search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st devasahayam pillai"

    • புனிதர் பட்ட ஓராண்டு நிறைவு நன்றி திருப்பலி நடைபெறும்.
    • சிறப்பு நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    தேவசகாயம் கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி புனிதராக உயர்த்தப்பட்டார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவசகாயம் மவுண்டில் நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை போன்றவை நடந்தது. விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் நாட்டு விழா, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 5.30 மணிக்கு மலை வலம் வழிபாடு, சிறப்பு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி தேவா மருத்துவமனை அருகில் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் தேவா மருத்துவமனை திறப்பு மற்றும் அர்ச்சிப்பு, தொடர்ந்து மன்னா வீடு திறப்பு, அர்ச்சிப்பு நடக்கிறது. இரவு 7 மணிக்கு புனிதர் பட்ட ஓராண்டு நிறைவு நன்றி திருப்பலி நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் சேவியர் பிரான்சிஸ், பங்குத்தந்தை பிரைட், துணை பங்குத் தந்தை ரெக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர், சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற்றும் கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார், துணைசெயலாளர் சகாய செலின், மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.

    • இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது.
    • அன்பு விருந்து நடக்கிறது.

    புலியூர்குறிச்சி முட்டிடிச்சாம்பாறை மறைசாட்சி புனித தேவசாயம் திருத்தல திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனி, தொடர்ந்து முளகுமூடு பசிலிக்கா அதிபர் டோமினிக் கே.தாஸ்தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார்.

    திருத்தல அதிபர் மரிய ராஜேந்திரன் முன்னிலை வைகிக்கிறார். திருப்பலிக்கு அப்பட்டுவிளை பங்குதந்தை மைக்கேல் அலோசியஸ் மறையுரையாற்றுகிறார். நாளை(வெள்ளிக்கிழமை) காலை குழித்துறை மறை மாவட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெலஸ்டின் ஜெரால்டு தலைமையில் திருப்பலி, பங்குத்தந்தை சுரேஷ்குமார் மறை உரையாற்றுகிறார்.

    14-ந்தேதி காலை 9 மணிக்கு பங்குதந்தை ஜெயக்குமார் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, திருத்துவபுரம் மறை மாவட்ட முதல்வர் அருட்பணியாளர் புஷ்பராஜ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து உதயகிரிகோட்டையில் அமைந்துள்ள டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை தோட்டம் அர்ச்சித்தல், 11 மணிக்கு அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மரிய ராஜேந்திரன், பங்கு பேரவை உதவி தலைவர் புரோடி மில்லர், செயலாளர் ஜெகதா, பொருளாளர் ஜான்பெனட், துணைச் செயலாளர் கண்ணதாசன் மற்றும் பங்குபேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • இந்த விழா 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
    • 14-ந்தேதி புனித செபஸ்தியார் வரலாற்று நாடகம் நடக்கிறது.

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் மறைசாட்சி புனித தேவசகாயம், புனித வியாகுல அன்னை ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புனித தேவசகாயம் உயிர்தியாக விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உயிர்தியாக விழா, மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் கிடைத்து நடக்கும் முதல் விழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு கொடிவலம், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு உயிர்த்தியாகச் சுடர் அர்ப்பணம், மறைசாட்சியின் திருவிழா கொடிஏற்றம், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். கோட்டார் பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன் மறையுரையாற்றுகிறார்.

    13-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி, இரவு 7 மணிக்கு குளச்சல் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்கி ஆராதனை நிறைவேற்றுகிறார். முட்டம் பங்குதந்தை அமல்ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு மறைசாட்சியின் திருப்பண்டம் முத்தி செய்யும் பவனி, 14-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 9.30 மணிக்கு மலைவலம், மதியம் 1 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு நன்றி திருவிழா திருப்பலி, இரவு 8.30 மணிக்கு சப்பர பவனி, 9.30 மணிக்கு புனித செபஸ்தியார் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணை பங்குதந்தை ரக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளரும், கவுன்சிலருமான ஜெனட் சதீஷ்குமார், துணைச்செயலாளர் சகாய செலீன் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.

    • சமீபத்தில் தேவ சகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
    • புனிதர் பட்டம் பெற்ற அவருக்கு நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் புனிதர் பட்ட பெற்ற தேவ சகாயம் பிள்ளை இங்குதான் ஞானஸ்நானம் பெற்றார். இதையொட்டி புனிதர் பட்டம் பெற்ற அவருக்கு நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஐதராபாத் கர்தினால் அந்தோனி பூலா, நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆயர்கள் ஸ்டீபன், இவான் அம்புரோஸ், ரெமிஜியுஸ், ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சபாநாயகர் அப்பாவு, ஞான திரவியம் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த திரளானகிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி பரதநாட்டியம், கோலாட்டம், குச்சிப்புடி போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. வடக்கன்குளம் பங்குதந்தை ஜாண்பிரிட்டோ வரவேற்றார்.

    நிகழ்ச்சிகளை காவல்கிணறு பங்குதந்தை ஆரோக்கியராஜ் தொகுத்து வழங்கினார். இறுதியாக கர்தினால் தலைமையில் ஆடம்பர கூட்டு நன்றி திருப்பலியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

    • புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
    • கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த மாதம் 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றிவிழா கொண்டாட்டம் கடந்த 5-ந் தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் நடந்தது. விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், திருப்பலியும் நடந்தது.

    இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி கலந்து கொண்டார். தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. விழாவில் 30-க்கும் மேற்பட்ட ஆயர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், பல்சமய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி விழா திருப்பலி நேற்று மாலையில் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.

    நிகழ்ச்சியில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ், மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், செயலாளர் இம்மானுவேல், வட்டார முதல்வர் சகாய ஆனந்த், சவேரியார் பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், உதவிப் பங்குத்தந்தையர்கள் பிரான்கோ, ஆன்றோ ஜெராபின், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணைச் செயலாளர் ராஜன் ஆராய்ச்சி, பொருளாளர் ராபின் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி தேசிய அளவிலான நன்றி விழா 5-ந்தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடக்கிறது.
    குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையை அடுத்து அதாவது நாகர்கோவிலில் இருந்து 4 வழிச்சாலையில் காவல்கிணறு செல்லும் பாதையில் காற்றாடிமலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் நடைபெறுகிறது.

    விழாவின் தொடக்கமாக பிற்பகல் 2.30 மணி அளவில் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இலங்கைத் தமிழர்கள் வரவேற்பு நடனம் ஆடுகிறார்கள். தோவாளை டி.எம்.ஐ. கல்லூரி, நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, அனந்தநாடார் குடியிருப்பு ஜெரோம் கல்லூரி, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி, கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த நாட்டியமாடுகிறார்கள்.

    பின்னர் மாலை 4 மணி அளவில் விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 5 மணியளவில் ஆடம்பரத் திருப்பலி நடக்கிறது. போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியாஸ் (அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவர்), ஜார்ஜ் ஆலஞ்சேரி (சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர்), தமிழக ஆயர் பேரவைத் தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கோவா- டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்றாவோ, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, புதுவை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், போபால் பேராயர் துரைராஜ், நாக்பூர் பேராயர் எலியாஸ் உள்பட 50 ஆயர்கள் மற்றும் பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய்வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ், குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பாலபிரஜாபதி அடிகளார், குமரி மாவட்ட திருவருட்பேரவை நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. திருச்சபை பேராயர்கள், பல்சமய பிரதிநிதிகள், குமரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    விழா மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் விழா பந்தல் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மழை பெய்தாலும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இரும்பு தூண்கள் தார்ப்பாய்களால் ஆன மேற்கூரைகளுடன்கூடிய பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

    பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, பணகுடி, தூத்துக்குடி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் விழா ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரகப் பரிபாலகரும், மதுரை பேராயருமான அந்தோணி பாப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் ஜாண்குழந்தை மற்றும் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
    ×