WPL 2026: ஆட்ட நாயகி மந்தனா, தொடர் நாயகி சோபி டிவைன்
- ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு அளிக்கப்பட்டது.
- அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன் எடுத்தார்.
அடுத்து, களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அத்துடன் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்னிலும், ஜார்ஜியா வோல் 79 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்நிலையில், ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கும், தொடர் நாயகி விருது சோபி டிவைனுக்கும் அளிக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கும், அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது நந்தினி ஷர்மாவுக்கு அளிக்கப்பட்டது.