ஐ.பி.எல்.(IPL)

இவரது சாதனையை யாரும் தொடமுடியாது: இந்திய கேப்டனை பாராட்டிய ஜுலான் கோஸ்வாமி

Published On 2026-01-08 05:24 IST   |   Update On 2026-01-08 05:24:00 IST
  • பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது.
  • இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

புதுடெல்லி:

பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி 17-ம் தேதி வரை நவி மும்பையிலும், ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை வதோதராவிலும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜுலான் கோஸ்வாமி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஹர்மன்பிரீத் கவுர், இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கும், டபிள்யூ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் செய்துள்ள சாதனைகள் மகத்தானது.

முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.

அவரது தலைமையில் மும்பை அணி 2 முறை மகுடம் சூடியுள்ளது.

ஒரு கேப்டனாக அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது. மேலும் பல பட்டங்களை அவர் வென்று தருவார்.

ஹர்மன்பிரீத் கவுரால் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாட முடியுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News