என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
மன்னிப்பு வேண்டாத மனிதன் யார்?
Byமாலை மலர்17 Dec 2021 5:44 AM GMT (Updated: 17 Dec 2021 5:44 AM GMT)
மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்கா விட்டால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்ற உண்மையை இயேசு நினைவுறுத்தினார்.
தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு வேண்டாத மனிதர் யார்? ஆனால், எப்போது இறைவன் நம்மை மன்னிப்பார்? “மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் இறைத்தந்தை உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்கா விட்டால் இறைவன் உங்களை மன்னிக்க மாட்டார்” என்ற உண்மையை இயேசு நினைவுறுத்தினார்.
‘இறைவனுக்கு காணிக்கை செலுத்த நீங்கள் ஆலயம் வரும்போது, யாரோ ஒருவர் மீது இன்னும் கோபமோ பகையோ இருந்தால், உங்கள் காணிக்கைகளை அப்படியே ஆலயத்தில் வைத்துவிட்டு, அந்த மனிதரைத் தேடி அவருடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதன்பின் ஆலயம் வந்து உங்கள் காணிக்கைகளைக் கொடுங்கள்’ என்றார் இயேசு. சக மனிதர் ஒருவரோடு சண்டையிட்டு, இன்னும் சமாதானம்செய்து கொள்ளாத ஒரு நபரின் காணிக்கையை எப்படி ஏற்பார் கடவுள்?
பரிசு ஒன்றை வாங்கிக்கொண்டு தந்தையின் பிறந்த நாள் அன்று, அதைக் கொடுத்து அவரை வாழ்த்தி, ஆசி பெற வருகிறான் மூத்த மகன். தன் இளைய மகனோடு சண்டையிட்டு அவர்களுக்குள் சமாதானம் இல்லை என்று அறிந்த தந்தை என்ன சொல்வார்? “நீங்கள் இருவரும் என் பிள்ளைகள். நீங்கள் இருவரும் நல்லிணக்கத்தோடு, மாறாத பாசத்தோடு இருந்தால்தான் என் மனம் மகிழ்ச்சியுறும். அந்த மகிழ்ச்சியை முதலில் எனக்குக் கொடு. பிறகு வந்து நீ உன் பரிசைத் தந்தால், நான் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொள்வேன்” என்றுதானே அவர் சொல்வார்?
எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஞானம், மன்னிக்கும் மனம் இவற்றோடு இறை நம்பிக்கையும் வழிபாடும்கூட பகைமை எனும் கொடிய நஞ்சை நாம் உட்கொண்டு அழிந்துபோகாமல் நம்மைக் காப்பாற்ற முடியும் என விளக்கி மலைப்பொழிவில் வழிகாட்டினார் இயேசு.
“பகை சூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கிறேன்” என்று மன்றாடும் ஆலயப் பாடல் ஒன்று உள்ளது. அப்படித்தான் பகை சூழ்ந்திருக்கும் இதயச்சுவரை நாம் அன்பால் தகர்க்க வேண்டும்.
‘இறைவனுக்கு காணிக்கை செலுத்த நீங்கள் ஆலயம் வரும்போது, யாரோ ஒருவர் மீது இன்னும் கோபமோ பகையோ இருந்தால், உங்கள் காணிக்கைகளை அப்படியே ஆலயத்தில் வைத்துவிட்டு, அந்த மனிதரைத் தேடி அவருடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதன்பின் ஆலயம் வந்து உங்கள் காணிக்கைகளைக் கொடுங்கள்’ என்றார் இயேசு. சக மனிதர் ஒருவரோடு சண்டையிட்டு, இன்னும் சமாதானம்செய்து கொள்ளாத ஒரு நபரின் காணிக்கையை எப்படி ஏற்பார் கடவுள்?
பரிசு ஒன்றை வாங்கிக்கொண்டு தந்தையின் பிறந்த நாள் அன்று, அதைக் கொடுத்து அவரை வாழ்த்தி, ஆசி பெற வருகிறான் மூத்த மகன். தன் இளைய மகனோடு சண்டையிட்டு அவர்களுக்குள் சமாதானம் இல்லை என்று அறிந்த தந்தை என்ன சொல்வார்? “நீங்கள் இருவரும் என் பிள்ளைகள். நீங்கள் இருவரும் நல்லிணக்கத்தோடு, மாறாத பாசத்தோடு இருந்தால்தான் என் மனம் மகிழ்ச்சியுறும். அந்த மகிழ்ச்சியை முதலில் எனக்குக் கொடு. பிறகு வந்து நீ உன் பரிசைத் தந்தால், நான் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொள்வேன்” என்றுதானே அவர் சொல்வார்?
எனவே, கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஞானம், மன்னிக்கும் மனம் இவற்றோடு இறை நம்பிக்கையும் வழிபாடும்கூட பகைமை எனும் கொடிய நஞ்சை நாம் உட்கொண்டு அழிந்துபோகாமல் நம்மைக் காப்பாற்ற முடியும் என விளக்கி மலைப்பொழிவில் வழிகாட்டினார் இயேசு.
“பகை சூழும் இதயத்துச் சுவரை எல்லாம் - என் பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கிறேன்” என்று மன்றாடும் ஆலயப் பாடல் ஒன்று உள்ளது. அப்படித்தான் பகை சூழ்ந்திருக்கும் இதயச்சுவரை நாம் அன்பால் தகர்க்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X