search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அலங்கார உபகார மாதா
    X
    அலங்கார உபகார மாதா

    தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இன்று தங்கத்தேர் பவனி

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா தங்கத் தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் திருப்பலி, செபமாலை நடந்தது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார்.

    விழா நாட்களில் திருப்பலி, இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி போன்றவை நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான இன்று காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்கத்தேர் பவனி நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனியும், 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கமும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது.
    Next Story
    ×