தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
- பரமக்குடி நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* தண்ணீர் இல்லாத காடு என கூறப்பட்ட ராமநாதபுரத்தை மாற்றி காட்டியது தி.மு.க. அரசு.
* இரண்டே ஆண்டுகளில் ராமநாதபுரம் மக்களின் குடிநீர் தேவையை தி.மு.க. அரசு நிறைவேற்றியது.
* விரிவுபடுத்தப்பட்ட குடிநீர் திட்டம் வரும் டிசம்பர் மாதம் நிறைவு பெறுகிறது.
* ராமநாதபுரத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,105 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் வழங்கப்படுகிறது.
* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு சேதுபதி நகர் என பெயர் சூட்டியவர் கலைஞர்.
* 500 கி.மீ. கிராம சாலையை நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தியவர் கலைஞர் கருணாநிதி.
* ராமநாதபுரத்தில் 5000 சுனாமி குடியிருப்புகள் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டன.
* ஒவ்வொருவரின் தேவையையும் கனவையும் நிறைவேற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் 2.36 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது.
* 16 முக்கிய கண்மாய்கள் ரூ.18 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும், 6 கண்மாய்கள் ரூ.4 கோடியில் மறுசீரமைக்கப்படும்.
* ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம், நவீன வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும்.
* ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
* பரமக்குடி நகராட்சிக்கு புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும்.
* பரமக்குடி நகராட்சியில் ரூ.4 கோடியில் புதிய கட்டிடம், ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
* செல்வானூர் கண்மாய், சிக்கல் கண்மாய்களும் மறு சீரமைக்கப்படும்.
* கமுதியில் ரூ.1 கோடி மதிப்பில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும்.
* மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை.
* கச்சத்தீவை மீட்க இலங்கை அரசுக்கு கோரிக்கை வைக்க கூட மத்திய அரசு மறுக்கிறது.
* மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நமது மீனவர்களை காக்க எதுவும் செய்யவில்லை.
* கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் சொல்கிறார், அதை மறுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பேசவில்லை.
* நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சணை, பள்ளிக்கல்வித்திட்டத்திற்கும் நிதி தரமாட்டார்கள், பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும்.
* தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே மத்திய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
* தமிழகத்தில் இயற்கை பேரிடர் தாக்கிய போது தமிழகத்திற்கு வராத மத்திய நிதி அமைச்சர்.
* பெருந்தலைவர் காமராஜரை கொல்ல ஆர்.எஸ்.எஸ் முயன்றது.
* தவறு செய்தவர்கள் அனைவரும் தவறில் இருந்து தப்பிக்க பா.ஜ.க.வுடன் சேருகின்றனர்.
* கூட்டணியில் ஆள் சேர்க்கும் அசைன்மென்டை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.