தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி விஜய் படத்துடன் பேனர் - புகைப்படங்கள் வைரல்

Published On 2025-10-11 07:52 IST   |   Update On 2025-10-11 07:52:00 IST
  • சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
  • சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சோளிபாளையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசார கூட்டம் நடந்த இடத்தில் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி பல்வேறு கோஷங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. சோளிபாளையம் மீனாநகர் அருகே ஒரு இடத்தில் 2 பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அதில் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி 2 கைகளையும் சேர்த்து வணக்கம் கூறும் படமும், இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்து இன்னொரு கையை 'ஹாய்' என காட்டும் படமும் அச்சிடப்பட்டு இருந்தது.

2 பேனர்களிலும் விஜய் ரசிகர்கள்-தமிழக வெற்றி கழகம் மொடக்குறிச்சி தொகுதி என குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், பிளக்ஸ் வைக்கப்பட்டு இருந்த தகவல் அறிந்து அங்கு வந்த தமிழக வெற்றிக்கழகம் கட்சி நிர்வாகிகளிடம் பேனர் குறித்து கேட்டபோது, நாங்கள் வைக்கவில்லை என்று கூறினார்கள். இதேபோல் கூட்டத்திலும் சிலர் த.வெ.க. கொடிகளை கைகளில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News