என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.
    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது. 

    இதையடுத்து பிரீதம் ஜுகல்கருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், மிரட்டல் விடுத்தும் நாகசைதன்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். 

    பிரீதம் ஜுகல்கர், சமந்தா
    பிரீதம் ஜுகல்கர், சமந்தா

    இதுகுறித்து பிரீதம் ஜுகல்கர் அளித்துள்ள பேட்டியில். ‘‘எனக்கும், சமந்தாவுக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும், இதனாலேயே சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் பிரிவு ஏற்பட்டு உள்ளது என்றும் தகறான தகவல் பரப்பி உள்ளனர். இதன் மூலம் சமந்தாவை அவதூறு செய்துள்ளனர். சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன். 

    அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை என்பது நாகசைதன்யாவுக்கு தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
    சுந்தர்.சி இயக்கி உள்ள ‘அரண்மனை 3’ திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், அரண்மனை 3 படக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி இருந்தது என்பது குறித்து கேட்டோம். அவர் கூறிய விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ‘அரண்மனை 3’ படத்திற்காக 12 அடி உயர லிங்கம் சிலை ஒன்றை செட் போட்டு படமாக்கி உள்ளனர். 

    ஆர்யா, ராஷி கன்னா
    ஆர்யா, ராஷி கன்னா

    ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டை உண்மையான லிங்கம் சிலை என்று நினைத்து பொதுமக்கள் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தார்களாம். இதன் காரணமாக சில நாட்கள் ஷூட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஆனதாம். முன்னதாக ‘அரண்மனை 2’ படத்தின் ஷூட்டிங்கின்போதும், அப்படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட அம்மன் சிலை செட் முன்பு, இதேபோல பொதுமக்கள் திரண்டு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.

    ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, சிக்குபுக்கு, ரவுத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.

    ஸ்ரேயா பகிர்ந்த புகைப்படம்
    ஸ்ரேயா பகிர்ந்த புகைப்படம்

    வழக்கமாக கணவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆனதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 

    கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்ததாக ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகை வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார். அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். 

    வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம். 40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்கு பதில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்ப உள்ளார்களாம்.

    நடிகை ஷாலு ஷம்மு
    நடிகை ஷாலு ஷம்மு

    அதன்படி வருகிற அக்டோபர் 16-ந் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவர் ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
    ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

    விஜய் - கீர்த்தி சுரேஷ்
    விஜய் - கீர்த்தி சுரேஷ்

    இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யின் 67-வது படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தற்போது விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடி பல்லி, விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது.

    விஜய் - லோகேஷ் கனகராஜ்
    விஜய் - லோகேஷ் கனகராஜ்

    இந்நிலையில் விஜய்யின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
    ஒரே படத்தில் பணிபுரிந்து வரும் இயக்குனரும் ராமு, நடிகர் நிவின் பாலியும் தங்களது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள்.
    மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின்பாலி. இவர் தமிழில் ரிச்சி என்கிற படத்தில் நேரடியாக அறிமுகமானாலும் அந்த படம் அவருக்கு பெரியதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கத்தில் மீண்டும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் நிவின்பாலி.

    இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமேஸ்வரம் அருகிலுள்ள தனுஷ் கோடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ராம் - நிவின்பாலி

    இந்த நிலையில் இன்று இயக்குனர் ராம் மற்றும் நிவின்பாலி இருவருக்குமே பிறந்த நாள். ஒரு படப்பிடிப்பில் இயக்குனரும் ஹீரோவும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடுவது ஆச்சரியமான விஷயம். இவர்களின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி வரும் வி.டான் போஸ்கோ, தனது பெயரை மாற்றி இருக்கிறார்.
    ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல், இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். தற்போது இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிவுள்ள ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்திலும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். விரைவில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    டான் போஸ்கோ
    கோல்மால் படக்குழுவினருடன் டான் போஸ்கோ

    கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் இருந்து பிஜு என்னும் புனைப்பெயரை தனது பெயருடன் இணைத்து பிஜு.வி.டான் போஸ்கோ என்று மாற்றி இருக்கிறார். தற்போது ஜீவா, மிர்ச்சி சிவா, பாயல் ராஜ்புட், தன்யா நடிப்பில் பொன் குமரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் கோல்மால் என்னும் படத்திற்கு பிஜு.வி.டான் போஸ்கோ பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் பூஜை போடப்பட்டு விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மொரிஷியஸில் மிக பிரம்மாண்டமாக கோல்மால் திரைப்படம் படமாக்கப்பட இருக்கிறது.

    இப்படத்தை அடுத்து மேலும் 3 படங்களில் பிஜு.வி.டான் போஸ்கோ எடிட்டிங் பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வெப் தொடர் ஒன்றிருக்கும் பிஜு.வி.டான் போஸ்கோ பணியாற்றி வருகிறார்.
    ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளஇப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

    இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர்.

    அண்ணாத்த

    இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டீசரை ஆயுத பூஜையை முன்னிட்டு, அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
    அரண்மனை, அரண்மனை 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து, சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படம் உருவாகியுள்ளது.
    சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டு பேசினர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி கலந்து கொண்டார்.

    இவ்விழாவில் சுந்தர்.சி பேசும்போது, ‘எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

    மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா. அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.

    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்

    அரண்மனை 1ம் பாகத்தை உதயநிதி வெளியிட்டார். தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி மட்டும்தான். அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான். 

    என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படம்தான். படத்தை பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் புரமோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.
    இலங்கையை சேர்ந்த பிரபல தமிழ் கவிஞராக திகழ்பவர் பாடலாசிரியர் அஸ்மின். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கவிஞர் அஸ்மின் எழுதிய இரங்கல் கவிதையான ‘வானே இடிந்ததம்மா’ என்ற சோகப்பாடல் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

    இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான ‘நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ என்ற பாடல் மூலம் அஸ்மின் அறிமுகமானார். அதன் பின்னர் பல தமிழ் திரைப்படங்களுக்கான பாடல்களை எழுதியுள்ள அஸ்மின், தனது ‘யூடியூப்’ சானலின் வாயிலாக ஏராளமன தனியிசைப் பாடல்களையும் பதிவிட்டுள்ளார்.

    அஸ்மின்
    அஸ்மின் - கந்தப்பு ஜெயந்தன்

    இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் வகையில் ரஜினிக்கான ‘என்ட்ரி சாங்’ பாணியில் ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த - நீ இனிமேலும் முடியாது ஏமாத்த’ என்னும் பாடலை அஸ்மின் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    இலங்கையை சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து மேலும் சிலருடன் பாடியுள்ள இந்த ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த' பாடல் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
    புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கத்தில் அபி சரவணன், ஷைனி நடிப்பில் உருவாகி இருக்கும் சாயம் படத்தின் முன்னோட்டம்.
    ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி. ராமநாதன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. படத்தினை புதுமுக இயக்குனர் ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். 

    அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, இந்தியா, பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி, இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    அபி சரவணன், ஷைனி
    அபி சரவணன், ஷைனி

    நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில், கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. 
    ×