விளையாட்டு

பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ்: முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி

Published On 2025-12-18 00:17 IST   |   Update On 2025-12-18 00:18:00 IST
  • சீனாவில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.
  • ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

பீஜிங்:

சீனாவின் ஹாங்சு நகரில் பாட்மிண்டன் வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடர் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் தரவரிசையில் உலகின் 'டாப்-8' ஜோடி இதில் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.

இந்தியா சார்பில் ஆண்கள் இரட்டையரில் உலகத் தரவரிசையில் நம்பர்-3 ஆக உள்ள சாத்வித் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி பங்கேற்கிறது.

இந்நிலையில், பி பிரிவில் இடம்பெற்ற இந்திய ஜோடி நேற்று தனது முதல் போட்டியில் 6-வது இடத்திலுள்ள சீனாவின் லியாங் வெய் - வாங் சங் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 12-21 என இழந்தது. இரண்டாவது செட்டை நீண்ட போராட்டத்துக்கு பிறகு 22-20 என கைப்பற்றியது. வெற்றியாளரை முடிவுசெய்ய நடந்த 3-வது செட்டை இந்திய ஜோடி 21-14 என தன்வசப்படுத்தியது.

Tags:    

Similar News