தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: காசோலையை வழங்கினார் அமைச்சர் பெரியகருப்பன்

Published On 2025-08-08 20:41 IST   |   Update On 2025-08-08 20:41:00 IST
  • காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
  • அஜித்குமார் குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது

அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த நிகிதா என்ற பெண் காரில் வைத்திருந்த நகை மாயமான புகாரில் அங்கு பணியாற்றிய காவலாளி அஜித்குமார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா ஆகிய ஐந்து பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அஜித்குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவு படி நிவாரண நிதியாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

ஏற்கனவே அஜித்குமார் குடும்பத்திற்கு எஸ்.சி., எஸ்.டி ஆணையம் சார்பில் ரூ.7.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News