தமிழ்நாடு

திமுக அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-02-20 09:46 GMT   |   Update On 2024-02-20 09:46 GMT
  • 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
  • நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.

* 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

* டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

* உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கிறது பாஜக அரசு.

* உழவர்களின் மேன்மைக்கு திட்டங்களை தீட்டுகிறது திமுக அரசு.

* உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.

* உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்.

* பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

* கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம்.

* உழவர்கள் மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில்துறையை போல் அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களில் இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம்.

* மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News