ஐ.பி.எல்.(IPL)
மகளிர் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டி: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சு தேர்வு
- நவி மும்பை மற்றும் வதோதரா ஆகிய இரண்டு நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன.
- லீக் சுற்றில் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
4-வது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 22 போட்டிகள் கொண்ட லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை விரட்டியடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் குஜராத்தின் வதோதராவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி முதலில் பேட்டிங் செய்கிறது.