உலகம்

வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்.. ஈரான் நோக்கி செல்லும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை - டிரம்ப் எச்சரிக்கை

Published On 2026-01-28 23:55 IST   |   Update On 2026-01-28 23:55:00 IST
  • வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது.
  • "ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையில் நகர்கிறது.

ஈரான் அரசு அணுசக்தி விவகாரத்தில் புதிய ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால், மிகக் கடுமையான ராணுவத் தாக்குதலைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் வலைதள பதிவில், "வெனிசுலாவில் பணி முடிந்தது போல் ஈரானிலும் விரைவாகச் செயல்பட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது. 

நேரம் கடந்து கொண்டிருக்கிறது. அணு ஆயுதங்களைத் தவிர்த்து, அனைவருக்கும் நன்மை பயக்கும் நியாயமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர வேண்டும். இல்லையெனில் அடுத்த தாக்குதல் மிகவும் மோசமானதாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டு அதிபர் மதுரோவை கைது செய்ய அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈடுபட்டதை விட பெரிய அளவிலான அமெரிக்க கடற்படை பிரிவான அர்மடா,  தற்போது ஈரான் நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"ஆபிரகாம் லிங்கன்" என்ற பெயர் கொண்ட பிரம்மாண்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் தலைமையிலான இந்தக் கடற்படை, மிகுந்த வலிமையுடனும் வேகத்துடனும் ஈரானை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த மாதம் ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்கா நடத்திய 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' (O மூலம் ஏற்பட்ட அழிவையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Tags:    

Similar News