என் மலர்
கிறித்தவம்
மனித மகனாக உலகில் மரியாவிடம் பிறந்ததாலேயே மனித குலத்தின் பாவக்கறைகளைப் போக்க முடிந்தது. மக்களோடு உடனிருந்தார். நம்மோடு இன்னும் உரையாடி உறவாடுகிறார்.
அவர் பணிவிடை பெறும் பொருட்டு இம்மண்ணுலகு வரவில்லை பணிவிடை புரிவதற்காகவே வந்தார். ஏழை, எளியவர்க்கு இரங்கினார். இயற்கையோடு இணைந்த வாழ்வே வாழ்ந்தார். பிறர் துன்பம் கண்டு கண்ணீர் சிந்தினார். தமது உயிரையே கையளிக்கும் அளவுக்கு இவ்வுலகின் மீது அன்பு கூர்ந்தார். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தார்.
உலகம் உய்ய வந்த மீட்பராம் இயேசு காட்டிய அன்பை நாமும் அயலாரிடம் காட்டு வோம். வாதும் சூதும் அகற்றி அவர் தந்த அமைதியை அனைவருக்கும் பொழிவோம். அவர் தந்த நீதியும், நேர்மையும் தழைக்கச் செய்வோம். உயர்ந்தோர், தாழ்ந்தோர், உள்ளோர், இல்லாதோர் என்ற பாகுபாடு நீங்கி மண்ணில் சமத்துவம் மலரச் செய்வோம். கண்ணால் காண இயலாதக் கடவுளைக் காண, கண்ணால் காணும் சகோதரனை அன்புச் செய்து சகோதரத்துவம் போற்றுவோம். நோய்வாய்ப்பட்டோர், ஆதரவற்றோர்க்கு அன்பால் ஆறுதல் அளிப்போம்.
குடிசையில் வாழும் ஏழைக்கு உதவிக்கரம் நீட்டுவதால் குடிலில் பிறந்த இறைவனைக் காண்போம். பசித்தவரின் பசிக்கு உணவு ஊட்டுவதால் இறை இயேசுவின் பகிர்தலில் பங்குப் பெறுவோம். ஆடம்பரமும் ஊதாரித்தனமும் நிறைந்த பணவிரயங்களைத் தவிர்த்து எளியோரை நலன்களால் நிரப்பிடுவோம். இறை மகன் இயேசுவின் அன்பும், அமைதியும், அருளும், ஆசியும் உங்கள் அனைவரோடும் என்றும் தங்குவதாக அமையும்.
லூக்கா 2: 10-11-ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வானதூதர் அவர்களிடம் அஞ்சாதீர்கள், இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய ேமசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். ஆம், மீட்பர் பிறந்த மகிழ்ச்சியின் திருநாள்தான் கிறிஸ்துமஸ்.
ஆதியில் கடவுள் மனிதர்களை படைத்து அவர்களிடம் பல்கி பெருகி உலகத்தை நிரப்புங்கள் என்று ஆசீர்வதித்தார். அத்துடன், இந்த உலகத்தை ஆளும் முழு அதிகாரமும் கொடுத்தார். ஆனால், மனிதன் தனது சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் கடவுளுக்கு எதிராக பாவம் செய்ய தொடங்கினான். பாவத்தினால் மனதில் நிம்மதியின்றி, அமைதியில்லாமல், கொலை, பழிவாங்கும் உணர்வுடன் அலைந்தான்.உலக மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட இறைவன் தனது ஒரே மகனை உலகத்திற்கு அனுப்பி, பாவத்தில் மூழ்கி கிடக்கும் மனிதர்களை நல்வழி படுத்த எண்ணினார்.
இந்த உன்னத பணிக்காக இறைமகன் இயேசு, மனிதனாக பிறந்த நாள்தான் கிறிஸ்துமஸ். உலகிற்கு வந்த இறைமகன் தனது வாழ்வாலும், போதனையாலும் மனித குலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டார். இயேசு தனது வாழ்நாளில் அன்பின் வழியை போதித்து மக்களை நல்வழி படுத்தினார். இவரது போதனை மனித சமுதாயத்தில் இருந்த பழிவாங்கும் குணங்களை அப்புறப்படுத்தி வருகிறது. உலகம் எங்கும் அன்பு, சமாதானம், நீதி போன்றவற்றை நிலைநாட்டி வருகிறது. பாவத்திலும், பழிவாங்கும் குணத்திலும் அடிமை பட்டு கிடந்த நாம் மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டியவர் இயேசு. அவர் பிறந்த நாள் உண்மையிலேயே நமக்கு மகிழ்ச்சியான நாள் என்றால் மிகையல்ல.
இந்த மகிழ்ச்சியின் திருநாளை கொண்டாடும் மக்கள் வீடுகளில் நட்சத்திரம், மின் விளக்குகளால் அலங்காரம் செய்து, புத்தாடை அணிந்து, கேக், இனிப்பு போன்றவற்றை வழங்கி மகிழ்கிறார்கள். அந்த மகிழ்ச்சியின் திருநாளை நாமும் இணைந்து கொண்டாடுவோம்.
இதைத்தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் கேக் வெட்டி கிறிஸ்து பிறப்பை கொண்டாடினர். இதேபோல் இலந்தைகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை அந்தோணி குரூஸ் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுதவிர உடையார்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலயம், டவுன் அடைக்கல மாதா ஆலயம், சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயம், சேவியர் காலனி அந்தோணியார் ஆலயம் மற்றும் நெல்லை பகுதிகளில் கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
சி.எஸ்.ஐ. சார்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அனைத்து சி.எஸ்.ஐ. ஆலயங்களில் அதிகாலையில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.
உலகத்தில் உள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள். அந்த அன்பில் எதிர்பார்ப்பு இருக்கும். ஏதோ ஒன்று எதிர்பார்த்தே அன்பு செலுத்துகிறார்கள். ஆனால் இயேசுவின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு, நம்மை இந்த உலகத்தின் பாவத்தில் இருந்து மீட்க வந்து தன் உயிரை கொடுத்த உன்னத அன்பு, மக்கள் பாவத்தை தண்ணீர் போல குடித்து பாதாளத்தை நோக்கி கொண்டு இருக்கையில் அதில் இருந்து மீட்டு பரலோக ராஜ்ஜியத்திற்கு சேர்க்க வந்த பாச அன்பு.
எல்லோரிடமும் இயேசு அன்பு உள்ளவர்
இயேசுவின் பிறப்பு கி.மு.700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது. ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுப்பார். இதோ கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள். இம்மானுவேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். இயேசு மனுகுலத்தில் மேல் வைத்த மாபெரும் அன்பின் நிமித்தம் நேற்றும், இன்றும், என்றுமே நம்மோடு கூடவே இருக்கிறார். கஷ்ட நேரங்களில் உடன் இருப்பவர்கள் விலகி சென்று விடுவார்கள். ஆனால் நமக்காய் பிறந்த இயேசு எந்த சூழ்நிலையிலும் நம்மை விட்டு விலகுவதில்லை, கைவிடுவதுமில்லை. இயேசு குறிப்பிட்ட மதத்திற்காக மாத்திரம் வரவில்லை. மானிட மக்கள் எல்லோருக்காகவும் இயேசு இந்த உலகில் வந்து பிறந்தார்.
இயேசுவிடம் அன்பாய் இருங்கள்
பொதுவாக டிசம்பர் மாதத்திற்கு இன்னொரு பெயர் உள்ளது Joy of Giving. இந்த நாளில் ஏழை-எளிய மக்களுக்கு துணி மற்றும் பல பரிசுகளை கொடுத்து அன்பை வெளிபடுத்துகிறார்கள். கேக், போனஸ், கேரல்ஸ் மற்றும் தங்கள் பரிசுகளை பரிமாறி கொண்டு அன்பை வெளிப்படுத்தி சந்தோஷப்படுவார்கள். இவைகள் தவறல்ல. இது உலகிற்கு ஏற்ற அன்பு, இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு பெரியதான காரியம், அதிகமாய் நாம் தேவன் மீது அன்பு கூற வேண்டும். தேவன் அன்பாக இருப்பது போன்று நாமும் அன்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவனிடம் அன்பாக இருந்தால் அவர் வார்த்தைகளை கைக்கொள்ளுவோம். இப்படி நானம் காணப்பட்டால் அவரை (இயேசு) நாம் தரிசிக்க முடியும்.
நான்சி ஜோஸ்வா
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் விசேஷ பிரார்தனை நடைபெறும் விவரம் வருமாறு:-
அம்பத்தூர் டிவைன் மேரி ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணி மற்றும் நாளை காலை 7.30 மணி ஆகிய நேரங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
அத்திப்பட்டு செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
அயனாவரம் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
புதுச்சேரி கோரிமேடு செயின்ட் மேரீஸ் ஆலயத் தில் இன்று 10 மணி, நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
கீழ்கட்டளை சேக்ரட் ஹார்ட் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 8 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
மொபைஸ் பைந்தர் ஹோலிகிராஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 8.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
நீலாங்கரை செயின்ட் கேமலம் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
நிறுத்தச்சேரி செயின்ட் ஆண்டனிஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 8 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
பெரம்பூர் செயின்ட் ஜோசப் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
பூந்தமல்லி கிரைஸ்ட் த கிங் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை 7 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
கோடம்பாக்கம் செயின்ட் அல்போன்சா ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணி, நாளை 8.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
ஆவடி செயின்ட் பீட்டர்ஸ் ஆலயத்தில் இன்று இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
கோவில்பதாகை செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
எர்ணாவூர் செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
ஓட்டேரி செயின்ட் சபாஸ்டின் ஆலயத்தில் இன்று இரவு 11 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
பட்டாபிராம் இன்பேண்ட் ஜீசஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
புதுச்சேரி ஜெயா நகர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
பொழிச்சலூர் செயின்ட் அல்போன்ஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
செயின்ட் தாமஸ் மவுண்ட் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
திருவொற்றியூர் செயின்ட் ஜூடு ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
வளசரவாக்கம் லிட்டில் பிளவர் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
வேளச்சேரி செயின்ட் மதர் தெரசா ஆலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
மயிலாப்பூர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
ஓசூர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 9.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
வேலூர் செயின்ட் தாமஸ் ஆலயத்தில் நாளை காலை 8 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.

பிராட்வே செயின்ட் தாமஸ் கத்தீட்ரல் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
கோயம்பேடு செயின்ட் பீட்டர் அன்டு செயின்ட் பால் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
தாம்பரம் மார்கிரகோரி யஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
சேத்துப்பட்டு செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
புழுதிவாக்கம் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
பாடி செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
ஈஞ்சம்பாக்கம் செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை காலை 6 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
பெரம்பூர் செயின்ட் விகோரியஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
திருவொற்றியூர் செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
ஆவடி செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் நாளை அதி காலை 4.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
ஆவடி ராமலிங்கபுரம் செயின்ட் ஜார்ஜ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் மேரீஸ் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
மயிலாப்பூர் சேப்பல் ஆலயத்தில் நாளை அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
யாக்கோபாயா சபை யின் அனைத்து ஆலயத்திலும் இன்று மாலை 6 மணி முதல் விசேஷ பிரார்த்தனை. 8 மணிக்கு தீ ஜுவாலா திருப்பலி, 9 மணிக்கு விசேஷ பிரார்த்தனை, நள்ளிரவு 1.15 மணிக்கு கிறிஸ்துமஸ் செய்தி.
இந்த பிரார்த்தனைகள் நடைபெறும் ஆலயங்கள் வருமாறு:-
ஆவடி செயின்ட் ஜார்ஜ் ஆலயம், இரட்டை ஏரி செயின்ட் மேரீஸ் ஆலயம், அண்ணாநகர் செயின்ட் தாமஸ் ஆலயம், பெரும் பாக்கம் செயின்ட் கிரகோரி யஸ் ஆலயம், கேளம்பாக்கம் செயின்ட் மேரீஸ் ஆலயம், பல்லாவரம் செயின்ட் மேரீஸ் ஆலயம், புதுச்சேரி செயின்ட் ஸ்டீபன்ஸ் ஆலயம்.
சேத்துப்பட்டு மெட்ராஸ் மார்தோமா ஆலயத்தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி. காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலி.
அண்ணாநகர் ஜெரு சலேம் ஆலயத்தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
அடையாறு செயின்ட் பால் ஆலயத்தில் நாளை காலை 6 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
ஆவடி செயின்ட் ஆண்ட் ரூஸ் ஆலயத்தில் நாளை காலை 6.30 மணிக்கு கிறிஸ்து மஸ் திருப்பலி.
பாடி பெத்தேல் ஆலயத் தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
பழவந்தாங்கல் செயின்ட் தாமஸ் மவுண்ட் ஆலயத்தில் நாளை காலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
திருவொற்றியூர் வட சென்னை மார்தோமா ஆலயத்தில் நாளை காலை 7 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
தாம்பரம் இம்மானுவேல் ஆலயத்தில் நாளை காலை 6 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப்பலி.
பாடி செயின்ட் தாமஸ் ஆலயத்தில் இன்று இரவு 7.30 மணிக்கும், நள்ளிரவும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் செய்தி, பவனி நடைபெறும். பாதிரியார் பிலிப் புலிப்பரா பரிசுகளை வழங்குகிறார். நங்கநல்லூர் ஆலயத்திலும் இதே நேரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகை ரட்சிக்க இறைமகன் இயேசு மனிதனாய் பிறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று புதிதாக பிறந்திருக்கிறது என்றால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ, அதே அளவு மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் அன்றும் கிறிஸ்தவ மக்களிடம் காணப்படும்.
இயேசுவின் பிறப்பை கிறிஸ்தவர்கள் மீட்பர் பிறந்துள்ளார் என்று கூறுவார்கள். மீட்பர் என்பதற்கு அர்த்தம், நம்மை மீட்க வந்தவர் என்பதாகும்.
எதில் இருந்து நம்மை மீட்க வந்தார்? என்று கேட்டால், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோரை, புறக்கணிக்கப் பட்டவர்களை மீட்க வந்தவர்தான் இயேசு என்று இறை வல்லுனர்கள் கூறுவார்கள்.
இதை உணர்த்துவதற்கு தான் இயேசு பெத்லகேம் நகரில் ஒரு மாட்டுக்கொட்டிலில் ஏழை தம்பதியான சூசை-மரியாவுக்கு குழந்தையாக பிறந்தார்.
இயேசு பிறந்த செய்தியும் முதலில் ஆடு மேய்ப்பவர்களுக்கே தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தான் இயேசு பிறந்ததும், பெத்லகேம் சென்று அவரை முதன் முதலாக தரிசித்தவர்கள்.
அதன் பிறகு தான் கீழை நாட்டு அறிஞர்கள் வருவார்கள். அவர்கள் இயேசு பிறந்த செய்தியை கீழ் திசை நாடுகளுக்கு எல்லாம் அறிவிப்பார்கள். அந்த அறிவிப்பில் மனுமகன் பிறந்துள்ளார். அவர் தான் இந்த உலகை ரட்சிக்க வந்த மெசியா எனக்கூறுவார்கள்.
இயேசுவின் பிறப்பு உலகுக்கு தெரியவந்த பிறகு அவர் உலக மக்களால் மெசியா என அழைக்கப்பட்டார். இயேசு வளரும் போது உலக மக்களிடம் அன்பையும், சமாதானத்தையும் போதித்தார்.
அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார். பொறாமையும், கோபமும் வாழ்க்கையை அழித்துவிடும் என்பதை எடுத்து கூறினார்.
உன் சகோதரனுக்கு என்ன செய்கிறாயோ, அதுவே உனக்கும் கிடைக்கும் என்று எடுத்துரைத்தார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று தாழ்ச்சியை போதித்தார்.
இந்த போதனைகனை பின்பற்றி வாழ்ந்தவர்கள் வாழ்வில் உயர்வை சந்தித்தார்கள். போதனைகளை ஏற்க மறுத்தவர்கள் வாழ்வின் சோதனைகளை அனுபவித்தார்கள்.
இப்போது எப்படி இயேசுவின் போதனைகளை கடைப்பிடிப்பது என்பதற்கும் இயேசு அன்றே பல உதாரணங்களை கூறியுள்ளார்.
நீ ஒரு ஏழை சகோதரனுக்கு உதவி செய்தால், அதனை எனக்கே செய்ததாய் நினைத்து நான் அதனை ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்து உள்ளார்.
எனவே தான் அண்டை, அயலாருக்கு இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவம் கூறுகிறது.
ஏழை சிறுவனின் கல்விக்கு உதவுவது, பசியால் துடிக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பது, வழி தெரியாமல் தவிக்கும் ஒருவருக்கு வழி காட்டுவது, வாழ்க்கையில் போராடும் ஒருவரை கைதூக்கி விடுவது போன்றவையே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.
இதைதான் உலக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும், அது தான் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எனவும் இறைநூல் கூறுகிறது.
இதனால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்களில் கிறிஸ்தவர்கள் அண்டை, அயலாருக்கும், ஏழைகளுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நாள்களில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல உலக மக்களும் கடைபிடிக்க வேண்டும்.
இதை தான் இயேசு விரும்பினார். இதற்காக தான் அவர் மனுமகனாய் இம்மண்ணுலகில் பிறந்தார்.
இந்தியாவில் மார்கழி மாதம் பனி கொட்டும் நேரத்தில் இயேசு பிறந்த நாள் விழா கொண்டாடப் படுகிறது.
இதற்காக இன்று நடு இரவில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இதில் பங்கேற்கும் மக்கள் இயேசுவின் பிறப்பை அதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொண்டாட வேண்டும் என்று உலக கிறிஸ்தவர்களின் தலைவர் போப்பாண்டவர் கூறியுள்ளார். மேலை நாடுகளில் இந்த பண்டிகை டிசம்பர் மாதம் தொடங்கியதுமே ஆரம்பமாகிவிடும்.
மனுமகன் இயேசுவை வரவேற்று பாடும் பாடல்களுடன் கிறிஸ்தவர்கள் ஊரை சுற்றி வருவார்கள். கிறிஸ்துமஸ் தாத்தாக்களுடன் வீடு, வீடாக சென்று கிறிஸ்துவின் பிறப்பையும், அவர் எதற்காக பிறந்தார் என்பதையும் கூறிசெல்வார்கள். வீடுகளுக்கு செல்லும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவார்கள். மின் விளக்கு அலங்காரத்தில் ஊரே ஜொலிக்கும். வீடுகளிலும் மக்கள் ஸ்டார்கள் கட்டி மகிழ்வார்கள். கிறிஸ்தவர்களின் வீடுகளில் குடில்களும் கட்டப்படும்.
இயேசு இங்கு பிறந்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டவே இவ்வாறு குடில்கள் கட்டப்படுகின்றன. இந்த குடில்கள் மூலம் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் மக்கள், அவர் நமக்கு விட்டு சென்ற அன்பையும், சமாதானத்தையும், பின்பற்ற வேண்டும் என்பதே மறைநூல் அறிஞர்களின் விருப்பம். கிறிஸ்துமஸ் நாளன்று இதனை வலியுறுத்தும் விதத்தில் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெறும். அதில் புத்தாடை அணிந்து பங்கேற்கும் மக்கள், இயேசுவின் போதனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவார்கள்.
கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும்
இந்த நாள் உலக மக்களுக்கு மீட்பளிக்கும் நாளாக மாறாட்டும்.
கிறிஸ்து பிறப்பு விழா உலகில் அனைத்து மக்களும் நிறம், சாதி, மதம், இனம், மொழி கடந்து அன்பு செய்யும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உரக்க கூறும் விழா. நாமும் அடுத்திருப்போரை பேதங்களையும், பிரிவினைகளையும் கடந்து அன்பு செய்யும்போது மட்டுமே அவரின் பிள்ளைகள் என்பதையும் உணர்த்தும் விழா. இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா நமக்கும் நம் நாட்டுக்கும் அமைதியோடு கூடிய ஆசியை அருள்வதாக. அன்பையும், சமாதானத்தையும்
வலியுறுத்தும் கிறிஸ்துமஸ் ஒப்புதலுக்கு
மணாலி: மலைவாசஸ்தலமான மணாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கியச் சிறப்பாக பனி மூடிய மரங்கள், மலைகள், புல்வெளிகள், நடைபாதைகள், வீடுகள், உணவு விடுதிகள் என அனைத்தையுமே சொல்லலாம். ஒவ்வொரு டிசம்பர் மாதமும் மணாலிக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது எனப்புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணாலியின் பனிமூடிய வெள்ளைக் கிறிஸ்துமசை கொண்டாட வருகிறார்கள். ஒவ்வொரு தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிகளின் வாயில்களில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர் நம்மை வரவேற்கிறார். உணவகங்களில் ஹிமாச்சல பிரதேசத்தின் சிறப்பான உணவு வகைகள் மற்றும் வேறு பல பொருட்களும் வழங்கப்படுகின்றன. உணவுடன், திருவிழா மனநிலைக்கு பார்வையாளர்களை இமாச்சல குழு நாட்டுப்புற இசையானது இசைக்கப்பட்டு மகிழ்ச்சியான மனநிலைக்கு இழுத்துச் செல்கின்றது. அதேபோல் தங்கும் விடுதிகளிலும் மென்மையான கரோல் இசையைக் கேட்டுக் கொண்டும், சூடான சாக்லேட்டுகளை சாப்பிட்டுக் கொண்டும், விடுதிகளின் வெளியில் நெருப்பானது மூட்டப்பட்டு அதைச் சுற்றி அமர்ந்து மக்கள் பாடுவதையும் குளிர்ச்சியையும் அனுபவித்துக் கொண்டும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனிப்பந்துகளைச் செய்து ஒருவர் மேல் ஒருவர் வீசியெறிந்து விளையாடுவதையும், மணாலியல் மகிழ்ச்சியாக ரசிக்க முடியும். பனியின் குளிர்ச்சியானது மிக அதிகமாக இருந்தாலும் ஊர் முழுவதும் எல்லா இடங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் அதிக அளவிலான உற்சாகத்தை பார்க்க முடிகின்றது.
ஊர் முழுவதும் உள்ள கிறிஸ்துமஸ் மரங்கள் மட்டுமல்லாது சிறு செடிகளும் பனியால் போர்த்தப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை மட்டுமல்லாது சுற்றுலா பயணிகளையும் உற்சாகமாக வரவேற்கின்றன.
கோவா: சிறந்த கடற்கரைகள் மட்டுமல்லாது கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கும் மிகச்சிறப்பான இடமான கோவாவைச் சொல்லலாம். இங்கிருக்கும் போர்த்துக்கீசிய மரபு மற்றும் கத்தோலிக்க மக்கள் தொகையே கிறிஸ்துமஸ் உற்சாகமாகக் கொண்டாடப்டுவதற்கான காரணமாகும். தேவாலயங்கள் மற்றும் வீடுகள் அழகான விளக்குகள் மற்றும் பாயின்செட்டியா மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் கரோலை இரவு நேரத்தில் பாடுகிறார்கள். அனைத்து வயதினரும் தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனையில் பங்கேற்க வரிசையில் நிற்பதைப் பார்க்க முடியும். கிறிஸ்துமஸ் பிறக்கும் இரவானது ஊர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் ஆடிப்பாடிச் செல்ல அவர்களைத் தொடர்ந்து பெரும்பாலானவர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடிக் கொண்டு செல்வதைப் பார்க்க முடியும். கோவாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது மிகவும் பிரபலம். எனவே அதைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தருகிறார்கள்.
பாண்டிச்சேரி: தமிழ்நாடு கடற்கரையில் சற்று தொலைவில் உள்ள கண்கவர் சிறிய யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி “லிட்டில் பிரான்ஸ்” என்று அழைக்கப்படுகின்றது. பிரெஞ்சு வம்சா வளியினர் இங்கு அதிகமாக இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அனைத்து பாரம்பரிய சடங்குகளோடும் கொண்டாடப்படுகின்றன.
இங்கிருக்கும் தேவாலயங்கள், குறிப்பாக சர்ச் ஆஃப் அவர் லேடி ஆஃப் இம்மாகுலேட் கான்செப்சன் மற்றும் இயேசு கிறிஸ்துவின் புனித இதய தேவாலயமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது மிகவும் அழகாக அலங்கரிக்கப்படுகின்றன. இந்தியாவில் மிக அழகாக அலங்கரிக்கப்படும் தேவாலயங்களில் இவையும் அடங்கும். நள்ளிரவு பிரார்த்தனைக்காக முழு நகரமும் இங்கு கூடுகின்றன. மேலும் கடற்கரையில் மக்கள் கூடி உற்சாகமாகக் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
மும்பை: கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மக்களுமே இங்கு கிறிஸ்துமஸைக் கொண்டாடத் தயாராகி விடுகிறாகள் என்றே சொல்லலாம். பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களும், வண்ண விளக்குகளும் அலங்கரிக்ப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.
கிறிஸ்துமஸ் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்களை வீட்டிற்குள் வைத்து அலங்கரிக்கப்பதோடு அவற்றைப் பார்க்கவும் உறவினர்கள் மட்டுமல்லாது அக்கம் பக்கத்தினரையும் அழைக்கிறார்கள்.
பிளம் கேக்குகள், குக்கிஸ் மற்றும் பலவிதமான க்ரீம் கேக்குகளானது கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. குஷ்வர், கிடியோ நியூரியோ மற்றும் இனிப்பு முறுக்குகள், நேந்திரம் பழ சிப்ஸ்களானது வீடுகளில் செய்யப்படுகின்றன.
வான்கோழி பிரியாணி, சிக்கன் வறுவல் போன்றவை கட்டாயம் கிறிஸ்துவ இல்லங்களில் கிறிஸ்துமஸ் அன்று செய்யப்படும் உணவாகும். தேவாலயங்கள் மட்டுமல்லாது அனைத்து வணிக வளாகங்களிலும் மிகப்பெரிய உயரமான கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களானது மிகவும் அழகாகவும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்படுவது அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.
இதேபோல் கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், குறிஞ்சிநகர் குழந்தை ஏசு ஆலயம், முதுநகர் பெந்தேகொஸ்தே சபை, மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயம், போன்ற பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. கடலூர் ஏ.எல்.சி. தேவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கும், நாளை (புதன்கிழமை) காலை 5 மணிக்கும் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடக்கிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவையொட்டி கடலூரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. முன்னதாக மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயத்தில் ஏசு பிறப்பு குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிலையில் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தை இடித்துவிட்டு பிரமாண்டமாக புதிய ஆலயத்தை கட்டும் முயற்சியை ஆலய பங்கு தந்தை எச்.ஜோ பாலா மேற்கொண்டார். அதன் அடிப்படையில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உதவி மூலம் ஆலயம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி தொடங்கப்பட்டது. நன்கொடையாளர்கள் அளித்த உதவியினாலும், தொழிலாளர்களின் உழைப்பினாலும் தற்போது ஆலயம் கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
இந்த விழாவில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையேற்று புதிய எழில்மிகு ஆலயத்தை பிரதிஷ்டை செய்து திறந்துவைத்தார். பின்னர், ஆலய மணி மற்றும் கொடி மரத்தையும் பிரதிஷ்டை செய்தார். அதனைத் தொடர்ந்து ஆலய திருப்பலி நடந்தது. இதில் சபை நிர்வாகிகள் எஸ்.இதய பென்சிகர், கிளிப்பர்டு உள்பட சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த மரங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்சியமான தகவல்களை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடியும்.
இந்த கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளில் அலங்கரிக்கும் பாரம்பரியமானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர், தொடங்கியதாக கூறப்படுகின்றது.
பேகன் மத மக்கள் பசுமையான மரங்களை கருவுறுதலின் அடையாளமாக தங்களது கதவு மற்றும் ஜன்னல்களில் அலங்கரித்து வணங்கி வந்தனர்.
1500-ம் ஆண்டு மற்றும் 1600களுக்கு இடையில், லாட்வியா மற்றம் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கத் துவங்கினர். பின்னர் ஜெர்மானியர்கள் இந்தப் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டதாக காஸ் என்னும் ஆய்வாளர் கூறியுள்ளார்.
நார்ட்மேன் பிர் எனப்பெயர் கொண்ட மரமே கிறிஸ்துமஸ் மரங்ளின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.
இந்த மரத்தின் இலையானது மென்மையான ஊசிபோன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இம்மரத்தில் வழக்கமாக மரங்களில் இருக்கும் நறுமணம் இல்லாததால் இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், நறுமனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும் சிறந்த தேர்வாகவும், விரும்பப்படுவதாகவும் அமைந்தது.
தொண்ணூற்றெட்டு சதவீத கிறிஸ்துமஸ் மரங்கள் அனைத்தும் பண்ணைகளிலேயே வளர்க்கப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் மரத்தின் ஒளிரும் மெழுகுவர்த்திகளை முதன்முதலில் ஏற்றிய பெருமை பதினாறாம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி மார்டின் லூதர் என்பவரையேசாரும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது ஜெர்மனியில் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அவை அமெரிக்காவில் பிரபலமடைந்தன.
பச்சை நிற சாயம் நனைக்கப்பட்ட வாத்தின் இறகுகளை கம்பிக் கிளைகளுடன் இணைத்தே முதன் முதலில் செயற்க்கை கிறிஸ்துமஸ் மரங்கள் தயாரிக்கப்பட்டன.
கிறிஸ்துமஸ் மரங்களை தலைகீழாகத் தொங்கவிடுவதும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாரம்பரியமாக இருந்தது வந்திருக்கின்றது. பல ஸ்லாவிக் குழுக்களிடையே இப்பழக்கம் பொதுவாகக் காணப்பட்டதாகவும், ஆனால் இந்த பாரம்பரியம் எப்படி ஏன் தொடங்கியது என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது, என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு கிறிஸ்துமஸ் மரமானது வழக்கமான உயரத்தை அடைய 15 ஆண்டுகள் வரை ஆகலாம். என்று கூறப்படுகின்றது.
ஒரு கிறிஸ்துமஸ் மரத்தின் வழக்கமான உயரம் சுமார் ஆறு அல்லது ஏழு அடியாகும்.
1846 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி தனது கணவர் மற்றும் கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி நின்று கிறிஸ்துமஸை கொண்டாடிய புகைப்படம் வெளியான பிறகே இங்கிலாந்தில் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் மரங்களைத் தங்கள் வீடுகளிலும் அலங்கரிக்கத் தொடங்கினர்.
அதன் பின்னரே அமேரிக்காவிலும் கிறிஸ்துமஸ் மரங்களை வீடுகளில் அலங்கரிப்பது பிரபலமானது.
உலகின் மிக உயரமான 67.36 மீ (121 அடி) கிறிஸ்துமஸ் மரம் டக்ளஸ் பிர், 1950 டிசம்பரில் அமெரிக்காவின் சியாட்டிலிலுள்ள நார்த்கேட் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.
237 அடி உயரமுடைய செயற்கை கிறிஸ்துமஸ் மரமானது இலங்கையில் கொழும்பு நகரில் அலங்கரிக்கப்பட்டது. உலகின் உயரமான செயற்கைக் கிறிஸ்துமஸ் மரமாக இதனைக் கூறுகிறார்கள்.
2010 ஆம் வருடம் பெல்ஜியம் நாட்டின் மேல்மெடி என்ற இடத்தில் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரமானது எறத்தாழ 1,94,62 வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சாதனை படைத்தது.
2007 ம் ஆண்டு பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோவில் 85 மீ உயரமுடைய மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரமானது 2.8 மில்லியன் மைக்ரோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு வளைகுடாநாடான அபுதாபியில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரமானது 181 நகைகளால் அலங்கரிக்கப்பட்ட விலையுயர்ந்த மரமாகக் கருதப்படுகிறது.
1886 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 12 இன்ச் உயரமுடைய கிறிஸ்துமஸ் மரமே மிகப் பழமையான ஒன்றாகக் கூறப்படுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேனட் பார்க்கர் என்பவரே இந்த அழகிய கிறிஸ்துமஸ் மரத்தின் சொந்தக்காரராவார்.
இந்த ஆலயத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த சில நாட்களாக வழக்கத்தை காட்டிலும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
வருகிற 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் இந்த பேராலயத்தில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.
விழாவை வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கேக் வெட்டப்பட்டது. இதையடுத்து ஏசு பிறப்பின் நிகழ்வுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும், பாடல்கள், நாடகம் மூலம் எடுத்து கூறப்பட்டது.
இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள், வேளாங்கண்ணி பேராலய ஊழியர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
மனிதனைப் பார்த்து கடவுள் கேட்ட முதல் கேள்வி.
வெறுமையாயிருந்த உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்து, காற்றையும், கடலையும், மரம், செடி கொடிகளையும், விலங்குகளையும் படைத்த கர்த்தர், தன்னுடைய படைப்பின் மகுடமாக மனிதனையும் படைத்தார்.
ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி, தான் படைத்த எல்லாவற்றின் மீதும் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தார். தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியை மாத்திரம் புசிக்கக்கடாது என்னும் கட்டளையையும் கொடுத்தார்.
ஆனால் மனிதனோ, தந்திரசாலியான சர்ப்பத்தின் சொல்லைக் கேட்டு அந்த மரத்தின் கனியை புசித்தான். விளைவு, தான் நிர்வாணியென்று உணர்ந்தான், பூமியில் முதல் பாவமும் நுழைந்தது.
பகலில் குளிர்ச்சியான வேளையில் மனிதரோடு பேசலாமென்று வந்த கர்த்தரின் சத்தத்தைக் கேட்ட மனிதன், அவருக்குப் பயந்து, தோட்டத்தின் செடிகளுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டான்.
அப்பொழுது கடவுள் ஆதாமிடம் கேட்டதுதான், அந்த கேள்வி, “நீ எங்கே இருக்கிறாய்?”
‘நிர்வாணியாயிருப்பதனால் ஒளிந்து கொண்டேன்’ என்று அவன் சொல்கிறான்.
“நீ நிர்வாணியென்று உனக்கு அறிவித்தவன் யார்?, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ?” என்று இன்னும் இரண்டு கேள்விகள் கடவுளிடமிருந்து வருகின்றன.
உடனே ஏவாளின் மீது பழியைத் தூக்கி போடுகிறான்.
ஏவாள், சர்ப்பத்தின் மேல் பழியைப் போடுகிறாள்.
கோபம் கொண்ட கர்த்தர், ‘உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்’ என்று சர்ப்பத்திற்கு சாபத்தைக் கொடுத்தார்.
“நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்” என்று ஏவாளுக்கும், “பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என்று ஆதாமுக்கும் சாபம் கொடுத்து ஏதேன் தோட்டத்தை விட்டும் துரத்தியும் விட்டார்.
ஆதாம் ஏவாள் தம்பதியருக்கு காயீன், ஆபேல் என இரண்டு பிள்ளைகள் பிறக்கிறார்கள். ஏதேனுக்கு வெளியே வாழ்வதால், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனாகவும், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனுமானான்.
இப்பொழுது இருவரும் கடவுளுக்கு காணிக்கை செலுத்த வந்தார்கள். ஆபேல் தன்னிடத்திலிருந்த சிறந்த ஆடுகளை படைத்தபடியால், கடவுள் அவன் காணிக்கையை அங்கீகரித்தார். இதனால் எரிச்சலடைந்த காயீன், ஆபேலைக் கொலை செய்து விடுகிறான்.
இப்பொழுதும் கடவுள் தேடி வருகிறார். “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?” என்று காயீனைப் பார்த்துக் கேட்கின்றார்.
கடவுளிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய காயீனோ, “என் சகோதரனுக்கு நான் காவலாளியோ?” என்று கர்த்தரைப் பார்த்தே கேட்டுவிட்டான். தன் தகப்பனைப் போல சாபத்தையும் வாங்கி கொண்டான்.
ஆனாலும் மனிதர்கள் மேலிருந்த கடவுளின் அக்கறை குறையவேயில்லை. ஆதாம், ஏவாள் தொடங்கி, நோவா, ஆபிரகாம், மோசே, யோசுவா, நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் என்று பலரோடும், பலர் மூலமும், மனிதரோடு பேசுவதைக் கடவுள் நிறுத்தவேயில்லை.
ஆனால், மனிதனோ கடவுளை விட்டு விலகி, பாவத்தில் விழுந்துக் கொண்டேயிருந்தான். அவனை பாவத்திலிருந்து மீட்க வேண்டுமென்றால் ஸ்திரீயின் வித்து பாவத்தின் வித்தை நசுக்கியேயாக வேண்டும்.
இதற்கு முடிவு, தன்னுடைய ஒரே மகனாகிய இயேசுவை இந்த உலகத்தில் மனிதனாக பிறக்க செய்து, அவர் மூலமாக மனிதனை மீட்பதே என்று எண்ணின கர்த்தர், அவரையே இந்த உலகத்தில் குழந்தையாய் பிறக்க செய்தார். அதை தான் நாம், கிறிஸ்துமஸ் என்று அழைக்கிறோம்.
இயேசு பிறந்தபோது, கிழக்கிலே ஒரு நட்சத்திரம் தோன்றியது. அதைக் கண்ட வான சாஸ்திரிகள், இயேசுவை பணிந்துகொள்ள வந்தார்கள்.
கடவுளின் மகன், அரண்மனையிலே தான் பிறந்திருக்க வேண்டுமென்று எண்ணின அந்த சாஸ்திரிகள், ஏரோது என்னும் ராஜாவின் அரண்மனையில் போய் ஒரு கேள்வி கேட்டார்கள்.
இறைமகனைக் குறித்து அவர்கள் கேட்ட அந்தக் கேள்வி, “யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே?” என்பதே.
ஏரோதாலும், அவனோடிருந்தவர்களாலும் இந்த கேள்விக்கான விடையை அவர்களுக்கு கொடுக்கமுடியவில்லை. வெளியே வந்த அவர்களுக்கு அந்த நட்சத்திரமே வழி காட்டியது.
பாலனாய் பிறந்த இயேசு, மனிதனாய் வளர்ந்து, தான் வந்த நோக்கமாகிய மனிதன் பாவத்திலிருந்து விடுதலைப் பெற, சிலுவையில் தொங்கி மரித்தார்.
அந்த சிலுவையில் இவ்வாறாக எழுதப்பட்டிருந்தது “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு” (மத்தேயு 27:37).
ஆம், கிறிஸ்து பிறப்பை சாஸ்திரிகளை வழி நடத்திய நட்சத்திரத்தோடும், இயேசு பிறந்த தொழுவத்தின் நினைவாக குடிலோடும் கொண்டாடுகின்ற நாம், சாஸ்திரிகளின் கேள்விக்கான பதில் கிடைத்த அந்த சிலுவையையும் நினைவுகூருவோம். அச்சிலுவை நமக்கு கற்றுத்தரும் தியாகத்தையும், அன்பையும் நாம் நம்மில் கொண்டு வாழ்வோம்.
அன்பர்புரம் சகோ. ஹெசட் காட்சன்






