தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா?- அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி

Published On 2025-06-06 12:04 IST   |   Update On 2025-06-06 12:04:00 IST
  • பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.
  • ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

திருச்சி:

திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

மேட்டூர் அணை வருகிற 12-ந்தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக ரூ. 80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பாசனத்திற்கு ஏதுவாக தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சம்பா பயிர் நடவு செய்யும் பொழுது அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள் படிப்படியாக தூர்வாரப்படும்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளதற்கு நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை தான் முடிவெடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

Tags:    

Similar News