என் மலர்
பைக்
- ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மீடியோர் 650 விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிடில் வெயிட் குரூயிசர், சூப்பர் மீடியோர் 650 மாடல் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற்று வரும் 2022 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 போன்ற மாடல்களை போன்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சூப்பர் மீடியோர் 650 மாடல் 1500mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதன் டிசைன் மீடியோர் 350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வித வேரியண்ட்களில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் ஐந்து நிறங்களிலும், டூரர் மாடல் இரண்டு வித நிறங்களிலும் கிடைக்கிறது.

இத்துடன் டூரர் மாடலில் ஏராளமான சவுகரிய வசதிகள், உயரமான விண்ட்-ஸ்கிரீன், பில்லியன் பேக்ரெஸ்ட், டூயல் சீட்கள், பேனியர்கள், டூரிங் ஹேண்டில்பார் மற்றும் பெரிய பூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலிலும் 648சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.2 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலில் 19-16 இன்ச் அலாய் வீல்கள், 43mm அப்சைடு-டவுன் போர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320mm டிஸ்க், பின்புறத்தில் 300mm ரோடோடார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 சீரிசில் மூன்று ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழ் நாட்டின் கிருஷ்னகிரி மாவட்டத்தில் உள்ள பியூச்சர்பேக்டரி ஆலையில் இருந்து 1 லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வந்தது.
தற்போது ஒரு லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய பாதி நேரமோ போதுமானது என ஒலா எலெக்ட்ரிக் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் இதற்கு காரணம் ஆகும்.

பண்டிகை காலக்கட்டத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அக்டோபர் 2022 மாதத்தில் மட்டும் ஒலா எலெக்ட்ரிக் வாகன விற்பனை 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர விற்பனை 60 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
மேலும் இந்தியாவில் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், ஒலா S1 ஏர் பெயரில் புது ஸ்கூட்டரை ஒலா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்து இருக்கிறது. ஒலா S1 சீரிசில் புது வேரியண்டாக இது அமைந்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. வினியோகம் ஏப்ரல் 2023 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய CB500F மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- வெளியீட்டுக்கு முன் ஹோண்டா CB500F மோட்டார்சைக்கிள் பெங்களூரு பிங்விங் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் புதிய CB500F மோட்டார்சைக்கிளை பெங்களூருவில் உள்ள பிங்விங் விற்பனை மையத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறது. மோட்டார்சைக்கிள் அறிமுகமாகும் முன் அதனை விற்பனையகத்தில் காட்சிப்படுத்துவது ஹோண்டா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும்.
புதிய மோட்டார்சைக்கிளை பார்க்க வருமாறு விற்பனையகம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் புதிய மோட்டார்சைக்கிளுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து வெளியீடு நடைபெற இருக்கிறது.

ஹோண்டா CB500F மாடலில் 471சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஸ்லிப்ட் மற்றும் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ஹார்டுவேரை பொருத்தவரை ஹோண்டா CB500F மாடலில் முன்புறம் 41 மில்லிமீட்டர் ஷோவா செபரேட் பன்ஷன் போர்க் பிக் பிஸ்டன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
Photo Courtesy: TeamBHP
- ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- புதிய மோட்டார்சைக்கிளுக்கான வெளியீட்டு தேதி அடங்கிய டீசரை ராயல் என்பீல்டு வெளியிட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது மோட்டார்சைக்கிள் டீசர் வெளியாகி இருக்கிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை இத்தாலியில் நடைபெற இருக்கும் 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
EICMA நிகழ்வில் அறிமுகமாகும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒற்றை பெரிய மோட்டார்சைக்கிள் இது ஆகும். இதே நிகழ்வில் ராயல் என்பீல்டு நிறுவனம் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 650சிசி பிரிவில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்யும் முதல் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.

புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் இதுவரை எந்த மாடலும் அறிமுகம் செய்யப்படாத பெரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 650சிசி பிரிவில் இண்டர்செப்டார் 650 மாடல் அதன் விலை மூலம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதே போன்ற வரவேற்பு சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 விலை இண்டர்செப்டார் 650 மாடலை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் 2022 ரைடர் மேனியா நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 2022 ரைடர் மேனியா நிகழ்வு நவம்பர் 18 முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்கள் புதிய பைக்கை நேரில் பார்ப்பதோடு, அதனை தொட்டு அனுபவிக்க முடியும்.
Photo Courtesy: Bikewale
- யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புளூ ஸ்கொயர் பெயரில் பிரத்யேக விற்பனை மையங்களை கட்டமைத்து வருகிறது.
- நாடு முழுக்க யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் மூலம் சர்வதேச மாடல்களை விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.
இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்துள்ளது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட்வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டு வரவும் யமஹா திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் என யமஹா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், யமஹா டெனர் 700 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒற்றை களமாக புளூ ஸ்கொயர் விற்பனை மையம் துவங்கப்பட்டது. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏவுடன் வாடிக்கையாளர்கள் இணையும் நோக்கில் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. யமஹா உருவாக்கி இருக்கும் புளூ ஸ்டிரீக்ஸ் ரைடர் குழுவில் வாடிக்கையாளர்கள் இணையவும் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் பாலமாக செயல்படுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு புளு ஸ்கொயர் விற்பனையகமும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்- யமஹா YZF R15M, யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் யமஹாவின் சர்வதேச மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹயபுசா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- புது லிமிடெட் எடிஷன் ஹயபுசா மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
சுசுகி நிறுவனம் ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் "Bol d'Or " என அழைக்கப்படுகிறது. ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் ஹயபுசாவின் பாரம்பரிய அம்சங்களுடன் புதிய பெயிண்ட் மற்றும் விசேஷ ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஃபிளாட் சேடில், ரியர் சீட் கௌல், முன்புற பிரேக் மற்றும் கிளட்ச் லீவர் அப்கிரேடு, சிறிய டெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் 1340 சிசி லிக்விட் கூல்டு இன்-லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அக்ரபோவிக் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் என்ஜின் கிரான்க்-கேஸ் தற்போது கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி ஹயபுசா "Bol d'Or" எடிஷன் மொத்தத்தில் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. இது பிரான்ஸ் நாட்டு சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சுசுகி ஹயபுசா Bol d'Or லிமிடெட் எடிஷன் விலை 27 ஆயிரத்து 499 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் சுசுகி ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலை லிமிடெட் எடிஷன் விலை அதிகம் ஆகும். இந்தியாவில் சுசுகி ஹயபுசா மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- 2023 டுகாட்டி டயவெல் V4 மோட்டார்சைக்கிளில் கிராண்டூரிஸ்மோ 1158சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய டயவெல் V4 மாடலின் ஒட்டு மொத்த எடை 223 கிலோ ஆகும்.
டுகாட்டி நிறுவனம் புதிய டயவெல் V4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டயவெல் V4 மாடலில் ஏர் இண்டேக், எல்இடி லைட்டிங், குவாட்ருபில் மெஷின் கன் டெயில் பைப் எக்சாஸ்ட், V4 கிராண்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள 1158சிசி V4 என்ஜின் 166 ஹெச்பி பவர், 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 2023 டுகாட்டி டயவெல் V4 மாடல் எடை குறைவாகவும், அதிக கச்சிதமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பராமரிப்பை பொருத்தவரை "பிக்" சர்வீஸ் செய்வதற்கான இடைவெளி 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள டி-ஆக்டிவேஷன் சிஸ்டம் என்ஜினில் உள்ள சிலிண்டர்களை பயன்பாட்டுக்கு ஏற்ப பயன்படுத்துகிறது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை டுகாட்டி டயவெல் V4 மாடலில் இன்வர்ட் செய்யப்பட்ட 50mm போர்க்குகள், கன்டிலிவர் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சஸ்பென்ஷனையும் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர்கள், முன்புறம் 330mm ட்வின் டிஸ்க் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 2023 டுகாட்டி டயவெல் V4 மாடலில்- ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்று விதமான டிரைவிங் மோட்கள் உள்ளன. இத்துடன் டுகாட்டி டிராக்ஷன், ஏபிஎஸ் கார்னெரிங் மற்றும் டுகாட்டி வீலி கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
- யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடல் ஐரோப்பா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய 2023 மாடலில் ஏராளமான புது அம்சங்கள், டிசைன் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
யமஹா நிறுவனத்தின் எக்ஸ்மேக்ஸ் மேக்சி ஸ்கூட்டர்கள் ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐரோப்பாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை யமஹா விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எக்ஸ்மேக்ஸ் மாடல்களில் புது அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
2023 யமஹா எக்ஸ்மேக்ஸ் மாடல்கள் ஏராளமான மாற்றங்களுடன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த 300சிசி மாடல் தற்போது ஸ்டாண்டர்டு மற்றும் டெக் மேக்ஸ் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 4.2 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, 3.2 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் டிஎப்டி யூனிட் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும். வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் யமஹா மைரைடு செயலி மூலம் மோட்டார்சைக்கிளை கனெக்ட் செய்து கொள்ள வேண்டும். இது மியூசிக் கண்ட்ரோல் வசதியையும் கொண்டுள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் எல்சிடி டேஷ் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்கூட்டரின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 292சிசி,சிங்கில் சிலிண்டர் என்ஜின், CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27.6 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டூயல் ஸ்ப்ரிங்குகள், இருபுறமும் சிங்கில் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவது கேள்விக்குறியான விஷயம் தான்.
- ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக 650சிசி மோட்டார்சைக்கிளை நீண்ட காலமாக சோதனை செய்து வருகிறது.
- இந்த மோட்டார்சைக்கிள் முதலில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகி அதன்பின் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் இந்தியாவில் ரைடர் மேனியா 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டு வரும் குரூயிசர் மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இண்டர்செப்டார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 650சிசி பிரிவில் புது மாடலை அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து நவம்பர் 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 2022 ரைடர் மேனியா நிகழ்வில் சூப்பர் மீடியோர் 650 மாடல் அறிமுகம் செய்யப்படலாம். கிளாசிக் 500 மற்றும் புல்லட் 500 பயன்படுத்துவோர் இந்த மாடலுக்காக காத்திருக்கின்றனர்.
அதிக செயல்திறன் மற்றும் இருக்கை அமைப்பு காரணமாக இண்டர்செப்டார் 650 இந்த வாடிக்கையாளர்களுக்கு கச்சிதமான மாடலாக அமையவில்லை. இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் சூப்பர் மீடியோர் 650 பதில் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் ஃபூட் பெக்-கள் முன்புறமாக அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய சூப்பர் மீடியோர் 650 விலை இண்டர்செப்டார் மாடலை விட ரூ. 20 ஆயிரம் வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 விலை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: Bikewale
- கேடிஎம் நிறுவனத்தின் புதிய 2023 RC 8C மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- இது லிமிடெட் எடிஷன் டிராக் சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும்.
கேடிஎம் நிறுவனம் 2023 RC 8C லிமிடெட் எடிஷன் டிராக்-ஒன்லி சூப்பர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களை பெற்று இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடல் முற்றிலும் புதிய நிறம், ஏரோ பேக்கேஜில் மாற்றம், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், உயர் ரக உபகரணங்களை கொண்டிருக்கிறது.
செயல்திறனை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடல் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய மாட்கள், குறைந்த எடை கொண்ட டைட்டானியம் வால்வுகள், காண்ராட், இரு பிஸ்டன் ரிங், அதிக கம்ப்ரெஷன் ரேட், பெரிய திராட்டில் பாடி, போல்ஸ்டர் செய்யப்பட்ட பியூவல் பம்ப் / பிரெஷர் காரணமாக இந்த மாடலின் திறன் 6.9 ஹெச்பி வரை அதிகரித்து இருக்கிறது.

மேலும் இந்த மோட்டார்சைக்கிளின் கிளட்ச் பிரீலோடு அதிகரிக்கப்பட்டு, டாப் பேலன்சர் நீக்கப்பட்டு, கிரான்க்-கேஸ் பேலன்சர் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு இருப்பதாக கேடிஎம் தெரிவித்து உள்ளது. மேலும் இதன் தெர்மல் ஸ்டேபிலிட்டியை உறுதிப்படுத்த PANK ஆயில் கூலர் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 கேடிஎம் RC 8C மாடலின் ஒட்டுமொத்த எடை 142 கிலோ ஆகும். இதில் உள்ள முற்றிலும் புது டைட்டானியம் அக்ரபோவிக் எக்சாஸ்ட் சிஸ்டம் எடை குறைய உதவுகிறது.
புதிய லிமிடெட் எடிஷன் RC 8C மாடலின் டிராக்ஷன் கண்ட்ரோல், மேப்பிங் மற்றும் என்ஜின் பிரேக்கிங் உள்ளிட்டவைகளை ரைடர்கள் கஸ்டமைஸ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராட்டில் ரெஸ்பான்ஸ், பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர், RCS 19 கோர்சா கோர்சா மாஸ்டர் சிலிண்டர் உள்ளிட்டவைகளில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் காக்பிட் பகுதியில் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ் டேட்டா லாகர், கேடிஎம் RC16 சார்ந்து உருவாக்கப்பட்ட ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் உள்ளன. 2023 கேடிஎம் RC 8C மாடல் மொத்தத்தில் 200 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இவை ஒவ்வொன்றின் ட்ரிபில் கிளாம்பில் பிரத்யேக சீரியல் நம்பர் இடம்பெற்று இருக்கும்.
- ராயல் என்பீல்டு நிறுவனம் சில மாதங்களுக்கு முன் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
- புதிய ஹண்டர் 350 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஆகும்.
ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் புதிய ஹண்டர் 350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஹண்டர் 350 மாடல் குறைந்த விலையில் எண்ட்ரி லெவல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஹண்டர் 350 மாடல் விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் ராயல் என்பீல்டு நிறுவனம் 17 ஆயிரத்து 118 ஹண்டர் 350 யூனிட்களை விற்பனை செய்ததாக அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையானதை விட குறைவு ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் 18 ஆயிரத்து 197 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

செப்டம்பரில் ஹோண்டா சிபி350 மாடல் மொத்தத்தில் 3 ஆயிரத்து 980 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆயிரத்து 714 யூனிட்கள் விற்பனையானது. விற்பனையில் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட ஹண்டர் 350 மற்றும் சிபி350 விலை காரணமாக இருக்கலாம். இந்தியாவில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மாடல் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது.
ஹோண்டா சிபி350 விலை ரூ. 2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை மட்டுமின்றி விற்பனை விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் உள்ளிட்டவையும் ராயல் என்பீல்டு விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும். ஹோண்டா தனது சிபி350 மோட்டார்சைக்கிளை பிங்விங் விற்பனை மையங்களிலேயே விற்பனை செய்து வருகிறது.
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் குறைந்த விலையில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
- அறிமுக சலுகையாக இந்த ஸ்கூட்டர் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் களமிறங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஒலா S1 ஏர் மாடல் வெளியீட்டின் போது தெரியவந்துள்ளது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என ஒலா எலெக்ட்ரிக் நம்புகிறது. இந்த பிரிவில் தற்போதைய சூழலில் அதிக நிறுவனங்கள் களத்தில் போட்டியிடவில்லை.
மேலும் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் தன்னை கவரவில்லை என ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
புதிய எலெக்ட்ரிக் வாகனம் சிறப்பானதாக இருக்க ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் முற்றிலும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்கள் பிரிவிலும் ஒலா எலெக்ட்ரிக் கவனம் செலுத்த உள்ளது. இதற்கான டீசர்களை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு வருகிறது.






