அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர்- கவிஞர் வைரமுத்து
- முதலமைச்சரைச் சந்தித்துப் பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்.
- இடப் பங்கீட்டில் அவரது கனிவும் சூழ்நிலையின் கறார்த்தனமும் தெளிவாய்த் தெரிந்தன.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முதலமைச்சரைச் சந்தித்துப்
பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்
சிறிதுநேரம்
தனிமையில் உரையாடினோம்
நிமிடமுள்ளின்
நிதானத்தில் பேசினார்
இடப் பங்கீட்டில்
அவரது கனிவும்
சூழ்நிலையின் கறார்த்தனமும்
தெளிவாய்த் தெரிந்தன
புயல் நடுவில்
புல்லாங்குழல்
ஓர் அபூர்வம்
அபூர்வங்களுள் ஒருவர்
முதல்வர்
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சரைச் சந்தித்துப்
— வைரமுத்து (@Vairamuthu) March 2, 2024
பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்
சிறிதுநேரம்
தனிமையில் உரையாடினோம்
நிமிடமுள்ளின்
நிதானத்தில் பேசினார்
இடப் பங்கீட்டில்
அவரது கனிவும்
சூழ்நிலையின் கறார்த்தனமும்
தெளிவாய்த் தெரிந்தன
புயல் நடுவில்
புல்லாங்குழல்
ஓர் அபூர்வம்
அபூர்வங்களுள் ஒருவர்
முதல்வர் pic.twitter.com/BeHFuLBudV