என் மலர்
கிறித்தவம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் 11, 12-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள அந்தோணியார் இருநாட்டு மீனவர்களுக்கும் கருணை தெய்வமாக விளங்குகிறார். ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்ல தேவையில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 11, 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் இலங்கையில் உள்ள பக்தர்கள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், கொரோனா பரவல் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி உள்ள தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டும் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்கள் யாரும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் அதே காரணத்தை காட்டி தமிழக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையிலுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்பது போல் தமிழகத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 மீனவர்களை மட்டுமாவது இந்த ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கூடிய திருவிழாவாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி அனுமதி வழங்க வேண்டும்” என்றனர்.
திருவிழாவில் இரு நாட்டினரும் கலந்து கொள்வார்கள். இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டாலும் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் எந்தவித ஆவணங்களும் கொண்டு செல்ல தேவையில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சதீவு அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 11, 12-ந்தேதிகளில் நடைபெறுகின்றது. இந்த திருவிழாவில் இலங்கையில் உள்ள பக்தர்கள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும், கொரோனா பரவல் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி உள்ள தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டும் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்கள் யாரும் அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் அதே காரணத்தை காட்டி தமிழக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையிலுள்ள குறிப்பிட்ட சில பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என்பது போல் தமிழகத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 மீனவர்களை மட்டுமாவது இந்த ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தமிழக மீனவர்களின் உரிமையை பாதுகாக்க கூடிய திருவிழாவாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி அனுமதி வழங்க வேண்டும்” என்றனர்.
சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியிலும், இனத்தவர்களின் மேலும், டாக்டர்கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள்.
“நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?” (ஏசா. 36:4).
உங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? இந்த பூமியிலே வாழும்போது, உங்களுடைய நம்பிக்கை என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சிலர் தங்களுடைய நம்பிக்கையை பணத்தில் வைக்கிறார்கள். பணம் எல்லாவற்றுக்கும் உதவும், பணம் பாதாளம் வரை செல்லும், பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எந்த ஒரு மனிதன் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்காமல், பணத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறானோ, ஒரு நாள் அந்தப் பணம் அவனைக் கைவிடும்போது, அவன் தவித்து, துடித்துப் போவான்.
ஒரு பெரிய செல்வந்தர், “என் நம்பிக்கைஎல்லாம் என் பணத்தில்தான் இருக்கிறது” என்று பெருமையாக கூறினார். ஆனால் ஒரு பெரிய இனக்கலவரத்தில் அவருடைய எதிராளிகள் அவரைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கையிலிருந்து தப்பும்படி பீரோவிலிருந்த லட்சக்கணக்கான பணத்தை, நகைகளை அள்ளி அவர்களுக்கு முன்பாக வீசினார்.
ஆனால் அவர்களோ, அந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம். நீ தான் வேண்டுமென்று சொல்லி அவரைப் பிடித்து, அவர்களுடைய காரின் பின்னால் கட்டி, தரையிலே இழுத்து, பிறகு அவரை கொண்டுபோய் ஒரு மரத்திலே தலைகீழாக கட்டி, தொங்க வைத்து, கீழே தீயை பற்றவைத்து கொன்றார்கள். ஆம், அவர் நம்பின பணம் அவரை கைவிட்டது.
சிலர் தங்களுடைய சரீர பெலத்திலே நம்பிக்கை வைக்கிறார்கள். கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலையை உலகத்திற்கு கற்றுக்கொடுத்த வீரனாகிய புரூஸ்லி, தன் நம்பிக்கையை எல்லாம் தன் உடல் பலத்தில் வைத்தான். பல ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து தனது உடம்பையும், நரம்புகளையும் முறுக்கேற்றி, உலகத்திலேயே மிகச்சிறந்த சண்டை வீரனாக விளங்கினான்.
அந்தோ! ஒரு நாள் ஒரு நடிகை அவனை விருந்துக்கு அழைத்தாள். அவன் உணவிலே விஷம் வைக்கப்பட்டிருந்தது. அவன் அதை அறியாமல் புசித்தான். சில நிமிடங்களுக்குள் வேரற்ற மரம்போல சாய்ந்து தன் ஜீவனை விட்டான். அவனுடைய நம்பிக்கை அதோடு முடிந்தது.
இன்னும் சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியிலும், இனத்தவர்களின் மேலும், டாக்டர்கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள்.
“நீ நம்பியிருக்கிற உன் நம்பிக்கை என்ன?” என்று வேதம் கேட்கிறது.
ஆம், “தேவனே, நீரே என் நம்பிக்கை”.
தாவீது தன்னுடைய நம்பிக்கையை உலகத்திற்கடுத்த காரியங்களில் வைக்காமல், உலக மனுஷன் மேல் வைக்காமல், தேவன்பேரில் வைத்தார். தேவன்மேல் நம்பிக்கையுள்ளவர்கள் அசைக்கப்படுவதேஇல்லை.
“என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்” என்று தாவீது வேதத்தில் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார் (சங். 7:1).
பிரியமானவர்களே, உங்கள் நம்பிக்கையை ஆண்டவர் பேரில் வையுங்கள்.
“அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).
போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை, சென்னை.
உங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? இந்த பூமியிலே வாழும்போது, உங்களுடைய நம்பிக்கை என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சிலர் தங்களுடைய நம்பிக்கையை பணத்தில் வைக்கிறார்கள். பணம் எல்லாவற்றுக்கும் உதவும், பணம் பாதாளம் வரை செல்லும், பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எந்த ஒரு மனிதன் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்காமல், பணத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறானோ, ஒரு நாள் அந்தப் பணம் அவனைக் கைவிடும்போது, அவன் தவித்து, துடித்துப் போவான்.
ஒரு பெரிய செல்வந்தர், “என் நம்பிக்கைஎல்லாம் என் பணத்தில்தான் இருக்கிறது” என்று பெருமையாக கூறினார். ஆனால் ஒரு பெரிய இனக்கலவரத்தில் அவருடைய எதிராளிகள் அவரைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கையிலிருந்து தப்பும்படி பீரோவிலிருந்த லட்சக்கணக்கான பணத்தை, நகைகளை அள்ளி அவர்களுக்கு முன்பாக வீசினார்.
ஆனால் அவர்களோ, அந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம். நீ தான் வேண்டுமென்று சொல்லி அவரைப் பிடித்து, அவர்களுடைய காரின் பின்னால் கட்டி, தரையிலே இழுத்து, பிறகு அவரை கொண்டுபோய் ஒரு மரத்திலே தலைகீழாக கட்டி, தொங்க வைத்து, கீழே தீயை பற்றவைத்து கொன்றார்கள். ஆம், அவர் நம்பின பணம் அவரை கைவிட்டது.
சிலர் தங்களுடைய சரீர பெலத்திலே நம்பிக்கை வைக்கிறார்கள். கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலையை உலகத்திற்கு கற்றுக்கொடுத்த வீரனாகிய புரூஸ்லி, தன் நம்பிக்கையை எல்லாம் தன் உடல் பலத்தில் வைத்தான். பல ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து தனது உடம்பையும், நரம்புகளையும் முறுக்கேற்றி, உலகத்திலேயே மிகச்சிறந்த சண்டை வீரனாக விளங்கினான்.
அந்தோ! ஒரு நாள் ஒரு நடிகை அவனை விருந்துக்கு அழைத்தாள். அவன் உணவிலே விஷம் வைக்கப்பட்டிருந்தது. அவன் அதை அறியாமல் புசித்தான். சில நிமிடங்களுக்குள் வேரற்ற மரம்போல சாய்ந்து தன் ஜீவனை விட்டான். அவனுடைய நம்பிக்கை அதோடு முடிந்தது.
இன்னும் சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியிலும், இனத்தவர்களின் மேலும், டாக்டர்கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள்.
“நீ நம்பியிருக்கிற உன் நம்பிக்கை என்ன?” என்று வேதம் கேட்கிறது.
ஆம், “தேவனே, நீரே என் நம்பிக்கை”.
தாவீது தன்னுடைய நம்பிக்கையை உலகத்திற்கடுத்த காரியங்களில் வைக்காமல், உலக மனுஷன் மேல் வைக்காமல், தேவன்பேரில் வைத்தார். தேவன்மேல் நம்பிக்கையுள்ளவர்கள் அசைக்கப்படுவதேஇல்லை.
“என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்” என்று தாவீது வேதத்தில் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார் (சங். 7:1).
பிரியமானவர்களே, உங்கள் நம்பிக்கையை ஆண்டவர் பேரில் வையுங்கள்.
“அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).
போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை, சென்னை.
ஞாயிற்றுகிழமைகளில் பேராலயத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும். முழு ஊரடங்கு காரணமாக நேற்று கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்றி பேராலயம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கல்லணை மக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கால் பூண்டிமாதா பேராலயம் மூடப்பட்டு இருந்தது.
ஞாயிற்றுகிழமைகளில் பேராலயத்தில் கூட்டம் அதிகமாக காணப்படும். முழு ஊரடங்கு காரணமாக நேற்று கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்றி பேராலயம் வெறிச்சோடி காணப்பட்டது.
திருஇருதய ஆண்டவர் ஆலய பொங்கல் விழாவில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
முசிறி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. பங்குத்தந்தை மார்ட்டின் தேபோரஸ் தலைமை தாங்கினார். இதையொட்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர்.
இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.
கடவுளின் வாக்கே இவ்வுலகில் மனிதராக பிறந்து நம்மோடு வாழ்ந்ததால் அவரை ‘இறைமகன்’ என்று அழைக்கிறோம். தமது இறைத்தன்மையை இழக்காமல் மனிதராக தோன்றிய இயேசு, தம்மைப் பற்றி சீடர்களிடம் பேசிய நேரங்களில் ‘மானிட மகன்’ (மனுஷ குமாரன்) என்று குறிப்பிட்டார்.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.
அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.
ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.
இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.
தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.
இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.
நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.
மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.
இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.
இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).
மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.
மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.
இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.
- டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த யூதர்களில் சிலர் அவரை இறைவாக்கினராக பார்த்தனர். ஆனால், யூத சமயத்தலைவர்கள் அவரை ஒரு சமூக விரோதியாகவும், கடவுளை நிந்திப்பவராகவும் பார்த்தனர்.
அவர்கள், “எங்கள் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும். ஏனெனில், இவன் தன்னை ‘இறைமகன்’ என உரிமை கொண்டாடுகிறான்” (யோவான் 19:7) என்று கூறி இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை அனுபவமாக உணர்ந்த சீடர்கள் அனைவரும் அவரை மனிதராய் வந்த கடவுளாகவே கண்டனர். சீடர்கள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம் “இயேசுவே கடவுள்” என்று உலகம் முழுவதும் சென்று பறைசாற்றுமாறு அவர்களைத் தூண்டியது.
ஆனால் கிறிஸ்தவத்தின் வளர்ச்சி கண்டு மனம் வெதும்பிய சிலர், “இயேசு வெறும் மனிதர் மட்டுமே” என்று கூறி வந்தனர். இதற்கு பதில் கொடுக்க முயன்ற சிலர், “இயேசு மனிதரல்ல, அவர் கடவுள் மட்டுமே” என்று எதிர்வாதம் செய்தனர்.
இத்தகைய முரண்பாடுகள், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய தவறான புரிதலுக்கு இட்டுச்சென்றன. ‘இயேசு கடவுள் மட்டுமே’ என்று போதித்தவர்கள், “அவர் உண்மையாகவே மனிதராக பிறக்கவில்லை, அவரது உடல் வெறும் மாயத்தோற்றமே” எனக் கூறினர். மேலும், “இயேசுவுக்கு உடல் இல்லை என்பதால், அவர் உண்மையாகவே சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை” என்ற குழப்பமான கருத்துக்களை வெளியிட்டனர்.
கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இந்த தவறான கொள்கை ‘தோற்றத் தப்பறை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தப்பறைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவே, “இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தூண்டுதல் அனைத்தும் கடவுளிடம் இருந்து வருவது. இவ்வாறு கடவுளிடம் இருந்து வரும் தூண்டுதல் எதுவென அறிந்து கொள்வீர்கள். இயேசுவை ஏற்று அறிக்கையிட மறுக்கும் தூண்டுதல் எதுவும் கடவுளிடம் இருந்து வருவதல்ல” (1 யோவான் 4:2,3) என்று யோவான் எழுதுகிறார்.
தொடர்ந்து அவர், “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு, தம் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோவான் 4:10) என்று விளக்குகிறார்.
இவ்வாறு, இயேசுவின் சிலுவைச் சாவே நமக்கு மீட்பு அளித்து, நாம் நிலை வாழ்வு பெறக்காரணமாக அமைந்தது என்பதே திருத்தூதர்களின் போதனையாக இருந்தது.
நமது மீட்புக்காக இறை மகன் இயேசு சிலுவையில் இறந்து உயிர்த்தெழ ஓர் உடல் தேவைப்பட்டது. ஆகவே, அவர் தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார். இயேசு தமது இறைத்தன்மையை இழக்காமல், மனித உருவில் தோன்றி நம்மோடு வாழ்ந்தார் என்பதே உண்மை. ஆபிரகாமுக்கும் தாவீதுக்கும் கடவுள் வாக்களித்தபடி, அவர்களது வழிமரபிலேயே இயேசு கிறிஸ்து தோன்றினார்.
மனிதர்களை மீட்க மனிதராய் பிறந்து வாழ்ந்ததால், அவர் தம்மை ‘மானிட மகன்’ என்று அடிக்கடி அழைத்துக் கொண்டார். கடவுள் தம் உருவிலும் சாயலிலும் மனிதரைப் படைத்தார் என்று தொடக்க நூலில் (1:27) வாசிக்கிறோம். அந்த உண்மையான கடவுளின் உருவமாகிய இயேசு மனித உருவில் தோன்றியபோது, இறைவாக்கு களின் நிறைவைச் சுட்டிக்காட்டத் தம்மை ‘மானிட மகன்’ என்று வெளிப்படுத்தினார்.
இயேசு ‘மானிட மகன்’ என தம்மைப் பற்றிக் கூறுவதால், அவர் இறைத்தன்மையை இழந்துவிட்டார் என்று கருதக் கூடாது. “மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார். அப்பொழுது ஒவ் வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 16:27) என்று இயேசு கூறுவதில் இருந்தே அவரது இறை மாட்சியைக் கண்டுணர முடிகிறது. இயேசுவின் மனித உருவிலேயே, மனிதருக்கான மீட்புத் திட்டம் நிறைவேறுவது தந்தையாம் கடவுளின் விருப்பமாக இருந்தது.
இயேசுவின் செயல்பாட்டை யூதர்கள் விமர்சனம் செய்தது குறித்து அவர் பின்வருமாறு கூறினார்: “மானிட மகன் வந்துள்ளார். அவர் உண்கிறார், குடிக்கிறார். நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுவோருக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” (லூக்கா 7:34).
மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித்தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) என்று சொன்னார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பே, பேதுரு, யாக்கோபு, யோவான் என்ற மூன்று சீடர்களுக்கு தமது இறை மாட்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு மலைமீது அவர்கள் முன்பாக தோற்றம் மாறினார். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” (மாற்கு 9:9) என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். இயேசு தமது சிலுவைச் சாவு நெருங்கியதை உணர்ந்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” (யோவான் 12:23) என்று கூறியதைக் காண்கிறோம்.
மேலும் தீர்ப்பு நாள் பற்றி அவர் பேசும்போது, “மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்தேயு 26:64) என்றார். “என்னையும் என் வார்த்தைகளையும் குறித்து வெட்கப்படும் ஒவ்வொருவரைப் பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார்” (லூக்கா 9:26) என்றும் இயேசு எச்சரிக்கிறார்.
இயேசு கடவுளா, மனிதரா என்பதை புரிந்து கொள்வதில் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்திலேயே பல்வேறு குழப்பங்கள் இருந்தன. இதற்கு பதிலளித்த திருச்சபைத் தந்தையர், இயேசு முழுமையாக கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் திகழ்கிறார் என்று கூறினர். இயேசுவின் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும், ஒன்றுடன் மற்றது கலக்காமலும் ஒன்று மற்றதிலிருந்து பிரியாமலும் இருக்கின்றன. ஆகவே, மனித்தன்மை கொண்ட இறைமகனாகவும், இறைத்தன்மை துலங்கும் மானிட மகனாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார் என நம்புகிறோம்.
- டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.
26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
வால்பாறையில் உள்ள தூய இருதய தேவாலயத்தின் திருவிழாவும், புனித செபஸ்தியாரின் திருவிழாவும் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு மாலை 5 மணிக்கு சிறப்பு ஜெபமாலை ஜெப வழிபாடு நடைபெற்றது. இதனைதொடர்ந்து தூய இருதய ஆண்டவர் மற்றும் புனித செபஸ்தியாரின் திரு உருவம் பொறித்த கொடியை தேவாலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் தேவாலயத்தின் பங்கு குரு மரியஜோசப் திருவிழாக் கொடியை மந்தரித்து ஏற்றி வைத்தார். பின்னர் பங்கு குருக்கள் மரியஜோசப், பினிட்டோ, டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதையடுத்து வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படுகிறது.
பின்னர் தேவாலயத்தின் பங்கு குரு மரியஜோசப் திருவிழாக் கொடியை மந்தரித்து ஏற்றி வைத்தார். பின்னர் பங்கு குருக்கள் மரியஜோசப், பினிட்டோ, டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் இணைந்து கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
26-ந் தேதி கோவை மாவட்ட கத்தோலிக்க சபையின் முதன்மை குரு ஜான்ஜோசப்ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடல் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதையடுத்து வாழைத்தோட்டம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிற்றாலயம் மந்தரிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்களை திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற வழிபாட்டு தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் மூடப்பட்டது.
இந்த நிலையில் 5 நாட்களுக்குப்பிறகு நேற்று வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகளின்படி மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேராலயத்துக்கு வந்தவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர். 5 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 5 நாட்கள் முக்கிய வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற வழிபாட்டு தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் மூடப்பட்டது.
இந்த நிலையில் 5 நாட்களுக்குப்பிறகு நேற்று வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகளின்படி மக்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேராலயத்துக்கு வந்தவர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டனர். 5 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோணாங்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், சிலுவை பாதையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணாங்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், சிலுவை பாதையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பங்குதந்தை தேவ.சகாயராஜ் தலைமையிலான குழுவினர் வரவேற்பளித்தனர். இதையடுத்து தேர்பவனியை பங்கு தந்தையர்கள், பாளையக்காரர் பொன் வீரசேகர வேலுசாமி கச்சிராயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேர் பவனியானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.
இதில் மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன் மற்றும் ஆலய ஊழியர்கள், விழாக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பொதுமக்கள், கிறிஸ்தவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தேர்பவனி களையிழந்து காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், சிலுவை பாதையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது.
இதையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பங்குதந்தை தேவ.சகாயராஜ் தலைமையிலான குழுவினர் வரவேற்பளித்தனர். இதையடுத்து தேர்பவனியை பங்கு தந்தையர்கள், பாளையக்காரர் பொன் வீரசேகர வேலுசாமி கச்சிராயர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேர் பவனியானது ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.
இதில் மாவட்ட கவுன்சிலர் ஆர்.ஜி.சாமி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன் மற்றும் ஆலய ஊழியர்கள், விழாக்குழுவினர், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயங்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பொதுமக்கள், கிறிஸ்தவர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தேர்பவனி களையிழந்து காணப்பட்டது.
இயேசு செய்த இந்த அற்புதத்தை, “அரும் அடையாளம்” என யோவான் குறிப்பிடுகிறார். சில அடையாளங்களை இந்த புதுமை தாங்கி நிற்பதே இதன் காரணம்.
யோவான் 4 : 43 முதல் 54 வரை
அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.
கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.
இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.” என்றார்.
அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக் கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
இயேசு செய்த இந்த அற்புதத்தை, “அரும் அடையாளம்” என யோவான் குறிப்பிடுகிறார். சில அடையாளங்களை இந்த புதுமை தாங்கி நிற்பதே இதன் காரணம்.
இது ஒரு குணப்படுத்தும் புதுமை. அரச அலுவலர் ஒருவருடைய மகனுடைய நோயைக் குணப்படுத்துகிறார். தொலைவு இறைவனின் வல்லமையை எப்போதும் தடுப்பதில்லை, எந்த நோயும் இறைவனுக்கு எதிரே நிற்பதில்லை என்பதை இந்த புதுமை புலப்படுத்துகிறது.
அந்த அரச அலுவலர் ரோம அரசின் படைத் தலைவர்களில் ஒருவனாய் இருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யூதர் அல்லாத, சமாரியர் அல்லாத பிற இன மனிதர் ஒருவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்து விண்ணப்பம் வைக்கும் நிகழ்வு இது. அந்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றுகிறார்.
இதன் மூலம் அந்த அரச அலுவலரின் குடும்பம் முழுவதுமே இறைவன் மேல் நம்பிக்கை வைக்கிறது. தனது மகன் உயிர்பிழைத்தான் என்பதை அறிந்ததும் அவன் நின்று விடவில்லை. தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் அவன் இறைவன் பால் திருப்புகிறார்.
அந்த இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.
கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.
இயேசு அவரை நோக்கி, “அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.” என்றார்.
அரச அலுவலர் இயேசுவிடம், “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார்.
அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். “எத்தனை மணிக்கு நோய் நீங்கியது?” என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், “நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது” என்றார்கள். ‘உம் மகன் பிழைத்துக் கொள்வான்’ என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர்.
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.
இயேசு செய்த இந்த அற்புதத்தை, “அரும் அடையாளம்” என யோவான் குறிப்பிடுகிறார். சில அடையாளங்களை இந்த புதுமை தாங்கி நிற்பதே இதன் காரணம்.
இது ஒரு குணப்படுத்தும் புதுமை. அரச அலுவலர் ஒருவருடைய மகனுடைய நோயைக் குணப்படுத்துகிறார். தொலைவு இறைவனின் வல்லமையை எப்போதும் தடுப்பதில்லை, எந்த நோயும் இறைவனுக்கு எதிரே நிற்பதில்லை என்பதை இந்த புதுமை புலப்படுத்துகிறது.
அந்த அரச அலுவலர் ரோம அரசின் படைத் தலைவர்களில் ஒருவனாய் இருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். யூதர் அல்லாத, சமாரியர் அல்லாத பிற இன மனிதர் ஒருவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்து விண்ணப்பம் வைக்கும் நிகழ்வு இது. அந்த விண்ணப்பத்தை இயேசு நிறைவேற்றுகிறார்.
இதன் மூலம் அந்த அரச அலுவலரின் குடும்பம் முழுவதுமே இறைவன் மேல் நம்பிக்கை வைக்கிறது. தனது மகன் உயிர்பிழைத்தான் என்பதை அறிந்ததும் அவன் நின்று விடவில்லை. தனது குடும்பத்திலுள்ள அனைவரையும் அவன் இறைவன் பால் திருப்புகிறார்.
நாமும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால், நம்முடைய தண்ணீர் போன்ற வாழ்க்கை, திராட்சை ரசம் போன்று சுவை மிகுந்ததாய் மாறும்.
தேவன் எப்போதும் நம் மீது அன்பாகவே இருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் குறைகள் ஏற்படும்போது, அதை அவர் நிறைவாய் மாற்றுகிறார். அப்படி மாற்றும்போது, அது நம்முடைய முந்தைய நிலையை விடவும் வளமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்படி செய்கிறார். தேவனுக்கு கீழ்படிந்து நாம் நடக்கும்போது, ‘அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்’ என்று எசாயாவில் எழுதப்பட்டுள்ள வார்த்தையின் படி, நம்முடைய தேவையை அறிந்ததுமே உதவி செய்பவராக இருக்கிறார்.
கலிலேயாவில் உள்ள கானாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்கு, இயேசுவும் அவருடைய சீடர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இயேசுவின் தாய் மரியாளும் அத்திருமணத்திற்கு வந்திருந்தார். சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண விருந்தில், திராட்சை ரசம் தீர்ந்து போனது. இதை அறிந்தவுடன் மரியாள் இயேசுவிடம் வந்து, ‘‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’’ என்றார். இயேசுவே அவரிடம், ‘‘அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே’’ என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்கு களுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் நிரம்பக் கூடியவை. இயேசு அவர்களிடம், ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், ‘‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’’ என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர், திராட்சை ரசமாய் மாறியிருந்த தண்ணீரை சுவைத்தார். அந்த ரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ‘‘எல்லாரும் நல்ல திராட்சை ரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த ரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல ரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’’ என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அற்புதம் இது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இந்த அற்புதம் நடைபெற முக்கிய காரணம், கீழ்படிதலே ஆகும். அந்தக் கல்யாண வீட்டில் ஒரு குறை என்றவுடன், இயேசுவின் தாய் அதனை புறக்கணித்துச் செல்லவில்லை. இந்தக் குறையை தன் மகனிடம் கூறினால், நிச்சயமாய் அவரால் அதனை சரி செய்ய முடியும் என்பதை அவர் முதலில் விசுவாசித்தார். அதனால்தான் அவர் தன் மகனிடம் சென்று ‘திரட்சை ரசம் தீர்ந்து விட்டது’ என்றார்.
இயேசு இந்த உலகில் தனக்கான நேரம் வரவில்லை என்பதை அறிந்தவராய், தன்னால் என்ன செய்ய இயலும் என்று தன்னுடைய அன்னையிடம் கேட்டார். ஆனாலும் அன்னையே தன்னுடைய மகன் மீது கொண்டிருந்த விசுவாசத்தால், அங்கிருந்த பணியாளர்களிடம் ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்று கூறினார். பின்னர் இயேசுவும் தன்னுடைய தாயின் வார்த்தைக்கு கீழ்படிந்தவராய், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி, ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்களும் அதற்கு மறுவார்த்தை எதுவும் கேட்காமல் அங்கிருந்த தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினார்கள்.
அதன்பின் இயேசு பணியாளர்களை நோக்கி ‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’ என்றார். அதற்கும் அவர்கள் மறுமொழி கூறாமல், இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்தத் தொட்டியில் நிரப்பியிருந்த தண்ணீரை மொண்டு, பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவர் சொன்னபடி செய்ததால், அந்த பந்தி மேற்பார்வையாளரிடம் அந்த தண்ணீர் சென்ற போது, அது திராட்சை ரசமாக மாறியிருந்தது. அதுவும் முன்பிருந்த திராட்சை ரசத்தை விட சுவையானதாகவும் இருந்தது.
இன்றும் பிதாவான தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் என்பதே. அப்படி நாமும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால், நம்முடைய தண்ணீர் போன்ற வாழ்க்கை, திராட்சை ரசம் போன்று சுவை மிகுந்ததாய் மாறும்.
கலிலேயாவில் உள்ள கானாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றுக்கு, இயேசுவும் அவருடைய சீடர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இயேசுவின் தாய் மரியாளும் அத்திருமணத்திற்கு வந்திருந்தார். சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த திருமண விருந்தில், திராட்சை ரசம் தீர்ந்து போனது. இதை அறிந்தவுடன் மரியாள் இயேசுவிடம் வந்து, ‘‘திராட்சை ரசம் தீர்ந்துவிட்டது’’ என்றார். இயேசுவே அவரிடம், ‘‘அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே’’ என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்கு களுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் நிரம்பக் கூடியவை. இயேசு அவர்களிடம், ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், ‘‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’’ என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர், திராட்சை ரசமாய் மாறியிருந்த தண்ணீரை சுவைத்தார். அந்த ரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ‘‘எல்லாரும் நல்ல திராட்சை ரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்த பின்தான் தரம் குறைந்த ரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல ரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’’ என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அற்புதம் இது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
இந்த அற்புதம் நடைபெற முக்கிய காரணம், கீழ்படிதலே ஆகும். அந்தக் கல்யாண வீட்டில் ஒரு குறை என்றவுடன், இயேசுவின் தாய் அதனை புறக்கணித்துச் செல்லவில்லை. இந்தக் குறையை தன் மகனிடம் கூறினால், நிச்சயமாய் அவரால் அதனை சரி செய்ய முடியும் என்பதை அவர் முதலில் விசுவாசித்தார். அதனால்தான் அவர் தன் மகனிடம் சென்று ‘திரட்சை ரசம் தீர்ந்து விட்டது’ என்றார்.
இயேசு இந்த உலகில் தனக்கான நேரம் வரவில்லை என்பதை அறிந்தவராய், தன்னால் என்ன செய்ய இயலும் என்று தன்னுடைய அன்னையிடம் கேட்டார். ஆனாலும் அன்னையே தன்னுடைய மகன் மீது கொண்டிருந்த விசுவாசத்தால், அங்கிருந்த பணியாளர்களிடம் ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’’ என்று கூறினார். பின்னர் இயேசுவும் தன்னுடைய தாயின் வார்த்தைக்கு கீழ்படிந்தவராய், அங்கிருந்த ஊழியர்களை நோக்கி, ‘‘இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்’’ என்றார். அவர்களும் அதற்கு மறுவார்த்தை எதுவும் கேட்காமல் அங்கிருந்த தொட்டிகளில் தண்ணீரை நிரப்பினார்கள்.
அதன்பின் இயேசு பணியாளர்களை நோக்கி ‘இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்’ என்றார். அதற்கும் அவர்கள் மறுமொழி கூறாமல், இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்தத் தொட்டியில் நிரப்பியிருந்த தண்ணீரை மொண்டு, பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு சென்றனர். அவர்கள் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து அவர் சொன்னபடி செய்ததால், அந்த பந்தி மேற்பார்வையாளரிடம் அந்த தண்ணீர் சென்ற போது, அது திராட்சை ரசமாக மாறியிருந்தது. அதுவும் முன்பிருந்த திராட்சை ரசத்தை விட சுவையானதாகவும் இருந்தது.
இன்றும் பிதாவான தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அவருடைய கட்டளைக்கு கீழ்படிய வேண்டும் என்பதே. அப்படி நாமும் தேவனின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால், நம்முடைய தண்ணீர் போன்ற வாழ்க்கை, திராட்சை ரசம் போன்று சுவை மிகுந்ததாய் மாறும்.
பழைய நூல்களிலிருந்தும், தீர்க்கத் தரிசனங்களிலிருந்தும் இயேசுவைக் குறித்த செய்திகள் இருக்குமோ என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்தது. இயேசுவின் புகழ் பரவியது.
இயேசுவின் சீடரான பேதுரு போதனைகளைக் கேட்பதிலும் இயேசுவோடு பயணிப்பதிலுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அவருடைய மாமியார் நோயில் விழுந்தார். பயங்கரமான கொடிய காய்ச்சல் அவளைப் பிடித்தது. அது சாதாரணக் காய்ச்சல் அல்ல, வயதானவர்களை வாட்டி எடுக்கும் கொடிய காய்ச்சல். உடலெல்லாம் அனலாய்க் கொதிக்க பேதுருவின் மாமியார் வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அந்தகாலத்தில் நடைமுறையில் இருந்த வைத்தியம் மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலும் விலங்குகளின் மண்டை ஓடுகளை எரித்த சாம்பலை நெற்றியில் பூசுவதே மருந்து. சர்வ நிவாரணி போல அவர்கள் கலாச்சார மருந்து ஒன்று உண்டு. நரியின் மண்டைஓடு, எலியின் தலை, நண்டுகளின் கண்கள், ஆந்தையின் மூளை, தவளையின் ஈரல், யானையின் உடம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேன் போன்ற உயிரினங்கள் இவற்றையெல்லாம் கலந்து சுட்டு சாம்பலாக்கியது தான் அந்த சர்வ நிவாரணி !. இப்போது வாசித்தால் சிரிப்பை உண்டாக்கும் வைத்தியங்களும் அந்நாட்களில் ஏராளம் உண்டு. ஜலதோஷம் தீரவேண்டுமானால் எலியின் மூக்கில் முத்தமிடுவது, தவளையை வினிகரில் சமைத்து உண்டால் பல்வலி பறக்கும் என்பவையெல்லாம் அவற்றில் சில.
எந்தவிதமான மருந்தும் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணப்படுத்தவில்லை. மாறாக காய்ச்சலின் வீரியத்தை அதிகரிக்கவே செய்தன. பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்பதை விட வேறு வழியில்லை. இயேசுவின் காதுக்கு செய்தி சென்றதும் இயேசு பேதுருவின் வீட்டுக்கு விரைந்தார். பேதுருவின் மாமியார் இறந்து விடுவார் என்றே சுற்றத்தினர் நம்பியிருந்தனர். பேதுரு கூட அவளுடைய நிலைமையைப் பார்த்து அவ்வாறே நினைத்திருக்கக் கூடும். இயேசு நேராக பேதுருவின் மாமியார் படுத்திருந்த படுக்கை அருகே சென்றார். அவருடைய கைகளைத் தொட்டார். அவ்வளவு தான், காய்ச்சல் சட்டென்று விலக மாமியார் எழுந்தாள். அனலடித்த தேகம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது. மூட்டுகளில் இருந்த வலி மறைந்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு இயல்பாக இருந்தது. இயேசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் பனித்தாள். ஒரு தொடுதல் மூலம் தன்னை குணப்படுத்திய இயேசுவின் மீதும் அவருடைய பணிகளின் மீதும் நம்பிக்கை கொண்டாள்.
பேதுருவின் மாமியார் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார் என்னும் செய்தி சடுதியில் வீதிகள் தோறும் விரைந்தோடியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். இயேசு அப்போது அவர்களுடைய பார்வையில் ஒரு மருத்துவர். காய்ச்சல், தொழுநோய், புற்று நோய், வாதம் என அனைத்து விதமான நோயாளிகளும் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள். இயேசு வந்தார். வந்திருந்த அனைவரையும் குணமாக்கினார் ! அதுவும் மக்களோடு பேசிக்கொண்டே, சிரித்துக் கொண்டே, ஒரு நண்பனைப் போல அவர்களிடையே நடந்து அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
சுகமாக்கும் போதனையாளர்கள் வரலாற்றில் இருந்திருந்தாலும் இயேசுவின் அணுகுமுறை மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய நோய் தீர்க்கும் முறை பிச்சையிடுவது போல இருக்கவில்லை. நண்பனுக்கு நட்புடன் கை குலுக்குவது போல, உறவினர் ஒருவருடன் உரையாடுவது போல ஆத்மார்த்தமான அன்புடன் மிளிர்ந்தது. எனவே தான் மக்கள் இயேசுவை நோக்கி கூச்சலிட்டார்கள்
‘நீர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’
ஆலய குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டினார்கள். பழைய இறைவாக்கினர்கள் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா என்பதை அறிய. அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது இறைவாக்கினர் எசாயா எழுதிய தீர்க்கத் தரிசனம் ஒன்று. ‘செபுலான் நாடே, நப்தலின் நாடே… இருளில் இருக்கும் மக்கள் பேரொளியைக் காண்பார்கள்…’. கப்பர்நாகும் நகரம் செபுலான், நப்தலி என்னும் நகரங்களின் எல்லையில் தான் இருந்தது. எனவே இந்த தீர்க்கத் தரிசனம் இயேசுவின் வருகையைக் குறித்ததாக இருக்குமோ என்று அவர்கள் விவாதிக்கத் துவங்கினர்.
இன்னொருவர் ஏசாயா தீர்க்கத் தரிசியின் இன்னொரு தீர்க்கத் தரிசனத்தை குறிப்பிட்டார். ‘ அவர் நம் நோய்களைத் தாங்கிக் கொண்டார், நம் வலிகளை ஏற்றுக் கொண்டார்’ இது கூட இயேசுவைக் குறித்ததாக இருக்குமோ ? விவாதங்கள் தொடர்ந்தன. பழைய நூல்களிலிருந்தும், தீர்க்கத் தரிசனங்களிலிருந்தும் இயேசுவைக் குறித்த செய்திகள் இருக்குமோ என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்தது. இயேசுவின் புகழ் பரவியது.
மீண்டும் மீண்டும் இயேசுவைக் கூட்டம் மொய்க்கத் துவங்கியது. இயேசு சுற்றியிருக்கும் ஊர்களுக்கும் சென்று போதனைகளைச் செய்ய விரும்பினார். கப்பர்நாகூமிலேயே ஒரு மருத்துவரைப் போல தங்கி விட அவர் விரும்பவில்லை. வந்தவர்களைச் சுகமாக்கி விட்டு அவர் சீடர்களுடன் பயணத்தைத் துவங்கினார். சமாரியா, யூதேயா போன்ற இடங்களிலெல்லாம் இயேசுவின் கப்பர்நாகும் சுகமளித்தல் செய்தி பரவத் துவங்கியது. எருசலேம் வரை அவருடைய பெயர் வியப்புக்குரிய ஒன்றாக உச்சரிக்கப்பட்டது.
எந்தவிதமான மருந்தும் பேதுருவின் மாமியாருடைய காய்ச்சலைக் குணப்படுத்தவில்லை. மாறாக காய்ச்சலின் வீரியத்தை அதிகரிக்கவே செய்தன. பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்பதை விட வேறு வழியில்லை. இயேசுவின் காதுக்கு செய்தி சென்றதும் இயேசு பேதுருவின் வீட்டுக்கு விரைந்தார். பேதுருவின் மாமியார் இறந்து விடுவார் என்றே சுற்றத்தினர் நம்பியிருந்தனர். பேதுரு கூட அவளுடைய நிலைமையைப் பார்த்து அவ்வாறே நினைத்திருக்கக் கூடும். இயேசு நேராக பேதுருவின் மாமியார் படுத்திருந்த படுக்கை அருகே சென்றார். அவருடைய கைகளைத் தொட்டார். அவ்வளவு தான், காய்ச்சல் சட்டென்று விலக மாமியார் எழுந்தாள். அனலடித்த தேகம் சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தது. மூட்டுகளில் இருந்த வலி மறைந்திருந்தது. நடுங்கிக் கொண்டிருந்த உடம்பு இயல்பாக இருந்தது. இயேசுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் கண்கள் பனித்தாள். ஒரு தொடுதல் மூலம் தன்னை குணப்படுத்திய இயேசுவின் மீதும் அவருடைய பணிகளின் மீதும் நம்பிக்கை கொண்டாள்.
பேதுருவின் மாமியார் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டார் என்னும் செய்தி சடுதியில் வீதிகள் தோறும் விரைந்தோடியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். இயேசு அப்போது அவர்களுடைய பார்வையில் ஒரு மருத்துவர். காய்ச்சல், தொழுநோய், புற்று நோய், வாதம் என அனைத்து விதமான நோயாளிகளும் வீதிகளில் நிரம்பி வழிந்தார்கள். இயேசு வந்தார். வந்திருந்த அனைவரையும் குணமாக்கினார் ! அதுவும் மக்களோடு பேசிக்கொண்டே, சிரித்துக் கொண்டே, ஒரு நண்பனைப் போல அவர்களிடையே நடந்து அனைவரையும் தொட்டு சுகமாக்கினார். அனைவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
சுகமாக்கும் போதனையாளர்கள் வரலாற்றில் இருந்திருந்தாலும் இயேசுவின் அணுகுமுறை மிகவும் புதிதாக இருந்தது. அவருடைய நோய் தீர்க்கும் முறை பிச்சையிடுவது போல இருக்கவில்லை. நண்பனுக்கு நட்புடன் கை குலுக்குவது போல, உறவினர் ஒருவருடன் உரையாடுவது போல ஆத்மார்த்தமான அன்புடன் மிளிர்ந்தது. எனவே தான் மக்கள் இயேசுவை நோக்கி கூச்சலிட்டார்கள்
‘நீர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’
ஆலய குருக்களும், மறைநூல் அறிஞர்களும் அவசர அவசரமாக ஏடுகளைப் புரட்டினார்கள். பழைய இறைவாக்கினர்கள் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா என்பதை அறிய. அவர்கள் கண்ணுக்குத் தட்டுப்பட்டது இறைவாக்கினர் எசாயா எழுதிய தீர்க்கத் தரிசனம் ஒன்று. ‘செபுலான் நாடே, நப்தலின் நாடே… இருளில் இருக்கும் மக்கள் பேரொளியைக் காண்பார்கள்…’. கப்பர்நாகும் நகரம் செபுலான், நப்தலி என்னும் நகரங்களின் எல்லையில் தான் இருந்தது. எனவே இந்த தீர்க்கத் தரிசனம் இயேசுவின் வருகையைக் குறித்ததாக இருக்குமோ என்று அவர்கள் விவாதிக்கத் துவங்கினர்.
இன்னொருவர் ஏசாயா தீர்க்கத் தரிசியின் இன்னொரு தீர்க்கத் தரிசனத்தை குறிப்பிட்டார். ‘ அவர் நம் நோய்களைத் தாங்கிக் கொண்டார், நம் வலிகளை ஏற்றுக் கொண்டார்’ இது கூட இயேசுவைக் குறித்ததாக இருக்குமோ ? விவாதங்கள் தொடர்ந்தன. பழைய நூல்களிலிருந்தும், தீர்க்கத் தரிசனங்களிலிருந்தும் இயேசுவைக் குறித்த செய்திகள் இருக்குமோ என்ற ஆராய்ச்சியும் தொடர்ந்தது. இயேசுவின் புகழ் பரவியது.
மீண்டும் மீண்டும் இயேசுவைக் கூட்டம் மொய்க்கத் துவங்கியது. இயேசு சுற்றியிருக்கும் ஊர்களுக்கும் சென்று போதனைகளைச் செய்ய விரும்பினார். கப்பர்நாகூமிலேயே ஒரு மருத்துவரைப் போல தங்கி விட அவர் விரும்பவில்லை. வந்தவர்களைச் சுகமாக்கி விட்டு அவர் சீடர்களுடன் பயணத்தைத் துவங்கினார். சமாரியா, யூதேயா போன்ற இடங்களிலெல்லாம் இயேசுவின் கப்பர்நாகும் சுகமளித்தல் செய்தி பரவத் துவங்கியது. எருசலேம் வரை அவருடைய பெயர் வியப்புக்குரிய ஒன்றாக உச்சரிக்கப்பட்டது.
மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க அறிவிக்க வெளியிடப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் புனிதர் பட்ட குழு உறுப்பினர்கள் தேவசகாயம் புனிதர் பட்ட கொடியை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் தேவசகாயம் உயிர் தியாகத்தை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. 2-வது நாளான நேற்று காலையில் திருப்பலி நடைபெற்றது. மாலையில் கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் கில்லாரி தலைமையில் சிறப்பு நன்றி திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை பிரைட், துணை பங்கு தந்தை புரூனோ, பங்கு பேரவை துணை தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், பொருளாளர் சகாய பென்சிகர், துணை செயலாளர் சகாயரூபிலெட் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க அறிவிக்க வெளியிடப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் புனிதர் பட்ட குழு உறுப்பினர்கள் பயஸ் ராய், ஜேக்கப் மனோகரன், சகாய பென்சிகர் உள்ளிட்டோர் தேவசகாயம் புனிதர் பட்ட கொடியை ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் குருகுல முதல்வர் கில்லாரி தலைமையில் திருப்பலி மேடையில் ஏற்றப்பட்டது.
முன்னதாக மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்க அறிவிக்க வெளியிடப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் புனிதர் பட்ட குழு உறுப்பினர்கள் பயஸ் ராய், ஜேக்கப் மனோகரன், சகாய பென்சிகர் உள்ளிட்டோர் தேவசகாயம் புனிதர் பட்ட கொடியை ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் குருகுல முதல்வர் கில்லாரி தலைமையில் திருப்பலி மேடையில் ஏற்றப்பட்டது.






