தமிழ்நாடு செய்திகள்
செங்கோட்டையன் விவகாரம்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி செல்கிறார் இபிஎஸ்
- அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
- வரும் 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். மேலும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை ஒட்டி வரும் 17,18 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.