என் மலர்
கிறித்தவம்
நாகர்கோவில் ராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. இதனையொட்டி நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது.
திருப்பலிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். பிஷப் ரெமிஜியூஸ் பள்ளி தாளாளர் ஸ்டேன்லி சகாய சீலன் அருளுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.
24-ந் தேதி இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நள்ளிரவு திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 6.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலையில் நடைபெறும் திருப்பலிக்கு மேலராமன்புதூர் பங்கு பணியாளர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார். சூசைபுரம் பங்கு பணியாளர் ஜெகன் சில்வெஸ்டர் அருளுரையாற்றுகிறார்.
27-ந் தேதி காலை 10 மணிக்கு கிறிஸ்தவ வாழ்வு சமூகம் சார்பில் திருமுழுக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. 28-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலிக்கு பக்சர் மறை மாவட்ட அருட்பணியாளர் அனில் பெனட் தலைமை தாங்குகிறார். இதில் முதல் திருவிருந்து பெறும் குழந்தைகளின் குடும்பத்தினர் பங்கேற்கிறார்கள்.
29-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார். மதியம் 2.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு பணியாளர் பேட்ரிக் சேவியர், இணை பங்குபணியாளர் ஜார்ஜ் கபிரியேல் கிஷோர், பங்கு நிர்வாகம், பங்கு இறைமக்கள் இணைந்து செய்துள்ளனர்.
திருப்பலிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். பிஷப் ரெமிஜியூஸ் பள்ளி தாளாளர் ஸ்டேன்லி சகாய சீலன் அருளுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.
24-ந் தேதி இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நள்ளிரவு திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 6.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலையில் நடைபெறும் திருப்பலிக்கு மேலராமன்புதூர் பங்கு பணியாளர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார். சூசைபுரம் பங்கு பணியாளர் ஜெகன் சில்வெஸ்டர் அருளுரையாற்றுகிறார்.
27-ந் தேதி காலை 10 மணிக்கு கிறிஸ்தவ வாழ்வு சமூகம் சார்பில் திருமுழுக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. 28-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலிக்கு பக்சர் மறை மாவட்ட அருட்பணியாளர் அனில் பெனட் தலைமை தாங்குகிறார். இதில் முதல் திருவிருந்து பெறும் குழந்தைகளின் குடும்பத்தினர் பங்கேற்கிறார்கள்.
29-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார். மதியம் 2.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு பணியாளர் பேட்ரிக் சேவியர், இணை பங்குபணியாளர் ஜார்ஜ் கபிரியேல் கிஷோர், பங்கு நிர்வாகம், பங்கு இறைமக்கள் இணைந்து செய்துள்ளனர்.
பழகியவர்களிடம் நம்முடைய கசப்பான அனுபவங்களையும், மன்னிக்க முடியாத குற்றங்களோடும் நம் இருதயத்தில் குற்றமுள்ளவர்களாய் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய காலகட்டங்களில் நாம் தேவனுக்கு பிடிக்காத காரியங்களை செய்து கொண்டு மற்றவர்கள் நம்மை பார்க்கும் போது நாம் பெரிய ஆளாக தெரிய வேண்டும், நம்மை எல்லோரும் நல்லவர்கள் என்று நினைக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படியாக நாம் வெளித்தோற்றத்தில் நல்லவர்களாகவும், உள் தோற்றத்தில் கெட்டவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் தேவன் நம்மை எப்படி பார்க்கிறார் என்றால் நம்முடைய வெளித்தோற்றத்தை அல்ல. நம்முடைய இருதயத்தை பார்க்கிறார்.
எனவே நாம் பிறந்தது முதல் நன்மை, தீமை அறிய பழகின இன்றைய நாட்கள் வரை யாரையெல்லாமல் பார்த்திருக்கிறோம். அப்படி பார்த்து பழகியவர்களிடம் நம்முடைய கசப்பான அனுபவங்களையும், மன்னிக்க முடியாத குற்றங்களோடும் நம் இருதயத்தில் குற்றமுள்ளவர்களாய் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதைத்தான் வேதாகமத்தில் கொலோ: 3-13-ல் ஒருவரை யொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாமும் இந்த தவக்காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டும் நல்லவர்களாய் இருக்காமல் இருதயத்தில் நல்ல சிந்தனை உடையவர்களாய் இருப்போம்.
இப்படி இருதயத்தில் நல்ல சிந்தனையை நாம் கொண்டு வரும் போது இதுவரை யாரையெல்லாமல் வெறுத்து இவர்கள் நமக்கு ஆகாது, இவர்கள் செய்த குற்றங்களை மன்னிக்கவே முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்காமல், நான் குற்றம் செய்திருந்திருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் குற்றங்களையும் நான் மன்னித்து விட்டேன் என்று பகையை மறந்து வாழ வேண்டும் என்று தேவனிடத்தில் ஜெபிப்போம். நம்முடைய குற்றங்களுக்காக சிலுவையில் பாடுகள் அனுபவித்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்க நாம் ஒவ்வொருவருக்கும் தேவன் கிருபை செய்வாராக ஆமென்.
சகோ.ஜே.ஜெயசுதன், இயேசு கிறிஸ்துவின் ஆர்ப்பரிப்பின் ஊழியங்கள், திருப்பூர்.
எனவே நாம் பிறந்தது முதல் நன்மை, தீமை அறிய பழகின இன்றைய நாட்கள் வரை யாரையெல்லாமல் பார்த்திருக்கிறோம். அப்படி பார்த்து பழகியவர்களிடம் நம்முடைய கசப்பான அனுபவங்களையும், மன்னிக்க முடியாத குற்றங்களோடும் நம் இருதயத்தில் குற்றமுள்ளவர்களாய் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதைத்தான் வேதாகமத்தில் கொலோ: 3-13-ல் ஒருவரை யொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நாமும் இந்த தவக்காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டும் நல்லவர்களாய் இருக்காமல் இருதயத்தில் நல்ல சிந்தனை உடையவர்களாய் இருப்போம்.
இப்படி இருதயத்தில் நல்ல சிந்தனையை நாம் கொண்டு வரும் போது இதுவரை யாரையெல்லாமல் வெறுத்து இவர்கள் நமக்கு ஆகாது, இவர்கள் செய்த குற்றங்களை மன்னிக்கவே முடியாது என்று எண்ணிக்கொண்டிருக்காமல், நான் குற்றம் செய்திருந்திருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் குற்றங்களையும் நான் மன்னித்து விட்டேன் என்று பகையை மறந்து வாழ வேண்டும் என்று தேவனிடத்தில் ஜெபிப்போம். நம்முடைய குற்றங்களுக்காக சிலுவையில் பாடுகள் அனுபவித்தார் என்று நினைவு கூறும் இந்த தவக்காலத்தில் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னிக்க நாம் ஒவ்வொருவருக்கும் தேவன் கிருபை செய்வாராக ஆமென்.
சகோ.ஜே.ஜெயசுதன், இயேசு கிறிஸ்துவின் ஆர்ப்பரிப்பின் ஊழியங்கள், திருப்பூர்.
திருத்தூதர் பவுல் எழுதிய திருமுகங்களில் முக்கியமானவற்றின் பட்டியலில் கலாத்தியர் நூலுக்கு சிறப்பிடம் உண்டு. “நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆதல்” பற்றிய சிந்தனையை இந்த நூல் பேசுகிறது.
எந்த ஒரு திருமுகத்தை வாசிக்கும் போதும் மூன்று கேள்விகளை கேட்கவேண்டும் என்கின்றனர் விவிலிய அறிஞர்கள்.
ஒன்று, இந்த நூல் ஏன் எழுதப்பட்டது?
இரண்டு, இந்த கடிதம் எந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறது?
மூன்று, இந்த கடிதம் எந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறது.
இந்த மூன்று கேள்விகளையும் மனதில் அசைபோட்டபடி கலாத்தியர் நூலுக்குள் நுழையலாம்.
திருத்தூதர் பவுல் எழுதிய திருமுகங்களில் முக்கியமானவற்றின் பட்டியலில் கலாத்தியர் நூலுக்கு சிறப்பிடம் உண்டு. “நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆதல்” பற்றிய சிந்தனையை இந்த நூல் பேசுகிறது. ‘இறைவனுக்கு அடிமையாக வாழும்போது நாம் விடுதலையாய் வாழ்கிறோம்’ எனும் இறையியல் தத்துவத்தை கலாத்தியர் நூல் விளக்குகிறது.
கலாத்தியர் நூல் சிலரை மிக அதிகமாக வசீகரிக்கிறது. உதாரணமாக, புராட்டஸ்டன்ட் பிரிவை ஆரம்பித்த மார்டின் லூதருக்குப் பிரியமான நூல் கலாத்தியர். அவருடைய சித்தாந்தமான ‘நம்பிக்கை மட்டுமே நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக்கும்’ எனும் சிந்தனை இதில் வலுவாக இருப்பது தான் அதன் காரணம். இதை அவர் “சீர்திருத்தத்தின் பேருரிமைப் பத்திரம்” என அழைத்தார். அதே போல ‘த பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ நூலை எழுதிய ஜான் புனியனுக்கும் இந்த நூல் தான் ஆதார சுருதி.
இது ரொம்பவே உணர்ச்சி மயமான ஒரு நூல். ஆறு அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் உணர்ச்சிகள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதை உணரலாம். இன்னொன்று, இது ரொம்பவே தனிப்பட்ட கடிதம். பவுல் தன்னைப்பற்றி இந்த நூலில் அதிகம் எழுதுகிறார். தனது பலவீனங்கள் குறித்து எழுதுகிறார். அவரது கருத்து வேறுபாடுகளை எழுதுகிறார்.
இந்த நூல் ரொம்பவே அறிவார்ந்த நூல். பவுல் அறிவாளி என்பதும், அவர் சிறந்த கல்வி கற்றவர் என்பதும் நமக்குத் தெரியும். தான் கற்ற வித்தைகளையெல்லாம் அவர் கொட்டி வைத்திருக்கும் நூல் கலாத்தியர் நூல் என தாராளமாகச் சொல்லலாம். எளிதில் புரிந்து கொள்ள முடியாத, தூய ஆவியானவரின் துணையோடு தான் ரகசியங்களை அவிழ்க்க முடியும் என்கிறது கலாத்தியர் நூல்.
இது ரொம்பவே ஆன்மிக ஆழம் பொருந்தியது என்பது இன்னொரு சிறப்பு. கர்வத்தின் கடைசி துளியையும் கழுவிக் களைகின்ற ஆற்றல் இந்தக் கலாத்தியர் நூலுக்கு உண்டு. உண்மையான அர்ப்பணிப்போடு இந்த நூலை முழுமையாய் வாசித்து நேசிப்பவர்கள், தாழ்மையின் தன்மையை அணிந்து கொள்வார்கள் என்பது சர்வ நிச்சயம்.
இந்த நூலின் இன்னொரு தன்மை இதிலிருக்கின்ற ஆழமான, தீவிரமான விவாதங்கள். பவுல் தனது வாளை திருச்சபைக்குள்ளேயே வீசுகின்றார். எது சரி, எது தவறு என்பதை தயவு தாட்சண்யமில்லாமல் அவர் நிலைநிறுத்துகிறார். கருத்து வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு பயணிப்பதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை, இறைவனின் திருவுளத்துக்கு ஏற்ற கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு பயணிப்பது என்பதையே பவுல் வலியுறுத்துகிறார்.
சட்டங்களின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தவர் பவுல். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டுமென வெறியுடன் அலைந்தவர். ஸ்தேவானின் படுகொலையின் போது வேடிக்கை பார்த்தவர்.
கடைசியில் தமஸ்கு செல்லும் வழியில் இயேசுவே அவரை எதிர்கொண்டு அவரது வழியை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறார். இப்போது அவர் மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்பாளர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவரது சட்ட அறிவும் பின்னணியில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
பவுல் கலாத்தியத் திருச் சபையை இரண்டு முறை சந்தித்தார். முதல்முறை கலாத்தியர்கள் பவுலை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்றினர். நற்செய்தியை மிக ஆவலுடன் உள்வாங்கினர். பவுலும் அவர்களுக்காக கடுமையாக உழைத்தார். ஆனால் இரண்டாம் முறை சந்தித்த பின் உள்ளே பிரிவினை சகோதரர்கள் தலையெடுத்தனர். பவுலின் நற்செய்தியைத் திரித்துக் கூறத் தொடங்கினர். அவர்களை பவுல் கண்டிக்கிறார். இந்த கடிதத்தை கி.பி. 57-ல் எபேசு நகரிலிருந்து எழுதுகிறார்.
கிறிஸ்து இயேசுவை மையமாக வைத்தே இந்த நூலை முழுக்க முழுக்க பவுல் எழுதுகிறார். உடலாலும், உள்ளத்தாலும் தான் இறைவனோடு இரண்டறக் கலந்திருக்கும் நிலையை பதிவுசெய்கிறார்.
நற்செய்தி தனக்கு இறைவனால் நேரடியாகத் தரப்பட்டது என்றும், மீட்பு என்பது நல்ல செயல்கள் செய்வதாலோ சட்டத்தைக் கைக்கொள்வதாலோ கிடைப்பதல்ல, மாறாக இறைமகன் மீது வைக்கும் நம்பிக்கையால் கிடைப்பது என்கிறார் பவுல். சட்டத்தின் கரம்பற்றிய நாம், இப்போது பற்ற வேண்டியது இயேசுவின் கரத்தை என்கிறார்.
ஆனால் இது நம்மை சோம்பேறியாக்கவோ, செயலற்றவர்களாகவோ ஆக்கி விடக் கூடாது, பிறரன்புப் பணியை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்பதை அவர் புரிய வைக்கிறார். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள்” என அறைகூவல் விடுக்கிறார். “ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்” என உயரிய போதனையை அளிக்கிறார்.
எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாத அற்புதமான ஒரு கடிதம் கலாத்தியர்.
ஒன்று, இந்த நூல் ஏன் எழுதப்பட்டது?
இரண்டு, இந்த கடிதம் எந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறது?
மூன்று, இந்த கடிதம் எந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறது.
இந்த மூன்று கேள்விகளையும் மனதில் அசைபோட்டபடி கலாத்தியர் நூலுக்குள் நுழையலாம்.
திருத்தூதர் பவுல் எழுதிய திருமுகங்களில் முக்கியமானவற்றின் பட்டியலில் கலாத்தியர் நூலுக்கு சிறப்பிடம் உண்டு. “நம்பிக்கையினால் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆதல்” பற்றிய சிந்தனையை இந்த நூல் பேசுகிறது. ‘இறைவனுக்கு அடிமையாக வாழும்போது நாம் விடுதலையாய் வாழ்கிறோம்’ எனும் இறையியல் தத்துவத்தை கலாத்தியர் நூல் விளக்குகிறது.
கலாத்தியர் நூல் சிலரை மிக அதிகமாக வசீகரிக்கிறது. உதாரணமாக, புராட்டஸ்டன்ட் பிரிவை ஆரம்பித்த மார்டின் லூதருக்குப் பிரியமான நூல் கலாத்தியர். அவருடைய சித்தாந்தமான ‘நம்பிக்கை மட்டுமே நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக்கும்’ எனும் சிந்தனை இதில் வலுவாக இருப்பது தான் அதன் காரணம். இதை அவர் “சீர்திருத்தத்தின் பேருரிமைப் பத்திரம்” என அழைத்தார். அதே போல ‘த பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ நூலை எழுதிய ஜான் புனியனுக்கும் இந்த நூல் தான் ஆதார சுருதி.
இது ரொம்பவே உணர்ச்சி மயமான ஒரு நூல். ஆறு அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் உணர்ச்சிகள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுவதை உணரலாம். இன்னொன்று, இது ரொம்பவே தனிப்பட்ட கடிதம். பவுல் தன்னைப்பற்றி இந்த நூலில் அதிகம் எழுதுகிறார். தனது பலவீனங்கள் குறித்து எழுதுகிறார். அவரது கருத்து வேறுபாடுகளை எழுதுகிறார்.
இந்த நூல் ரொம்பவே அறிவார்ந்த நூல். பவுல் அறிவாளி என்பதும், அவர் சிறந்த கல்வி கற்றவர் என்பதும் நமக்குத் தெரியும். தான் கற்ற வித்தைகளையெல்லாம் அவர் கொட்டி வைத்திருக்கும் நூல் கலாத்தியர் நூல் என தாராளமாகச் சொல்லலாம். எளிதில் புரிந்து கொள்ள முடியாத, தூய ஆவியானவரின் துணையோடு தான் ரகசியங்களை அவிழ்க்க முடியும் என்கிறது கலாத்தியர் நூல்.
இது ரொம்பவே ஆன்மிக ஆழம் பொருந்தியது என்பது இன்னொரு சிறப்பு. கர்வத்தின் கடைசி துளியையும் கழுவிக் களைகின்ற ஆற்றல் இந்தக் கலாத்தியர் நூலுக்கு உண்டு. உண்மையான அர்ப்பணிப்போடு இந்த நூலை முழுமையாய் வாசித்து நேசிப்பவர்கள், தாழ்மையின் தன்மையை அணிந்து கொள்வார்கள் என்பது சர்வ நிச்சயம்.
இந்த நூலின் இன்னொரு தன்மை இதிலிருக்கின்ற ஆழமான, தீவிரமான விவாதங்கள். பவுல் தனது வாளை திருச்சபைக்குள்ளேயே வீசுகின்றார். எது சரி, எது தவறு என்பதை தயவு தாட்சண்யமில்லாமல் அவர் நிலைநிறுத்துகிறார். கருத்து வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு பயணிப்பதல்ல கிறிஸ்தவ வாழ்க்கை, இறைவனின் திருவுளத்துக்கு ஏற்ற கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு பயணிப்பது என்பதையே பவுல் வலியுறுத்துகிறார்.
சட்டங்களின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தவர் பவுல். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டுமென வெறியுடன் அலைந்தவர். ஸ்தேவானின் படுகொலையின் போது வேடிக்கை பார்த்தவர்.
கடைசியில் தமஸ்கு செல்லும் வழியில் இயேசுவே அவரை எதிர்கொண்டு அவரது வழியை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறார். இப்போது அவர் மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்பாளர். இந்த நூலை அவர் எழுதுவதற்கு அவரது சட்ட அறிவும் பின்னணியில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
பவுல் கலாத்தியத் திருச் சபையை இரண்டு முறை சந்தித்தார். முதல்முறை கலாத்தியர்கள் பவுலை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்றினர். நற்செய்தியை மிக ஆவலுடன் உள்வாங்கினர். பவுலும் அவர்களுக்காக கடுமையாக உழைத்தார். ஆனால் இரண்டாம் முறை சந்தித்த பின் உள்ளே பிரிவினை சகோதரர்கள் தலையெடுத்தனர். பவுலின் நற்செய்தியைத் திரித்துக் கூறத் தொடங்கினர். அவர்களை பவுல் கண்டிக்கிறார். இந்த கடிதத்தை கி.பி. 57-ல் எபேசு நகரிலிருந்து எழுதுகிறார்.
கிறிஸ்து இயேசுவை மையமாக வைத்தே இந்த நூலை முழுக்க முழுக்க பவுல் எழுதுகிறார். உடலாலும், உள்ளத்தாலும் தான் இறைவனோடு இரண்டறக் கலந்திருக்கும் நிலையை பதிவுசெய்கிறார்.
நற்செய்தி தனக்கு இறைவனால் நேரடியாகத் தரப்பட்டது என்றும், மீட்பு என்பது நல்ல செயல்கள் செய்வதாலோ சட்டத்தைக் கைக்கொள்வதாலோ கிடைப்பதல்ல, மாறாக இறைமகன் மீது வைக்கும் நம்பிக்கையால் கிடைப்பது என்கிறார் பவுல். சட்டத்தின் கரம்பற்றிய நாம், இப்போது பற்ற வேண்டியது இயேசுவின் கரத்தை என்கிறார்.
ஆனால் இது நம்மை சோம்பேறியாக்கவோ, செயலற்றவர்களாகவோ ஆக்கி விடக் கூடாது, பிறரன்புப் பணியை இன்னும் அதிகமாக்க வேண்டும் என்பதை அவர் புரிய வைக்கிறார். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள்” என அறைகூவல் விடுக்கிறார். “ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்” என உயரிய போதனையை அளிக்கிறார்.
எக்காரணம் கொண்டும் தவற விடக்கூடாத அற்புதமான ஒரு கடிதம் கலாத்தியர்.
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி தென்னூர் பிஷப்குளம் சவேரியார் தெருவில் உள்ள புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன் தினம் காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தென்னூர் பகுதியில் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனித சவேரியாரின் அலங்கார தேர்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தென்னூர் பகுதியில் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளாக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை, ஆராதனை ஆகியவை நடந்தது.
9-ம் நாள் திருவிழாவன்று காலை நோயாளிகளுக்கான திருப்பலி, இரவு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி ஆகியவை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு தங்க தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு சூசையப்பர் மற்றும் மாதா இரு தங்க தேர் பவனி ஆகியவை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிரும், இரவு 8 மணிக்கு நாடகமும் நடைபெற்றது.
9-ம் நாள் திருவிழாவன்று காலை நோயாளிகளுக்கான திருப்பலி, இரவு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி ஆகியவை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு தங்க தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு சூசையப்பர் மற்றும் மாதா இரு தங்க தேர் பவனி ஆகியவை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிரும், இரவு 8 மணிக்கு நாடகமும் நடைபெற்றது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா தங்கத் தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் திருப்பலி, செபமாலை நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார்.
விழா நாட்களில் திருப்பலி, இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி போன்றவை நடைபெற்றது.
9-ம் திருவிழாவான இன்று காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்கத்தேர் பவனி நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனியும், 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது.
விழா நாட்களில் திருப்பலி, இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி போன்றவை நடைபெற்றது.
9-ம் திருவிழாவான இன்று காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்கத்தேர் பவனி நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனியும், 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது.
குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.
குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால்தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.
புனித சவேரியார்
கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தபிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.
ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.
புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.
நற்செய்தி
அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.
அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.
அழியாத உடல்
அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முதல் ஆலயம்
புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.
கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.
சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற ஆலயம்
கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.
எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற ஆலயம்
தங்கமுலாம் பூசப்பட்ட பீடப்பகுதி
கி.பி. 1865-ம் ஆண்டில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ஆலயம் சிலுவை அடையாளத் தோற்றத்தைப் பெற்றது. கி.பி. 1876-ம் ஆண்டில் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப் பட்டது. மரத்தால் செய்யப்பட்ட புனித சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.
கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து 30-5-1930-ல் கோட்டார் தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது கோட்டார் ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக உயர்த்தப்பட்டது. புனித சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்ததின் 400-வது ஆண்டு நினைவாக கி.பி.1956-ல் கோபுரம் கட்டப்பட்டு அதன்மேல் புனித சவேரியாரின் சொரூபம் நிறுவப்பட்டது. 29-10-2009 அன்று கோவில் முன் வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது. ஆலய திருப்பீடம் 29-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் மரத்தாலான பீடப்பகுதி தங்கமுலாம் பூசப்பட்டதாகும்.
புனித சவேரியார்
கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்தபிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.
ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.
புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாட்டுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.
நற்செய்தி
அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.
அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.
அழியாத உடல்
அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முதல் ஆலயம்
புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.
கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.
சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற ஆலயம்
கோட்டார் புனித சவேரியார் பேராலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டு திகழ்கிறது. 1605-ம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அள்ளித்தருபவர் என்று மக்களால் போற்றப்படும் புனித சவேரியாரின் வாழ்க்கைப் பயணம் திசைமாற காரணமாக இருந்தவர் புனித இஞ்ஞாசியார்.
எனவே புனித சவேரியார் பேராலயத்தில் புனித இஞ்ஞாசியார் மற்றும் புனித சவேரியாரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன.
புனிதர்களின் திருப்பண்டம் இடம்பெற்ற ஆலயம்
தங்கமுலாம் பூசப்பட்ட பீடப்பகுதி
கி.பி. 1865-ம் ஆண்டில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் மேற்கு, வடக்கு, தெற்குப் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் ஆலயம் சிலுவை அடையாளத் தோற்றத்தைப் பெற்றது. கி.பி. 1876-ம் ஆண்டில் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப் பட்டது. மரத்தால் செய்யப்பட்ட புனித சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.
கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து 30-5-1930-ல் கோட்டார் தனி மறைமாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது கோட்டார் ஆலயம் மறைமாவட்ட பேராலயமாக உயர்த்தப்பட்டது. புனித சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்ததின் 400-வது ஆண்டு நினைவாக கி.பி.1956-ல் கோபுரம் கட்டப்பட்டு அதன்மேல் புனித சவேரியாரின் சொரூபம் நிறுவப்பட்டது. 29-10-2009 அன்று கோவில் முன் வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது. ஆலய திருப்பீடம் 29-10-2010 அன்று புதுப்பிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் மரத்தாலான பீடப்பகுதி தங்கமுலாம் பூசப்பட்டதாகும்.
பவுலின் பார்வையில் கொரிந்து திருச்சபை எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது முதல் மடல். திருச்சபை தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கிறது இரண்டாவது மடல்.
கொரிந்திய திருச்சபைக்கு பவுல் குறைந்தபட்சம் 4 மடல்களை எழுதினார். அவற்றில் இரண்டு மடல்கள் பைபிளில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டாவது மடல் இது.
கி.பி. 55-57-ம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மடல் எபேசுவிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. தீத்துவும் இன்னொரு சகோதரரும் இணைந்து இந்த மடலை கொரிந்துக்கு எடுத்துச் சென்றனர்.
மொத்தம் 13 அதிகாரங்கள் கொண்டது இந்த மடல். இது ஒரே மடல் என்பது பொதுவான நம்பிக்கை. எனினும் விவிலிய அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. சிலர் இதை இரண்டு மடல்களின் தொகுப்பு என்கின்றனர். முதல் ஒன்பது அதிகாரங்கள் ஒரு மடல் என்றும், அடுத்த நான்கு அதிகாரங்கள் இரண்டாவது மடல் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
சிலரோ, இது ஐந்து மடல்களின் தொகுப்பு என்கின்றனர். ஒப்புரவு மடல், பவுல் தருகின்ற தன்னிலை விளக்க மடல், கண்ணீர் மடல், நன்கொடை பற்றி கொரிந்தியருக்கு ஒரு மடல், நன்கொடை குறித்து அக்காயாவினருக்கு ஒரு மடல் என இவர்கள் இந்த நூலைப் பிரிக்கின்றனர்.
எது எப்படியோ, முதல் மடல் கொரிந்து நகர மக்களை நோக்கி எழுதப்பட்ட மடல் என்றால், இது கொரிந்து நகர தலைவர்களை நோக்கி எழுதப்பட்ட மடல் எனலாம். பவுலின் பார்வையில் கொரிந்து திருச்சபை எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது முதல் மடல். திருச்சபை தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கிறது இரண்டாவது மடல்.
கொரிந்து திருச்சபையில் புதிய தலைவர்கள் வருகின்றனர். அவர்கள் பவுல் மீது தவறான அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர். எனவே சரமாரியான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைக்கின்றனர். தங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என அவர்கள் முனைகின்றனர்.
இந்த மடலின் மூலம், தன்னை கேள்விக்குள்ளாக்கிய மக்களுக்கு பவுல் பதிலளிக்கிறார். அப்படி என்னதான் குற்றச்சாட்டுகள் வைத்தார்கள்?
பவுல் தனது திட்டத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார். கொரிந்து மக்களை நேரில் சந்திக்க அவருக்கு துணிச்சல் இல்லை, அதனால் தான் கடிதம் மூலம் சந்திக்கிறார். அவர் தன்னம்பிக்கைக் குறைவான மனிதர். தலைமைத்துவம் இல்லாதவர். இலவசமாக பணிசெய்கிறார், வெளிப்படையாக இருக்கவில்லை, கரிசனையுடையவரல்ல. இவையெல்லாம் கொரிந்து நகர மக்கள் வைத்த குற்றச்சாட்டுகளில் சில.
தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளை பவுல் இறைவெளிச்சத்தில் விளக்குகிறார். அவருடைய நோக்கம் பிறருடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்பதல்ல. மாறாக, தன்மீதான குற்றச்சாட்டுகளினால் இறைவார்த்தையை மக்கள் புறக்கணிக்கக் கூடாது என்பது தான்.
தன்னிலை விளக்கத்தைக் கொடுத்த பவுல், பத்து முதல் பதின்மூன்று வரையிலான அதிகாரங்களில் தனது தொனியை மாற்றுகிறார். போலித்தலைவர்களுக்கு எதிராக அவருடைய கண்டனம் அழுத்தமாகப் பதிவாகிறது.
இடைப்பட்ட அதிகாரங்களில் பஞ்சத்தால் தவிக்கின்ற மக்களுக்கு உதவ வேண்டுமென பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். “ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை” என அவர் தெளிவான வரையறையையும் கொடுக்கிறார்.
இந்த நூலை சுருக்கமாகப் பார்க்கவேண்டு மெனில், கடவுள் தன்னை பல்வேறு இன்னல்களிலிருந்து எப்படி அதிசயமாய்க் காக்கிறார் எனும் நன்றியுடன் கடிதத்தைத் ெதாடங்குகிறார். மன்னிப்பின் தேவையை அடுத்த அதிகாரத்தில் பதிவு செய்கிறார். “நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை” என விண்ணக வாழ்க்கையை நோக்கிய பயணத்தை அடுத்து பேசுகிறார்.
“எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” என புதிய மனிதனின் இயல்பைப் பேசுகிறார். தனது பணியின் நேர்மையைப் பற்றி தொடர்கிறார். மனம் திருந்திய மனிதருக்கான மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார்.
எப்படிக் கொடுக்க வேண்டும் எனும் அற்புதமான இறை சிந்தனைகளை இரண்டு அதிகாரங்களில் தருகிறார். சாத்தானின் பிரிவினை தந்திரங்களுக்குத் தப்ப வேண்டும் என இரண்டு அதிகாரங்களில் தலைவர்களை எச்சரிக்கிறார். தனக்குக் கிடைத்த வெளிப்பாடுகளைப் பற்றியும், திருச்சபை மீது தனக்கிருக்கும் அக்கறையைப் பற்றியும் எழுதுகிறார்.
கடைசியில் மீண்டும் ஒருமுறை தங்கள் பணியைப் பற்றியும், பிறர் செய்ய வேண்டியதைப் பற்றியும் சொல்கிறார். இறைமகன் இயேசுவின் சிலுவை எப்படி நம்மை இணைக்கும், நமது வாழ்க்கையை சீர்படுத்தும் என்பதை அவர் தனது நூலில் தெளிவாகப் பதிவு செய்கிறார்.
“மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்” எனும் நம்பிக்கை வசனத்தோடு பவுல் தனது கடிதத்தை முடிக்கிறார்.
பவுலுடைய மிக முக்கியமான கடிதங்களில் இதுவும் ஒன்று. கொரிந்திய திருச்சபைக்காக பவுல் எழுதிய இந்தக் கடிதம் இன்றைய திருச்சபைக்கும் பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.
கி.பி. 55-57-ம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மடல் எபேசுவிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. தீத்துவும் இன்னொரு சகோதரரும் இணைந்து இந்த மடலை கொரிந்துக்கு எடுத்துச் சென்றனர்.
மொத்தம் 13 அதிகாரங்கள் கொண்டது இந்த மடல். இது ஒரே மடல் என்பது பொதுவான நம்பிக்கை. எனினும் விவிலிய அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. சிலர் இதை இரண்டு மடல்களின் தொகுப்பு என்கின்றனர். முதல் ஒன்பது அதிகாரங்கள் ஒரு மடல் என்றும், அடுத்த நான்கு அதிகாரங்கள் இரண்டாவது மடல் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
சிலரோ, இது ஐந்து மடல்களின் தொகுப்பு என்கின்றனர். ஒப்புரவு மடல், பவுல் தருகின்ற தன்னிலை விளக்க மடல், கண்ணீர் மடல், நன்கொடை பற்றி கொரிந்தியருக்கு ஒரு மடல், நன்கொடை குறித்து அக்காயாவினருக்கு ஒரு மடல் என இவர்கள் இந்த நூலைப் பிரிக்கின்றனர்.
எது எப்படியோ, முதல் மடல் கொரிந்து நகர மக்களை நோக்கி எழுதப்பட்ட மடல் என்றால், இது கொரிந்து நகர தலைவர்களை நோக்கி எழுதப்பட்ட மடல் எனலாம். பவுலின் பார்வையில் கொரிந்து திருச்சபை எப்படி இருந்தது என்பதைப் பேசுகிறது முதல் மடல். திருச்சபை தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதை மையமாய் வைத்து எழுதப்பட்டிருக்கிறது இரண்டாவது மடல்.
கொரிந்து திருச்சபையில் புதிய தலைவர்கள் வருகின்றனர். அவர்கள் பவுல் மீது தவறான அபிப்பிராயம் வைத்திருக்கின்றனர். எனவே சரமாரியான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைக்கின்றனர். தங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என அவர்கள் முனைகின்றனர்.
இந்த மடலின் மூலம், தன்னை கேள்விக்குள்ளாக்கிய மக்களுக்கு பவுல் பதிலளிக்கிறார். அப்படி என்னதான் குற்றச்சாட்டுகள் வைத்தார்கள்?
பவுல் தனது திட்டத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கிறார். கொரிந்து மக்களை நேரில் சந்திக்க அவருக்கு துணிச்சல் இல்லை, அதனால் தான் கடிதம் மூலம் சந்திக்கிறார். அவர் தன்னம்பிக்கைக் குறைவான மனிதர். தலைமைத்துவம் இல்லாதவர். இலவசமாக பணிசெய்கிறார், வெளிப்படையாக இருக்கவில்லை, கரிசனையுடையவரல்ல. இவையெல்லாம் கொரிந்து நகர மக்கள் வைத்த குற்றச்சாட்டுகளில் சில.
தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளை பவுல் இறைவெளிச்சத்தில் விளக்குகிறார். அவருடைய நோக்கம் பிறருடைய அங்கீகாரத்தைப் பெறவேண்டுமென்பதல்ல. மாறாக, தன்மீதான குற்றச்சாட்டுகளினால் இறைவார்த்தையை மக்கள் புறக்கணிக்கக் கூடாது என்பது தான்.
தன்னிலை விளக்கத்தைக் கொடுத்த பவுல், பத்து முதல் பதின்மூன்று வரையிலான அதிகாரங்களில் தனது தொனியை மாற்றுகிறார். போலித்தலைவர்களுக்கு எதிராக அவருடைய கண்டனம் அழுத்தமாகப் பதிவாகிறது.
இடைப்பட்ட அதிகாரங்களில் பஞ்சத்தால் தவிக்கின்ற மக்களுக்கு உதவ வேண்டுமென பவுல் வேண்டுகோள் விடுக்கிறார். “ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை” என அவர் தெளிவான வரையறையையும் கொடுக்கிறார்.
இந்த நூலை சுருக்கமாகப் பார்க்கவேண்டு மெனில், கடவுள் தன்னை பல்வேறு இன்னல்களிலிருந்து எப்படி அதிசயமாய்க் காக்கிறார் எனும் நன்றியுடன் கடிதத்தைத் ெதாடங்குகிறார். மன்னிப்பின் தேவையை அடுத்த அதிகாரத்தில் பதிவு செய்கிறார். “நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை” என விண்ணக வாழ்க்கையை நோக்கிய பயணத்தை அடுத்து பேசுகிறார்.
“எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்” என புதிய மனிதனின் இயல்பைப் பேசுகிறார். தனது பணியின் நேர்மையைப் பற்றி தொடர்கிறார். மனம் திருந்திய மனிதருக்கான மகிழ்ச்சியைப் பதிவு செய்கிறார்.
எப்படிக் கொடுக்க வேண்டும் எனும் அற்புதமான இறை சிந்தனைகளை இரண்டு அதிகாரங்களில் தருகிறார். சாத்தானின் பிரிவினை தந்திரங்களுக்குத் தப்ப வேண்டும் என இரண்டு அதிகாரங்களில் தலைவர்களை எச்சரிக்கிறார். தனக்குக் கிடைத்த வெளிப்பாடுகளைப் பற்றியும், திருச்சபை மீது தனக்கிருக்கும் அக்கறையைப் பற்றியும் எழுதுகிறார்.
கடைசியில் மீண்டும் ஒருமுறை தங்கள் பணியைப் பற்றியும், பிறர் செய்ய வேண்டியதைப் பற்றியும் சொல்கிறார். இறைமகன் இயேசுவின் சிலுவை எப்படி நம்மை இணைக்கும், நமது வாழ்க்கையை சீர்படுத்தும் என்பதை அவர் தனது நூலில் தெளிவாகப் பதிவு செய்கிறார்.
“மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்” எனும் நம்பிக்கை வசனத்தோடு பவுல் தனது கடிதத்தை முடிக்கிறார்.
பவுலுடைய மிக முக்கியமான கடிதங்களில் இதுவும் ஒன்று. கொரிந்திய திருச்சபைக்காக பவுல் எழுதிய இந்தக் கடிதம் இன்றைய திருச்சபைக்கும் பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.
தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு மக்கள் சார்பில் மாதா சொரூபத்தில் அணிவிப்பதற்காக 2 அடி உயர வைர மாலை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் திருவிழா கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு மக்கள் சார்பில் மாதா சொரூபத்தில் அணிவிப்பதற்காக 2 அடி உயர வைர மாலை வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை பங்குதந்தை ஜோசப் ரொமால்டு தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாதா சொரூபத்துக்கு வைர மாலை அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
‘அன்பு’ குறித்த அதிகாரத்துக்காகவே இந்த நூலைக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு 1 கொரிந்தியர் நூல் பதிமூன்றாம் அதிகாரம் அன்பைக் குறித்து அற்புதக் கவிதை வடிக்கிறது. பைபிளில் தவற விடக்கூடாத அன்பின் கவிதை அது.
‘அன்பு’ குறித்த அதிகாரத்துக்காகவே இந்த நூலைக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு 1 கொரிந்தியர் நூல் பதிமூன்றாம் அதிகாரம் அன்பைக் குறித்து அற்புதக் கவிதை வடிக்கிறது. பைபிளில் தவற விடக்கூடாத அன்பின் கவிதை அது.
இந்த நூலை எழுதியவர் திருத்தூதர் பவுல். கி.பி. 57-ம் ஆண்டில் இந்த நூல் எழுதப்பட்டது. பவுல், நற்செய்தி அறிவித்தலுக்காக முக்கியமான மூன்று பயணங்களை மேற்கொண்டார். அதில் இரண்டாவது பயணத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்டது தான் கொரிந்து நகர திருச்சபை. கொரிந்து நகர மக்களுக்காக பவுல் குறைந்தது நான்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் இரண்டு கடிதங்கள் பைபிளில் இடம்பெற்றிருக்கின்றன. இது அதில் முதலாவது.
கொரிந்து நகர் கி.மு. 146-ல் ரோமர்களால் அழிக்கப்பட்டு, பின்னர் ஜூலியஸ் சீசரால் கி.மு. 44-ல் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது என்கிறது வரலாறு.
கெட்டவற்றிலிருந்து கூட நல்லதை உருவாக்குபவர் இறைவன். இந்த அற்புதமான நூல் நமக்குக் கிடைக்கக் காரணமாய் இருந்தது கொரிந்து நகர திருச்சபையின் மோசமான நிலைமை தான். “இன்றைய திருச்சபையில் தான் பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிகின்றன. ஆதிகால திருச்சபைகள் அற்புதமாக இருந்தன” எனும் சிந்தனை உடையவர்களை நிதானிக்க வைக்கிறது கொரிந்து திருச்சபையின் நிலைமை.
பல்வேறு பிரச்சினைகளால் உழன்று கொண்டிருந்த திருச்சபையை பவுல் அன்புடன் அணுகு கிறார். அவர்கள் பிரச்சினைகளைக் களைந்து விட்டு மீண்டும் நல்வழிக்குத் திரும்பவேண்டும் எனும் ஆதங்கத்தில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.
ஒருவனை கீழ்த்தரமாகக் குறிப்பிட வேண்டுமெனில் “நீ என்ன கொரிந்தியனை போல இருக்கிறாய்” என அந்தக்காலத்தில் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு தீமைகளின் இருப்பிடமாய் கொரிந்து இருந்தது. வணிகத்தில் சிறந்து விளங்கிய இடமாதலால் இங்கே செல்வத்துக்குக் குறைவில்லை.
செல்வம் அதிகரிக்க அதிகரிக்க தனிமனித ஒழுக்கங்கள் சவாலாகின்றன. கோவில் களால் நிறைந்து விளங்கிய அந்த ஊரில், பாலியல் பலவீனங்கள் மூலை முடுக்கெல்லாம் நிரம்பியிருந்தன. சுமார் ஏழு லட்சம் பேர் இருந்த அந்த நகரில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அடிமைகளாகத் தான் இருந்தார்கள்.
இந்த சூழலில் தான் பவுல் திருச்சபைக்குக் கடிதம் எழுதுகிறார். உண்மையில் இது அவர் கொரிந்துக்கு எழுதிய முதல் கடிதம் அல்ல. “பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்” (1 கொரி 5:9) எனும் வசனம், பவுல் ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பதையே குறிப்பிடுகிறது. பைபிளில் இந்த கடிதமே, கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது திருமுகமாக நமக்கு அறிமுகமாகிறது.
அந்தத் திருச்சபையில் இருந்தவை சின்னப் பிரச்சினைகள் அல்ல. திருச்சபையே பிளவு பட்டுக் கிடந்தது. பல தலைவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி போதித்தனர். ஒழுக்கக் கேடுகள் உச்சத்தை எட்டியிருந்தன.
பாலியல் தொழிலாளிகள் நிரம்பியிருந்தனர். தந்தையின் மனைவியோடு மகன் தவறாகப் பழகும் அதிர்ச்சிச் சூழல் அங்கே நிலவியது. திருச்சபைக்கு உள்ளேயே மதுவும் வழிந்தது. கிறிஸ்தவத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலே அங்கே இருக்கவில்லை. தனது கடிதத்தில் ஆண்-பெண் ஒழுக்கத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் பவுல் எழுதுவதற்கு அந்த நாட்டின் சூழலே முதல் காரணம்.
சிலை வழிபாடுகளும், பிற மத வழிபாடுகளும் நிரம்பியிருந்தன. அதன் தாக்கம் திருச்சபையிலும் எதிரொலித்தது.
“தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை” என மிகத் தெளிவாக கொரிந்து சபையினர் விலக்க வேண்டிய பாவங்களை பவுல் பட்டியலிடுகிறார்.
பாவத்தில் இருக்கும் கொரிந்து நகரோடு எப்படி இணைந்திருப்பது, இணைந்திருந்தாலும் எப்படி பாவப் பழக்கத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது என பவுல் சொல்லும் செய்தி எல்லா காலத்துக்கும் பொதுவானது.
‘உடலினால் செய்கின்ற பாவம் ஆன்மாவைப் பாதிக்காது’ எனும் கிரேக்க தத்துவ சிந்தனை அந்தக்காலத்தில் உலவியது. தத்துவ பூமியான ஏதேன்ஸ் வெறும் நாற்பது மைல் தொலைவில் இருந்தது ஒரு காரணமாய் இருக்கலாம். எனவே மக்கள் உடல்சார்ந்த பாவங்களை விலக்க வேண்டுமென நினைக்கவேயில்லை.
பவுல் அவர்களுக்கு கிறிஸ்தவத்தை விளக்கு கிறார். உண்மையில் நமது உடல் என்பது தூய ஆவி தங்கும் ஆலயம் என்கிறார். அதன் புனிதத்தைக் காப்பது மிகவும் அவசியம் என்கிறார்.
சிலுவையில் இறைமகன் இயேசு இறந்ததன் முக்கியத்துவத்தையும், அவரது உயிர்ப்பு தருகின்ற புதிய வாழ்வைக் குறித்தும் பவுல் எழுதுவது அன்றைய கிரேக்க மக்களின் சிந்தனைகளை தெளிய வைப்பதற்கான சிந்தனை. இன்றும் நமது ஆன்மிக வாழ்க்கைக்கு பெருமளவில் பயன்படுகிறது என்பதில் ஐயமில்லை.
இந்த நூலை எழுதியவர் திருத்தூதர் பவுல். கி.பி. 57-ம் ஆண்டில் இந்த நூல் எழுதப்பட்டது. பவுல், நற்செய்தி அறிவித்தலுக்காக முக்கியமான மூன்று பயணங்களை மேற்கொண்டார். அதில் இரண்டாவது பயணத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்டது தான் கொரிந்து நகர திருச்சபை. கொரிந்து நகர மக்களுக்காக பவுல் குறைந்தது நான்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் இரண்டு கடிதங்கள் பைபிளில் இடம்பெற்றிருக்கின்றன. இது அதில் முதலாவது.
கொரிந்து நகர் கி.மு. 146-ல் ரோமர்களால் அழிக்கப்பட்டு, பின்னர் ஜூலியஸ் சீசரால் கி.மு. 44-ல் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது என்கிறது வரலாறு.
கெட்டவற்றிலிருந்து கூட நல்லதை உருவாக்குபவர் இறைவன். இந்த அற்புதமான நூல் நமக்குக் கிடைக்கக் காரணமாய் இருந்தது கொரிந்து நகர திருச்சபையின் மோசமான நிலைமை தான். “இன்றைய திருச்சபையில் தான் பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிகின்றன. ஆதிகால திருச்சபைகள் அற்புதமாக இருந்தன” எனும் சிந்தனை உடையவர்களை நிதானிக்க வைக்கிறது கொரிந்து திருச்சபையின் நிலைமை.
பல்வேறு பிரச்சினைகளால் உழன்று கொண்டிருந்த திருச்சபையை பவுல் அன்புடன் அணுகு கிறார். அவர்கள் பிரச்சினைகளைக் களைந்து விட்டு மீண்டும் நல்வழிக்குத் திரும்பவேண்டும் எனும் ஆதங்கத்தில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.
ஒருவனை கீழ்த்தரமாகக் குறிப்பிட வேண்டுமெனில் “நீ என்ன கொரிந்தியனை போல இருக்கிறாய்” என அந்தக்காலத்தில் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு தீமைகளின் இருப்பிடமாய் கொரிந்து இருந்தது. வணிகத்தில் சிறந்து விளங்கிய இடமாதலால் இங்கே செல்வத்துக்குக் குறைவில்லை.
செல்வம் அதிகரிக்க அதிகரிக்க தனிமனித ஒழுக்கங்கள் சவாலாகின்றன. கோவில் களால் நிறைந்து விளங்கிய அந்த ஊரில், பாலியல் பலவீனங்கள் மூலை முடுக்கெல்லாம் நிரம்பியிருந்தன. சுமார் ஏழு லட்சம் பேர் இருந்த அந்த நகரில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அடிமைகளாகத் தான் இருந்தார்கள்.
இந்த சூழலில் தான் பவுல் திருச்சபைக்குக் கடிதம் எழுதுகிறார். உண்மையில் இது அவர் கொரிந்துக்கு எழுதிய முதல் கடிதம் அல்ல. “பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்” (1 கொரி 5:9) எனும் வசனம், பவுல் ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பதையே குறிப்பிடுகிறது. பைபிளில் இந்த கடிதமே, கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது திருமுகமாக நமக்கு அறிமுகமாகிறது.
அந்தத் திருச்சபையில் இருந்தவை சின்னப் பிரச்சினைகள் அல்ல. திருச்சபையே பிளவு பட்டுக் கிடந்தது. பல தலைவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி போதித்தனர். ஒழுக்கக் கேடுகள் உச்சத்தை எட்டியிருந்தன.
பாலியல் தொழிலாளிகள் நிரம்பியிருந்தனர். தந்தையின் மனைவியோடு மகன் தவறாகப் பழகும் அதிர்ச்சிச் சூழல் அங்கே நிலவியது. திருச்சபைக்கு உள்ளேயே மதுவும் வழிந்தது. கிறிஸ்தவத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலே அங்கே இருக்கவில்லை. தனது கடிதத்தில் ஆண்-பெண் ஒழுக்கத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் பவுல் எழுதுவதற்கு அந்த நாட்டின் சூழலே முதல் காரணம்.
சிலை வழிபாடுகளும், பிற மத வழிபாடுகளும் நிரம்பியிருந்தன. அதன் தாக்கம் திருச்சபையிலும் எதிரொலித்தது.
“தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை” என மிகத் தெளிவாக கொரிந்து சபையினர் விலக்க வேண்டிய பாவங்களை பவுல் பட்டியலிடுகிறார்.
பாவத்தில் இருக்கும் கொரிந்து நகரோடு எப்படி இணைந்திருப்பது, இணைந்திருந்தாலும் எப்படி பாவப் பழக்கத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது என பவுல் சொல்லும் செய்தி எல்லா காலத்துக்கும் பொதுவானது.
‘உடலினால் செய்கின்ற பாவம் ஆன்மாவைப் பாதிக்காது’ எனும் கிரேக்க தத்துவ சிந்தனை அந்தக்காலத்தில் உலவியது. தத்துவ பூமியான ஏதேன்ஸ் வெறும் நாற்பது மைல் தொலைவில் இருந்தது ஒரு காரணமாய் இருக்கலாம். எனவே மக்கள் உடல்சார்ந்த பாவங்களை விலக்க வேண்டுமென நினைக்கவேயில்லை.
பவுல் அவர்களுக்கு கிறிஸ்தவத்தை விளக்கு கிறார். உண்மையில் நமது உடல் என்பது தூய ஆவி தங்கும் ஆலயம் என்கிறார். அதன் புனிதத்தைக் காப்பது மிகவும் அவசியம் என்கிறார்.
சிலுவையில் இறைமகன் இயேசு இறந்ததன் முக்கியத்துவத்தையும், அவரது உயிர்ப்பு தருகின்ற புதிய வாழ்வைக் குறித்தும் பவுல் எழுதுவது அன்றைய கிரேக்க மக்களின் சிந்தனைகளை தெளிய வைப்பதற்கான சிந்தனை. இன்றும் நமது ஆன்மிக வாழ்க்கைக்கு பெருமளவில் பயன்படுகிறது என்பதில் ஐயமில்லை.
எத்தனையோ கொலைகாரர்கள், குடிகாரர்கள், மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கைகள் இயேசு கிறிஸ்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதால் முற்றிலும் மாறி இருக்கிறது.
நம் உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்துமே முக்கியமானதுதான். அந்த உறுப்புகளில் மிக முக்கியமானது இருதயம் ஆகும். இறைவன் மனிதனைப் படைக்கும்போது அவனது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பணியை செய்யத்தக்கதாக படைத்தார். ஆனாலும் இவைகள் எல்லாவற்றிலும் இதயத்திற்கு ஒரு விசேஷப் பணி உண்டு, இந்த இருதயம் 24 மணி நேரமும் இயங்கி கொண்டேயிருக்கும்.
நாம் கண்களை மூடி நித்திரை செய்யும்போது கூட இருதயம் மட்டும் உறங்காமல் ஓய்வெடுக்காமல் துடித்துக்கொண்டே இருக்கும். இருதயம் ஒரு வினாடி ஓய்வெடுத்தால் கூட மரணம் நிச்சயம்.
இப்படிப்பட்ட இருதயத்தைக் குறித்து அதாவது மிக மிக முக்கியமான இருதயத்தைக் குறித்து எரேமியா என்கிற தீர்க்கதரிசி இப்படியாக கூறுகிறார்:
“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9).
ஆம் இருதயம் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிக கேடுள்ளதாகவும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. இப்படிப்பட்ட இருதயத்தை புதுப்பித்து ஆசீர்வதித்து ஒவ்வொரு கேடான இருதயத்தையும் நல்ல இருதயமாக, அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த இருதயமாக மாற்றவே இறைமகனாய் இயேசு பூமியில் அவதரித்தார்.
அவருடைய போதனைகளில் கூட இருதயத்தைக் குறித்து இப்படியாக குறிப்பிடுகிறார். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மத்தேயு 15:19,20).
இப்படி வாழ்ந்த மனிதர்களை மீட்டெடுத்து புனிதர்களாய் மாற்றவே ஆண்டவர் பூமியில் இறைமகன் இயேசுவாய் வெளிப்பட்டார். அவர் பூமியில் பிறந்த பொழுது இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று வேதம் கூறுகிறது.
“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதம் கூறுகிறது.
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று இயேசு கிறிஸ்துவும் திருவுளம்பற்றினார்.
இந்த இயேசுபிரானை யார் இருதயத்தில் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை அப்படியே முற்றிலும் மாறுகிறது. எத்தனையோ மோசமான மனிதர்களை புனிதர்களாக மாற்றியது அருள் நாதர் இயேசுவின் போதனைகள் புனித பேதுரு, புனித தோமா, புனித அந்தோனியார், புனித பவுல் என்று அநேகரை புனிதர்களாய் மாற்றியது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளே.
இன்றைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?, உங்கள் உள்ளம் எப்படி இருக்கிறது?, உங்கள் உள்ளத்தில் உள்ள இருதயத்தில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு இடம் கொடுக்கும் போது உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பேரொளி வீசும், ஒரு மெய்யான ஜோதி, மெய்யான தீபம் உங்கள் வாழ்க்கையின் இருளை வெளிச்சமாக்கும். நீங்களும் உலகத்திற்கு வெளிச்சமாய் மாறுவீர்கள்.
எத்தனையோ கொலைகாரர்கள், குடிகாரர்கள், மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கைகள் இயேசு கிறிஸ்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதால் முற்றிலும் மாறி இருக்கிறது. அந்த தெய்வம் உங்கள் வாழ்வையும் மாற்ற விரும்புகிறார்.
‘ஆண்டவரே, என் உள்ளத்திற்குள்ள வாரும், என் வாழ்க்கையை மாற்றும்’ என்று நீங்கள் இப்பொழுதே ஆண்டவரை நோக்கி உண்மையான நம்பிக்கையோடு ஒரு சிறிய பிரார்த்தனையை செய்யுங்கள். நிச்சயமாய் இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையும் ஆசீர்வதிப்பார்.
காரணம், பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். ஆம், அவர் உங்களை புனிதர்களாய் மாற்றி உங்கள் மரணத்திற்குப் பின்னர் புனிதர்கள் வாழும் புண்ணிய ஸ்தலத்திலும் சேர்த்து உங்களை மகிழ்விப்பது நிச்சயம்.
கர்த்தர்தாமே உங்களை புனிதர்களாய் மாற்றி புண்ணிய ஸ்தலத்தில் அதாவது பரலோகத்தில் சேர்ப்பராக, ஆமென்.
சகோ சி. சதீஷ், டைனமிக் பவர் மினிஸ்ட்ரி, வால்பாறை.
நாம் கண்களை மூடி நித்திரை செய்யும்போது கூட இருதயம் மட்டும் உறங்காமல் ஓய்வெடுக்காமல் துடித்துக்கொண்டே இருக்கும். இருதயம் ஒரு வினாடி ஓய்வெடுத்தால் கூட மரணம் நிச்சயம்.
இப்படிப்பட்ட இருதயத்தைக் குறித்து அதாவது மிக மிக முக்கியமான இருதயத்தைக் குறித்து எரேமியா என்கிற தீர்க்கதரிசி இப்படியாக கூறுகிறார்:
“எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9).
ஆம் இருதயம் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிக கேடுள்ளதாகவும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. இப்படிப்பட்ட இருதயத்தை புதுப்பித்து ஆசீர்வதித்து ஒவ்வொரு கேடான இருதயத்தையும் நல்ல இருதயமாக, அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த இருதயமாக மாற்றவே இறைமகனாய் இயேசு பூமியில் அவதரித்தார்.
அவருடைய போதனைகளில் கூட இருதயத்தைக் குறித்து இப்படியாக குறிப்பிடுகிறார். “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மத்தேயு 15:19,20).
இப்படி வாழ்ந்த மனிதர்களை மீட்டெடுத்து புனிதர்களாய் மாற்றவே ஆண்டவர் பூமியில் இறைமகன் இயேசுவாய் வெளிப்பட்டார். அவர் பூமியில் பிறந்த பொழுது இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று வேதம் கூறுகிறது.
“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி” என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதம் கூறுகிறது.
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று இயேசு கிறிஸ்துவும் திருவுளம்பற்றினார்.
இந்த இயேசுபிரானை யார் இருதயத்தில் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை அப்படியே முற்றிலும் மாறுகிறது. எத்தனையோ மோசமான மனிதர்களை புனிதர்களாக மாற்றியது அருள் நாதர் இயேசுவின் போதனைகள் புனித பேதுரு, புனித தோமா, புனித அந்தோனியார், புனித பவுல் என்று அநேகரை புனிதர்களாய் மாற்றியது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளே.
இன்றைக்கு உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?, உங்கள் உள்ளம் எப்படி இருக்கிறது?, உங்கள் உள்ளத்தில் உள்ள இருதயத்தில் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு இடம் கொடுக்கும் போது உங்கள் வாழ்க்கையிலும் ஒரு பேரொளி வீசும், ஒரு மெய்யான ஜோதி, மெய்யான தீபம் உங்கள் வாழ்க்கையின் இருளை வெளிச்சமாக்கும். நீங்களும் உலகத்திற்கு வெளிச்சமாய் மாறுவீர்கள்.
எத்தனையோ கொலைகாரர்கள், குடிகாரர்கள், மிக மோசமான வாழ்க்கை வாழ்ந்தவர்களுடைய வாழ்க்கைகள் இயேசு கிறிஸ்து சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதால் முற்றிலும் மாறி இருக்கிறது. அந்த தெய்வம் உங்கள் வாழ்வையும் மாற்ற விரும்புகிறார்.
‘ஆண்டவரே, என் உள்ளத்திற்குள்ள வாரும், என் வாழ்க்கையை மாற்றும்’ என்று நீங்கள் இப்பொழுதே ஆண்டவரை நோக்கி உண்மையான நம்பிக்கையோடு ஒரு சிறிய பிரார்த்தனையை செய்யுங்கள். நிச்சயமாய் இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையும் ஆசீர்வதிப்பார்.
காரணம், பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். ஆம், அவர் உங்களை புனிதர்களாய் மாற்றி உங்கள் மரணத்திற்குப் பின்னர் புனிதர்கள் வாழும் புண்ணிய ஸ்தலத்திலும் சேர்த்து உங்களை மகிழ்விப்பது நிச்சயம்.
கர்த்தர்தாமே உங்களை புனிதர்களாய் மாற்றி புண்ணிய ஸ்தலத்தில் அதாவது பரலோகத்தில் சேர்ப்பராக, ஆமென்.
சகோ சி. சதீஷ், டைனமிக் பவர் மினிஸ்ட்ரி, வால்பாறை.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா 6-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகாரமாதா திருத்தல திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா 6-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, திருக்கொடி பவனி, செபமாலை, மாலை 6.30 மணிக்கு கொடிப்பட்டம் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
9-ம் திருவிழாவான 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி நடக்கிறது.
10-ம் திருவிழாவான 15-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் தங்கத்தேர் திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 6 மணிக்கு குரு குல முதல்வர் கிலாரியுஸ் தலைமையில் பெருவிழா நிறைவுத்திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு காசா கிளாரட் சபை அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் தலைமை தாங்குகிறார். அருட் பணியாளர் இன்னாசிமுத்து மறையுரையாற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலியில் பள்ளி முதல்வர் ஸ்டாலின் மறையுரையாற்றுகிறார். பகல் 12 மணிக்கு சின்ன முட்டம் பங்கு அருட்பணியாளர் கிளாசின் தலைமையில் தமிழில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிர், இரவு 8 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோசப்ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் சகாயஆன்டணி, சகாயவில்சன், அன்பின் தேவசகாயம், பங்குப் பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியாவில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி, பங்கு இறைமக்கள் மற்றும் பலர் செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, திருக்கொடி பவனி, செபமாலை, மாலை 6.30 மணிக்கு கொடிப்பட்டம் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை, இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
9-ம் திருவிழாவான 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி நடக்கிறது.
10-ம் திருவிழாவான 15-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் தங்கத்தேர் திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 6 மணிக்கு குரு குல முதல்வர் கிலாரியுஸ் தலைமையில் பெருவிழா நிறைவுத்திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு காசா கிளாரட் சபை அருட்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் தலைமை தாங்குகிறார். அருட் பணியாளர் இன்னாசிமுத்து மறையுரையாற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலியில் பள்ளி முதல்வர் ஸ்டாலின் மறையுரையாற்றுகிறார். பகல் 12 மணிக்கு சின்ன முட்டம் பங்கு அருட்பணியாளர் கிளாசின் தலைமையில் தமிழில் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிர், இரவு 8 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோசப்ரொமால்டு, இணை பங்குதந்தையர்கள் சகாயஆன்டணி, சகாயவில்சன், அன்பின் தேவசகாயம், பங்குப் பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியாவில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் பெனி, பங்கு இறைமக்கள் மற்றும் பலர் செய்து வருகிறார்கள்.






