விளையாட்டு

IPL 2025: நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட லக்னோ வீரர் திக்வேஷ் ரதிக்கு அபராதம்

Published On 2025-04-02 09:18 IST   |   Update On 2025-04-02 09:18:00 IST
  • பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
  • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஐபிஎல் 2025 தொடரின் 13-ஆவது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனிடையே, பஞ்சாப் அணி தொடக்கவீரர் பிரியன்ஸ் ஆர்யா 8 ரன்கள் அடித்திருந்தபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தனது கைகளில் எழுதுவது போன்ற 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், பிரியன்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை வீழ்த்தியதை வித்தியாசமாக கொண்டாடிய திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25% அபராதமும் 1 டிமெரிட் பள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 4 - 7 டிமெரிட் புள்ளிகள் பெற்றப்பட்டால் ஒரு போட்டியில் அந்த வீரர் விளையாட முடியாது என்பது விதிமுறையாகும்.



Tags:    

Similar News