தொழில்நுட்பம்

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கிய காரணம் அது கிடையாது - ஃபேஸ்புக் விளக்கம்

Published On 2019-03-14 06:56 GMT   |   Update On 2019-03-14 06:56 GMT
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளின் சேவை முடங்கியதற்கான காரணம் அது கிடையாது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook



வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்று்ம மெசஞ்சர் சேவை நேற்றிரவு சில மணி நேரங்களுக்கு முடங்கியது. இந்நிலையில், சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் குறுந்தகவல் அனுப்புவதில் பயனர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதே போன்று ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவைக்கும் தடங்கல் ஏற்பட்டது. பயனர்கள் சேவை முடக்கம் பற்றி வலைதளங்களில் தெரிவிக்க துவங்கினர்.



இதற்கு ஃபேஸ்புக் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் நிறுவன செயலிகளில் சிலவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இந்த பிரச்சனையை மிக விரைவில் சரி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் சேவை முடங்கியதிற்கு டிஸ்ட்ரிபியூட்டெட் டினையல் ஆஃப் சர்வீஸ் (DDoS) சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பிரச்சனையை விரைவில் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம். சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என எண்ணியவர்களுக்காக ஃபேஸ்புக் தகவல் வழங்கியிருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகள் சீராக வேலை செய்தாலும், போஸ்ட்களை அப்லோடு செய்வதில் சில பயனர்கள் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர். பிரபல சமூக வலைதளங்களின் சேவை முடங்கியதை தொடர்ந்து பயனர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களது பிரச்சனைகளை பதிவிட்டனர்.
Tags:    

Similar News