தமிழ்நாடு

ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

Published On 2023-12-13 11:16 GMT   |   Update On 2023-12-13 11:19 GMT
  • எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47-ஆக உயர்வு.
  • கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

சென்னை:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வானது வருகிற 18-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

* பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38-ஆக உயர்வு.

* எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47-ஆக உயர்வு.

* கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News