என் மலர்
நீங்கள் தேடியது "புனிதர் பட்டம்"
- இன்று முதல் 15-ந்தேதி வரை நடைபெறும்
- புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் புகழ் மாலை மலை வலம் சிறப்பு நற்கருணை பவனி
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் மறைசாட்சி தேவசகாயம் புனிதர் பட்டம் நினைவு திருப்பலி இன்று முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆரல்வாய் மொழி காற்றாடி மலையில் காத்து கரம் பிடிக்கும் தேவசகாயம் வளம் தந்து வாழ்வளிக்கும் வியாகுல மாதா இரட்டை திருத்தலம் உள்ளது. இந்தி யாவின் முதல் மறைசாட்சி தேவ சகாயம் கடந்த ஆண்டு புனிதராக அறிவிக்கப்பட்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அதை நினைவு கூறும் விதம்மாக தேவ சகாயம் வீர மரணம் அடைந்த புண்ணிய பூமி ஆன காற்றாடி மலையில் நினைவு திருப்பலி இன்று மாலையில் ஜெபமாலை புகழ்மாலை மாலை ஆராதனை நடைபெறும். இரண்டாவது நாள் திருப்பலி புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் புகழ் மாலை மலை வலம் சிறப்பு நற்கருணை பவனி நடைபெற உள்ளது.
மூன்றாவது நாள் தேவா மருத்துவமனை அருகில் திருப்பலி மறை மாவட்ட ஆயர் தலைமையில் தேவா மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா புதிய மன்னா வீடு அடிக்கல் நாட்டு விழா ஜெபமாலை புகழ்மாலை புனிதர் பட்ட நினைவு நன்றி திருப்பலி புனிதரின் திரு சப்பரபவனி நடைபெற உள்ளது .
திருவிழா ஏற்பாடுகளை தேவ சகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பங்குத் தந்தை பங்கு பேரவை நிர்வா கிகள் அருள் சகோத ரிகள் பங்கு இறைமக்கள் செய்து வருகிறார்கள்.
- புனிதர் பட்ட ஓராண்டு நிறைவு நன்றி திருப்பலி நடைபெறும்.
- சிறப்பு நற்கருணை ஆசீர் நடக்கிறது.
தேவசகாயம் கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி புனிதராக உயர்த்தப்பட்டார். அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா தேவசகாயம் மவுண்டில் நேற்று தொடங்கியது. நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை போன்றவை நடந்தது. விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் கெபி அடிக்கல் நாட்டு விழா, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 5.30 மணிக்கு மலை வலம் வழிபாடு, சிறப்பு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.
நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி தேவா மருத்துவமனை அருகில் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் தேவா மருத்துவமனை திறப்பு மற்றும் அர்ச்சிப்பு, தொடர்ந்து மன்னா வீடு திறப்பு, அர்ச்சிப்பு நடக்கிறது. இரவு 7 மணிக்கு புனிதர் பட்ட ஓராண்டு நிறைவு நன்றி திருப்பலி நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் சேவியர் பிரான்சிஸ், பங்குத்தந்தை பிரைட், துணை பங்குத் தந்தை ரெக்வின், பங்கு பேரவை துணைத்தலைவர், சிலுவைதாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற்றும் கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார், துணைசெயலாளர் சகாய செலின், மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
விழாவின் தொடக்கமாக பிற்பகல் 2.30 மணி அளவில் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இலங்கைத் தமிழர்கள் வரவேற்பு நடனம் ஆடுகிறார்கள். தோவாளை டி.எம்.ஐ. கல்லூரி, நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, அனந்தநாடார் குடியிருப்பு ஜெரோம் கல்லூரி, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி, கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த நாட்டியமாடுகிறார்கள்.
பின்னர் மாலை 4 மணி அளவில் விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 5 மணியளவில் ஆடம்பரத் திருப்பலி நடக்கிறது. போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியாஸ் (அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவர்), ஜார்ஜ் ஆலஞ்சேரி (சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர்), தமிழக ஆயர் பேரவைத் தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கோவா- டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்றாவோ, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, புதுவை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், போபால் பேராயர் துரைராஜ், நாக்பூர் பேராயர் எலியாஸ் உள்பட 50 ஆயர்கள் மற்றும் பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய்வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ், குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பாலபிரஜாபதி அடிகளார், குமரி மாவட்ட திருவருட்பேரவை நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. திருச்சபை பேராயர்கள், பல்சமய பிரதிநிதிகள், குமரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
விழா மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் விழா பந்தல் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மழை பெய்தாலும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இரும்பு தூண்கள் தார்ப்பாய்களால் ஆன மேற்கூரைகளுடன்கூடிய பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.
பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, பணகுடி, தூத்துக்குடி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் விழா ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரகப் பரிபாலகரும், மதுரை பேராயருமான அந்தோணி பாப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் ஜாண்குழந்தை மற்றும் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
- புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
- கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.
குமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த மாதம் 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றிவிழா கொண்டாட்டம் கடந்த 5-ந் தேதி ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையில் நடந்தது. விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், திருப்பலியும் நடந்தது.
இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி கலந்து கொண்டார். தமிழக ஆயர் பேரவை தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடந்தது. விழாவில் 30-க்கும் மேற்பட்ட ஆயர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள், பல்சமய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.
புனிதர் பட்டம் பெற்ற தேவசகாயத்தின் உடல் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நன்றி விழா திருப்பலி நேற்று மாலையில் நடைபெற்றது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார்.
நிகழ்ச்சியில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ், மறைமாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், செயலாளர் இம்மானுவேல், வட்டார முதல்வர் சகாய ஆனந்த், சவேரியார் பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், உதவிப் பங்குத்தந்தையர்கள் பிரான்கோ, ஆன்றோ ஜெராபின், பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணைச் செயலாளர் ராஜன் ஆராய்ச்சி, பொருளாளர் ராபின் மற்றும் பங்கு பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சமீபத்தில் தேவ சகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
- புனிதர் பட்டம் பெற்ற அவருக்கு நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில் புனிதர் பட்ட பெற்ற தேவ சகாயம் பிள்ளை இங்குதான் ஞானஸ்நானம் பெற்றார். இதையொட்டி புனிதர் பட்டம் பெற்ற அவருக்கு நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஐதராபாத் கர்தினால் அந்தோனி பூலா, நெல்லை தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆயர்கள் ஸ்டீபன், இவான் அம்புரோஸ், ரெமிஜியுஸ், ஜூடு பால்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சபாநாயகர் அப்பாவு, ஞான திரவியம் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த திரளானகிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியையொட்டி பரதநாட்டியம், கோலாட்டம், குச்சிப்புடி போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. வடக்கன்குளம் பங்குதந்தை ஜாண்பிரிட்டோ வரவேற்றார்.
நிகழ்ச்சிகளை காவல்கிணறு பங்குதந்தை ஆரோக்கியராஜ் தொகுத்து வழங்கினார். இறுதியாக கர்தினால் தலைமையில் ஆடம்பர கூட்டு நன்றி திருப்பலியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. விழாவில் அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வடக்கன்குளம் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
வாடிகன்:
கத்தோலிக்க திருச்சபையின் 262-வது போப் ஆண்டவராக பதவி வகித்தவர் 6-ம் பால். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என அனைத்து கண்டங்களுக்கும் பயணம் செய்த முதல் போப் ஆண்டவர் 6-ம் பால். 1964-ல் பம்பாயில் நடைபெற்ற நற்கருணை மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார். இவரை, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் வரவேற்றனர்.
கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த 2-ம் வத்திக்கான் சங்கத்தின் தீர்மானங்களுக்கு காரணமாக இருந்தவர் போப் 6-ம் பால். கத்தோலிக்க திருச்சபையில் தாய்மொழி வழிபாட்டையும், விழா கொண்டாட்டங்களில் புதிய நடைமுறையையும் இவர் அறிமுகம் செய்தார். கருக்கலைப்பு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 1968-ல் 6-ம் பால் வெளியிட்ட சுற்றுமடல் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
1970-ம் ஆண்டு பிலிப் பைன்ஸ் நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், இவரைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. அதன் பிறகு, பல ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தப் பாதையில் வழிநடத்திய போப் 6-ம் பால், 1978 ஆகஸ்ட்டு 6-ந் தேதி மரணம் அடைந்தார்.
2012-ல் போப் 16-ம் பெனடிக்ட்டால் வணக்கத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்ட இவரை, 2014-ல் போப் பிரான்சிஸ் அருளாளராக உயர்த்தினார்.
2014-ம் ஆண்டு இத்தாலியின் வெரோனா பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியின் 5 மாத கரு, போப் 6-ம் பாலிடம் வேண்டியதால் உயிர் பிழைத்தது மருத்துவ அற்புதமாக கருதப்படுகிறது.
இந்த அற்புதத்தை அங்கீகரித்துள்ள போப் பிரான்சிஸ், வாடிகனில் நாளை நடைபெறும் விழாவில் போப் 6-ம் பாலுக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார். எல் சால்வதார் நாட்டில் மனித உரிமைக்காக குரல் கொடுத்ததால் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போராயர் ஆஸ்கர் ரொமேரோ உள்பட மேலும் 6 பேருக்கும் நாளை புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. #pope






