என் மலர்
கார்
- ரூ. 6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
- இந்த கார் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய விற்பனையாளர்கள் பல கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை வழங்குகிறது. இதில் எம்ஜி குளோஸ்டர், ஹெக்டர், ஆஸ்டர், ZS EV மற்றும் கொமெட் EV மாடல்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது.
அதன்படி எம்ஜி குளோஸ்டர் மாடலுக்கு ரூ. 6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 38 லட்சத்து 80 ஆயிரத்தில் துவங்கி ரூ. 43 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், ஸ்கோடா கோடியக், ஜீப் மெரிடியன் மற்றும் நிசான் எக்ஸ்-டிரெயில் போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

எம்ஜி ஹெக்டார் மாடலுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இந்த கார் ஹூண்டாய் அல்கசார் மற்றும் மஹிந்திரா XUV700 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி ஆஸ்டர் மாடலை வாங்கும் போது ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 9 லட்சத்து 98 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாகும். இந்த கார் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி ZS EV மற்றும் கொமெட் EV மாடல்களை வாங்கும் போது முறையே ரூ. 2.2 லட்சம் மற்றும் ரூ. 90 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
- விற்பனை ஆகாமல் உள்ள இந்த கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி ஆகும்.
- இந்தியாவில் தற்போது ஒரு கார் விற்பனை ஆவதற்கு 70-75 நாட்கள் வரை ஆகிறது.
இந்திய முழுவதும் கிட்டத்தட்ட 7.3 லட்சம் கார்கள் விற்பனை ஆகாமல் உள்ளது என்று ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
விற்பனை ஆகாமல் உள்ள இந்த கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி ஆகும்.
ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு கார் டீலர்ஷிப் கடைகளுக்கு வந்தபிறகு 65-67 நாட்களுக்குள் விற்பனையாகி வந்தது. ஆனால் இப்போது ஒரு கார் விற்பனை ஆவதற்கு 70-75 நாட்கள் வரை ஆகிறது.
அதே சமயம் 4 லட்சம் கார்கள் தான் விற்பனை ஆகாமல் உள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.
- டாடா பன்ச் மாடல் விற்பனையில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
- இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்றது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் மாடலை பின்னுக்குத்தள்ளி இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பன்ச் பெற்றது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் டாடா பன்ச் மாடல் சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் மாருதியின் வேகன்ஆர் மாடல் 1 லட்சத்து 16 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.
இந்த பட்டியலில் அதிகம் விற்பனையான மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெசட்டா மாடல் பெற்று இருக்கிறது. இந்தியாவின் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கிரெட்டா மாடல் 1 லட்சத்து 09 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா மாடல்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. இவை முறையே 1 லட்சத்து 05 ஆயிரம் மற்றும் 1 லட்சத்து 04 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.
- டாடா கர்வ் EV இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- டாடா கர்வ் EV மாடலுக்கு காத்திருப்பு காலம் அதிகரிக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் EV மற்றும் கர்வ் கூப் எஸ்யுவி மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்து விற்பனைக்கும் கொண்டுவந்தது. புதிய கர்வ் மாடல்களின் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இது குறித்து வெளியான தகவல்களின் படி புதிய கர்வ் EV மாடல்களை வாங்க கணிசமான வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த காரை வாங்க ஏற்கனவே மூன்ற இலக்க எண்களில் முன்பதிவு கடந்துள்ளதாக தெரிகிறது.

தற்போது டாப் என்ட் மாடல்கள் மட்டுமே விற்பனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முதற்கட்ட வினியோகத்தில் டாப் எண்ட் மாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் டாடா கர்வ் EV மாடல் 45 கிலோவாட் ஹவர் மற்றும் 55 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் இரு மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 45 கிலோவாட் ஹவர் மாடலை டெலிவரி பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் எட்டு வார காலம் காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 55 கிலோவாட் ஹவர் வேரியண்ட்-ஐ டெலிவரி எடுக்க ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
- சுசுகி ஹஸ்லர் மாடல் சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது.
- சுசுகி ஹஸ்லர் மாடல் பாக்ஸி ஸ்டைல் கொண்டிருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பாக்ஸி ஸ்டைல் மைக்ரோ எஸ்யுவி கார் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். சர்வதேச சந்தையில் ஹஸ்லர் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அளவில் 3.3 மீட்டர்களும், 2.4 மீட்டரில் வீல் பேஸும் கொண்டுள்ள ஹஸ்லர் மாடல் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எம்ஜி கொமெட் மற்றும் மாருதி ஆல்டோ கார்களை போன்ற அளவில் தான் இருக்கும். இந்த காரில் 660சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் 48 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதே எஞ்சினின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் 64 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும். இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த கார் ஜிம்னி மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்களை சேர்த்ததை போன்று காட்சியளிக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் மாருதி ஹஸ்லர் மாடல் எஸ் பிரெஸ்ஸோ போன்று மைக்ரோ எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் விலையும் எஸ் பிரெஸ்ஸோவுக்கு நிகராகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

- மாடல்கள் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
- அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி, விர்டுஸ் மிட்சைஸ் செடான் மற்றும் டிகுவான் எஸ்யூவி ஆகிய 3 மாடல்களுக்கு பெருமளவு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
டைகுன் மீதான தள்ளுபடிகள் கடந்த மாதம் கிடைத்ததை விட கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் விர்டுஸ் மற்றும் டிகுவான் மீதான தள்ளுபடிகள் சற்று குறைந்துள்ளன. தள்ளுபடி மற்றும் சலுகைகள் ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்பட மாறுபடும்.
சில டீலர்கள் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் வரவிருக்கும் டாடா கர்வ்வ் மற்றும் சிட்ரோயன் பாசால்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்கும் ஜெர்மன் பிராண்டின் MY2023 மாடல்களை இன்னும் வைத்திருக்கிறார்கள்.
இந்த மாடல்கள் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும். மேலும் இவற்றுக்கு அதிகபட்சம் ரூ.2.28 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

MY2024 மாடல்களுக்கு வரும் மாறுபாட்டைப் பொறுத்து, VW 1.0 லிட்டர் TSI பதிப்புகளில் ரூ. 1.2 லட்சம் வரை தள்ளுபடியையும், 1.5 TSI மாடல்களில் ரூ. 1.87 லட்சம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ரொக்க தள்ளுபடியுடன், என்ட்ரி லெவல் டைகுன் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.70 லட்சத்தில் இருந்து ரூ.10.90 லட்சமாக குறைந்துள்ளது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா ஆகிய மாடல்களுக்கான ஃபோக்ஸ்வேகனின் பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட கார் வோக்ஸ்வேகன் விர்டுஸ். இந்த மாடலுக்கு தற்போது ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் மிட் ரேஞ்ச் 1.0 TSI ஹைலைன் AT வேரியண்டிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கிடையில், 1.5 TSI எஞ்சின் கொண்ட விர்டுஸ் மாடலுக்கு ரூ.70,000 வரையிலான பலன்களை பெறுகிறது.
விர்டுஸ் மற்றும் டைகுன் ஆகியவை 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
வோக்ஸ்வேகன் டிகுவான் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படுகின்றன. இது 2023 இல் தயாரிக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். MY2024 டிகுவான் மாடலுக்கு இந்த மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரை மொத்த பலன்கள் வழங்கப்படுகிறது.
டிகுவான் மாடலில் 190 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இது வோக்ஸ்வேகனின் 4 மோஷன் AWD தொழில்நுட்பம் வழியாக 4-வீல் டிரைவ் வசதியை வழங்குகிறது. ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவியின் விலை தற்போது ரூ.35.17 லட்சமாக உள்ளது.
அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.
- தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் வேரியன்ட் 4 லட்சம் யூனிட் விற்பனையை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோரில் அறிமுகப்படுத்தபட்ட பன்ச், சிட்ரோயன் C3 மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
அறிமுகமான 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 லட்சம் யூனிட் விற்பனையை அதாவது உற்பத்தி தொடங்கிய 10 மாதங்களில் எட்டியது. இதைத் தொடர்ந்து மே 2023 மற்றும் டிசம்பர் 2023 இல் முறையே 2 லட்சம் மற்றும் 3 லட்சம் யூனிட் விற்பனையானது. குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.
பன்ச் பிராண்ட் குறைந்த காலத்தில் அதிக விற்பனை மைல்கல்லை அடைய உதவிய ஒரு முக்கிய காரணமாக, ஒரு குறுகிய காலத்தில் பல்வேறு வகையான எரிபொருள் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுவது தான். தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.

EV மற்றும் இரட்டை-CNG சிலிண்டர் கொண்ட வெர்ஷன்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக, இது ஒரு சிலிண்டர் சிஎன்ஜி டேங்கில் மட்டுமே கிடைத்தது.
பன்ச் மாடலின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்கள் மட்டும் 53 சதவீதம் ஆகவும் இதைத் தொடர்ந்து 33 சதவீதம் CNG ஆப்ஷனாகவும் உள்ளது. சிட்ரோயன் eC3க்கு போட்டியை ஏற்படுத்தும் இந்த காரின் EV மாடல், 14 சதவீத விற்பனையைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் டாடா பன்ச் EV வாங்கிய வாடிக்கையாளர்களில் 21 சதவீதம் பேர் முதல்முறை கார் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
- சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் பாசால்ட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சில விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு;-
இந்தியாவில் இது சிட்ரோயனின் நான்காவது கார். இது C-Cubed திட்டத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் இருவிதமான பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களில் வழங்கப்படும்.
உட்புறங்கள் மற்றும் அம்சங்கள்:-
இப்போது முதல் முறையாக, சிட்ரோயன் வாகனத்தின் உட்புற தோற்றம் வெளியாகியுள்ளது. கேபின் ஒரு பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
இருப்பினும், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய காலநிலை கட்டுப்பாடு, இரண்டாவது வரிசையை அட்ஜெட் செய்யும் வசதி, முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், இரண்டு வரிசைகளுக்கும் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.
சன்ரூஃப், சுற்றுப்புற விளக்குகள், காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் பட்டன்கள் போன்ற அம்சங்கள் இந்த காரில் இடம்பெறவில்லை. பூட் ஸ்பேஸ் 470-லிட்டராக உள்ளது, அதே நேரத்தில் வீல்பேஸ் 2.64-மீட்டராக உள்ளது, இது செக்மென்ட்டில் உள்ள பெரிய கார்களில் ஒன்றாகும்.

பவர்டிரெய்ன் விருப்பங்கள்:-
சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
இதன் NA யூனிட் 82bhp மற்றும் 155Nm உற்பத்தி செய்கிறது மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.
டர்போ பெட்ரோல் யூனிட் 109 bhp மற்றும் 190 nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.
நிறங்கள் மற்றும் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்:-
பாசால்ட் ஆறு வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்படும் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து அலாய் வீல்களுக்கு இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும்.
வழக்கமான கதவு கைப்பிடிகள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், வீல் ஆர்ச்களில் பிளாக் கிளாடிங் மற்றும் முழு LED லைட் பேக்கேஜ் ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.
போட்டி மற்றும் துவக்கம்
பசால்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோயனின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும்.
இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
இந்த காரில் உள்ள புது அம்சங்கள் இந்நிறுவனத்தின் மற்ற 3 சிட்ரோயன் பட்ஜெட் கார்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
- மோட்டார் 168bhp மற்றும் 350Nm பீக் டார்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
- டாடா கர்வ் மாடலானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ICE மற்றும் EV ஆகிய இரண்டிலும் அறிமுகமாக உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை MY2023 மாடல்களுக்கு குறிப்பிட்ட ஸ்டாக் உள்ள வரை மட்டுமே வழங்கப்படும்.
சஃபாரியின் MY2023 மாடல்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1.60 லட்சம் வரையிலான சலுகைகளை அனைத்து மாடல்களிலும் பெறலாம்.
ஹேரியர் மாடலைப் பொறுத்த வரை ரூ.1.45 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது, டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் ஆகியவை எக்ஸ் ஷோருமில் ஆரம்ப விலையாக முறையே ரூ. 16.19 லட்சம் மற்றும் ரூ. 14.99 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 மாடல்களும் 2.0-லிட்டர் க்ரையோடெக் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் இணைந்து ஆறு-வேக மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இந்த மோட்டார் 168bhp மற்றும் 350Nm பீக் டார்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, டாடா கர்வ் மாடலானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ICE மற்றும் EV ஆகிய இரண்டிலும் அறிமுகமாக உள்ளது. டாடாவின் இந்த புதிய கூபே SUV ஆனது, பிராண்டின் புதிய 1.2-லிட்டர் Hyperon டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
- இந்த கார் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- பூட் பகுதியில் போதுமான இடம் கிடைக்கும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புது வேரியண்ட் கிராண்ட் i10 நியோஸ் Hy CNG டுயோ என அழைக்கப்படுகிறது. இந்த மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Hy CNG டுயோ ஏற்கனவே ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பில் CNG டேங்க் இரண்டாக பிரிக்கப்பட்டு கீழ்புறமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அதிகளவு இடத்தை அடைத்துக் கொள்ளாமல், பூட் பகுதியில் போதுமான இடம் கிடைக்கும்.

இந்த காரில் 1.2 லிட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 68 ஹெச்பி பவர், 95.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த காரில் CNG மோட் கார் சென்று கொண்டிருக்கும் போதுதான் இயக்க முடியும்.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த காரில் 6 ஏர்பேக், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா, டே & நைட் ரியர்வியூ மிரர், எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் HY CNG டுயோ மேகனா ரூ. 7 லட்சத்து 75 ஆயிரம்
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் HY CNG டுயோ ஸ்போர்ட்ஸ் ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
- மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கார் பயன்பாட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா மாடல் குளோபல் என்கேப் (Global NCAP) நடத்திய கிராஷ் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. விபத்துக்கான சோதனையில் மாருதி சுசுகி எர்டிகா 1 நட்சத்திரத்தைப் பெற்றுள்ளது.
இந்த எம்பிவி மாடல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். இதில் பாதுகாப்பிற்கு முன்புறம் இரண்டு ஏர்பேக்குகள், ESC, சீட்பெல்ட் நினைவூட்டல் மற்றும் லோட் லிமிட்டருடன் கூடிய சீட்பெல்ட் ப்ரீ-டென்ஷனர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின் வரிசையில் ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்களையும் பெறுகிறது.

பெரியவர்களுக்கான பாதுகாப்பில் எர்டிகா மாடல் 23.63 புள்ளிகளையும், குழந்தைகள் பாதுகாப்பில் 19.40 புள்ளிகளையும் பெற்றுள்ளது. சோதனை முடிவுகளில், ஓட்டுநர் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஃபுட்வெல் மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையற்றவை என்றும் மேலும் ஏற்றுதல்களைத் தாங்கும் திறன் இல்லை என்றும் மதிப்பிடப்பட்டது.
எர்டிகாவின் உயர் வகைகளில் பக்கவாட்டு ஏர்பேக்குகள், உயரத்தை சரிசெய்யக்கூடிய முன் சீட்பெல்ட்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. எர்டிகா மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 102 ஹெச்பி பவர் மற்றும் 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
- உள்நாட்டு சந்தையில் மட்டும் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் ஜூன் மாதம் வரையிலான 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டைவிட நிகர லாபம் 47 சதவீதம் உயர்ந்து 3650 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.
செலவு குறைப்பு முயற்சிகள், பொருட்களின் சாதகமான விலைகள் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றின் முக்கியமான காரணங்கள் இந்த லாபத்தை ஈட்ட முக்கிய காரணம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2,485 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 30,845 கோடி ரூபாய் நிகர விற்பனையாக இருந்த நிலையில் தற்போது 33,875 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தற்போது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 5,21,868 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 5 சதவீதம் உயர்வாகும்.
உள்நாட்டு சந்தையில் 4,51,308 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விற்பனையில் இது கடந்த ஆண்டு இதே காலாண்டை விட 4 சதவீதம் உயர்வாகும்.
2031 வரைக்கும் ஆறு எலெக்ட்ரிக் கார் மாடல்கள் வரவிருக்கின்றன. வருடத்திற்கு ஒரு புது மாடல் என்ற வகையில் வரவிருக்கிறது. ஏற்றுமதி விற்பனை 12 சதவீதம் (70,560) அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் ஜிம்னி (Jimny) சொகுசு கார் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.






