என் மலர்
கார்
ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அமேஸ் காம்பேக்ட் செடான் மாடலின் ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அமேஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அந்நிறுவனத்தின் எஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. புதிய மாடலில் ஸ்பெஷல் எடிஷன் லோகோ, மெல்லிய பாடி கிராபிக்ஸ், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்பெஷல் எடிஷன் அமேஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் டீசல் சிவிடி மாடல் ரூ. 9.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர காம்பேக்ட் செடான் மாடலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இதில் உள்ள 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 89 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதேபோன்று 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த என்ஜின் 99 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் 79 பிஹெச்பி, 160 என்எம் டார்க் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் உடன் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்சான் எலெக்ட்ரிக் கார் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி காரின் விலையை அதிகரித்து இருக்கிறது. வேரியண்ட்டிற்கு ஏற்ப நெக்சான் மாடல் விலை அதிகபட்சம் ரூ. 26 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் தற்சமயம் விற்பனையாகும் மாடல்களில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்சான் இவி இருக்கிறது. நெக்சான் இவி மாடல் எக்ஸ்இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ் வேரியண்ட்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் நெக்சான் இவி விலை ரூ. 13.99 லட்சம் முதல் துவங்குகிறது. இந்தியாவில் நெக்சான இவி மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இது இருக்கிறது.
நெக்சான் இவி மாடலில் 95கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 30.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இது 129 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாடா நெக்சான் இவி காரினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் டாப் எண்ட் மாடல்களில் வழங்ககப்பட இருக்கும் புது வசதி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிஎஸ்6 ரக ஸ்கார்பியோ மாடல் ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என நான்கு வேரியண்ட்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இதன் டாப் எண்ட் எஸ்9 மற்றும் எஸ்11 வேரியண்ட்களின் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளை வழங்குகிறது. இந்த அம்சங்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

இதுதவிர புதிய ஸ்கார்பியோ மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 40 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 பேஸ் மாடலின் விலை ரூ. 11.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மாடல் காருக்கு புதிய அம்சங்களை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேட்ச்பேக் மாடலை விரைவில் அப்கிரேடு செய்ய இருக்கிறது. அந்த வகையில் டியாகோ எக்ஸ்டி வேரியண்ட்டில் ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் போன் கண்ட்ரோல்கள் வழங்கப்பட இருக்கின்றன.
மேம்பட்ட ஹேட்ச்பேக் வேரியண்ட் விரைவில் விற்பனை மையங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது அப்டேட் கொண்ட மாடலின் பிரவுச்சரை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு உள்ளது.

தற்சமயம் டாடா டியாகோ மாடல்- எக்ஸ்இ, எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட்ஏ, எக்ஸ்இசட்ஏ பிளஸ் என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் எக்ஸ்டி வேரியண்ட் என்ட்ரி லெவல் மாடலுக்கு அடுத்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.
டாடா டியாகோ மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகமானது. இந்நிறுவனம் செல்டோஸ் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் தனது முதல் வாகனமாக அறிமுகம் செய்தது.
தற்சமயம் இந்நிறுவனம் தனது செல்டோஸ் காரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது அனிவர்சரி எடிஷன் என அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி புதிய ஸ்பெஷல் எடிஷன் செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் ட்ரிமில் மட்டும் கிடைக்கும் என்றும் இந்த கார் வெளிப்புளம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. இது நான்குவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
கியா செல்டோஸ் ஹெச்டிஎக்ஸ் வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க் செயல்திறன், 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவன கார் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹூண்டாய் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் சான்ட்ரோ ஹேட்ச்பேக் மாடலை இரண்டு சிஎன்ஜி வேரியண்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் சான்ட்ரோ மாடல் தற்சமயம் மேக்னா சிஎன்ஜி மற்றும் ஸ்போர்ட்ஸ் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய சிஎன்ஜி வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 5.87 லட்சம் மற்றும் ரூ. 6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இரண்டு சிஎன்ஜி வேரியண்ட்களிலும் 1.1 லிட்டர் நான்கு சிலிண்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. சிஎன்ஜியில் இந்த என்ஜின் 60 பிஹெச்பி பவர், 85 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்குகிறது.
இதே என்ஜின் பெட்ரோலில் இயக்கும் போது 69 பிஹெச்பி பவர், 99 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் கார் முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா எஸ்யுவி மாடல் இந்திய சந்தை முன்பதிவில் 1.15 லட்சம் யூனிட்களை கடந்து இருக்கிறது. மார்ச் மாத வாக்கில் புதிய கிரெட்டா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் விற்பனையான எஸ்யுவி மாடலாக கிரெட்டா இருந்தது என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா மாடல் இதுவரை 5.2 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

கிரெட்டா மாடலை வாங்கியவர்களில் 60 சதவீதம் பேர் டீசல் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. மேலும் க்ளிக் டு பை தளத்தில் சுமார் 1100 முன்பதிவுகளை கிரெட்டா பெற்று இருக்கிறது.
ஆடி நிறுவனத்தின் புதிய கியூ2 மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆடி நிறுவனம் தனது விலை குறைந்த எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காருக்கான அறிமுக நிகழ்வு விரச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது.
கியூ2 மாடல் எம்க்யூபி பளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அளவில் இந்த கார் 4191எம்எம் நீளம், 1794எம்எம் அகலம், 1508எம்எம் உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2601எம்எம் ஆக இருக்கிறது.

ஆடி கியூ2 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய மாடலில் சிங்கில் பிரேம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், சில்வர் ஸ்கிட் பிளேட்கள், பிளாக் பாடி கிளாடிங், பிளாக்டு அவுட் பி பில்லர், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி டெயில் லைட்கள் மற்றும் டூயல் டிப் எக்சாஸ்ட்கள் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை 2016 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் விட்டாரா பிரெஸ்ஸா கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த மாடல் குறுகிய காலக்கட்டத்தில் 5.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் விட்டாரா பிரெஸ்ஸா புது மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஆறு மாதங்களில் சுமார் 32 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

இந்திய சந்தையில் புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் விலை ரூ. 7.34 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபென்டர் மாடல் கார் இந்தியா வந்தடைந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
லேண்ட் ரோவர் நிறுவனம் 2020 டிபென்டர் மாடல் காரை இந்தியா கொண்டுவந்துள்ளது. முதற்கட்ட டிபென்டர் மாடல்கள் மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறைமுகம் வந்தடைந்து இருக்கின்றன. லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் ஆஃப்-ரோட் எஸ்யுவி மாடலை அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

வேண்ட் ரோவர் டிபென்டர் 90 (மூன்று கதவு) மற்றும் 110 (ஐந்து கதவு) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கின்றன. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடல் விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.
டிபென்டர் 90 மாடல் விலை ரூ. 69.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 81.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. டிபென்டர் 110 மாடல் விலை ரூ 76.57 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 86.27 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிட்டெட் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய தார் எஸ்யுவி முன்பதிவில் 9 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அக்டோபர் 2 ஆம் தேதி அறிமுகமான தார் மாடல் தற்சமயம் 18 நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய எஸ்யுவி மாடல் லைப்ஸ்டைல் பிரிவில் அதிக முன்பதிவுகளை கடந்த மாடலாக இருக்கிறது. புதிய தார் மாடல் கன்வெர்டிபில் டாப் வசதி வழங்கப்படும் என மஹிந்திரா அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் எல்இடி டிஆர்எல்கள், வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பேர் வீல் மற்றும் புதிய 18 அங்குல அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

உள்புறம் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்ட ஏர் கான் வென்ட்கள் மற்றும் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட ஸ்டீரிங் வீல், ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மஹிந்திரா தார் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே 150 பிஹெச்பி, 320 என்எம் டார்க் மற்றும் 130 பிஹெச்பி பவர் வழங்குகிறது.
இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் கிரெட்டா பெட்ரோல் இ என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் புதிய கிரெட்டா பெட்ரோல் இ வேரியண்ட் விலை ரூ. 9.81 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக ஹூண்டாய் கிரெட்டா இ வேரியண்ட் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது. கிரெட்டா இ வேரியண்ட் அடிப்படை அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் மேனுவல் ஏர்-கான், மின்சக்தியில் இயங்கும் ORVM, டூயல் டோன் இன்டீரியர், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்படுகிறது.

பாதுகாப்பிற்கு இந்த மாடலில் முன்புறம் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, பின்புறம் பார்க்கிங் சென்சார்கள், லேன் சேன்ஜ்டு இன்டிகேட்டர், டூயல் ஹாரன், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
கிரெட்டா இ வேரியண்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






