என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முட்டம் சகல புனிதர்கள் ஆலய விழாவில் திருப்பலி
Byமாலை மலர்9 Nov 2019 4:11 AM GMT (Updated: 9 Nov 2019 4:11 AM GMT)
முட்டம் சகல புனிதர்கள் ஆலய திருவிழா திருப்பலி நேற்று இரவு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முட்டம் சகல புனிதர்கள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 8-ம் திருவிழாவான நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலையும், தொடர்ந்து திருப்பலியும் நடந்தது. அருட்பணியாளர் பென்னி தலைமை தாங்கினார். அருட்பணியாளர் சாம் மேத்யூ மறையுரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திரளானவர்கள் பங்கேற்றனர். இரவு 8.30 மணிக்கு நீங்களும் பாடலாம் என்ற நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு சகல புனிதர்கள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்கு தந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் செய்துள்ளனர்.
9-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) மாலை ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு கண்ணை கவரும் வகையில் வாணவேடிக்கை நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 மணிக்கு சகல புனிதர்கள் திருவிழா திருப்பலியும் நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், இணை பங்கு தந்தைகள் ஜோஸ் ஜெ.பெஸ்க், சகாய ஜெரோம், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், அருட் சகோதரர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X