என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சிலி
- கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.
சாண்டியாகோ:
தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த 2010-ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத்தொடர்ந்து உண்டான சுனாமியில் 526 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அல்லெண்டே ஆட்சியை விட்டு அகற்றி ஆட்சியில் அமர்ந்தார் பினோசெட்
- ஜராவின் கை விரல்கள் பூட்ஸ் கால்களால் நசுக்கப்பட்டது
தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நாடு சிலி.
1973 செப்டம்பரில் இங்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கட்சியை சேர்ந்த சால்வடோர் அல்லெண்டே எனும் அதிபரின் ஆட்சியை, அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ.-வின் மறைமுக துணையுடன் ராணுவ கிளர்ச்சி மூலம் அகற்றி விட்டு, ராணுவ தலைவர் அக்ஸ்டோ பினோசெட் ஆட்சியை கைப்பற்றினார்.
பிறகு பினோசெட் சுமார் 16 ஆண்டுகள் சிலியில் ஆட்சி புரிந்தார். அல்லெண்டேவின் தீவிர ஆதரவாளர் பாடகர் விக்டர் ஜரா. அமைதி வழிகளிலேயே பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை தனது லத்தீன் அமெரிக்க பாடல்கள் மூலம் நாட்டு மக்களுக்கு பிரசாரம் செய்து மிகவும் பிரபலமடைந்தவர் ஜரா.
மேற்கத்திய பாடல் குழுக்களான யூ2 மற்றும் பாடகர்கள் பாப் டைலன் மற்றும் ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன் ஆகியோருக்கும் இவர் முன்னுதாரணமாக இருந்தார். 1973 கிளர்ச்சியும் ஆட்சி மாற்றமும் நடந்த சில தினங்களில், செப்டம்பர் 11 அன்று பினோசெட்டின் படையால் பாடகர் ஜரா கைது செய்யப்பட்டார்.
அப்போது பினோசெட் அரசால் சிறை பிடிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரம் அரசியல் கைதிகளுடன் ஒரு விளையாட்டு அரங்கத்தில் ஜராவும் சிறை வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கிட்டார் வாசிப்பதிலும் வல்லவரான அவரது கை விரல்கள் துப்பாக்கியின் பின்புறத்தாலும், பூட்ஸ் கால்களாலும் நசுக்கப்பட்டது. அவர் உடலில் 44 இடங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்தது.
1990 வரை பினோசெட் ஆட்சியில் இருந்தார். பின்பு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். போர் குற்றங்களுக்காக, பினோசெட் ஆட்சியின் பல ராணுவ அதிகாரிகள் மற்றும் பினோசெட் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் பாடகர் விக்டர் ஜராவின் கொலைக்கான விசாரணையும் அடங்கும்.
பினோசெட் செய்த அரசியல் கொலைகளுக்காக தண்டனை பெறாமலேயே 2006-இல் உயிரிழந்தார். ஆனாலும் அவருக்கு துணை நின்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது போர்குற்றம் புரிந்ததற்கான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.
இதில் விக்டர் ஜராவை சித்ரவதை செய்து கொலை செய்த சிலி நாட்டின் அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த 85-வயதான ஹெர்னன் சகோன் மற்றும் அவருக்கு துணையாக இருந்த 7 ராணுவ வீரர்கள் ஆகியோரை "குற்றவாளிகள்" என இரு தினங்களுக்கு முன்பு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அவர்களுக்கு 25 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஹெர்னனை சிறைக்கு அழைத்து செல்ல அதிகாரிகள் அவர் வீட்டுக்கு சென்ற போது ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ஹெர்னன் உயிரிழந்தார்.
பல வருடங்கள் ஆனாலும், விக்டர் ஜராவின் அநியாய மரணத்திற்கு நீதி வழங்கப்பட்டு விட்டதாக அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- விமானம் மியாமியிலிருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது
- நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி திடீரென மயங்கி விழுந்தார்
தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடு சிலி. இதன் தலைநகர் சான்டியாகோ.
சான்டியாகோவை தளமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு விமான நிறுவனம் 'லாட் ஆம் விமான நிறுவனம்.
இதன் வர்த்தக விமானமான LA505 அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாநில மியாமியிலிருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தை தலைமை விமானியான 56 வயதான கேப்டன் இவான் ஆண்டர் என்பவர் இயக்கினார். ஆண்டர் 25 வருடங்களுக்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.
மியாமியிலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே விமானத்தின் டாய்லெட் அறைக்கு ஆண்டர் சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இது தெரிய வந்ததும் உடனடியாக துணைவிமானி விமானத்தை இயக்கினார்.
அதே நேரம், ஆண்டருக்கு அவசர கால முதலுதவி சிகிச்சையும் விமானத்தின் உள்ளே இருந்த குழுவால் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை.
இதனால் விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமாவின் டாகுமென் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவரை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக மருத்துவ நிபுணர் குழு ஒன்று அந்த விமானத்தை அடைந்து அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்க முற்பட்டது. பரிசோதனையில் துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கெனவே இறந்திருந்தது தெரிய வந்தது.
அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பின், விமானம் சிலி நாட்டை நோக்கி பயணித்தது.
அவரது இறப்பு குறித்து விமான நிறுவனம் அறிவித்திருப்பதாவது:
"ஆண்டரின் உயிரை காப்பாற்ற விமானத்தின் உள்ளே அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டது. இவான் ஆண்டரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது நீண்ட சேவையையும், அர்ப்பணிப்பையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். அவரது இறப்புக்கு எங்கள் வருத்தங்களை தெரிவிக்கிறோம்."
இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்தது.
விமானத்தின் உள்ளேயே எதிர்பாராதவிதமாக தலைமை விமானி உயிரிழந்ததும், விமானம் துணை விமானியால் இயக்கப்பட்டு பத்திரமாக தரையிறங்கியது சிலி நாட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.
- கடற்கரை பகுதியில் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது.
- முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்குட்:
கடல்வாழ் உயிரினங்களில் மிகப்பெரியதாக நீல திமிங்கலம் இருந்து வருகிறது. ஆழமான கடற்பகுதியில் இது வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் சிலி நாட்டின் அன்குட் தீவு பகுதியில் பிரமாண்டமாக காட்சி அளிக்கும் நீல திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தது. இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த திமிங்கலம் எப்படி கரைக்கு வந்தது என்பது தெரியவில்லை. அந்த கடற்கரை பகுதியில் கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. இதனால் கப்பலில் மோதி அது கரைக்கு வந்ததா? அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக ஒதுங்கயதா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது 6.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.
சாண்டியாகோ:
பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கு மூலையில் அமைந்துள்ள சிலி நாடு புவியியல் அமைப்பின் படி அடிக்கடி நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் நெருப்பு வளையம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் அலறியபடி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் திரண்டு நின்றனர்.
சான்ட்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
- காட்டுத்தீ சிக்கி 500க்கும் மேர்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சான்டியாகோ:
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிலியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. பயோபியா பகுதியில் 16 பேர், லா அருணாசியாவில் 5 பேர், நுபில் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
- காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- செய்தியாளரின் ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
- நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சிலி நாட்டில் செய்தியாளர் ஒருவர் காதில் இயர் போன் மாற்றிக் கொண்டு செய்தியை நேரலையில் அறிவித்து வந்தார். அப்போது, எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று செய்தியாளரின் இயர்போனை அலேக்காக திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது.
நிகோலஸ் கிரம் என்ற செய்தியாளரின் தோள் மீது அமர்ந்த கிளி, அவரது ஒரு காதின் இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது.
நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
- சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு.
- 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.
சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹூடாகோண்டோ என்ற சிறிய நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டபோது 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் டைனோசர்களின் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ஆய்வாளர் கிறிஸ்டியன் சலாசர் கூறும்போது, இது தனது அனுபவத்தில் இதுவரை இல்லாத ஒன்று என்றும், 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்தடங்களை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது மிகப்பெரிய திட்டத்தின் தொடக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதிய உச்சம் தொட்ட பங்கு சந்தை - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
உடற்பயிற்சி சாதனைகளை வெளியிட்ட உலக நாயகன்
சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி- தேதி அறவிப்பு
இரண்டாவது பாடலை வெளியிட்ட "பைட் கிளப்'"
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்