருள்வாய் போற்றி
    நதிஎன வந்தாய் போற்றி
    நலம்தந்து அருள்வாய் போற்றி
    கவலைகள் தீர்ப்பாய் போற்றி

    கலங்கரை விளங்கே போற்றி
    கீதையாய் வந்தாய் போற்றி
    கீதங்கள் நீயே போற்றி
    பக்தி கொண்டோம் போற்றி
    பரவசம் தந்தாய் போற்றி

    நாமங்கள் சொல்வோம் போற்றி
    நற்துணை ஆவாய் போற்றி
    வந்தனை செய்தோம் போற்றி
    வரம்தந்து அருள்வாய் போற்றி
    ஓம்காரப் பொருளே போற்றி

    உடன்வந்து அருள்வாய் போற்றி
    சாயி ஜோதியே போற்றி
    சகலமும் அருள்வாய் போற்றி.
    ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்களை எல்லாம் போக்குவாள்
    அருண கிரண ஜாலா- ரஞ்சிதா சாவகாசா
    வித்ருத் ஜப படீகர் - புஸ்தகா பீதி ஹஸ்தா
    இதர கர வராட்யா - புஹ்ல கஹலார சமஸ்தர்
    நிவசது ஹ்ருதி பாலா - நித்ய கல்யாண சீலா
    இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று பரமானந்த வடிவினான கோவிந்தனை அடைவர்.
    1. ஸத்யம் ஜ்ஞான மநந்தம் நித்ய மநாகாசம் பரமாகாசம்
    கோஷ்ட ப்ராங்கண ரிங்கணலேல மநாயாஸம் பரமாயாஸம்
    மாயாகல் பிதநாநாகாரம் புவனாகாரம்
    க்ஷ்மாமாநாதமநாதம் ப்ரமணத கோவிந்தம் பரமானந்தம்

    பூதேவி, லக்ஷ்மி தேவியாருக்கு நாதனான கோவிந்தனை வணங்குங்கள். அவர் ஸத்ய-ஞான-அனந்த ஸ்வரூபி, பூர்ணமானவர், மாட்டுத்தொழுவத்தில் தவழ ஆசைப்பட்டவர், களைப்பே இல்லாதவர், மாயையாகப் பலவடிவங்கள் கொண்டவர், உலகே உருவானவர் அவர்.

    2. ம்ருத்ஸ்நா மத்ஸீஹேதி யசோதா தாடன சைசவ ஸந்த்ராஸம்
    வ்யாதித வக்த்ரா லோகித லோகா லோக சதுர்தசலோகாலிம்
    லோகத்ரயபுரமூல ஸ்தம்பம் லோகா லோக மநாலோகம்
    லோகேசம் பரமேசம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

    குழந்தையாய் இருந்தபோது, மண்ணைத் தின்றுவிட்டாயே, என்று யசோதை அவரை அடித்து, அதட்டினாளே! உடனே வாயை திறந்தபொழுது பதினான்கு உலகங்களையும் கண்டு அந்த யசோதையே களித்தாளே! இப்படி மூன்று உலகங்களின் ஆதார ஸ்தம்பம்போல் அமைந்தவரான, அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

    3. த்ரைவிஷ்டபரிபுரக்னம்  பாரக்னம்பவரோகக்னம்
    கைவல்யம் நவநீதாஹாரமனாஹாரம் புவனாஹாரம்
    வைமல்யஸ்புட சேதோவிருததி விசேஷாபாஸ மனாபாஸம்
    சைவம் கேவலசாந்தம் ப்ரணாமத கோவிந்தம் பரமானந்தம்

    மூவுலகையும் பகைக்கும் அசுரரையழித்தவரும், பூபாரத்தையும், ஸம்ஸார நோயையும் அகற்றி கைவல்யம் தருபவரும், உணவேதும் வேண்டாதவரெனினும், உலகுக்கே உணவானவரும், நவநீதம் என்ற வெண்ணெயை உணவாகக் கொண்டவரும், தெளிவாய் இல்லாதவரின் மனதிலும் தெளிந்திருப்பவருமான கிருஷ்ண பரமாத்மாவை வணங்குங்கள்.

    4. கோபாலம் பூலீலா விக்ரஹகோபாலம் குலகோபாலம்
    கோபீகேலந கோவர்த்தன த்ருதிலீலா லாலிதகோபாலம்
    கோபிர்ந்கத்த கோவிந்த ஸ்புட நாமாநம் பஹநாமானம்
    கோதீகோசரதூரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

    அவர் கோபாலன் எனப்படுகிறார். பூதேவியோடு விளையாடும் ஆணழகர், குலபர்வதமானவரும்கூட, கோபியரோடு விளையாடுதல், கோவர்தன மலையை தூக்கி நிறுத்தல் போன்ற விளையாட்டுகளால் யாதவரை மகிழ்வித்தவர், கோவிந்தா, கோவிந்தா எனப் பசுக்களே அழைத்து மகிழும் தூயவர். பல பெயருமுள்ளவர், பசுக்களின் புத்திக்குக்கூட எட்டும் அளவில் உள்ளவர். அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

    5. கோபீமண்டல கோஷ்டீபேதம் பேதாவஸ்தமபேதாபம்
    சச்வத்கோகுர நிர்தூத-உத்கத தூலி தூஸரஸெளபாக்யம்
    ச்ரத்தா பக்திக்ரு ஹீதாநந்தம சிந்த்யம் சிந்தித ஸத்பாவம்
    சிந்தாமணி மஹிமானம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
    கோபிகைகளுக்குள் விளையாட்டாகக் கலகம் செய்பவர். வெவ்வேறு நிலைகளிலிருந்தும் வித்யாசம் பாராட்டாதவர். பசுக்கள் குளம்பு கிளப்பிய தூசு படிந்தும், அழகுடன் திகழ்பவர். சிரத்தையான பக்திக்கு மகிழ்பவர், எப்போதும் பக்தர்கள் நலத்தையே எண்ணுபவர், சிந்தாமணியையொத்த பெருமை வாய்ந்தவர், அப்பெருமான். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

    6. ஸ்நான வ்யாகுல யோஷித்வஸ்த்ர முபாதர யாகமுபாரூடம்
    வ்யாதித்ஸந்தீரத திக்வஸ்த்ரா தாது முபாகர் ஷந்தம் தா:
    நிர்தூத த்வய சோக விமோஹம் புத்தம் புத்தே ரந்தஸ்தம்
    ஸத்தாமாத்ர சரீரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
    நீராடிக்கொண்டிருக்கும் கோபிகைகளின் துணிகளை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியவர், அவற்றைப் பெற விரும்பி, துணியில்லாத உடம்புடன் கரையேற தவிக்கும் அந்த கோபியரை இழுத்த வண்ணம் விளையாடுகிறார். அவருக்கு சோகமோ, மோகமோ இல்லை, ஞானமே உருவானவர், புத்தியிலுரைபவர் எங்கும் உள்ளார் என்று மட்டும் உணரத்தக்கவர். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

    7. காந்தம் காரண காரணமாதிமநாதிம் காலகனாபாஸம்
    காலந்தீ கத காலிய சிரஸி ஸுந்ருத்யந்தம் முஹரத்யந்தம்
    காலம் கால கலாதீதம் கலிதாசேஷம் கலிதாதோஷக்னம்
    காலத்ரய கதிஹேதும் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
    காரணங்களுக்கெல்லாம் மூல காரணமானவர், முதலானவர். ஆனால் முதல் இல்லாதவர்; கருநீல முகில் போன்ற அழகிய திருமேனி படைத்தவர், யமுனை நதியில் காளிங்கன்மேல் களிநடனம் புரிந்தவர், எல்லா காலமுமானவர், ஆனால் காலத்துளிகளுக்கு அப்பாற்பட்டவர், எல்லாம் அறிந்தவர், கலியின் கொட்டத்தை முடக்கியவர். முக்காலங்களிலும் செயல்படும் அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

    8. பிருந்தாவனபுவி ப்ருந்தாரக - கண - பிருந்தா ராதிக வந்த்யாயாம்
    குந்தாபாமலமந்தஸ்மேர ஸுதானந்தம் ஸுமஹானந்தம்
    வந்த்யாக்ஷே மஹாமுனி மானஸ வந்த்யானந்த பதத்வந்த்வம்
    நந்த்யாக்ஷே குணாப்திம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

    தேவர்கள், சித்தர்கள் முதலியோரால் போற்றிப் புகழப்பட்ட பிருந்தாவனத்தில் குந்த புஷ்பமென தூய புன்சிரிப்புடன் பேரானந்தம் கொண்டு, அனைத்து முனிவர்கள் மனதிலும் நின்று நிலைபெற்ற திருவடிகளையுடைய, குணக்குன்றான கோவிந்தனை வணங்குங்கள்.

    9. கோவிந்தாஷ்டகமேத ததீதே கோவிந்தார்பித சேதா யோ
    கோவிந்தாச்யுத மாதவ விஷ்ணோ கோகுல நாயக க்ருஷ்ணேதி
    கோவிந்தாங்க்ரிஸ ரோஜ த்யான ஸுதாஜலதௌத ஸமஸ்தாகோ
    கோவிந்தம் பரமானந்தாம்ருத மந்த : ஸ்தம் ஸ தமப்யேதி

    கோவிந்த, அச்யுத, மாதவ, விஷ்ணோ, கோகுலநாயக, கிருஷ்ணன் ஆகிய கோவிந்தன்பால் மனம் வைத்து இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினான கோவிந்தனை அடைவர்.
    கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
    “ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
    சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே.”

    - என்ற ஸ்லோகத்தை சதா மனதிற்குள் சொல்லிக்கொண்டு இருந்தாலே போதும். அதோடு கீழ்காணும் மந்திரத்தை தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றும் சமயத்தில் 18 முறை சொல்லிவந்தால் வீட்டில் என்றென்றும் லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்திருக்கும்.
    கோமாதாவுக்கு பூஜை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படாது. கோமாதா 16 நாமாவளி போற்றியை பார்க்கலாம்.
    ஓம் அன்பின் வடிவமே போற்றி
    ஓம் ஆனந்தம் தரும் தாயவளே போற்றி
    ஓம் இல்லம் ஒளிர அருள்வாய் போற்றி
    ஓம் ஈவதில் சிறந்த இறையே போற்றி
    ஓம் உத்தமத் தாயே உயிரே போற்றி
    ஓம் ஊருக்கெல்லாம் பால்வார்த்தாய் போற்றி
    ஓம் எருதுவின் பத்தினியே போற்றி
    ஓம் ஏற்றம் தரும் வித்தகியே போற்றி
    ஓம் ஐயம் போக்கும் அரசியே போற்றி
    ஓம் ஒப்பிலா கருணைப் பசுவே போற்றி
    ஓம் எதினால் திருமகள் ஆவாய் போற்றி
    ஓம் ஒளடதமே உடலாய் கொண்டாய் போற்றி
    ஓம் அகிலம் போற்றும் ஆதிசக்தியே போற்றி
    ஓம் கோவுலகில் தோன்றிய கோமாதா போற்றி
    ஓம் குலம் விளங்க அருளும் கோவே போற்றி
    ஓம் எங்கள் குடும்ப ஏற்றமுற அருளுக போற்றி
    கோமாதாவை (பசு) வழிபடுவதால் தோஷங்கள் விலகும். கோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடலை பார்க்கலாம்.
    திங்கட் பசுவின் மனம் நாறும் சீரடி
    சென்னி வைக்க
    எங்கட்கு ஒருதவம் எய்தியவா
    எண்ணிறந்த விண்ணோர்
    தங்கட்கும் இந்தத் தவமெய்து
    மோதரங் சுக்கடலுள்
    வெங்கட் பணியணை மேல் துயில் கூறும்
    விழும் பொருளே.
    காலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    காலையில் எழுந்து பித்ருகாரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

    ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்! சஹசிவ சூரியாய!
    வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

    பித்ரு தோஷம் உடையவர்கள் இதனை ஞாயிற்றுக்கிழமை வரும் அமாவாசையன்று தொடங்க வேண்டும். இதை முடிந்தவரை செய்து வர பாவங்கள் அனைத்தும் தீரும். தடைகள் அகன்று சுப காரியங்கள் நடக்கும்.
    திருமணம் ஆகாத பெண்கள் பசுவை அரச மரத்தின் கீழ் நிற்க வைத்து அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து காமேஸ்வரி மந்திர மூலத்தை ஜபம் செய்திட எந்த வயது ஆனாலும் திருமணத் தடை அகன்று மணமேடை ஏறும் பாக்கியம் கிடைத்துவிடும்.
    திருமணம் ஆகாத பெண்கள் பசுவை அரச மரத்தின் கீழ் நிற்க வைத்து அருகம்புல், அகத்திக்கீரை கொடுத்து காமேஸ்வரி மந்திர மூலத்தை ஜபம் செய்திட எந்த வயது ஆனாலும் திருமணத் தடை அகன்று மணமேடை ஏறும் பாக்கியம் கிடைத்துவிடும்.

    ஓம் சுபகாயை வித்மஹே
    காமதாத்ரியை ச தீமஹி
    தந்தோ தேனு: ப்ரசோதயாத்.

    மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
    ‘ஓம் கார்த்த வீர்யார்ஜூனோ நாம
    ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்
    தஸ்ய ஸ்மரந மாத்ரேன ஹூதம்
    நஷ்டஞ்சலப்யதே’

    இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நலமும் வளமும் பெருகும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் காமாட்சி அம்மன் நம் விருப்பங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்வாள்.
    ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே
    ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ
    மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ
    காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!

    - மூக பஞ்சசதி

    பொருள்: காமாட்சி தேவியே, கருணை நிரம்பிய தங்களின் கண்களின் நிகரற்ற கருப்பு நிறமான சந்திரனைப் போலவும், மூவுலகிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவற்ற கவித்துவ சக்தியைப் பொழிவிக்கும் மேகக் கூட்டங்கள் போலவும், மன்மதனை எரித்த பரமேஸ்வரனின் மனதை மோகிக்கச் செய்வதில் நிகரற்ற இருள் குவியல் போல உள்ளது. அந்த உன் கருணை கடாக்ஷ அலைகள் எனது அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வேண்டுகிறேன். அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய உன் திருவருள் பக்தர்களுக்காக எதைத்தான் செய்யாது? தங்களை மறுபடி மறுபடி வணங்குகிறேன்.
    நம் காரியங்களை சாதித்துக் கொள்ள நந்தி பகவானின் அனுமதியும், சிபாரிசும் தேவை. ஆகையினால் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.
    பிரதோஷ நாட்களில் ஈஸ்வரனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு நந்தீஸ்வரருக்கும் சிறப்பு செய்யப்படும். இன்றைய காலக்கட்டத்தில், சிபாரிசு இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை. அப்பன் ஈசனிடம் நம் காரியங்களை சாதித்துக் கொள்ள நந்தி பகவானின் அனுமதியும், சிபாரிசும் தேவை. ஆகையினால் பிரதோஷ வேளைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நம் வாழ்வில் ஏற்றங்களை பெறலாம்.

    சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

    சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி

    கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி

    கைலை யிலே நடம்புரியும் கனிந்த நந்தி

    பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி

    பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி

    நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி

    நாள்தோறும் தண்ணீரில் குளி க்கும் நந்தி

    செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி

    சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி

    மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி

    மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

    அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி

    அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி

    வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி

    வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

    பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி

    பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி

    வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி

    வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

    கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி

    கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி

    வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி

    விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

    வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி

    வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி

    சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி

    செவி சாய்த்து அருள் கொடு க்கும் செல்வ நந்தி

    கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி

    குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி

    பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி

    புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

    தென்னாடுடைய சிவனே போற்றி……

    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…….

    ×