தமிழ்நாடு செய்திகள்

ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்..!- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2025-06-16 21:59 IST   |   Update On 2025-06-16 21:59:00 IST
  • வருகிற ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர்," மக்களின் குறைகளை போக்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். 10,000 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

மக்களின் குறைகளை தீர்க்க, அரசு சேவைகளை பெற ஜூலை 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News