என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
X
மணிக்கு 100 கி.மீ. வேகம், 150 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
Byமாலை மலர்28 Dec 2021 6:11 AM GMT (Updated: 28 Dec 2021 6:11 AM GMT)
ஒன் மோட்டோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பிரிட்டன் நாட்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஒன் மோட்டோ இந்தியாவில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் எலெக்டா என அழைக்கப்படுகிறது. இ.வி. இந்தியா எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன் மோட்டோ எலெக்டா விலை ரூ. 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், வளைந்த ஃபூட்போர்டு செக்ஷன், அழகாக காட்சியளிக்கும் வட்ட வடிவ பாடி பேனல்கள் உள்ளன. தோற்றத்தில் இந்த மாடல் வெஸ்பா போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒன் மோட்டோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து ஜியோ-பென்சிங், ப்ளூடூத், ஐ.ஓ.டி., மெயின்டனன்ஸ் அலெர்ட் மற்றும் கம்யூடிங் பிஹேவியர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் 72வோல்ட் 45ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி நான்கு மணி நேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும். முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X