உலகம்
சண்டை நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல் - டிரம்ப் தகவல்
- இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
- இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியா -பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இரவு முழுவதும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
----------------------------------------------