தமிழ்நாடு செய்திகள்
கீழடி அகழாய்வுக்கு அ.தி.மு.க. தான் காரணம்- எடப்பாடி பழனிசாமி
- ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.
- ஆங்கிலத்தை விட தாய்மொழிதான் முக்கியம் என்பதைத்தான் அமித்ஷா அவ்வாறு கூறியுள்ளார்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை, அந்த அடிப்படையில் மதுரை பா.ஜ.க. முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள்.
* கீழடி அகழாய்வுக்கு அ.தி.மு.க. தான் காரணம். அகழாய்வுக்கு ஜெயலலிதா இருக்கும்போது எடுத்த நடவடிக்கை, அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து நேற்றே விளக்கம் அளித்துள்ளோம்.
* தி.மு.க. ஐடி விங் வெளியிட்ட கேலிச்சித்திரம் குறித்த கேள்விக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர்.
* ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என அமித்ஷா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.
* ஆங்கிலத்தை விட தாய்மொழிதான் முக்கியம் என்பதைத்தான் அமித்ஷா அவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.