என் மலர்
கிறித்தவம்
நேர்மையின் வழியில் நடந்தால், அதற்கேற்ற எதிர்ப்புகளையும், அநீதி வழிகளில் நடந்தால் அதன் மூலம் எதிர்கொள்ள வேண்டிய பிரதிபலன்களையும் சந்தித்தே ஆக வேண்டும்.
உலகில் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்தாலும் அதில் போராட்டம் உண்டு. நேர்மையின் வழியில் நடந்தால், அதற்கேற்ற எதிர்ப்புகளையும், அநீதி வழிகளில் நடந்தால் அதன் மூலம் எதிர்கொள்ள வேண்டிய பிரதிபலன்களையும் சந்தித்தே ஆக வேண்டும். இந்த இரண்டு வகையான வாழ்க்கை முறைக்கும் திட்டமிட்டு செயல்படுதல் அவசியம்.
இறை பக்தர்கள் இதை வெகுவாக உணர முடியும். பக்தியில் இருந்து பிறழச் செய்யக்கூடிய நட்பு, உறவுகளை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும்?, யாருடன் நெருக்கம் காட்ட வேண்டும்?, எந்தெந்த இடத்தில் யாரிடம் எதைப் பேச வேண்டும்?, பழைய பாவங்கள் மீண்டும் ஒட்டாமல் இருப்பதற்கு மனம், உடல் ரீதியாக எப்படி விலக வேண்டும்? போன்ற பல்வேறு அம்சங்களில் பக்தர்கள் மிகச்சரியாக திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
இதுபோன்றவற்றில் சரியான திட்டமிடல் இல்லாத பக்தன், பக்திக்கென்று அனுமதிக்கப்படும் சோதனைகளில் விழுந்துபோகிறான். பேச்சு, பார்வை, செயல்பாடு, நோக்கம் ஆகியவற்றில் சுயநலம் இல்லாமல், பக்திக்கேற்ற நேர்மையும், சுத்தமும் இருப்பதற்கேற்ப திட்டமிட்டு வாழ்ந்தால் மட்டுமே, பாவங்களுக்கு தப்பி, அந்தந்த காலத்தில் இறைவன் அருளும் பல்வேறு நன்மைகளை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.
பக்தியின் நன்மைகளை அடைவதற்காக திட்டமிட்டு செயல்படுவதன் அவசியம் பற்றி இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இயேசு செய்த அற்புதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இயேசு இருக்கும் இடத்துக்குச் சென்று அவரை சந்தித்து அற்புதங்களை மக்கள் பெற்றது ஒரு வகை. இயேசு செல்லும் வழியில் அவரை சந்தித்து அற்புதம் பெற்றது மற்றொரு வகை. இயேசுவே நேரில் பார்க்காமலேயே மற்றவரின் வேண்டுதல் மூலம் அற்புதம் பெற்றது மூன்றாம் வகை.
ஆனால் இயேசு என்பவர் யார் என்று தெரியாமலேயே நோய் நீங்கி சுகம் பெற்றவரும் உண்டு என்பது இன்னொரு வகையாகும். இந்த வகையில் நன்மையைப் பெற்ற நோயாளிக்கு நடந்த சம்பவத்தை ஆய்வு செய்யலாம்.
எருசலேமில் இருந்த பெதஸ்தா என்ற குளத்தின் கரையோரத்தில் ஏராளமான ஊனமுற்றவர்களுடன் நோயாளி ஒருவன் 38 ஆண்டுகளாக வசித்து வந்தான். தேவதூதனால் அந்தக் குளம் கலக்கப்படும்போது அதில் முதலில் இறங்கும் நோயாளி அப்போதே சுகம் பெற்றுச் செல்வான்.
அப்படி சுகம் பெறுவதற்காக 38 ஆண்டுகளாக காத்திருந்த அவனிடம் இயேசு வந்து கேட்டகேள்வி அவனை அதிரச் செய்தது. “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்பு கிறாயா?’’ என்பதுதான் அந்தக்கேள்வி (யோவான்5:6).
இயேசுவின் இந்தக்கேள்வியில் ஆழமான அர்த்தம் உள்ளது. இயேசு கேட்ட கேள்வி அந்த நோயாளியை நோக்கியதாகும். ஆனால் அவன் அளித்த பதில், ‘கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய்விட யாரும் இல்லை. என்னை மற்றொருவன் முந்திவிடுகிறான்’ என்று மற்றவர்களைப் பற்றியதாக உள்ளன.
அதாவது, மற்றவர்களால்தான் தனக்கு நோய் நீங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் பதிலளிக்கிறான்.
ஆனால் இயேசு கேட்ட கேள்வி, அவனது திட்டமிட்டு செயல்படாத நிலையை சுட்டிக்காட்டுவதற்காக கேட்கப்பட்டதாகும். கேள்வி கேட்பதற்கு முன்பு அவனை படுக்கையில் படுத்துக்கிடந்தவனாக இயேசு பார்த்தார் என்று வசனம் கூறுகிறது.
படுத்துக்கிடந்தால், குளம் கலக்கப்படுவது உடனடியாகத் தெரியாது. குளத்தையே பார்த்துக்கொண்டிருந்தால்தான் அது கலக்கப்படுவதை உடனே கண்டறிய முடியும். படுத்தபடியே கிடந்தால், குளத்துக்கு முதல் ஆளாக செல்ல முடியாததோடு, அடுத்த முறை முதலில் செல்வதற்காக புதிதாக திட்டமிடவும் முடியாது.
ஆனால், குளத்தை பார்க்காமல் படுக்கையில் கிடந்து, ‘எவனாவது வந்து உதவி செய்வானா?’ என்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தால், எத்தனை ஆண்டுகளானாலும் சுகமடைய வாய்ப்பு கிடைக்காது. இதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இயேசு அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.
அதாவது, உண்மையிலேயே நோய் நீங்கி சுகமடைய விரும்பும் ஒருவன், குளத்தில் முதலில் இறங்குவதற்காக ஒவ்வொரு முறையும் திட்டமிட்டபடி விழிப்புடன் இருப்பான். ஆனால் அவனிடம் அப்படியொன்றும் காணப்படவில்லையே என்பதால்தான் அதை உணர்த்தவே இயேசு, ‘உண்மையிலேயே சுகமடைய உனக்கு விருப்பம் இருக்கிறதா?’ என்ற அர்த்தமுள்ள, உள்ளத்தில் உரைக்கும்படியான கேள்வியைக் கேட்டார்.
‘நான் போவதற்குள்’ என்று அவன் சொல்வதால், அவனை அசைவற்று முடங்கிக்கிடக்கும் நோயாளியாக கருத முடியாது. குளத்துக்கு தனியாக போகும் தகுதியைக் கொண்டவன் அவன். ஆனால் அங்கு போவதற்கு காலதாமதம் ஆவதை சரிசெய்ய திட்டமிடாமல் இருந்ததுதான் அவனது பிரச்சினை. நோய் குணமாவதில் அவன் பின்தங்கி இருந்ததுபோலவே, பக்திக்கேற்ற வகையில் ஆத்மா சீரடைவதை திட்ட மிடாமல் நாம் பின்தங்கி இருக்கிறோம்.
இயேசுவின் வழியைப் பின்பற்ற நடைமுறையில் முயற்சிக்காமல், போதனைகளை கேட்பதிலேயே பலரும் நின்றுவிடுகிறோம்.
பகைப்பவனை மன்னித்தல், பறித்தவனுக்கு விட்டுக்கொடுத்தல், திருடியதை திருப்பிக்கொடுத்தல், அநீதியாக பெற்ற கல்வி, வேலை, செல்வங்களை திரும்ப ஒப்படைத்தல், அடுத்தவனின் நலனுக்காக ஜெபித்தல் என எவ்வளவோ நீதிபோதனைகளை பின்பற்ற திட்டமிடாமல், படுக்கையில் கிடந்த 38 ஆண்டு நோயாளியைப்போல, ஊழியர்களின் போதனையைக் கேட்பதோடு நின்றுவிடுவதுதான் அபத்தம்.
அந்த நோயாளியிடம் ‘நீ அற்புத சுகமடைந்துவிட்டாய்’ என்று இயேசு கூறவில்லை. மாறாக, ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்றுதான் கூறினார். அந்த படுக்கையை எடுக்க முன்வந்த பின்னர்தான் அவன் சுகமடைந்தான்.
எனவே இயேசு காட்டிய ஆன்மிகத்துக்குள் வர விரும்புகிறவர்களும், மேற்கூறிய அவரது போதனைகளை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். போதனைகளை கேட்பதோடு நின்று விடும், அதாவது படுத்துக்கிடக்கும் நிலையை மாற்றி, தேவையற்ற அந்தப் படுக்கையை வீசிவிட விளைவோமாக.
ஜெனட், காட்டாங்குளத்தூர்.
இறை பக்தர்கள் இதை வெகுவாக உணர முடியும். பக்தியில் இருந்து பிறழச் செய்யக்கூடிய நட்பு, உறவுகளை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும்?, யாருடன் நெருக்கம் காட்ட வேண்டும்?, எந்தெந்த இடத்தில் யாரிடம் எதைப் பேச வேண்டும்?, பழைய பாவங்கள் மீண்டும் ஒட்டாமல் இருப்பதற்கு மனம், உடல் ரீதியாக எப்படி விலக வேண்டும்? போன்ற பல்வேறு அம்சங்களில் பக்தர்கள் மிகச்சரியாக திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
இதுபோன்றவற்றில் சரியான திட்டமிடல் இல்லாத பக்தன், பக்திக்கென்று அனுமதிக்கப்படும் சோதனைகளில் விழுந்துபோகிறான். பேச்சு, பார்வை, செயல்பாடு, நோக்கம் ஆகியவற்றில் சுயநலம் இல்லாமல், பக்திக்கேற்ற நேர்மையும், சுத்தமும் இருப்பதற்கேற்ப திட்டமிட்டு வாழ்ந்தால் மட்டுமே, பாவங்களுக்கு தப்பி, அந்தந்த காலத்தில் இறைவன் அருளும் பல்வேறு நன்மைகளை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும்.
பக்தியின் நன்மைகளை அடைவதற்காக திட்டமிட்டு செயல்படுவதன் அவசியம் பற்றி இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இயேசு செய்த அற்புதங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இயேசு இருக்கும் இடத்துக்குச் சென்று அவரை சந்தித்து அற்புதங்களை மக்கள் பெற்றது ஒரு வகை. இயேசு செல்லும் வழியில் அவரை சந்தித்து அற்புதம் பெற்றது மற்றொரு வகை. இயேசுவே நேரில் பார்க்காமலேயே மற்றவரின் வேண்டுதல் மூலம் அற்புதம் பெற்றது மூன்றாம் வகை.
ஆனால் இயேசு என்பவர் யார் என்று தெரியாமலேயே நோய் நீங்கி சுகம் பெற்றவரும் உண்டு என்பது இன்னொரு வகையாகும். இந்த வகையில் நன்மையைப் பெற்ற நோயாளிக்கு நடந்த சம்பவத்தை ஆய்வு செய்யலாம்.
எருசலேமில் இருந்த பெதஸ்தா என்ற குளத்தின் கரையோரத்தில் ஏராளமான ஊனமுற்றவர்களுடன் நோயாளி ஒருவன் 38 ஆண்டுகளாக வசித்து வந்தான். தேவதூதனால் அந்தக் குளம் கலக்கப்படும்போது அதில் முதலில் இறங்கும் நோயாளி அப்போதே சுகம் பெற்றுச் செல்வான்.
அப்படி சுகம் பெறுவதற்காக 38 ஆண்டுகளாக காத்திருந்த அவனிடம் இயேசு வந்து கேட்டகேள்வி அவனை அதிரச் செய்தது. “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்பு கிறாயா?’’ என்பதுதான் அந்தக்கேள்வி (யோவான்5:6).
இயேசுவின் இந்தக்கேள்வியில் ஆழமான அர்த்தம் உள்ளது. இயேசு கேட்ட கேள்வி அந்த நோயாளியை நோக்கியதாகும். ஆனால் அவன் அளித்த பதில், ‘கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய்விட யாரும் இல்லை. என்னை மற்றொருவன் முந்திவிடுகிறான்’ என்று மற்றவர்களைப் பற்றியதாக உள்ளன.
அதாவது, மற்றவர்களால்தான் தனக்கு நோய் நீங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்ற அர்த்தத்தில் பதிலளிக்கிறான்.
ஆனால் இயேசு கேட்ட கேள்வி, அவனது திட்டமிட்டு செயல்படாத நிலையை சுட்டிக்காட்டுவதற்காக கேட்கப்பட்டதாகும். கேள்வி கேட்பதற்கு முன்பு அவனை படுக்கையில் படுத்துக்கிடந்தவனாக இயேசு பார்த்தார் என்று வசனம் கூறுகிறது.
படுத்துக்கிடந்தால், குளம் கலக்கப்படுவது உடனடியாகத் தெரியாது. குளத்தையே பார்த்துக்கொண்டிருந்தால்தான் அது கலக்கப்படுவதை உடனே கண்டறிய முடியும். படுத்தபடியே கிடந்தால், குளத்துக்கு முதல் ஆளாக செல்ல முடியாததோடு, அடுத்த முறை முதலில் செல்வதற்காக புதிதாக திட்டமிடவும் முடியாது.
ஆனால், குளத்தை பார்க்காமல் படுக்கையில் கிடந்து, ‘எவனாவது வந்து உதவி செய்வானா?’ என்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தால், எத்தனை ஆண்டுகளானாலும் சுகமடைய வாய்ப்பு கிடைக்காது. இதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் இயேசு அப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்.
அதாவது, உண்மையிலேயே நோய் நீங்கி சுகமடைய விரும்பும் ஒருவன், குளத்தில் முதலில் இறங்குவதற்காக ஒவ்வொரு முறையும் திட்டமிட்டபடி விழிப்புடன் இருப்பான். ஆனால் அவனிடம் அப்படியொன்றும் காணப்படவில்லையே என்பதால்தான் அதை உணர்த்தவே இயேசு, ‘உண்மையிலேயே சுகமடைய உனக்கு விருப்பம் இருக்கிறதா?’ என்ற அர்த்தமுள்ள, உள்ளத்தில் உரைக்கும்படியான கேள்வியைக் கேட்டார்.
‘நான் போவதற்குள்’ என்று அவன் சொல்வதால், அவனை அசைவற்று முடங்கிக்கிடக்கும் நோயாளியாக கருத முடியாது. குளத்துக்கு தனியாக போகும் தகுதியைக் கொண்டவன் அவன். ஆனால் அங்கு போவதற்கு காலதாமதம் ஆவதை சரிசெய்ய திட்டமிடாமல் இருந்ததுதான் அவனது பிரச்சினை. நோய் குணமாவதில் அவன் பின்தங்கி இருந்ததுபோலவே, பக்திக்கேற்ற வகையில் ஆத்மா சீரடைவதை திட்ட மிடாமல் நாம் பின்தங்கி இருக்கிறோம்.
இயேசுவின் வழியைப் பின்பற்ற நடைமுறையில் முயற்சிக்காமல், போதனைகளை கேட்பதிலேயே பலரும் நின்றுவிடுகிறோம்.
பகைப்பவனை மன்னித்தல், பறித்தவனுக்கு விட்டுக்கொடுத்தல், திருடியதை திருப்பிக்கொடுத்தல், அநீதியாக பெற்ற கல்வி, வேலை, செல்வங்களை திரும்ப ஒப்படைத்தல், அடுத்தவனின் நலனுக்காக ஜெபித்தல் என எவ்வளவோ நீதிபோதனைகளை பின்பற்ற திட்டமிடாமல், படுக்கையில் கிடந்த 38 ஆண்டு நோயாளியைப்போல, ஊழியர்களின் போதனையைக் கேட்பதோடு நின்றுவிடுவதுதான் அபத்தம்.
அந்த நோயாளியிடம் ‘நீ அற்புத சுகமடைந்துவிட்டாய்’ என்று இயேசு கூறவில்லை. மாறாக, ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்றுதான் கூறினார். அந்த படுக்கையை எடுக்க முன்வந்த பின்னர்தான் அவன் சுகமடைந்தான்.
எனவே இயேசு காட்டிய ஆன்மிகத்துக்குள் வர விரும்புகிறவர்களும், மேற்கூறிய அவரது போதனைகளை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். போதனைகளை கேட்பதோடு நின்று விடும், அதாவது படுத்துக்கிடக்கும் நிலையை மாற்றி, தேவையற்ற அந்தப் படுக்கையை வீசிவிட விளைவோமாக.
ஜெனட், காட்டாங்குளத்தூர்.
கிறிஸ்துவை திருமுன்னிலைப்படுத்துதல் என்பதை ஒப்புக்கொடுத்தல், படைத்தல், அர்ப்பணித்தல் என மொழியாக்கம் செய்யலாம். இது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
கிறிஸ்துவை திருமுன்னிலைப்படுத்துதல் என்பதை ஒப்புக்கொடுத்தல், படைத்தல், அர்ப்பணித்தல் என மொழியாக்கம் செய்யலாம். இது குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
இன்று நாம் நமக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1மாதம், அல்லது அதற்கு பின்னர் கோவிலுக்கு குழந்தையை எடுத்துச்சென்று ஆயர் முன்னிலையில் ஜெபித்து பெயர் வைத்து விட்டு காணிக்கையாக பணத்தை செலுத்தி விட்டு வருவோம்.
ஆனால் இயேசுவுக்கோ அப்படி நடக்கவில்லை. இயேசுநாதர் பிறந்து எட்டாம் நாளிலே அவருக்கு விருத்தசேதனம் செய்து, பெயரிடவும், பலி செலுத்தி காணிக்கை படைக்கவும் அவருடைய பெற்றோர் அவரை எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த சிமியோன் என்பவர் நீதியும், தேவபக்தியும் உள்ளவர். இன்னொருவர் அன்னாள். இவர் இரவும், பகலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், ஜெபித்து ஆராதனை செய்து வருபவர். இவர்கள் இருவரும் இயேசு தேவாலயத்திற்கு வந்ததை கண்டவுடன் இவர்களோடு அங்கிருந்தவர்களிடம் இயேசுவை புகழ்ந்து பேசினார்கள் என்று வேதாகமத்தில் லூக்கா 2-ம் அதிகாரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
பின்னர் இவர்கள் இருவரின் முன்னிலையில் இயேசுநாதர் தேவாலயத்தில் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டார். அங்கு ஏராளமான பலி பொருட்கள் படைக்கப்பட்டிருந்தது. அந்த பலி பொருட்களோடு சேர்த்து இயேசுநாதரும் ஜீவ பலியாகவே படைக்கப்பட்டார் என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது.
இப்படி குழந்தையாய் இருக்கும் போதே இயேசு என்று பெயரிட்டு நமக்காக நம்முடைய வாழ்க்கையாக அவரையே ஜீவ பலியாய் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஆனால் நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம். கோவிலுக்கு சென்றால் பல்வேறு வகையில் பொருட்களை கொண்டு போய் படைக்கிறோம். ஆனால் இயேசுவானவரோ நம் இருதயத்தை அவருக்காக ஒப்படைக்க கேட்கிறார்.
எனவே இந்த தவக்காலத்தில் ஜீவ பலியாய் தன்னையே நமக்காக ஒப்புக்கொடுத்தது போல நாம் ஜீவ பலியாய் தன்னை ஒப்புக்கொடுத்து நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அவரையே நம்பி இருக்கிற நாமும் நம்முடைய ஆவி, ஆத்மா, சரீரத்தை இயேசுவின் அன்பின் கரத்திற்குள் ஒப்புக்கொடுப்போம் ஆமென்.
சகோ. ரவிபிரபு, காங்கேயம்
இன்று நாம் நமக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் 1மாதம், அல்லது அதற்கு பின்னர் கோவிலுக்கு குழந்தையை எடுத்துச்சென்று ஆயர் முன்னிலையில் ஜெபித்து பெயர் வைத்து விட்டு காணிக்கையாக பணத்தை செலுத்தி விட்டு வருவோம்.
ஆனால் இயேசுவுக்கோ அப்படி நடக்கவில்லை. இயேசுநாதர் பிறந்து எட்டாம் நாளிலே அவருக்கு விருத்தசேதனம் செய்து, பெயரிடவும், பலி செலுத்தி காணிக்கை படைக்கவும் அவருடைய பெற்றோர் அவரை எருசலேம் தேவாலயத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த சிமியோன் என்பவர் நீதியும், தேவபக்தியும் உள்ளவர். இன்னொருவர் அன்னாள். இவர் இரவும், பகலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல், ஜெபித்து ஆராதனை செய்து வருபவர். இவர்கள் இருவரும் இயேசு தேவாலயத்திற்கு வந்ததை கண்டவுடன் இவர்களோடு அங்கிருந்தவர்களிடம் இயேசுவை புகழ்ந்து பேசினார்கள் என்று வேதாகமத்தில் லூக்கா 2-ம் அதிகாரத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
பின்னர் இவர்கள் இருவரின் முன்னிலையில் இயேசுநாதர் தேவாலயத்தில் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்டார். அங்கு ஏராளமான பலி பொருட்கள் படைக்கப்பட்டிருந்தது. அந்த பலி பொருட்களோடு சேர்த்து இயேசுநாதரும் ஜீவ பலியாகவே படைக்கப்பட்டார் என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது.
இப்படி குழந்தையாய் இருக்கும் போதே இயேசு என்று பெயரிட்டு நமக்காக நம்முடைய வாழ்க்கையாக அவரையே ஜீவ பலியாய் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டார். ஆனால் நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம். கோவிலுக்கு சென்றால் பல்வேறு வகையில் பொருட்களை கொண்டு போய் படைக்கிறோம். ஆனால் இயேசுவானவரோ நம் இருதயத்தை அவருக்காக ஒப்படைக்க கேட்கிறார்.
எனவே இந்த தவக்காலத்தில் ஜீவ பலியாய் தன்னையே நமக்காக ஒப்புக்கொடுத்தது போல நாம் ஜீவ பலியாய் தன்னை ஒப்புக்கொடுத்து நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அவரையே நம்பி இருக்கிற நாமும் நம்முடைய ஆவி, ஆத்மா, சரீரத்தை இயேசுவின் அன்பின் கரத்திற்குள் ஒப்புக்கொடுப்போம் ஆமென்.
சகோ. ரவிபிரபு, காங்கேயம்
இயேசுவின் மரணத்தில் தொடங்கி, பவுல் ரோம் நகரில் சிறையான நிகழ்வு வரையிலான சுமார் 30 முதல் 35 ஆண்டு கால திருச்சபை வரலாற்றைக் குறித்த மிக முக்கியமான பதிவுகளின் தொகுப்பாக இருக்கிறது திருத்தூதர் பணிகள் நூல்.
திருத்தூதர் பணிகள் நூலை எழுதிய லூக்கா சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவில் பிறந்தவர். இவர் ஒரு மருத்துவர். பவுலுடன் தொடர்ந்து பயணித்த அனுபவம் உடையவர். சிசேரா, ரோம் ஆகிய இடங்களில் தங்கியிருந்த காலகட்டத்தில் இந்த நூலை அவர் எழுதியிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
பிராக்சிஸ் எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இந்த நூலுக்கான தலைப்பு பெறப்பட்டுள்ளது. “திருத்தூதர் பணிகள்” என நூலில் தலைப்பு சொன்னாலும், எல்லா திருத்தூதர்களின் பணிகளும் இந்த நூலில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த நூலில் கிட்டத்தட்ட பாதி இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பவுல் இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் அல்லர்.
லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாக இந்த நூல் அமைந்துள்ளது. தியோபில் எனும் தனி நபருக்கு இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதுகிறார். தியோபில் என்பவர் அன்றைக்கு அரசின் உயர்பதவியில் இருந்த ஒரு நபராய் இருந்திருக்கலாம். பவுல் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில் அவரை வெளிக்கொணர கிறிஸ்தவத்தின் பின்னணியும், பவுலின் பின்னணியும் தேவைப்பட்டது. அவற்றை தெளிவாகப் பதிவு செய்ய இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதியிருக்கலாம் என தெரிகிறது.
இந்த நூலில் முக்கியமாக பவுலின் பணிகளும், பேதுருவின் பணிகளும் அமைந்துள்ளன. இருவருடைய பணிகளுக்கும் நிறைய ஒப்புமைகள் இருப்பதையும் லூக்கா சுட்டிக் காட்டுகிறார். இருவருமே அற்புதங்கள் செய்கிறார்கள், இருவருமே காட்சிகள் காண்கின்றனர், இருவருமே இறைமகன் இயேசுவைக் குறித்த நீண்ட செய்திகளை அளிக்கின்றனர், இருவருமே தங்கள் விசுவாசத்துக்காக கஷ்டப்படுகின்றனர், இருவருமே தூய ஆவியினால் நிரப்பப்படு கிறார்கள்.
இருவருமே சிறையில் அடைக்கப்பட்ட பின் வியப்பூட்டும் வகையில் விடுதலையாகிறார்கள், இருவருமே நோயாளிகளைக் குணமாக்குகிறார்கள், இருவருமே பேய்களை விரட்டுகிறார்கள், இருவருமே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறார்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் மிகப்பெரிய வித்தியாசமாக பேதுரு தனது நற்செய்தி அறிவித்தலை பெரும்பாலும் யூதர்களுக்காய் நடத்துகிறார், பவுல் பெரும்பாலும் தனது நற்செய்தி அறிவித்தலை பிற இன மக்களுக்காய் நடத்துகிறார் என்பதைச் சொல்லலாம்.
பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவரின் வருகையுடன் திருத்தூதர் பணிகளின் கிறிஸ்தவ பரப்புதல் ஆரம்பமாகிறது. எருசலேமில் தொடங்கும் நற்செய்தி அறிவித்தல், பின்னர் யூதேயா, சமாரியா போன்ற இடங்களுக்குப் பரவி, கடைசியில் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது.
முதல் ரத்த சாட்சியான ஸ்தேவானின் கதை சவுலை அறிமுகம் செய்கிறது. பின் பிலிப்பு ஆற்றிய பணிகள் பற்றிய குறிப்பு வருகிறது. கிறிஸ்தவர்களைக் கொல்ல களமிறங்கும் சவுலும், அவரது மனமாற்றமும் நூலை பரபரப்பாய் கூட்டிச் செல்கின்றன.
நற்செய்தி நூல்களுக்கும் திருமுகங்களுக்கும் இடையேயான அற்புதமான ஒரு இணைப்புப் பாலமாக திருத்தூதர் பணிகள் அமைந்திருக்கிறது. இந்த நூல் இல்லையேல், ஆதித் திருச்சபையின் நிகழ்வுகளும், இயல்புகளும், தன்மைகளும், போதனைகளும், தூய ஆவியானவரின் செயல்பாடுகளும், இயேசுவின் கடைசி வார்த்தைகளும் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.
தூய ஆவி நிரப்புதல், எப்படி திருமுழுக்கு கொடுப்பது, திருச்சபை என்பது எப்படி இருந்தது? எப்படி இருக்க வேண்டும்? எவையெல்லாம் இருக்கக் கூடாது? திருச்சபையில் தலைவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்? எப்படிப்பட்ட குணாதிசயங்கள் அவர்களிடம் இருந்தன? போன்றவையெல்லாம் திருத்தூதர் பணிகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
பலங்களையும் பலவீனங்களையும் ஒரு சேர பதிவு செய்யும் நூலாக இந்த நூல் இருக்கிறது. பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே நடந்த எதிர்கருத்துகளையும் இது பதிவு செய்கிறது, ஒரு பொய் சொன்னதற்காய் உயிரை விட்ட அனனியா சப்பிராள் தம்பதியரையும் இது பதிவு செய்கிறது.
திருச்சபையின் வளர்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றுக்கான ஒரு சிறந்த நூலாகவும் இந்த நூலை பயன்படுத்தலாம். மோசேயின் சட்டங்களை விட்டு, இயேசுவின் சட்டங்களைக் கைக்கொண்ட அனுபவத்தை திருத்தூதர் பணிகளில் நாம் காண முடியும்.
இன்றைய திருச்சபையோடு ஒப்பிடும்போது திருத்தூதர் பணிகள் காட்டும் திருச்சபை பல வேறு பாடுகளைக் கொண்டுள்ளது. அன்று, திருச்சபைக்கென ‘சர்ச்’ கட்டிடங்கள் ஏதும் இல்லை. எல்லாமே இலவசமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் தான். மக்கள் இல்லங்களில் தான் பெரும்பாலும் சந்தித்து இறைவனை வழி பட்டனர்.
திருச்சபைத் தலைவர்களிடையே வேறுபாடு காணப்படவில்லை. யாரும் தங்களுக்கென பதவிகளையோ, அடைமொழிகளையோ கொண்டிருக்கவில்லை. திருச்சபையில் அப்போது பிரிவுகளோ, பாகுபாடுகளோ இருக்கவில்லை.
அவர்கள் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு பணி செய்தார்கள், பெரிய நகரங்களை அடைந்து நற்செய்தி அறிவித்தனர், இயேசுவுக்கான சீடர்களை உருவாக்கினர், திருச்சபைகளை உருவாக்கினார்கள், மூப்பர்களை ஏற்படுத்தினர், பின் அடுத்த இடத்துக்கு பயணமானார்கள்.
இயேசுவின் மரணத்தில் தொடங்கி, பவுல் ரோம் நகரில் சிறையான நிகழ்வு வரையிலான சுமார் 30 முதல் 35 ஆண்டு கால திருச்சபை வரலாற்றைக் குறித்த மிக முக்கியமான பதிவுகளின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல்.
பிராக்சிஸ் எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து இந்த நூலுக்கான தலைப்பு பெறப்பட்டுள்ளது. “திருத்தூதர் பணிகள்” என நூலில் தலைப்பு சொன்னாலும், எல்லா திருத்தூதர்களின் பணிகளும் இந்த நூலில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த நூலில் கிட்டத்தட்ட பாதி இடத்தை ஆக்கிரமித்திருக்கும் பவுல் இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களில் ஒருவர் அல்லர்.
லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பாகமாக இந்த நூல் அமைந்துள்ளது. தியோபில் எனும் தனி நபருக்கு இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதுகிறார். தியோபில் என்பவர் அன்றைக்கு அரசின் உயர்பதவியில் இருந்த ஒரு நபராய் இருந்திருக்கலாம். பவுல் சிறைபிடிக்கப்பட்ட காலத்தில் அவரை வெளிக்கொணர கிறிஸ்தவத்தின் பின்னணியும், பவுலின் பின்னணியும் தேவைப்பட்டது. அவற்றை தெளிவாகப் பதிவு செய்ய இந்த இரண்டு நூல்களையும் லூக்கா எழுதியிருக்கலாம் என தெரிகிறது.
இந்த நூலில் முக்கியமாக பவுலின் பணிகளும், பேதுருவின் பணிகளும் அமைந்துள்ளன. இருவருடைய பணிகளுக்கும் நிறைய ஒப்புமைகள் இருப்பதையும் லூக்கா சுட்டிக் காட்டுகிறார். இருவருமே அற்புதங்கள் செய்கிறார்கள், இருவருமே காட்சிகள் காண்கின்றனர், இருவருமே இறைமகன் இயேசுவைக் குறித்த நீண்ட செய்திகளை அளிக்கின்றனர், இருவருமே தங்கள் விசுவாசத்துக்காக கஷ்டப்படுகின்றனர், இருவருமே தூய ஆவியினால் நிரப்பப்படு கிறார்கள்.
இருவருமே சிறையில் அடைக்கப்பட்ட பின் வியப்பூட்டும் வகையில் விடுதலையாகிறார்கள், இருவருமே நோயாளிகளைக் குணமாக்குகிறார்கள், இருவருமே பேய்களை விரட்டுகிறார்கள், இருவருமே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறார்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் மிகப்பெரிய வித்தியாசமாக பேதுரு தனது நற்செய்தி அறிவித்தலை பெரும்பாலும் யூதர்களுக்காய் நடத்துகிறார், பவுல் பெரும்பாலும் தனது நற்செய்தி அறிவித்தலை பிற இன மக்களுக்காய் நடத்துகிறார் என்பதைச் சொல்லலாம்.
பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவரின் வருகையுடன் திருத்தூதர் பணிகளின் கிறிஸ்தவ பரப்புதல் ஆரம்பமாகிறது. எருசலேமில் தொடங்கும் நற்செய்தி அறிவித்தல், பின்னர் யூதேயா, சமாரியா போன்ற இடங்களுக்குப் பரவி, கடைசியில் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவுகிறது.
முதல் ரத்த சாட்சியான ஸ்தேவானின் கதை சவுலை அறிமுகம் செய்கிறது. பின் பிலிப்பு ஆற்றிய பணிகள் பற்றிய குறிப்பு வருகிறது. கிறிஸ்தவர்களைக் கொல்ல களமிறங்கும் சவுலும், அவரது மனமாற்றமும் நூலை பரபரப்பாய் கூட்டிச் செல்கின்றன.
நற்செய்தி நூல்களுக்கும் திருமுகங்களுக்கும் இடையேயான அற்புதமான ஒரு இணைப்புப் பாலமாக திருத்தூதர் பணிகள் அமைந்திருக்கிறது. இந்த நூல் இல்லையேல், ஆதித் திருச்சபையின் நிகழ்வுகளும், இயல்புகளும், தன்மைகளும், போதனைகளும், தூய ஆவியானவரின் செயல்பாடுகளும், இயேசுவின் கடைசி வார்த்தைகளும் நமக்கு தெரியாமலேயே போயிருக்கும்.
தூய ஆவி நிரப்புதல், எப்படி திருமுழுக்கு கொடுப்பது, திருச்சபை என்பது எப்படி இருந்தது? எப்படி இருக்க வேண்டும்? எவையெல்லாம் இருக்கக் கூடாது? திருச்சபையில் தலைவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்? எப்படிப்பட்ட குணாதிசயங்கள் அவர்களிடம் இருந்தன? போன்றவையெல்லாம் திருத்தூதர் பணிகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
பலங்களையும் பலவீனங்களையும் ஒரு சேர பதிவு செய்யும் நூலாக இந்த நூல் இருக்கிறது. பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே நடந்த எதிர்கருத்துகளையும் இது பதிவு செய்கிறது, ஒரு பொய் சொன்னதற்காய் உயிரை விட்ட அனனியா சப்பிராள் தம்பதியரையும் இது பதிவு செய்கிறது.
திருச்சபையின் வளர்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றுக்கான ஒரு சிறந்த நூலாகவும் இந்த நூலை பயன்படுத்தலாம். மோசேயின் சட்டங்களை விட்டு, இயேசுவின் சட்டங்களைக் கைக்கொண்ட அனுபவத்தை திருத்தூதர் பணிகளில் நாம் காண முடியும்.
இன்றைய திருச்சபையோடு ஒப்பிடும்போது திருத்தூதர் பணிகள் காட்டும் திருச்சபை பல வேறு பாடுகளைக் கொண்டுள்ளது. அன்று, திருச்சபைக்கென ‘சர்ச்’ கட்டிடங்கள் ஏதும் இல்லை. எல்லாமே இலவசமாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள கொடுக்கப்பட்ட கட்டிடங்கள் தான். மக்கள் இல்லங்களில் தான் பெரும்பாலும் சந்தித்து இறைவனை வழி பட்டனர்.
திருச்சபைத் தலைவர்களிடையே வேறுபாடு காணப்படவில்லை. யாரும் தங்களுக்கென பதவிகளையோ, அடைமொழிகளையோ கொண்டிருக்கவில்லை. திருச்சபையில் அப்போது பிரிவுகளோ, பாகுபாடுகளோ இருக்கவில்லை.
அவர்கள் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டு பணி செய்தார்கள், பெரிய நகரங்களை அடைந்து நற்செய்தி அறிவித்தனர், இயேசுவுக்கான சீடர்களை உருவாக்கினர், திருச்சபைகளை உருவாக்கினார்கள், மூப்பர்களை ஏற்படுத்தினர், பின் அடுத்த இடத்துக்கு பயணமானார்கள்.
இயேசுவின் மரணத்தில் தொடங்கி, பவுல் ரோம் நகரில் சிறையான நிகழ்வு வரையிலான சுமார் 30 முதல் 35 ஆண்டு கால திருச்சபை வரலாற்றைக் குறித்த மிக முக்கியமான பதிவுகளின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை விழா தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை விழா தொடங்கியது. புனித செபஸ்தியார் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு பவனியாக ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து விழா நடைபெற்று வருகிறது. 32-வது நாளான டிசம்பர் 18-ந் தேதி பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா தென்மேற்கு மண்டலம் சார்பில் தொடங்குகிறது. 19-ந் தேதி வடக்கு மண்டலம் சார்பிலும், 20-ந் தேதி கிழக்கு மண்டலம் சார்பிலும், 21-ந் தேதி குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந் தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பிலும், 23-ந் தேதி பொது பட்டாபிஷேகமாகவும் கொண்டாடப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு மண்டலத்தினரும் தங்கள் பகுதிக்கான தேரை பல வாரம் இரவு- பகலாக வடிவமைப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட தேர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்கு கொண்டு வந்து அர்ச்சிக்கப்படும். பின்னர் திருப்பலி நடைபெறும். அதனைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தேர் அந்தந்த பகுதிகளுக்கு ஊர்வலமாக புறப்படும்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை ஷிஜின், தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, குதிரைப்பந்திவிளை, பண்டாரக்காடு ஆகிய 5 மண்டலங்களை சேர்ந்த பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு மண்டலத்தினரும் தங்கள் பகுதிக்கான தேரை பல வாரம் இரவு- பகலாக வடிவமைப்பார்கள். அலங்கரிக்கப்பட்ட தேர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்கு கொண்டு வந்து அர்ச்சிக்கப்படும். பின்னர் திருப்பலி நடைபெறும். அதனைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தேர் அந்தந்த பகுதிகளுக்கு ஊர்வலமாக புறப்படும்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை ஷிஜின், தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, குதிரைப்பந்திவிளை, பண்டாரக்காடு ஆகிய 5 மண்டலங்களை சேர்ந்த பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
யோவான் நற்செய்தி நூல் நமக்குச் சொல்லும் முதன்மையான பாடம், “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (3:16) என்பதாகும்.
யோவான் நற்செய்தி மற்ற மூன்று நற்செய்திகளிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பைபிளில் இடம்பெற்றுள்ள நற்செய்தி நூல்களில் கடைசியாக எழுதப்பட்ட நூல் இது தான்.
இயேசுவின் தன்மைகளை யோவான் பதிவு செய்கிறார். யோவான் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அவரை இயேசு அழைத்து தனது சீடராக்கியிருந்தார்.
‘இயேசுவின் அன்புச் சீடர்’எனும் அடைமொழியுடன் அறியப்படும் யோவான், இயேசுவோடு மிக நெருங்கிச் செயல்பட்டவர். கடைசியில் தனது அன்னையை இயேசு இவரிடம் தான் ஒப்படைத்தார். தனது முக்கியமான பணிகளிலெல்லாம் இயேசு யோவானை உடன்படுத்தியிருந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன.
மிக முக்கியமான பல விஷயங்களை தனது நற்செய்தி நூலில் யோவான் குறிப்பிடாமல் விட்டு விடுகிறார். உதாரணமாக இயேசுவின் பிறப்பு சார்ந்த நிகழ்வுகள், அவரது திருமுழுக்கு, அவருக்கு வந்த சோதனைகள், பேய்களை ஓட்டுவது, மலைமேல் உருமாற்றம் அடைந்தது இறுதி இரவு உணவு, கெத்சமனே செபம், விண்ணேற்பு போன்றவற்றைச் சொல்லலாம்.
அதே நேரம், பிற நற்செய்தியாளர்கள் சொல்லாமல் விட்ட சில மிக மிக முக்கியமான விஷயங்களை யோவான் தனது நற்செய்தியில் கவனமாய்ப் பதிவு செய்கிறார்.
கானாவூர் திருமணத்தில் அன்னை மரியாளின் விண்ணப்பத்தை ஏற்று தண்ணீரைத் திராட்சை ரசமாய் மாற்றுகிறார் இயேசு. அதுவே இயேசுவின் புதுமைகளின் தொடக்கம். பெத்சதா குளக்கரையில் முப்பெத்தெட்டு ஆண்டுகளாய் நோயாளியாய் கிடந்த ஒருவனை இயேசு நலமாக்குகிறார். இறந்த இலாசரை நான்கு நாட்களுக்குப் பின் உயிருடன் எழுப்புகிறார். இவையெல்லாம் யோவான் நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடுகின்ற மிக முக்கியமான புதுமைகள்.
புதுமைகளை யோவான், “அரும் அடையாளங்கள்” என குறிப்பிடுகிறார். இவை வெறுமனே வியப்பின் நிகழ்வுகள் என்பதைத் தாண்டி இறைவனை அடையாளப் படுத்தும் அடையாளங்கள் என்பதை யோவான் நிறுவ விரும்புகிறார்.
யோவான் இயேசுவின் கதையை சொல்வதை விட, இயேசு சொல்கின்ற உரையாடல்களை முதன்மைப்படுத்துகிறார். நிக்கோதேமுவுடனான உரையாடல், சமாரியப் பெண்ணுடனான உரையாடல் போன்றவை எல்லாம் மறை பொருளை விளக்கும் அற்புதமான இறைவார்த்தைகளாய் அமைகின்றன.
இயேசு தனது இறை தன்மையை வெளிப் படுத்துகின்ற நிகழ்வுகளும் வாசகங்களும் யோவான் நற்செய்தியில் அதிகம். “நானே” என இறைமகன் இயேசு தன்னைப் பற்றி குறிப்பிடுகின்ற ஏழு முக்கியமான செய்திகள் இந்த நூலில் உண்டு. நானே வாழ்வளிக்கும் உணவு, நானே உலகின் ஒளி, நானே வாசல், நானே நல்ல ஆயன், நானே உயிர்ப்பும் உயிரும், நானே வழியும் உண்மையும் உயிரும், நானே உண்மையான திராட்சைக்கொடி போன்ற மிக முக்கியமான செய்திகள் யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளன.
மொழிநடையிலும் யோவான் மற்ற நற்செய்திகளிடமிருந்து வேறுபடுகிறார். ஒரே செய்தியைப் பதிவு செய்யும் இடங்களில் கூட தனித்துவமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். செயல்களை விட, செய்திகளை முக்கியப்படுத்துகிறார். நம்பிக்கைகள், விசுவாசம் போன்றவற்றை முன்னிலைப்படுத்துகிறார்.
“என்னை அறிந்தால் என் தந்தையையும் அறிவீர்கள்” எனும் தத்துவார்த்த உரையாடல்களை எளிமையாய் முன்வைக்கிறார்.
இயேசுவின் சீடர்களில் கடைசியாய் இறந்தவர் யோவான் தான். சொல்லப்போனால் முதுமையடைந்து இயற்கையாய் மரணம் அடைந்தவர் யோவான் தான். “நான் வரும்வரை இவன் (யோவான்) இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன?” என இயேசு ஒருமுறை தனது சீடரிடம் கூறினார். எனவே யோவானின் மரணத்துக்கு முன் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும் எனும் பேச்சும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தில் வலுவாக இருந்தது.
யோவானின் கடைசி காலத்தில் கி.பி. 60-க்கும் 90-க் கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சி, பரவல், புரிதல் போன்றவைகளை உள்வாங்கி, மிகச்சரியான நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கத்தில் அவர் இந்த நற்செய்தியை எழுதியுள்ளார். தனது நூலின் நோக்கம் என்ன என்பதை மிகத் தெளிவாக தனது நூலில், “இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன” என யோவான் குறிப்பிடுகிறார்.
யோவான் நற்செய்தி நூலை ஏற்கனவே கிறிஸ்தவ விசுவாசத்தில் இருப்பவர்களால் தான் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடியும். இயேசுவை முழுமையான மனிதனாகவும், முழுமையான இறைவனாகவும் இந்த நூல் அற்புதமாய்ப் படம்பிடிக்கிறது. புதியவர்கள் இயேசுவை அறிந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் யோவான் நூல் சரியானது என்று சொல்வதைவிட, கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழமாய் ஊன்றுவதற்கு இந்த நூல் மிகச்சரியான நூல்.
யோவான் நற்செய்தி நூல் நமக்குச் சொல்லும் முதன்மையான பாடம், “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (3:16) என்பதாகும்.
சேவியர்
இயேசுவின் தன்மைகளை யோவான் பதிவு செய்கிறார். யோவான் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அவரை இயேசு அழைத்து தனது சீடராக்கியிருந்தார்.
‘இயேசுவின் அன்புச் சீடர்’எனும் அடைமொழியுடன் அறியப்படும் யோவான், இயேசுவோடு மிக நெருங்கிச் செயல்பட்டவர். கடைசியில் தனது அன்னையை இயேசு இவரிடம் தான் ஒப்படைத்தார். தனது முக்கியமான பணிகளிலெல்லாம் இயேசு யோவானை உடன்படுத்தியிருந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன.
மிக முக்கியமான பல விஷயங்களை தனது நற்செய்தி நூலில் யோவான் குறிப்பிடாமல் விட்டு விடுகிறார். உதாரணமாக இயேசுவின் பிறப்பு சார்ந்த நிகழ்வுகள், அவரது திருமுழுக்கு, அவருக்கு வந்த சோதனைகள், பேய்களை ஓட்டுவது, மலைமேல் உருமாற்றம் அடைந்தது இறுதி இரவு உணவு, கெத்சமனே செபம், விண்ணேற்பு போன்றவற்றைச் சொல்லலாம்.
அதே நேரம், பிற நற்செய்தியாளர்கள் சொல்லாமல் விட்ட சில மிக மிக முக்கியமான விஷயங்களை யோவான் தனது நற்செய்தியில் கவனமாய்ப் பதிவு செய்கிறார்.
கானாவூர் திருமணத்தில் அன்னை மரியாளின் விண்ணப்பத்தை ஏற்று தண்ணீரைத் திராட்சை ரசமாய் மாற்றுகிறார் இயேசு. அதுவே இயேசுவின் புதுமைகளின் தொடக்கம். பெத்சதா குளக்கரையில் முப்பெத்தெட்டு ஆண்டுகளாய் நோயாளியாய் கிடந்த ஒருவனை இயேசு நலமாக்குகிறார். இறந்த இலாசரை நான்கு நாட்களுக்குப் பின் உயிருடன் எழுப்புகிறார். இவையெல்லாம் யோவான் நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடுகின்ற மிக முக்கியமான புதுமைகள்.
புதுமைகளை யோவான், “அரும் அடையாளங்கள்” என குறிப்பிடுகிறார். இவை வெறுமனே வியப்பின் நிகழ்வுகள் என்பதைத் தாண்டி இறைவனை அடையாளப் படுத்தும் அடையாளங்கள் என்பதை யோவான் நிறுவ விரும்புகிறார்.
யோவான் இயேசுவின் கதையை சொல்வதை விட, இயேசு சொல்கின்ற உரையாடல்களை முதன்மைப்படுத்துகிறார். நிக்கோதேமுவுடனான உரையாடல், சமாரியப் பெண்ணுடனான உரையாடல் போன்றவை எல்லாம் மறை பொருளை விளக்கும் அற்புதமான இறைவார்த்தைகளாய் அமைகின்றன.
இயேசு தனது இறை தன்மையை வெளிப் படுத்துகின்ற நிகழ்வுகளும் வாசகங்களும் யோவான் நற்செய்தியில் அதிகம். “நானே” என இறைமகன் இயேசு தன்னைப் பற்றி குறிப்பிடுகின்ற ஏழு முக்கியமான செய்திகள் இந்த நூலில் உண்டு. நானே வாழ்வளிக்கும் உணவு, நானே உலகின் ஒளி, நானே வாசல், நானே நல்ல ஆயன், நானே உயிர்ப்பும் உயிரும், நானே வழியும் உண்மையும் உயிரும், நானே உண்மையான திராட்சைக்கொடி போன்ற மிக முக்கியமான செய்திகள் யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளன.
மொழிநடையிலும் யோவான் மற்ற நற்செய்திகளிடமிருந்து வேறுபடுகிறார். ஒரே செய்தியைப் பதிவு செய்யும் இடங்களில் கூட தனித்துவமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். செயல்களை விட, செய்திகளை முக்கியப்படுத்துகிறார். நம்பிக்கைகள், விசுவாசம் போன்றவற்றை முன்னிலைப்படுத்துகிறார்.
“என்னை அறிந்தால் என் தந்தையையும் அறிவீர்கள்” எனும் தத்துவார்த்த உரையாடல்களை எளிமையாய் முன்வைக்கிறார்.
இயேசுவின் சீடர்களில் கடைசியாய் இறந்தவர் யோவான் தான். சொல்லப்போனால் முதுமையடைந்து இயற்கையாய் மரணம் அடைந்தவர் யோவான் தான். “நான் வரும்வரை இவன் (யோவான்) இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன?” என இயேசு ஒருமுறை தனது சீடரிடம் கூறினார். எனவே யோவானின் மரணத்துக்கு முன் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும் எனும் பேச்சும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தில் வலுவாக இருந்தது.
யோவானின் கடைசி காலத்தில் கி.பி. 60-க்கும் 90-க் கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சி, பரவல், புரிதல் போன்றவைகளை உள்வாங்கி, மிகச்சரியான நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கத்தில் அவர் இந்த நற்செய்தியை எழுதியுள்ளார். தனது நூலின் நோக்கம் என்ன என்பதை மிகத் தெளிவாக தனது நூலில், “இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன” என யோவான் குறிப்பிடுகிறார்.
யோவான் நற்செய்தி நூலை ஏற்கனவே கிறிஸ்தவ விசுவாசத்தில் இருப்பவர்களால் தான் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடியும். இயேசுவை முழுமையான மனிதனாகவும், முழுமையான இறைவனாகவும் இந்த நூல் அற்புதமாய்ப் படம்பிடிக்கிறது. புதியவர்கள் இயேசுவை அறிந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் யோவான் நூல் சரியானது என்று சொல்வதைவிட, கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழமாய் ஊன்றுவதற்கு இந்த நூல் மிகச்சரியான நூல்.
யோவான் நற்செய்தி நூல் நமக்குச் சொல்லும் முதன்மையான பாடம், “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (3:16) என்பதாகும்.
சேவியர்
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் நேற்று வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடைபெற்றது. இரவு 7.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது.
கொடியேற்றத்தின்போது ஆலய பங்குபேரவை துணை தலைவர் ஜாய் சிங் மரிய ஜாண், செயலாளர் மரிய ஜாண் சேவியர், பொருளாளர் கிளாடிஸ் பியூலா, துணை செயலாளர் பேபி, பங்குத்தந்தை அருள் ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 23-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருமுழுக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
கொடியேற்றத்தின்போது ஆலய பங்குபேரவை துணை தலைவர் ஜாய் சிங் மரிய ஜாண், செயலாளர் மரிய ஜாண் சேவியர், பொருளாளர் கிளாடிஸ் பியூலா, துணை செயலாளர் பேபி, பங்குத்தந்தை அருள் ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 23-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருமுழுக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெறும்.
திருவிழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணி கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள். ஏழையின் விரலுக்கு எட்டும் வரை உங்கள் கரங்களை நீட்டுங்கள். அதுவே அழகின் அழகு.
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்மாவுக்கு நன்றாய்த் தெரியும் (சங்கீதம் 139:14).
‘பெரியப்பா ஒரு கதை சொல்லுங்க’ என்றது ஒரு மெல்லிய குரல்.
தூங்கிக்கொண்டிருந்த நான் கண்களை கசக்கியபடி இருட்டில் விழித்து பார்த்தால் ஒரே இருட்டு. நேரம் இரவு பன்னிரண்டு மணியை தாண்டி புது நாளுக்குள் சென்றுகொண்டிருந்தது.
‘என்னம்மா உனக்கு தூக்கம் வரலையா?, முதலில் நீ ஒரு கதை சொல்லு, அதன் பிறகு உனக்கு பெரியப்பா ஒரு கதை சொல்றேன்’ என்றேன்.
அவள் உற்சாகமாய் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துச்சு. அந்த குருவி பல வண்ணத்தில் ரொம்ப அழகா இருந்துச்சு. தான் மட்டும் அழகு என எப்போதும் பெருமையா இருக்குமாம். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் அழகை பார்த்தே முடிவு எடுக்குமாம் அந்தக் குருவி.
ஒரு நாள், ஒரு காக்கா வந்து அந்த குருவி கிட்ட ‘நாம நண்பர்களாக இருக்கலாமா?’ என கேட்டது. அதுக்கு அந்த குருவி அசிங்கமா திட்டி அந்த காக்காவை விரட்டி விட்டுச்சு.
அந்த காக்கா மிகவும் வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டுப் போச்சு.
சில மாதங்களுக்கு பிறகு அந்த குருவிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அந்த குருவிக்கு இறகு எல்லாம் விழுந்து அழகு குலைந்து சாகும் தருவாயில் இருந்தது. இதை கேள்விப்பட்ட காக்கா பதற்றமடைந்து மருந்து கொண்டு வந்து அந்த குருவிக்கு கொடுத்தது. அது மட்டுமல்லாமல் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டது.
சில நாட்களுக்கு பிறகு அந்த குருவி குணமடைந்து அழகானது. அந்த காக்காவை பார்த்து, ‘எனக்கு துன்பம் வந்த போது எனது நண்பர்கள் யாரும் வரவில்லை. ஆனால் நீயோ என்னை காப்பாத்தி விட்டாய். உலகிலேயே அழகானவள் நீயே. இனிமேல் நீ தான் என் உயிர் தோழி’ என்றது.
பெரியப்பா இந்த கதை நமக்கு சொல்லும் பாடம் என்னன்னா, “யாரையும் அசிங்கப்படுத்தக்கூடாது, குறிப்பாக ஒருவரின் தோற்றத்தை வைத்து” என்று கதை சொல்லி முடித்தாள் மகள்.
இந்த கதையைக் கேட்டதும் மனதில் தோன்றிய பைபிள் வசனத்தைத் தான் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறேன்.
முகத்தோற்றதை பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை. அவமானங்கள் எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள்.
தென் இந்தியாவில் தான் அழகு சாதனப் பொருட்கள் அதிகமாக விற்கப் படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க பயிற்சி செய்தால் நலமாக இருக்கும்.
கடவுளின் படைப்பு எல்லாமே அழகானவை தான், அதற்கு மாற்று கருத்தில்லை. ‘என் தாயின் கருவறையில் என்னை அழகாக உருவாக்கிய கர்த்தரை நான் துதிப்பேன்’ என்று தாவீது மன்னன் பாடியதன் பொருள் அது தான்.
கடவுளுக்கு நாம் எப்பொழுதும் அழகானவர்கள் தான். நம் பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு நாம் எப்போதும் அழகானவர்களாகவே தெரிகிறோம். பின்னர் நாம் எதற்காக வருத்தப்படுகிறோம்?
அழகு என்பது புறம் சார்ந்ததா அகம் சார்ந்ததா என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள் ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று சொன்னார்கள்.
அழகு என்பதன் இலக்கணத்தை நாம் தவறான இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறோமோ எனும் சந்தேகம் எழுகிறது.
புறத்தோற்ற அழகு அழிய கூடியது, ஆனால் அகத்தின் அழகோ அழியாதது. ஏனென்றால் அது தூய ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, தன்னடக்கம் என்று எல்லாவற்றையும் உள்ளடங்கியது. அது தான் உண்மையான அழகு. எல்லோராலும் பாராட்டப்படும் அழகு. ஆதலால் தான் மற்ற எல்லா வார்த்தைகளைவிடவும் அழகு என்ற வார்த்தை வாயில் இருந்து உச்சரிக்கும் போதே நல்ல உணர்வை கொடுக்கிறது.
நாம் இவ்வுலகில் பிறந்தது ஒரு விபத்து அல்ல, அது கடவுளின் உன்னதத் திட்டம், ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் உண்டு. ‘புறக்கணிப்புகள் தவிர்க்க முடியாதவை என்பதும், நிராகரிப்புகள் நிலைப்பதில்லை’ என்பதும் இயேசுவின் வாழ்வும், உயிர்ப்பும் சொன்ன வாழ்வியல் பாடங்கள்.
தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணி கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள். ஏழையின் விரலுக்கு எட்டும் வரை உங்கள் கரங்களை நீட்டுங்கள். அதுவே அழகின் அழகு.
துலீப் தாமஸ், சென்னை.
‘பெரியப்பா ஒரு கதை சொல்லுங்க’ என்றது ஒரு மெல்லிய குரல்.
தூங்கிக்கொண்டிருந்த நான் கண்களை கசக்கியபடி இருட்டில் விழித்து பார்த்தால் ஒரே இருட்டு. நேரம் இரவு பன்னிரண்டு மணியை தாண்டி புது நாளுக்குள் சென்றுகொண்டிருந்தது.
‘என்னம்மா உனக்கு தூக்கம் வரலையா?, முதலில் நீ ஒரு கதை சொல்லு, அதன் பிறகு உனக்கு பெரியப்பா ஒரு கதை சொல்றேன்’ என்றேன்.
அவள் உற்சாகமாய் கதை சொல்ல ஆரம்பித்தாள்.
ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துச்சு. அந்த குருவி பல வண்ணத்தில் ரொம்ப அழகா இருந்துச்சு. தான் மட்டும் அழகு என எப்போதும் பெருமையா இருக்குமாம். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் அழகை பார்த்தே முடிவு எடுக்குமாம் அந்தக் குருவி.
ஒரு நாள், ஒரு காக்கா வந்து அந்த குருவி கிட்ட ‘நாம நண்பர்களாக இருக்கலாமா?’ என கேட்டது. அதுக்கு அந்த குருவி அசிங்கமா திட்டி அந்த காக்காவை விரட்டி விட்டுச்சு.
அந்த காக்கா மிகவும் வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டுப் போச்சு.
சில மாதங்களுக்கு பிறகு அந்த குருவிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அந்த குருவிக்கு இறகு எல்லாம் விழுந்து அழகு குலைந்து சாகும் தருவாயில் இருந்தது. இதை கேள்விப்பட்ட காக்கா பதற்றமடைந்து மருந்து கொண்டு வந்து அந்த குருவிக்கு கொடுத்தது. அது மட்டுமல்லாமல் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டது.
சில நாட்களுக்கு பிறகு அந்த குருவி குணமடைந்து அழகானது. அந்த காக்காவை பார்த்து, ‘எனக்கு துன்பம் வந்த போது எனது நண்பர்கள் யாரும் வரவில்லை. ஆனால் நீயோ என்னை காப்பாத்தி விட்டாய். உலகிலேயே அழகானவள் நீயே. இனிமேல் நீ தான் என் உயிர் தோழி’ என்றது.
பெரியப்பா இந்த கதை நமக்கு சொல்லும் பாடம் என்னன்னா, “யாரையும் அசிங்கப்படுத்தக்கூடாது, குறிப்பாக ஒருவரின் தோற்றத்தை வைத்து” என்று கதை சொல்லி முடித்தாள் மகள்.
இந்த கதையைக் கேட்டதும் மனதில் தோன்றிய பைபிள் வசனத்தைத் தான் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறேன்.
முகத்தோற்றதை பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை. அவமானங்கள் எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள்.
தென் இந்தியாவில் தான் அழகு சாதனப் பொருட்கள் அதிகமாக விற்கப் படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க பயிற்சி செய்தால் நலமாக இருக்கும்.
கடவுளின் படைப்பு எல்லாமே அழகானவை தான், அதற்கு மாற்று கருத்தில்லை. ‘என் தாயின் கருவறையில் என்னை அழகாக உருவாக்கிய கர்த்தரை நான் துதிப்பேன்’ என்று தாவீது மன்னன் பாடியதன் பொருள் அது தான்.
கடவுளுக்கு நாம் எப்பொழுதும் அழகானவர்கள் தான். நம் பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு நாம் எப்போதும் அழகானவர்களாகவே தெரிகிறோம். பின்னர் நாம் எதற்காக வருத்தப்படுகிறோம்?
அழகு என்பது புறம் சார்ந்ததா அகம் சார்ந்ததா என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள் ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று சொன்னார்கள்.
அழகு என்பதன் இலக்கணத்தை நாம் தவறான இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறோமோ எனும் சந்தேகம் எழுகிறது.
புறத்தோற்ற அழகு அழிய கூடியது, ஆனால் அகத்தின் அழகோ அழியாதது. ஏனென்றால் அது தூய ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, தன்னடக்கம் என்று எல்லாவற்றையும் உள்ளடங்கியது. அது தான் உண்மையான அழகு. எல்லோராலும் பாராட்டப்படும் அழகு. ஆதலால் தான் மற்ற எல்லா வார்த்தைகளைவிடவும் அழகு என்ற வார்த்தை வாயில் இருந்து உச்சரிக்கும் போதே நல்ல உணர்வை கொடுக்கிறது.
நாம் இவ்வுலகில் பிறந்தது ஒரு விபத்து அல்ல, அது கடவுளின் உன்னதத் திட்டம், ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் உண்டு. ‘புறக்கணிப்புகள் தவிர்க்க முடியாதவை என்பதும், நிராகரிப்புகள் நிலைப்பதில்லை’ என்பதும் இயேசுவின் வாழ்வும், உயிர்ப்பும் சொன்ன வாழ்வியல் பாடங்கள்.
தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணி கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள். ஏழையின் விரலுக்கு எட்டும் வரை உங்கள் கரங்களை நீட்டுங்கள். அதுவே அழகின் அழகு.
துலீப் தாமஸ், சென்னை.
மனவலிமையோ, பக்குவமோ, நம்மிடம் போதுமான அளவு இல்லை. என்ன செய்வது நம்மால் அது இயலாது என்பதை உணர்ந்து கடவுளுடைய கிருபையால் அதனை தினமும் அடைய முன்வரவேண்டும்.
“எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பது போல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல. எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 3:5)
தினமும் இரண்டு முறை ஒரு உதாணரமான மலையின் மேல் ஏறி இறங்க வேண்டும். ஒரு பெரிய சுமையை தலையில் வைத்துக்கொண்டு ஒரு ஆலயத்தை தினமும் 7 முறை சுற்றி வர வேண்டும். மாதந்தோறும் ஒரு பெருந்தொயையை கோவிலில் காணிக்கையாக கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றினால் தான் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். இவ்விதமாக கிறிஸ்து நமக்கு சொல்லியிருந்தால் உண்மையாகவே சிரமப்பட்டாகிலும் இவைகளை நிறைவேற்றி தேவனுடைய ஆசிர்வாதங்களை பெற நாம் தீவிரமாக முன்வருவோம். ஆனால் கிறிஸ்து இந்தவிதமாக எதையும் நமக்கு சொல்லவில்லை.
கிறிஸ்துவோ பிறரை நேசிச்ச வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். சாந்தமாக வாழ வேண்டும் என்பது போன்ற கட்டளைகளையே நிறைவேற்ற நமக்கு சொன்னார். முன்னர் சொன்னவைகளை நம்முடை உடல் வலிமையினால் எப்படியாவது செய்து விடலாம். ஆனால் பின்னர் சொல்லப்பட்டவைகளை சுயபலம், உடல் பல வைராக்கியம் ஆகியவற்றால் நிறைவேற்ற மனவலிமையும், பக்குவம் அவசியம். அநேகர் சரீரநிலையில் தங்களை ஒடுக்கி சிரமப்படுத்திக்கொள்வதையே அதிகபக்தியின் அடையாளமாக எண்ணுவதுண்டு.
இந்த நாட்களில் மிஷினரி ஸ்தாபனங்களுக்காக வாரிவழங்குவோர் அநேகர் உண்டு. சொந்த செலவில் மணிக்கூண்டுகளையும், தேவாலயங்களையும் கட்டிக்கொடுப்போர் உண்டு. பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்து புகழ்பெற்ற போதகர்களை பேச வைக்கின்றவர்கள் உண்டு. ஆயினும் இவ்விதம் தாராளமாக செயல்படுகின்ற பலரிடம் ஒரு சில சாதாரண கிறிஸ்தவ குணங்களும், பண்புகளும் கூட இருப்பதில்லை. ஒரு நல்ல விசுவாச வாழ்க்கையும், ஜெப வாழ்க்கையும் அவர்களுக்கு கூடாத காரியம். ஆனால் இது கடவுளை பிரியப்படுத்தாத வாழ்க்கை. பரலோகத்தில் யார் எவ்வளவு கிறிஸ்துவத்திற்காக பாடுபட்டார்கள் என்பது அல்ல. யார் கிறிஸ்துவின் வழியில் நடக்க முயற்சித்தார்கள் என்பதே பார்க்கப்படும். ஆனால் கடவுள் நம்முடைய இதய நிலையில் நாம் சிரமத்தை ஏற்பதையும் கடவுளின் விருப்பத்திற்கு இசைந்து வாழும் கடினமான பாதையை தெரிந்து கொள்ளுவதையே விரும்புகின்றார்.
அந்த மனவலிமையோ, பக்குவமோ, நம்மிடம் போதுமான அளவு இல்லை. என்ன செய்வது நம்மால் அது இயலாது என்பதை உணர்ந்து கடவுளுடைய கிருபையால் அதனை தினமும் அடைய முன்வரவேண்டும். சுயபலம், வைராக்கியம் ஆகியவைகளை சாராமல் தினமும் தேவனுடைய கிருபையின் மேல் சாய்ந்து ஜெபம், தியானம், ஐக்கியம் ஆகிய அனுபவங்கள் மூலம் அந்த மனவலிமையையும், பக்குவத்தையும் பெறவேண்டும். அப்போது கடவுளுடைய கட்டளைகள் எளிதாக நிறைவேறும். ஆசீர்வாதங்களும் பெருகும்.
“இறைவனை பயத்துடன் வழிபடுகிறவனாக அல்ல.
அன்புடன் அவர் வழியில் நடக்கிறவனாக இரு. அதுவே பக்தி”
சாம்சன்பால்.
தினமும் இரண்டு முறை ஒரு உதாணரமான மலையின் மேல் ஏறி இறங்க வேண்டும். ஒரு பெரிய சுமையை தலையில் வைத்துக்கொண்டு ஒரு ஆலயத்தை தினமும் 7 முறை சுற்றி வர வேண்டும். மாதந்தோறும் ஒரு பெருந்தொயையை கோவிலில் காணிக்கையாக கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றினால் தான் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார். இவ்விதமாக கிறிஸ்து நமக்கு சொல்லியிருந்தால் உண்மையாகவே சிரமப்பட்டாகிலும் இவைகளை நிறைவேற்றி தேவனுடைய ஆசிர்வாதங்களை பெற நாம் தீவிரமாக முன்வருவோம். ஆனால் கிறிஸ்து இந்தவிதமாக எதையும் நமக்கு சொல்லவில்லை.
கிறிஸ்துவோ பிறரை நேசிச்ச வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். சாந்தமாக வாழ வேண்டும் என்பது போன்ற கட்டளைகளையே நிறைவேற்ற நமக்கு சொன்னார். முன்னர் சொன்னவைகளை நம்முடை உடல் வலிமையினால் எப்படியாவது செய்து விடலாம். ஆனால் பின்னர் சொல்லப்பட்டவைகளை சுயபலம், உடல் பல வைராக்கியம் ஆகியவற்றால் நிறைவேற்ற மனவலிமையும், பக்குவம் அவசியம். அநேகர் சரீரநிலையில் தங்களை ஒடுக்கி சிரமப்படுத்திக்கொள்வதையே அதிகபக்தியின் அடையாளமாக எண்ணுவதுண்டு.
இந்த நாட்களில் மிஷினரி ஸ்தாபனங்களுக்காக வாரிவழங்குவோர் அநேகர் உண்டு. சொந்த செலவில் மணிக்கூண்டுகளையும், தேவாலயங்களையும் கட்டிக்கொடுப்போர் உண்டு. பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்து புகழ்பெற்ற போதகர்களை பேச வைக்கின்றவர்கள் உண்டு. ஆயினும் இவ்விதம் தாராளமாக செயல்படுகின்ற பலரிடம் ஒரு சில சாதாரண கிறிஸ்தவ குணங்களும், பண்புகளும் கூட இருப்பதில்லை. ஒரு நல்ல விசுவாச வாழ்க்கையும், ஜெப வாழ்க்கையும் அவர்களுக்கு கூடாத காரியம். ஆனால் இது கடவுளை பிரியப்படுத்தாத வாழ்க்கை. பரலோகத்தில் யார் எவ்வளவு கிறிஸ்துவத்திற்காக பாடுபட்டார்கள் என்பது அல்ல. யார் கிறிஸ்துவின் வழியில் நடக்க முயற்சித்தார்கள் என்பதே பார்க்கப்படும். ஆனால் கடவுள் நம்முடைய இதய நிலையில் நாம் சிரமத்தை ஏற்பதையும் கடவுளின் விருப்பத்திற்கு இசைந்து வாழும் கடினமான பாதையை தெரிந்து கொள்ளுவதையே விரும்புகின்றார்.
அந்த மனவலிமையோ, பக்குவமோ, நம்மிடம் போதுமான அளவு இல்லை. என்ன செய்வது நம்மால் அது இயலாது என்பதை உணர்ந்து கடவுளுடைய கிருபையால் அதனை தினமும் அடைய முன்வரவேண்டும். சுயபலம், வைராக்கியம் ஆகியவைகளை சாராமல் தினமும் தேவனுடைய கிருபையின் மேல் சாய்ந்து ஜெபம், தியானம், ஐக்கியம் ஆகிய அனுபவங்கள் மூலம் அந்த மனவலிமையையும், பக்குவத்தையும் பெறவேண்டும். அப்போது கடவுளுடைய கட்டளைகள் எளிதாக நிறைவேறும். ஆசீர்வாதங்களும் பெருகும்.
“இறைவனை பயத்துடன் வழிபடுகிறவனாக அல்ல.
அன்புடன் அவர் வழியில் நடக்கிறவனாக இரு. அதுவே பக்தி”
சாம்சன்பால்.
நாகர்கோவில், கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா 15-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
விழாவில் 15-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, புகழ்மாலை நடைபெறுகிறது.
17-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலிக்கு பேரருட்பணி அமிர்தராஜ், பெர்பெச்சுவல் ஆன்றனி, செல்வின் சேவியர், ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். 20-ந் தேதி குழித்துறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.
23-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு அருட்பணி ஜெரேமியாஸ் தலைமையில், மார்க்கோணி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. பேரருட்பணி அலோசியஸ் பென்சிகர் தலைமையில், லியோன் கென்சன் மறையுரையாற்றுகிறார். சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறுகிறது.
24-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலிக்கு பேரருட்பணி கில்லாரியுஸ் தலைமையில், ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு ஆங்கில திருப்பலி, 11 மணிக்கு மலையாள திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி ராபர்ட் தலைமையில், அனில் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றித்திருப்பலி அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் 15-ந் தேதி மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, புகழ்மாலை நடைபெறுகிறது.
17-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலிக்கு பேரருட்பணி அமிர்தராஜ், பெர்பெச்சுவல் ஆன்றனி, செல்வின் சேவியர், ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கி மறையுரையாற்றுகின்றனர். 20-ந் தேதி குழித்துறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.
23-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருப்பலிக்கு அருட்பணி ஜெரேமியாஸ் தலைமையில், மார்க்கோணி மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. பேரருட்பணி அலோசியஸ் பென்சிகர் தலைமையில், லியோன் கென்சன் மறையுரையாற்றுகிறார். சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெறுகிறது.
24-ந் தேதி காலை 7.30 மணிக்கு கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலிக்கு பேரருட்பணி கில்லாரியுஸ் தலைமையில், ஜெனிபர் எடிசன் மறையுரையாற்றுகிறார். 10 மணிக்கு ஆங்கில திருப்பலி, 11 மணிக்கு மலையாள திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி ராபர்ட் தலைமையில், அனில் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றித்திருப்பலி அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடக்கிறது.
முட்டம் சகல புனிதர்கள் ஆலய சிறப்பு திருப்பலியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் பங்கேற்றார்.
முட்டத்தில் சகல புனிதர்கள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்கு திருவிழா தொடங்கியது. அதன் பிறகு விழா நாட்களில் தினமும் திருப்பலி, செபமாலை, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
9-ம் திருவிழாவன்று நடந்த திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். 10-ம் நாள் திருவிழாவன்று காலை 6.30 மணிக்கு செபமாலை, 7 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்குதந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம் மற்றும் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
9-ம் திருவிழாவன்று நடந்த திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். 10-ம் நாள் திருவிழாவன்று காலை 6.30 மணிக்கு செபமாலை, 7 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்குதந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம் மற்றும் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
தன் தேவையை தன் கடமையை நிறைவு செய்ய முடியாதவர்கள் மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர்களாக உருவாக முடியாது.
பிறரை நம்பி, உழைக்காமல் வாழும் மனிதர்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றனர். என் குழந்தையை சிறப்பாக வளர்க்கிறேன், மரியாதையுடன் நடத்துகிறேன் என்ற பெயரில் எவ்விதமான வேலைகளையும் செய்ய அனுமதிக்காமல் குழந்தைகளை பெற்றோர் வளர்க்கின்றனர். இதனால் குழந்தைகள் எதற்கும் பயன்படாத, எந்த வேலைகளையும் செய்யாதவர்களாக வளர்க்கின்றனர். தான் போர்த்தி படுத்த போர்வையை கூட மடித்து வைக்க தெரியாதவர்களாக தான் குடித்த காபி தம்ளரை கூட கழுவ தெரியாதவர்களாக மாறி விடுகின்றனர்.
தன் தேவையை தன் கடமையை நிறைவு செய்ய முடியாதவர்கள் மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர்களாக உருவாக முடியாது. தன் தேவையை நிறைவு செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே தன வாழ்க்கைக்கான அட்டவணையையும் தயாரிக்க தெரிந்தவர்கள் ஆவார். தேவையில்லாத காரியங்களுக்கெல்லாம் பிறரை சார்ந்திருக்கும் கலாசாரத்தில் இருநது நாம் வெளிவந்தே ஆகவேண்டும். இந்தியாவிலுள்ள இன்னொரு மோசமான கலாசாரத்தில் ஒன்று ஒரு தலைவர் வருகிறார் என்றால் காலையில் இருந்தே அவருக்காக கால் கடுக்க காத்திருப்து இப்படி தங்களது ஆக்கப்பூர்வமான ஆற்றலை பெரும்பாலானோர் வீணாக்கி வருகின்றனர்.
அமெரிக்காவில் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடைபெற்றது. போருக்கு தேவையான பொருட்களை பத்து வீரர்கள் சிரமப்பட்டு சுமந்து சென்றனர். அந்த நேரத்தில் அக்குழுவின் தலைவன் குதிரையின் மீது அமர்ந்திருந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தான். அப்போது அங்கு குதிரையில் வந்த ஜார்ஜ வாஷிங்டன், ‘அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே.. நீயும் அவர்களோடு இணைந்து வேலை செய்யலாமே‘ என்றார். உடனே நான் இக்குழுவின் தலைவன் என்ற பதிலளித்தான். உடனே ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களோடு இணைந்து வேலை செய்தார். தலைவன் என்பவன் சொகுசாக வாழ்வதற்கு அழைக்கப்படவில்லை. மக்களோடு களம் இறங்கி உழைப்பவரே தலைவர்.
இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நமது அடிமை நல உணர்வுகளை உடைத்தெறிவதற்கும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நாமே நிறைவு செய்கிறவர்களாக மாற வேண்டும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
தன் தேவையை தன் கடமையை நிறைவு செய்ய முடியாதவர்கள் மிகச்சிறந்த ஆளுமை கொண்டவர்களாக உருவாக முடியாது. தன் தேவையை நிறைவு செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே தன வாழ்க்கைக்கான அட்டவணையையும் தயாரிக்க தெரிந்தவர்கள் ஆவார். தேவையில்லாத காரியங்களுக்கெல்லாம் பிறரை சார்ந்திருக்கும் கலாசாரத்தில் இருநது நாம் வெளிவந்தே ஆகவேண்டும். இந்தியாவிலுள்ள இன்னொரு மோசமான கலாசாரத்தில் ஒன்று ஒரு தலைவர் வருகிறார் என்றால் காலையில் இருந்தே அவருக்காக கால் கடுக்க காத்திருப்து இப்படி தங்களது ஆக்கப்பூர்வமான ஆற்றலை பெரும்பாலானோர் வீணாக்கி வருகின்றனர்.
அமெரிக்காவில் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன். அவர் தலைமையில் அமெரிக்காவில் போர் நடைபெற்றது. போருக்கு தேவையான பொருட்களை பத்து வீரர்கள் சிரமப்பட்டு சுமந்து சென்றனர். அந்த நேரத்தில் அக்குழுவின் தலைவன் குதிரையின் மீது அமர்ந்திருந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தான். அப்போது அங்கு குதிரையில் வந்த ஜார்ஜ வாஷிங்டன், ‘அவர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே.. நீயும் அவர்களோடு இணைந்து வேலை செய்யலாமே‘ என்றார். உடனே நான் இக்குழுவின் தலைவன் என்ற பதிலளித்தான். உடனே ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களோடு இணைந்து வேலை செய்தார். தலைவன் என்பவன் சொகுசாக வாழ்வதற்கு அழைக்கப்படவில்லை. மக்களோடு களம் இறங்கி உழைப்பவரே தலைவர்.
இறையருளின் காலமாகிய இந்த தவக்காலத்தில் நமது அடிமை நல உணர்வுகளை உடைத்தெறிவதற்கும் நாம் அழைக்கப்படுகிறோம். நமது தேவைகளை நாமே நிறைவு செய்கிறவர்களாக மாற வேண்டும்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.
முட்டம் சகல புனிதர்கள் ஆலய திருவிழா திருப்பலி நேற்று இரவு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முட்டம் சகல புனிதர்கள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 8-ம் திருவிழாவான நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும் நடந்தது. அருட்பணியாளர் பென்னி தலைமை தாங்கினார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்றனர். இரவு 8.30 மணிக்கு நீங்களும் பாடலாம் என்ற நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு சகல புனிதர்கள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்கு தந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் செய்துள்ளனர்.
9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு சகல புனிதர்கள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்கு தந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் செய்துள்ளனர்.






