என் மலர்
பைக்
யமஹா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் 2022 எப்.இசட்.எஸ். எப்.ஐ. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எப்.இசட்.எஸ். எப்.ஐ. மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் டி.எல்.எக்ஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 1,15,900 என்றும் டி.எல்.எக்ஸ். மாடல் விலை ரூ. 1,18,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேம்பட்ட புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் விற்பனையகம் வருகின்றன. இரு வேரியண்ட்களிலும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 149சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.2 பி.ஹெச்.பி. திறன், 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

இந்த மோட்டாரைச்சிக்கிளில் டெலிஸ்கோபிக் போர்க், மோனோ ஷாக் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் எல்.இ.டி. டெயில் லைட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, சிங்கில் சேனல் ஏ.பி.எஸ்., பின்புறம் டிஸ்க் பிரேக், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது.
யமஹா எப்.இசட்.எஸ். எப்.ஐ. மெட்டாலிக் பிளாக், மெட்டாலிக் டீப் ரெட் மற்றும் சாலிட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. டி.எல்.எக்ஸ். வேரியண்டில் வித்தியாசமான கிராபிக்ஸ், டூயல்-டோன் சீட் வழங்கப்பட்டு இருக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான யமஹா மோட்டார் இந்தியா பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது. இந்த சலுகைகள் தமிழகத்தில் ஜனவரி 31, 2022 வரை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் யமஹா 125சிசி ஹைப்ரிட் ஸ்கூட்டர், 150சிசி எப்.இசட். மாடல் மற்றும் 155 சிசி ஆர்15 வி3 போன்ற மாடல்களுக்கு இந்த சலுகைகள் பொருந்தும்.

1. பசினோ 125 எப்.ஐ. ஹைப்ரிட் | ரேஇசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் | ரேஇசட்.ஆர். ஸ்ட்ரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட்: ரூ. 5,000/- கேஷ் பேக் சலுகை மற்றும் 0% வட்டி விகிதம்.
2. யமஹா எப்.இசட். 15: குறைந்த முன்பணம்- ரூ. 9,999/- அல்லது 9.25% வட்டி விகிதம்.
3. யமஹா ஆர்.15 வி3: குறைந்த முன்பணம் - ரூ 19,999/- அல்லது 10.99% வட்டி விகிதம்.
யமஹா நிறுவனம் இந்தியாவில் தற்போது ஆர்.15 வி4 (155சிசி), ஆர்15 வி3 (155சிசி), ஆர்15எஸ் வி3 (155சிசி), எம்.டி.-15 (155 சிசி), எப்.இசட். 25 (249சிசி), எப்.இசட்.எஸ். 25 (249சிசி), எப்.இசட்.எஸ். எப்.ஐ. (149சிசி), எப்.இசட். எப்.ஐ. (149சிசி), எப்.இசட். எக்ஸ். (149சிசி) போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
இத்துடன் ஏ.பி.எஸ். உடன், ஏரோக்ஸ் (155சிசி) ஏ.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. வசதியுடன் பசினோ 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி), ரே இசட்.ஆர். 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி), ஸ்ட்ரீட் ரேலி 125 எப்.ஐ. ஹைப்ரிட் (125சிசி) போன்ற ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் வினியோகம் பற்றிய புது தகவலை தெரிவித்துள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓலா எஸ்1 சீரிஸ் டிசம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட யூனிட்கள் அனைத்தும் வினியோகம் செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தார்.
'பெரும்பாலான யூனிட்கள் டெலிவரி மையங்களை சென்றடைந்துள்ளன. இவற்றுக்கான ஆர்.டி.ஓ. வழிமுறைகள் நடைபெற்று வருகின்றன. சில யூனிட்கள் வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன. வாகன பதிவிற்கான நேரம் ஏற்கனவே திட்டமிட்டதை விட தாமதமாகிவிட்டது,' என பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

மும்பை, பூனே, ஆமதாபாத் மற்றும் விசாகபட்டினம் போன்ற நகரங்களில் அடுத்த வாரம் முதல் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் துவங்குகிறது. இந்தியாவில் ஓலா ஸ்கூட்டர்களின் வினியோகம் டிசம்பர் 16 ஆம் தேதி துவங்கியது. முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்ய பெங்களூரு மற்றும் சென்னையில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 1.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்கிராம் 411 உற்பத்தி விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் உற்பத்திக்கு தயாரான நிலையில் சோதனை செய்யப்படுகிறது. ஹிமாலயன் மாடலை தழுவி உருவாகி இருக்கும் புதிய மோட்டார்சைக்கிள் ரோட்-சார்ந்த மாடல் ஆகும். இந்த மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களின் படி புதிய ஸ்கிராம் 411 மாடலில் டூயல் டோன் பியூவல் டேன்க் உள்ளது. இதன் ஹெட்லேம்ப் கவுல் கிரே நிறம் கொண்டிருக்கிறது. முன்புற இண்டிகேட்டர்கள் வேறு இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் டுவின் டையல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த மாடலின் சைடு பேனல்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய கிராப் ஹேண்டில், பின்புற மட்கார்டு மாடிபை செய்யப்பட்டு உள்ளது. முன்புறம் 18 இன்ச் அல்லது 19 இன்ச் அளவு சக்கரங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்கிராம் 411 மாடலிலும் ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்றே 411சிசி என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம் 411 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை ஹிமாலயன் மாடலை விட சற்றே குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நாடு முழுக்க ஹைப்பர்சார்ஜர்களை நிறுவும் பணிகளை துவங்கி இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களின் வினியோக பணிகளை சமீபத்தில் துவங்கியது. வினியோகம் துவங்கியதை தொடர்ந்து நாடு முழுக்க ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் அமைக்கும் பணிகளை ஓலா எலெக்ட்ரிக் தீவிரப்படுத்தி இருக்கிறது.
முதற்கட்டமாக நாட்டின் பெரும்பாலான நகரங்கலில், ஹைப்பர்சார்ஜர்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டிற்குள் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் மையங்களை நிறுவ ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. தற்போது நிறுவப்படும் ஹைப்பர்சார்ஜர்கள் 6 முதல் 8 வாரங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய சார்ஜிங் மையங்கள் குடியிருப்புகள் மற்றும் பி.பி.சி.எல். பெட்ரோல் பங்க்களில் நிறுவப்படுகிறது. சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பி.பி.சி.எல். நிறுவனத்துடனான கூட்டணியை முறைப்படுத்த இருக்கிறது. முதல் ஆறு மாதங்களுக்கு சார்ஜிங் மையங்கள் இலவசமாக செயல்பட இருக்கிறது. அதன்பின் படிப்படியாக கட்டணங்கள் வசூலிக்கப்பட இருக்கின்றன.
ஒகாயா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஒகாயா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒகாயா ஃபாஸ்ட் என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 2021 இ.வி. எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 89,999, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒகாயா ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும். முன்பதிவு ஒகாயா எலெக்ட்ரிக் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது.

ஒகாயா ஃபாஸ்ட் மாடலில் 4.4 கிலோவாட் லித்தியம் ஃபாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஒகாயா ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், பயன்பாட்டிற்கு ஏற்றவாரு இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வரை செல்லும்.
அம்சங்களை பொருத்தவரை ஒகாயா ஃபாஸ்ட் மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஒன் மோட்டோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பிரிட்டன் நாட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஒன் மோட்டோ இந்தியாவில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் எலெக்டா என அழைக்கப்படுகிறது. இ.வி. இந்தியா எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன் மோட்டோ எலெக்டா விலை ரூ. 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், வளைந்த ஃபூட்போர்டு செக்ஷன், அழகாக காட்சியளிக்கும் வட்ட வடிவ பாடி பேனல்கள் உள்ளன. தோற்றத்தில் இந்த மாடல் வெஸ்பா போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒன் மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து ஜியோ-பென்சிங், ப்ளூடூத், ஐ.ஓ.டி., மெயின்டனன்ஸ் அலெர்ட் மற்றும் கம்யூடிங் பிஹேவியர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 72வோல்ட் 45ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி நான்கு மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
ஒகினவா நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
ஒகினவா நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் ஒகினவா குறைந்த விலை மற்றும் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

ஒரு லட்சம் யூனிட்களில் 60 முதல் 70 சதவீத யூனிட்கள் ஐ பிரைஸ் பிளஸ் மற்றும் பிரைஸ் ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இரு ஸ்கூட்டர்களும் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டுள்ளன. இவை மணிக்கு அதிகபட்சம் 58 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் நாடு முழுக்க 400-க்கும் அதிக விற்பனை மையங்களில் கிடைக்கின்றன. இந்தியாவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 500 கோடி முதலீடு செய்ய ஒகினவா திட்டமிட்டுள்ளது. இதில் பாதி தொகை முதல் ஆண்டிலேயே முதலீடு செய்யப்படுகிறது.
யெஸ்டி பிராண்டின் ரோட்கிங் மாடல் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
யெஸ்டி நிறுவனம் சந்தையில் மீண்டும் களமிறங்குவதற்கான பணிகளை துவங்கியது. தற்போது ரோட்கிங் அட்வென்ச்சர் மாடல் ஜனவரி 13 ஆம் தேதி அறிமுகமாகும் என யெஸ்டி அறிவித்தது. முன்னதாக யெஸ்டி நிறுவன மோட்டார்சைக்கிள் படங்கள் இணையத்தில் வெளியாகின.
புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் ரோட்கிங் மாடலின் அதிநவீன வேரியண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஓவல் நிற பியூவல் டேன்க், நீண்ட முன்புற சஸ்பென்ஷன், 18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

யெஸ்டி ரோட்கிங் மாடலில் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 30.64 பி.ஹெச்.பி. திறன், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே என்ஜின் ஜாவா பெராக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
டி.வி.எஸ். நிறுவனம் அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலை விட அதிக திறன் கொண்டுள்ளது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. மாடலின் விலை ரூ. 1.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மாடலில் சற்றே அதிக செயல்திறன் வெளிப்படுத்தும் பெரிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் டி.வி.எஸ். ரேசிங் லோகோ, அலாய் வீல்களுக்கு மேட்ச் செய்யும் ரெட் நிற கிராப் ரெயில்கள் உள்ளன.

இதன் ஹார்டுவேர் அம்சங்கள் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள் உள்ளன.
புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. எடிஷன் மாடலில் 164.9 சி.சி. சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.93 பி.ஹெச்.பி. திறன், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பிரிவில் அதிக சக்திவாய்ந்த மாடலாக புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 165 ஆர்.பி. இருக்கிறது.
யெஸ்டி ரோட்கிங் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் அதன் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பிரபல யெஸ்டி பிராண்டை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் மறுசீரமைப்பு செய்கிறது. கிளாசிக் லெஜண்ட்ஸ் ஏற்கனவே ஜாவா மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. முன்னதாக யெஸ்டி பிராண்டு மாடல்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது இந்த மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய யெஸ்டி மோட்டார்சைக்கிள் ரோட்கிங் மாடலின் அதிநவீன வேரியண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. டீசர் வீடியோவில் புதிய யெஸ்டி மாடல் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடல் ஓவல் நிற பியூவல் டேன்க், நீண்ட முன்புற சஸ்பென்ஷன், 18 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

யெஸ்டி ரோட்கிங் மாடலில் 334சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 30.64 பி.ஹெச்.பி. திறன், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே என்ஜின் ஜாவா பெராக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்கள் ஆர் மற்றும் ஜி.டி. என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. ஆர் வேரியண்ட் விலை ரூ. 20.80 லட்சம் என்றும் ஜி.டி. வேரியண்ட் விலை ரூ. 21.40 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளில் புதிய கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் எடிஷன் மாடல் ரெட் ஹாப்பர் நிறத்தில் கிடைக்கிறது. பேஸ் நிறத்துடன் பிளை-ஸ்கிரீன், சைடு பேனல்கள், ரியர் பகுதி, ரேடியேட்டர் கவுல்கள், ஹெட்லேம்ப் கவுல்களில் சபையர் பிளாக் நிறம் பூசப்பட்டுள்ளது.

டிரையம்ப் ராக்கெட் 3 221 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் 2458சிசி, இன்-லைன், 3 சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 165 பி.ஹெச்.பி. திறன், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஷோவா 47 எம்.எம். அப்சைடு-டவுன் முன்புற போர்க், ஷோவா ரியர் மோனோ-ஷாக், முன்புறம் இரண்டு டிஸ்க், பின்புறம் ஒற்றை ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இனெர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட், கார்னெரிங் ஏ.பி.எஸ்., கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல், 4 ரைடிங் மோட்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் கீலெஸ் இக்னிஷன் வழங்கப்படுகிறது.






