என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    9-ம் நாள் திருவிழாவான 18-ம் தேதி இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    10-ம் திருவிழாவான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடந்தது. 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடைபெற்றது

    10.30 மணிக்கு மலையாள திருப்பலியும் பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்கும் மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆண்டனி அல்காந்தர், துணை பங்கு தந்தையர்கள் ஜேக்கப், மெர்ஜின், கிங்ஸ்லின் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சேசுசுமன், துணைச் செயலாளர் பினோலின், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய 9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் திருப்பலி, மறையுரை, திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, ஜெபமாலை போன்றவை நடைபெற்றது.

    9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெறுகிறது. 10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்குமாறு பங்கு பேரவை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், துணை பங்கு தந்தைகள் ஜேக்கப், மெர்ஜின், கிங்ஸ்லின் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சேசுசுமன், துணைச் செயலாளர் பினோலின், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்கா விட்டால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்ற உண்மையை இயேசு நினைவுறுத்தினார்.
    தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டாத மனிதர் யார்? ஆனால், எப்போது இறைவன் நம்மை மன்னிப்பார்? “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் இறைத்தந்தை உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்கா விட்டால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்ற உண்மையை இயேசு நினைவுறுத்தினார்.

    ‘இறைவனுக்கு காணிக்கை செலுத்த நீங்கள் ஆலயம் வரும்போது, யாரோ ஒருவர் மீது இன்னும் கோபமோ பகையோ இருந்தால், உங்கள் காணிக்கைகளை அப்படியே ஆலயத்தில் வைத்துவிட்டு, அந்த மனிதரைத் தேடி அவருடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதன்பின் ஆலயம் வந்து உங்கள் காணிக்கைகளைக் கொடுங்கள்’ என்றார் இயேசு. சக மனிதர் ஒருவரோடு சண்டையிட்டு, இன்னும் சமாதானம்செய்து கொள்ளாத ஒரு நபரின் காணிக்கையை எப்படி ஏற்பார் கடவுள்?

    பரிசு ஒன்றை வாங்கிக்கொண்டு தந்தையின் பிறந்த நாள் அன்று, அதைக் கொடுத்து அவரை வாழ்த்தி, ஆசி பெற வருகிறான் மூத்த மகன். தன் இளைய மகனோடு சண்டையிட்டு அவர்களுக்குள் சமாதானம் இல்லை என்று அறிந்த தந்தை என்ன சொல்வார்? “நீங்கள் இருவரும் என் பிள்ளைகள். நீங்கள் இருவரும் நல்லிணக்கத்தோடு, மாறாத பாசத்தோடு இருந்தால்தான் என் மனம் மகிழ்ச்சியுறும். அந்த மகிழ்ச்சியை முதலில் எனக்குக் கொடு. பிறகு வந்து நீ உன் பரிசைத் தந்தால், நான் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொள்வேன்” என்றுதானே அவர் சொல்வார்?

    எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஞானம், மன்னிக்கும் மனம் இவற்றோடு இறை நம்பிக்கையும் வழிபாடும்கூட பகைமை எனும் கொடிய நஞ்சை நாம் உட்கொண்டு அழிந்துபோகாமல் நம்மைக் காப்பாற்ற முடியும் என விளக்கி மலைப்பொழிவில் வழிகாட்டினார் இயேசு.

    “பகை சூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கிறேன்” என்று மன்றாடும் ஆலயப் பாடல் ஒன்று உள்ளது. அப்படித்தான் பகை சூழ்ந்திருக்கும் இதயச்சுவரை நாம் அன்பால் தகர்க்க வேண்டும்.
    இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.
    இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.

    அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.

    இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.

    ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.

    இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.

    கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.

    தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.

    இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.

    நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.

    மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.

    இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.

    இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).

    மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.

    மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.

    இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.

     - டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.  

    பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.
    இறைவன் நம் மீது காட்டும் மன்னிப்பும், இரக்கமும் நாம் அதை பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கே. ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அவருடைய நாஜி படை முகாமில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு நண்பர்கள் இரு வேறுபட்ட மனநிலையில் இருந்தனர். அந்த இருவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகு பல ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்டனர்.

    அப்போது முதலாமவர் மகிழ்ச்சியாக காணப்பட்டார். அதற்கு காரணம், தன்னை கொடுமைப்படுத்தியவர்களை அவர் மன்னித்து விட்டார். அதனால் அவருக்கு மகிழ்ச்சி கிடைத்தது. இரண்டாமவர், சோர்ந்து நோய்வாய்ப்பட்டு மகிழ்ச்சியில்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அவர், பகைவர்களை மன்னிக்கவில்லை.

    ‘மன்னிப்பு‘ என்ற மதிப்பீட்டிற்கு ‘உரு‘ கொடுத்தவர் இயேசு. இறைவன் நமக்குத்தரும் மன்னிப்பு அனுபவம் என்பது சுழற்சியானது. அவர் நமக்கு கொடுத்ததை நாமும் பிறருக்கு கொடுக்க வேண்டும். இந்த சுழற்சி நின்று விடும் போது மனிதநேயமும், பிறரன்பும் இல்லாமல் போய்விடும். நம்மில் பலர் உடலில், உள்ளத்தில், உறவுகளில் நோயாளிகளாக இருக்கின்றோம்.

    இந்த நோய்களுக்கு காரணிகளாக இருப்பது அறியாமை, பிடிவாதம், மனக்கசப்பு, பகை, வெறுப்பு, கோபம் ஆகியவையே. இதற்கு காரணமானவர்களை நாம் மன்னிக்கும் போது மன்னித்தவர்களை ஏற்று, அன்பு செய்து, அவர்களுக்கு உதவும்போது வானக தந்தையின் மக்களாக நாம் சான்று பகரமுடியும். (மத் 5:45)

    நண்பர்களையும், பகைவர்களையும் ஒரே விதமாக பார்க்கும் மனப்பக்குவம் மன்னிப்பின் முழுமையை காட்டுகிறது. மன்னிக்கும் போது மனதில் ஆற்றல் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே மன்னிப்பு ஒரு அருமருந்து. நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்காத போது நம்மை இறைவன் மன்னிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? “பிதாவே, இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்“ (லூக் 23:34) என்றார் இயேசு.

    எனவே, பிறர் நமக்கு எதிராக எந்த வகையிலும் செய்கிற துரோகங்கள், குற்றங்களை மனதார மன்னிப்போம். நாம் மாறினால் இந்த உலகமே மாற்றமடையும். அப்போது தான் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகள் ஓங்கி உயர்ந்து நிற்கும்.

    டி.செபாஸ்டின், வேதியர், புனித தோமா அருட்பணி மையம், திண்டுக்கல்.
    நீங்கள் இறைவனிடம் வரும்போது குறைவுகள் நிறைவாய் மாறுவது மட்டுமல்ல, துக்கமும் சந்தோஷமாய் மாறும். புலம்பல்களையும் அவர் ஆனந்தக்களிப்பாய் மாறப் பண்ணுவார்.
    “என் தேவன் தம்முடைய ஐசுவரி யத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி. 4:19).

    ஆண்டவர் மகிமையில் ஐசுவரியமுள்ளவர். அவர் உங்களுடைய குறைகளை எல்லாம் மாற்றி, அவைகளை நிறைவாக்குவார். சிங்கக்குட்டிகள் ஒரு வேளை தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கலாம். ஆனால் ஆண்டவரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறையாது.

    கானாவூர் திருமண வீட்டிலே திராட்சை ரசம் இல்லாத ஒரு குறைவு வந்தது. திராட்சை ரசம் இல்லை என்றால் அங்கே சந்தோஷமில்லை. அந்த திருமண வீட்டில் குழப்பங்களும், மனதுயரங்களும் இருந்திருக்கக்கூடும். ஆனால் அவர்கள் ஆண்டவரிடம் வந்தபோது, அவர் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படி அந்த குறையை நிறைவாக்கினார்.

    தண்ணீர் அற்புதமான ருசியுள்ள திராட்சை ரசமாய் மாறியது. அந்த வீட்டு சொந்தக்காரர் ஏற்கனவே கொடுத்த திராட்சை ரசத்தைவிட, ஆண்டவர் கொடுத்த திராட்சை ரசமே மிக மேன் மையாக இருந்தது.

    உங்கள் வாழ்க்கையிலும் பல குறைவுகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் இறைவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் செய்யும்போது நிச்சயமாகவே உங்கள் குறைவுகளை நிறைவாக்கி ஆசீர்வதிப்பார்.

    நீங்கள் இறைவனிடம் வரும்போது குறைவுகள் நிறைவாய் மாறுவது மட்டுமல்ல, துக்கமும் சந்தோஷமாய் மாறும். புலம்பல்களையும் அவர் ஆனந்தக்களிப்பாய் மாறப் பண்ணுவார்.

    “உங்கள் துக்க நாட்கள் முடிந்துபோகும்” (ஏசா. 60:20).

    வேதாகமத்திலே அன்னாள் என்ற ஒரு பெண்ணுக்கு பிள்ளையில்லாத ஒரு துக்கமிருந்தது. ஆனால் அவள் ஒரு நாள் ஆண்டவருடைய பாதத்திற்கு வந்தாள். அவர் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தின்படியே தன்னுடைய குறையை நிறைவாக்குவார், தன் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்று விசுவாசித்தாள். அப்படியே ஆண்டவர் ஆசீர்வாதமான சாமுவேலையும், இன்னும் ஐந்து குழந்தைகளையும் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார்.

    இஸ்ரவேல் தேசத்திலுள்ள ஒரு சிறிய ஆயி பட்டணத்தை பிடிக்க முடியாமல் யோசுவாவும், வீரர்களும் தோல்வியடைந்தார்கள். அப்போது, யோசுவா தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு முகங்குப்புற விழுந்து கதறினார். ஆண்டவர் அந்த கண்ணீரைக் கண்டார். தோல்வியின் காரணம் ஒரு ஆகான் என்பதை வெளிப்படுத்தினார். அந்த ஆகானை இஸ்ரவேலர் பாளயத்திலிருந்து அப்புறப்படுத்தி சுட்டெரித்தபோது, ஆண்டவர் அந்த தோல்வியை ஜெயமாய் மாறப்பண்ணினார். அதன் பின்பு யோசுவா ஆயி பட்டணத் தை மட்டுமல்ல, முழு கானானையும் சுதந்தரித்துக் கொண்டார்.

    பிரியமானவர்களே, குறைவு நேரமானாலும் சரி, துக்கத்தின் நேரமானாலும் சரி, தோல்வியின் நேரமானாலும் சரி, உங்களை நீங்களே ஆராய்ந்துப் பார்த்து, தடைகளை அப்புறப்படுத்தி தேவனோடு ஒப்புரவாகி விடுங்கள். உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளும்போது, உங்களுடைய தோல்வி ஜெயமாய் மாறும். நீங்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடும்போது, உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும். ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும்போது, உங்கள் குறைவுகள் எல்லாம் நிறைவாக மாறும்.

    “உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்” (யோசுவா 3:5).

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை, சென்னை.
    ஈரோடு புனித அமல மாதா சொரூபத்தை தோளில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். அப்போது தேரின் முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் அன்னை மரியாள் வாழ்த்து பாடல்கள் பாடியபடியும், ஜெபமாலை ஜெபித்தபடியும் பங்குபெற்றனர்.
    ஈரோடு மாநகரின் பழமையான கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக இருப்பது புனித அமல அன்னை ஆலயம். ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் அமைந்து உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினசரி நவநாள் திருப்பலி (பூஜை), பிரார்த்தனை மற்றும் மறையுரை வழிபாடுகள் நடந்தன. நேற்று முக்கிய விழாவான தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஈரோடு மறை வட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.

    இந்த திருப்பலியை கோவை மறைமாவட்ட வக்கீலும், சீமா தொண்டு நிறுவன இயக்குனருமான பங்குத்தந்தை ஆரோக்கிய பிரதீப் தலைமை தாங்கி நடத்தி, மறையுரையாற்றினார். இதுபோல் நேற்று மாலை திருவிழா சிறப்பு திருப்பலி கோவை புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் நடந்தது.

    இந்த 3 திருப்பலிகள் நிறைவிலும் வேண்டுதல் தேர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி மாதாவின் சொரூபம் (சிலை) அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் மாதா சொரூபத்தை தோளில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்தனர். அப்போது தேரின் முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் அன்னை மரியாள் வாழ்த்து பாடல்கள் பாடியபடியும், ஜெபமாலை ஜெபித்தபடியும் பங்குபெற்றனர்.

    திருவிழா வழிபாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆலய பங்குத்தந்தை ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5.30 மணிக்கு திருக்கொடி பவனி, ஜெபமாலை போன்றவை நடந்தது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இன்று (சனிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும், காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் நடக்கிறது.

    16, 17-ந் தேதிகளில் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. 18-ந் தேதி இரவு 8 மணிக்கு வானவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனி போன்றவை நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறும்.

    காலை 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெறும். விழாவில் பங்கு மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், பங்கு தந்தையர்கள் ஜேக்கப், கிங்ஸ்லி, மெர்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், துணை செயலாளர் பினோ, பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவை, அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.
    மழை வெள்ளம் வருவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை (வாழ்க்கையை) சோதித்து பலப்படுத்தி கொண்டால், பெருமழை-புயல் காலத்திலும் (தீர்ப்பு நாட்களில்) தைரியமாக இருக்க முடியும்.
    கலிலேயாவில், மலைப்பொழிவில் இயேசு கூறியது. ‘‘நான் சொல்பவற்றைச் செய்யாது, என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

    அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?, உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா?, உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.

    ஆகவே, என்னிடம் வந்து, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படுகிற எவரும், யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டு நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.

    நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செயல்படாத எவரும், அடித்தளம் இல்லாமல் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது, ஆறு பெருக்கெடுத்து ஓடியது, பெருங்காற்று வீசியது. அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது. இவ்வாறு பேரழிவு நேர்ந்தது’’ என கூறி, அதன் வழியாக நற்செய்தியை அறிவித்தார்.

    இந்த நற்செய்தி நமக்கு ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நாம் அனைவரும் ‘இறையாட்சிக்காக வாழ்கிறோமா..?, இல்லை வெளிவேடத்திற்காக வாழ்கிறோமா..?’ என்பதுதான் அது. அதேபோல இந்த உவமையில் அடித்தளம் இல்லாமல் மணல்மீது வீட்டைக் கட்டியவர் யார்?, இயேசுவை அறியாதவர்களா?, இயேசுவின் நற்செய்தியைக் கேட்காதவர்களா?, இல்லை. நற்செய்தியைக் கேட்டும், கேட்காமல் இருப்பவர்களை குறித்தே இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போவதும், நற்செய்தியைப் பற்றி பேசுவதும், இறைவனைப் போற்றிப் புகழ்வதும், சடங்குகளைக் கைக்கொள்வதும் நம் முடைய பழக்கமாக இருக்கலாம். ஆனால் அது இறையாட்சிக்கான வாழ்க்கையாக கருதப்படுவதில்லை. மாறாக, நற்செய்தியின்படி வாழ்வதும், நல்ல காரியங்களில் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வதுமே, இயேசுவுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதுமே, நம்மை இறையாட்சிக்குள் அழைத்து செல்லும்.

    கிறிஸ்தவர்களாகிய நம்மிடமே அன்பு, பரிவு, இரக்கம் போன்ற தூய ஆவியின் கனிகள் இல்லை. நம் உலக வாழ்வு ஆழமாகத் தோண்டாமல், மேலோட்டமாக, மணல்மேல் கட்டப்பட்ட வீடாகவே இருக்கிறது. நாம் வெளிவேடக்காரர் என்பதை அறியாமல், மீட்கப்பட்டவர்கள் என்றும் இறையாட்சியைப் பெற்றவர்கள் என்றும் நம்பி உலகில் வாழ்கிறோம்.

    நாம் கட்டிய வீடு (நம்முடைய வாழ்க்கை) மிகச் சிறந்த வீடாகவே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் இறையாட்சிக்கு முன்பாக பலமிழந்து, பேரழிவை சந்திக்கக்கூடியதாகவே இருக்கிறது. அதை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவ்வாறு மழை வெள்ளம் வருவதற்கு முன்பாகவே நம்முடைய வீட்டை (வாழ்க்கையை) சோதித்து பலப்படுத்தி கொண்டால், பெருமழை-புயல் காலத்திலும் (தீர்ப்பு நாட்களில்) தைரியமாக இருக்க முடியும். இல்லையேல், புயல் வேளையில் (தீர்ப்பு நாட்களில்) ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என கூப்பாடு போடுவதில் எந்த பயனும் இல்லை, என்பதை இயேசு சுருக்கமாக, அழகாக விளக்கியிருக்கிறார்.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் நாளை காலை 6.15 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, மாலை 5.30 மணிக்கு கொடி பவனி, ஜெபமாலை, 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 11-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, காலை 8 மணிக்கு திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி நடக்கிறது.

    16-ந்தேதியும், 17-ந்தேதியும் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது.

    விழாவில் 18-ந்தேதி இரவு 8 மணிக்கு வான வேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனி, 19-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலி, 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவில் பங்கு மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு திருத்தல நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்டணி அல்காந்தர், பங்கு தந்தையர்கள் ஜேக்கப், கிங்ஸ்லி, மெர்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், துணை செயலாளர் பினோ, பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவை, அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

    நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறை மாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது.
    கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்து கொண்டிருக்கிறது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கின்றது.

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மன்றாடும் பலர் அன்றாடம் பல நன்மைகளைப் பெற்று மனநிறைவுடன் செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சி அளிக்கிறது.

    ஒருவர் உலகமெல்லாம் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன (லூக்கா 9:25) என்ற வாக்கியம் புனித சவேரியார் வாழ்வுக்கு ஆதாரமாக அடித்தளமாக இருந்தது. மேலும் ஆழ்ந்த ஆன்மிக அனுபவமும் நற்செய்தி பணியாற்ற தூண்டியது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற இறைவார்த்தையின் படி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து அனைவரையும் இறையரசில் உட்படுத்த வேண்டும் என்ற ஆவல் இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. இஞ்ஞாசியார் தன்னுடன் சில குருக்களையும் அழைத்துக் கொண்டு ரோமுக்கு சென்று திருத்தந்தை 3-ம் சின்னப்பரை சந்தித்து ஆன்மிக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.

    போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே போர்த்துக்கீசிய மன்னர் 3-ம் ஜான் மன்னரது உதவியோடு புனித சவேரியார் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலேயே மறைதூது பணி செய்ய அனுப்பப்பட்டார்.

    இந்திய திருநாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் மலைவளமும், வயல் வளமும், கடல் வளமும் கொண்ட ஒரு சிறிய அழகிய, இனிமையான, படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம்.

    இங்கு அமைந்துள்ள கோட்டார் என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். பன்னாட்டு வர்த்தகர்கள் மொய்க்கும் வர்த்தக பொருளகரமாக விளங்கியது. கோட்டார் வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து மக்களை சந்தித்து மக்களுடைய அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார். மேலும் நம்பிக்கையோடு முன்வந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார்.

    கோட்டார் பேராலயத்திற்கு இன்னுமொரு சிறப்பு இங்கு தான் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறை மாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. இங்கு தான் நமது புனித சவேரியார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார். நம் பாதுகாவலரிடம் உரிமையோடும், அன்போடும், நம்பிக்கையோடும் நம் தேவைகளை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.

    பேரருட் பணி ஸ்டான்லி சகாய சீலன், பங்குதந்தை
    கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, ஏஞ்சல் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், மணிகள், டோர்கார்னர் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் மும்முரமாக விற்பனையாகின்றன.
    சென்னை :

    உலகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை நட்சத்திரம் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிப்பார்கள். மேலும் வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அலங்காரமும் செய்வார்கள்.

    இதையொட்டி கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் வைப்பதற்காக கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், குடில்களை வாங்கி செல்கிறார்கள்.

    சென்னை பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப் பேட்டை, தி.நகர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, ஏஞ்சல் பொம்மைகள், வாழ்த்து அட்டைகள், மணிகள், டோர்கார்னர் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் மும்முரமாக விற்பனையாகின்றன. கிறிஸ்துமஸ் பொருட்கள் பெரும்பாலும் சிவப்பு வண்ணங்களில் இடம்பெற்றுள்ளன. கைவினை கலைஞர்கள் பிரத்தியேகமாக வடிவமைத்த அழகிய பொருட்களும் விற்பனையாகின்றன.

    கிறிஸ்துமஸ் மரங்களில் தொங்கவிடும் வகையில் மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட பொம்மைகள், கடலில் கிடைக்கும் அலங்கார பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. அலங்கார விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகள், உடைகள் போன்றவையும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பரிசுப்பொருட்கள், சாக்லேட்டுகளும் உள்ளன.

    இதுதொடர்பாக சென்னை பாரிமுனையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் மற்றும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் முகமது அலி கூறியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை பெரிய அளவில் நடைபெற வில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட இப்போது விற்பனை பரவாயில்லை. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஏராளமான அலங்கார பொருட்கள் விற்பனைக்கு உள்ள நிலையில் தற்போது தான் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    தற்போது கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், தொப்பிகள், கிறிஸ்துமஸ் குடில்கள், அதை அழகுபடுத்தும் அலங்கார பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன.

    இதற்கு முன்பு சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், ஆந்திர, கேரளா ஆகிய வெளிமாநிலங்களிலும் இருந்து இங்கு வந்து கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வாங்கி செல்வார்கள். கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் நீடிப்பதால் இந்த ஆண்டும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில வாடிக்கையாளர்கள் வரவில்லை. தமிழகம் முழுவதும் இருந்து வாடிக்கையாளர்கள் வருகை தந்து வாங்கி செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் தற்போது ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பனை பெருகியுள்ள நிலையில் பல இணையதளங்கள் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனையையும் தொடங்கி உள்ளன.

    தங்கள் இணைய தளங்கள் மூலம் என்னென்ன பொருட்கள் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் காட்சிப்படுத்தி உள்ளனர். இதைப்பார்த்து ஆன்லைன் மூலம் பொது மக்கள் கிறிஸ்துமஸ் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகிறார்கள்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் குழு பாடல் கொண்டாட்டங்கள் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை தெரிவிக்கும் வகையில் குழு பாடல் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

    இதையொட்டி மாலை நேரத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் திரளும் கிறிஸ்தவர்கள் அங்கிருந்து வீதிகள் தோறும் குழு பாடல்களை பாடியபடி செல்கிறார்கள். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சாக்லேட் மற்றும் பரிசுப் பொருட்களையும் வழங்குகிறார். மேலும் அந்த குழுவினர் கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ள உறுப்பினர் வீடுகளுக்கு சென்று பாடல்களை பாடி வருகிறார்கள்.
    ×