தமிழ்நாடு

மாணவியை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தாயின் கள்ளக்காதலன் மீது வழக்கு

Published On 2023-05-23 07:01 GMT   |   Update On 2023-05-23 07:01 GMT
  • பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
  • சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார்.

கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவியின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. எனவே அவருக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாணவியின் தாய்க்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (வயது35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் தனது கணவரை பிரிந்தார். அவர் தனது மகள் மற்றும் மகனை தனது தாய் வீட்டில் விட்டார். பின்னர் அவர் வேட்டைக்காரன் புதூரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அப்போது சுரேஷ் அடிக்கடி அங்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது தாயின் கள்ளக்காதலன் அங்கு சென்றார்.

அவர் கதவை சாத்தி தாழிட்டார். பின்னர் அவர் மாணவியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக்கினார். தொடர்ந்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக கூலித்தொழிலாளி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

தனது தாய் வேலை முடிந்து வந்ததும் நடந்த சம்பவங்களை மாணவி அவரது தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் 11-ம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News