தமிழ்நாடு செய்திகள்

ராஜமாதாவாக இருக்க வேண்டிய சசிகலா... நம்பிக்கை துரோகி யார்?

Published On 2023-12-27 10:56 IST   |   Update On 2023-12-27 11:06:00 IST
  • என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக்கடனுடன் இருப்பேன்.
  • பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.

ல்லடம்:

பல்லடம் அருகே திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித்துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

கொங்கு மண்டல அதிமுக கோட்டையை மீட்கவே இந்த கூட்டம். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்காக உருவாக்கினார். தொண்டர்களின் உரிமையை காக்கும் இயக்குமாக இருக்க வேண்டும் என்று, பல்வேறு சட்ட விதிகளை அவருடைய காலத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தினார். மிட்டா, மிராசுதாரர்கள் தான் பதவிக்கு வர முடியும். இனி தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் தான் அந்த பதவிக்கு வரமுடியும். ஜெயலலிதா 2 முறையும், சசிகலா 1 முறையும் என்னை முதலமைச்சர் ஆக்கினார்கள். சசிகலா பாவம். இன்றைக்கு சின்ன குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துகொண்டிருக்கிறார். ராஜமாதாவாக இருக்க வேண்டிய சசிகலா, இந்த நிலைமைக்கு ஆளாக்கிய நம்பிக்கை துரோகி யார்? என்னோடு பயணிப்பவர்களுக்கு காலமெல்லாம் நன்றிக்கடனுடன் இருப்பேன். ஒன்றரை கோடி தொண்டர்களை, இரண்டரை கோடி தொண்டர்களாக மாற்றுவோம்.



இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

பழனிசாமி நடத்திய பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களால், அவர்களுக்கும் எந்த பயனும் கிடையாது. மக்களுக்கும் பயன் கிடையாது. 10 ஆண்டு காலம் இந்தியாவை வலிமையாக மாற்றியுள்ள பிரதமர் மோடிக்கு ஆதரவு தருவது தான் எங்கள் நிலைப்பாடு. கழகத்தின் சட்ட விதிகள் காற்றில் பறந்துள்ளன. ஜன.19-ம் தேதி வரும் நீதிமன்றத்தீர்ப்பு, முக்கியமானதாக இருக்கும். அதன் மூலம் பழனிசாமிக்கு ஒரு முடிவு வரும். மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் முக்கியமானதாக கருதுகிறோம். நானும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். பொதுவாழ்வில் இருக்கும் அமைச்சர் உதயநிதி பொறுப்பாக பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News