செய்திகள்
ஸ்டாலின், ராகுல் இருவரும் ஆட்சிக்கு வர முடியாது- தமிழிசை பேட்டி
திமுக தலைவர் ஸ்டாலினால் தமிழக முதல்வராக முடியாது, அவர் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியாலும் பிரதமராக முடியாது என பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #LokSabhaElections2019
கோவில்பட்டி:
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு பரிசீலனையின்போது, தமிழிசையின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் தமிழிசையின் மனு ஏற்கப்பட்டது.
பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலினால் முதல்வராக முடியாது, அவர் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியாலும் பிரதமராக முடியாது எனவும் தமிழிசை கூறினார். #TamilisaiSoundararajan #LokSabhaElections2019
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். வேட்பு மனு பரிசீலனையின்போது, தமிழிசையின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் தமிழிசையின் மனு ஏற்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக வேட்பாளர் கனிமொழி பொய்யான தகவல்களை கூறி பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார். ஸ்டாலினால் முதல்வராக முடியாது, அவர் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியாலும் பிரதமராக முடியாது எனவும் தமிழிசை கூறினார். #TamilisaiSoundararajan #LokSabhaElections2019