ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: களத்தில் மோதல் இருந்தாலும் மனதில் மோதலில்லை.. அன்பை வெளிக்காட்டிய MI - RCB வீரர்கள்

Published On 2025-04-08 15:47 IST   |   Update On 2025-04-08 15:47:00 IST
  • ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும் போது கோலியிடம் சீண்டியதும் ரசிகர்களை கவர்ந்தது.
  • ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா இடையே நடந்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. பரபரப்பாக சென்ற போட்டிக்கு மத்தியில் வீரர்களிடையே சில சேட்டைகளும் அன்புமும் வெளிப்பட்டது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலியை பும்ரா ரன் அவுட் அடிக்க முயற்சி செய்த போது அவர்களிடையே சேட்டை கலந்த அன்பு வெளிப்பட்டது.

அதனை தொடர்ந்து விராட் கோலி பேட்டிங் செய்த போது களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சூர்யகுமார் அவர் மீது தோளில் கைபோட்டு புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது போலவும், ஹர்திக் பாண்ட்யா பந்து வீசும் போது கோலியிடம் சீண்டியதும் ரசிகர்களை கவர்ந்தது.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஹர்திக் பாண்ட்யா விளையாடி கொண்டிருப்பார். அப்போது அவரது சகோதரர் குர்ணால் பாண்ட்யா பந்து வீசவார். அந்த ஓவரில் ஹர்திக் தொடர்ந்து 2 சிக்சர்களை பறக்க விடுவார். அடுத்த பந்தை வீச வந்த குர்ணால், நின்று விட்டு, மீண்டும் பந்து வீச செல்வார். உடனே இருவரும் சிரித்து கொள்வார்கள். சகோதர்களிடையே அந்த சம்பவம் மற்ற கிரிக்கெட் சகோதர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இறுதியாக இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக்கொண்டனர். அப்போது விராட் கோலி, ரோகித் சர்மா கைகுலுக்கிக் கொள்வார்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு சிரித்தப்படி செல்வார்கள். இவை அனைத்தும் ஒரே வீடியோவாக எக்ஸ் தளத்தில் பரவி வருகிறது.

Tags:    

Similar News